செவ்வாய், 1 மார்ச், 2016

நில்,கவனி,சொல்..!! (சுற்று-1)


Image result for கேள்விகள் குறி

அன்புடையீருக்கு வணக்கம்,

இன்று முதல் எங்கள் கல்லூரி வலைப்பூவின் ஆடுகளத்தில் விளையாடி நட்சத்திரனராக முயற்சி செய்யுங்கள் நட்பு பூக்களே..!!தங்களின் திறமை வெளிப்படுத்த அமைந்த இக்களத்தை பயனுள்ளதாக மாற்றுங்கள்..!!

1.இந்திய வேதங்களை முதன்  முதலில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் யார்..??
அ) ஜியு போப்          ஆ) வீரமாமுனிவர்
இ)மாக்ஸ் முல்லர்   ஈ) யாருமில்லை


2.இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது..??
அ)இரண்டு முறை    ஆ)ஒரு முறை
இ)திருத்தவில்லை    ஈ) நான்கு முறை

3.ஒரு கூம்பின் கன அளவு 20 செ.மீ எனில்,அதே அளவு உயரத்தை உடைய உருளையின் கன அளவு..??
அ)400 க.செ.மீ  ஆ)10 க.செ.மீ
இ)60 க.ஞெ.மீ    ஈ)40 க.செ.மீ

4.நைட்ரஜன் நிலைநிறுத்தலில் ..??
அ)நைட்ரஜன்,கரையும் நைட்ரேட்டுகளாக மாற்றப்படுகிறது.
ஆ)நைட்ரஜன்,கரையும் நைட்ரைட்டுகளாக மாற்றப்படுகிறது.
இ)மேற்கண்ட இரண்டும்.
ஈ)எதுவுமில்லை.

5.ஹர்கோவிந்த் குரானா என்பவர் கீழ்க்கண்டவற்றுள் எந்த கண்டுபிடிப்பிற்காக கௌரவிக்கப்பட்டார்..??
அ)புரத உற்பத்தி       ஆ)ஜீன் உற்பத்தி
இ)நைட்ரஜன் பேஸ் உற்பத்தி  ஈ)இவற்றுள் எதுவுமில்லை.



இதற்கான விடையை நாளை காலைக்குள் தெரிவிக்க வேண்டும்.சரியான விடை தருபவர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி அடைவீர்.தொடர்ந்து விடையளியுங்கள் நட்புகளே..!!வெற்றி தோல்வி முக்கியமில்லை.அதற்கான முயற்சி தான் முக்கியம்.


நன்றிகள் வெற்றி பெற எனது வாழ்த்துகள் நட்புகளே..!!

9 கருத்துகள்:

  1. நட்புகள் வெற்றி பெற எங்கள் வாழ்த்துகளும்...

    ஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.தாங்களும் இதில் கலந்துக் கொள்ளலாமே..??ஐயா..

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கு மிகவும் நன்றிகள் ஐயா.தாங்கள் தான் முதலில் விடையைத் தந்துள்ளீர்.காத்திருங்கள் விடையை நாளை மாலை இதே நேரம் தெரிவிக்கிறேன் ஐயா.

      தொடர்ந்து இணைந்துருங்கள்(10 சுற்றுகள்) வெற்றி பெற வாழ்த்துகள் ஐயா.நன்றி.

      நீக்கு
    2. தங்களின் வருகைக்கு மிகவும் நன்றிகள் ஐயா.தாங்கள் தான் முதலில் விடையைத் தந்துள்ளீர்.காத்திருங்கள் விடையை நாளை மாலை இதே நேரம் தெரிவிக்கிறேன் ஐயா.

      தொடர்ந்து இணைந்துருங்கள்(10 சுற்றுகள்) வெற்றி பெற வாழ்த்துகள் ஐயா.நன்றி.

      நீக்கு
    3. நன்றிகள் ஐயா.தங்களின் முதல் நான்கு விடைகள் சரியானவை.5-க்கு ஆ என்பது தான் சரியானவை ஐயா.நன்றி தொடர்ந்து அடுத்த சுற்றிலும் கலந்துக்கொள்ளவும் ஐயா.நன்றி.

      நீக்கு
  3. இன்றைக்கு செவ்வாய்க்கிழமை நாளைக்கு வந்து சொல்கிறேன் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா வருக வருக தங்களின் வருகைக்கு நன்றிகள் ஐயா.சரி நாளைக்கு சொல்லுங்க ஐயா.

      நீக்கு
  4. நான் இந்த ஆட்டத்துக்கே... வரலப்பா.... எனக்கு கேள்வியும் தெரியாது.. தெரியாத கேள்விக்கு பதிலும் சொல்லத் தெரியாதுப்பா.....

    பதிலளிநீக்கு