கோமதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோமதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 5 மார்ச், 2016

நாலடியார்

            
Image result for நாலடியார்

தகுதியான நூல்களையே கற்றல்;
           
            பாடல்;

                 தோணி இயக்குவான், தொல்லை வருணத்து,
                 காணின், கடைப்பட்டான் என்று இகழார்; காணாய்!
                 அவன் துணையா ஆறு போயற்றே, நூல் கற்ற
                 மகன் துணையா நல்ல கொளல்
.           
          பொருள்;

                   கல்விக்கு எல்லையில்லை,ஆனால் கற்பவருடைய வாழ் நாட்களோ சில நாட்களே ஆகும். அந்த சில நாட்களிலும் கற்பவர்களுக்கு நோய்கள் பலவாக வருகின்றன. ஆதலால் நீரை நீக்கீப் பாலை பருகும் அன்னப் பறவையைப் போல அறிவுடையார் நூலின் தன்மைகளை அறிந்து தகுதியான நூல்களையே கற்றல் வேண்டும்`


செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

நாலடியார்



                  நாலடியார்

முன்னுரை:


          பதினெண் கிழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்ததாக திகழ்வது நாலடியார். கற்போர்  உள்ளத்தில் எளிதில் பதியுமாறு சான்றுகளுடன் தெளிவாகவும் எடுத்துரைப்பது நாலடியார். பொருட்பால்,அரசியலில் கல்வி எனும் அதிகாரத்தில் இடம்பெற்ற பாடல்கள் இங்கு காண்போம்.

 கல்வி அழகு:

             
பாடல்:
                குஞ்சி அழகு, கொடுந் தானைக் கோட்டழகும்,
                மஞ்சள் அழகும், அழகு அல்ல; நெஞ்சத்து,
                நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்,
                கல்வி அழகு அழகு.
          
           பொருள்;  

            
     தலைமுடியைச் சீர்படுத்தி முடிப்பதால் வரும் அழகும், முந்தானையில் கரையிட்ட அழகும், மஞ்சள் உண்டாகும் அழகும் உண்மை அழகல்ல, மனதளவில் உண்மையாக நடந்து கொள்கிறோம் என்னும் நடுவு நிலைமையாம் ஒழுக்க வாழ்க்கையைத் தரும் கல்வி அழகே மிக உயர்ந்த அழகு ஆகும்.