தமிழ்த்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்த்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஏப்ரல், 2017

வீரமாமுனிவர் கூறும் 96 வகைச் சிற்றிலக்கியங்கள்




1)சாதகம்                  42)வதோரணமஞ்சரி
2)பிள்ளைத்தமிழ்           43)எண்செய்யுள்                 
3)பரணி                   44)தொகைநிலைச் செய்யுள்
4)கலம்பகம்                45)ஒலியல் அந்தாதி
4)கலம்பகம்                46)பதற்றந்தாதி
6)ஐந்திசணைச் செய்யுள்    47)நூற்றந்தாதி
7)வருக்கக் கோவை         48)உலா
8)மும்மணிக்கோவை       49)உலாமடல்
9)அங்கமாலை             50)வளமடல்
10)அட்டமங்கலம்           51)ஒருபா ஒருபஃது
11)அநுராகமாலை           52)இருபா இருபஃது
12)இரட்டைம்மணிமாலை   53)ஆற்றுப்படை
13)இணைமணிமாலை      54)கண்படை நிலை
14)நவமணிமாலை          55)துயிலெடை நிலை
15)நான்மணிமாலை         56)பெயரின்னிசை
16)நாமமாலை              57)ஊரின்னிசை
17)பலசந்த மாலை         58)பெயர் நேரிசை
18)கலம்பகமாலை          59)ஊர் நேரிசை
19)மணிமாலை             60)ஊர் வெண்பா
20)புகழ்ச்சி மாலை          61)விளக்க நிலை
21)பொருமகிழ்ச்சிமாலை    62)புறநிலை
22)வருத்தமாலை           63)கடைநிலை
23)மெய்கீர்த்தி மாலை      64)கையறுநிலை
24)காப்புமாலை             65)தசாங்கப்பத்து
25)வேனில்மாலை          66)தசாங்கத் தயல்
26)வசந்தமாலை            67)நயனப்பத்து
27)தாரகைமாலை           68)பயோதரப்பத்து
28)உற்பவமாலை           69)பாதாதி கேசம்
29)தானைமாலை           70)அரசன் விருத்தம்
30)மும்மணிமாலை         71)கேசாதி பாதம்
31)தண்டகமாலை           72)அலங்காரப்பஞ்சகம்
32)வீரவெட்சிமாலை        73)கைக்கிளை
33)வெற்றிக்கந்தை மஞ்சரி        74)மங்கல வள்ளை
34)போர்க்கெழு வஞ்சி       75)தூது
35)வரலாற்று வஞ்சி         76)நாற்பது
36)செருக்கள வஞ்சி         77)குழமகன்
37)காஞ்சிமாலை           78)தாண்டகம்
38)நொச்சிமாலை           79)பதிகம்
39)உழிஞைமாலை          80)சதகம்  
40)தும்பைமாலை           81)செவியறிவுறூஉ
41)வாகைமாலை           82)வாயுறை வாழ்த்து
83)புறநிலை வாழ்த்து       91)விருத்த விலக்கணம்
84)பவனிக்காதல்            92)முதுகாஞ்சி
85)குறத்திப்பாட்டு                 93)இயன்மொழி வாழ்த்து
86)உழத்திப்பாட்டு           94)பெருமங்கலம்
87)ஊசல்                   95)பெருங்காப்பியம்
88)எழுகூற்றிருக்கை         96)சிறுகாப்பியம்
89)கடிகை வெண்பா        
90)சின்னப்பூர்                


ஞாயிறு, 19 மார்ச், 2017

தமிழ்


தமிழ் வளர போராடுவோம்!

 தமிழ் மறைந்துக்கொண்டுவரும் இக்காலத்தில்

இளைஞர்கள் அனைவரும் ஒன்றுகூடி

 தமிழை வளர்க்க வேண்டும்.

எவ்வாறு தமிழர் பண்பாடான ஜல்லிக்கட்டுக்காக ஒன்றுகூடினோமோ

அதே போன்று தமிழுக்காகவும் ஒன்றுக்கூட வேண்டும்.

 உதாரணமாக  சொல்ல வேண்டுமானால்

தமிழ் என்பது பழச்சாறு மாதிரி,

ஆங்கிலம் என்பது பெப்சி   கொக்ககோலா  மாதிரி

எது  ஆரோக்கியமானது என்று நீங்களே  முடிவு  செய்யுங்கள்.

                                  தமிழை அழிக்க   நினைப்பது
                           
                        தமிழர்களின்  உயிரை  எடுப்பது  போன்றது.
 
                              விடமாட்டோம் தமிழர்  உயிர் உள்ளவரை. 

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

திருக்குறள் கதை


                      
                                                 

குறள் :

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.

குறள் விளக்கம் : 

வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

குறளுக்கான கதை :

சுவாமிநாதன் அந்த கிராமத்தில் பண்டிதர். அவர் சிறந்த அறிவு கொண்டிருந்ததோடு, அன்பும் அடக்கமும் மிகுந்தவராக விளங்கினார். ஏழைக் குழந்தைகளுக்காக இலவச பாடசாலை ஒன்றை அமைத்து கல்வி போதித்து வந்தார். மக்கள் பண்டிதரின் மீது நல்ல மரியாதை வைத்திருந்தனர்.

கண்ணப்பன் என்ற செல்வந்தனும், அதே கிராமத்தில் வசித்து வந்தான். முரடனாகிய கண்ணப்பன் மீது கிராம மக்களுக்கு மதிப்போ, மரியாதையோ இல்லை. செல்வந்தனாக இருந்தும் தனக்கு கிடைக்காத மதிப்பும், மரியாதையும் பண்டிதருக்கு கிடைக்கிறதே? என்று கண்ணப்பன் பண்டிதரின் மீது பொறாமை கொண்டான்.

பண்டிதரை எங்கு கண்டாலும், கண்ணப்பன் வம்புக்கு இழுப்பான். அவமானப்படுத்த நினைப்பான்.

ஒருநாள் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த பின் பண்டிதர் சுவாமிநாதன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது கண்ணப்பன் தன் தோட்டத்திலிருந்து பறித்த பூசணிக்காயோடு வந்து கொண்டிருந்தான். கண்ணப்பனுடன் அவனது இரு தோழர்களும் வந்தனர்.

கண்ணப்பனையும், அவனது தோழர்களையும் கண்ட பண்டிதர் ஒதுங்கி நடந்தார்.

ஆனால் அவர்களோ, என்ன, பண்டிதரே பள்ளிக்கூடத்திலிருந்து வருகிறீர்களா? என்று வழியை மறித்தபடி கேட்டு வம்பிழுத்தனர்.

ஆமாம் கண்ணப்பா. நான் சீக்கிரம் வீட்டுக்குப் போக வேண்டும் வழியை விடு என்றபடி பண்டிதர் விலகி நடக்கத் தொடங்கினார். நீங்கள் பெரிய அறிவாளி என்று எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள். அப்படியானால் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் விட்டுவிடுகிறோம். இந்தக் கேள்விக்கு மட்டும் நீங்கள் சரியாகப் பதில் சொல்லிவிட்டால் உங்கள் வழிக்கே நான் வரமாட்டேன் என்று வீம்பாகப் பேசினான்.

சரி, உன் கேள்வி என்னவென்று கேளு கண்ணப்பா! எனக்கு நேரமாகிறது என்றார் பண்டிதர்.

என் கையிலுள்ள இந்த பூசணிக்காயின் எடை எவ்வளவு? நீங்கள் சொல்லும் எடை சரியாக இருக்கிறதா? என்று நாங்கள் நிறுத்திப் பார்ப்போம். சரியாக சொல்லாவிட்டால் நீங்கள் முட்டாள் என்று ஒத்துக் கொள்ள வேண்டும் என்று திமிராகப் பேசினான் கண்ணப்பன்.

பண்டிதர் ஒரு கணம் யோசித்தார். கண்ணப்பா இந்த பூசணிக்காய் உன் தலையின் எடைதான் இருக்கிறது. வேண்டுமானால் நிறுத்துப் பார்த்துக்கொள் என்று பதில் சொன்னார் பண்டிதர்.

இதை கேட்ட கண்ணப்பனும், அவனது கூட்டாளிகளும் அதிர்ந்து போனார்கள்.

அட பண்டிதர் நம்மை மடக்கிவிட்டாரே? பு+சணிக்காயின் எடையை சரி பார்க்க நம் தலையை கொய்தால் அல்லவா முடியும். தலையை கொய்ய முடியுமா? பூசணியை எடைபோட முடியுமா? என்று திகைத்த கண்ணப்பன், தன் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு ஓடியே போனான். அதன்பின் அவன் பண்டிதரிடம் வம்பு செய்வதே இல்லை! 

சனி, 25 பிப்ரவரி, 2017

நாலடியார்


      
                  
முன்னுரை:

          பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் திருக்குறளுக்கு அடுத்ததாக  நாலடியார். இந்நூலுக்கு ‘ வேளாண் வேதம் ‘ என்ற பெயரும் உண்டு. இந்நூலில் உள்ள பாடல்கள் பல்வேறு ஆசிரியர்களால் பாடப்பட்டது. கல்வி பற்றி நாலடியார் கூறும் கருத்துக்களைக் காண்போம்.

கல்வி அழகே சிறந்தது:

               நன்கு சீவப் பட்ட கூந்தல் அழகும், முந்தானைக் கரையழகும், மஞ்சள் பயன்படுத்துவதால் வரும் அழகும் அழகல்ல. மனதில் நல்ல நெறியுடன் நடக்கின்ற நடுவுநிலைமையை உண்டாகும் கல்வி அழகே சிறந்தது.

அறியாமையைப் போக்கும் மருந்து:

                கல்வி இன்பத்தை பயக்கும், பிறருக்கு எடுத்துச் சொல்லும் போது பெருகும், நம் புகழை எடுத்துச் சொல்லும், சாகும் வரை கல்வியால் சிறப்பு உண்டு. மூவுலகத்திலும் அறியாமையைப் போக்க கூடிய ஒரே மருந்து கல்வி மட்டுமே.

கல்வி கற்றோரின் சிறப்பு:

                புன்செய் நிலத்தில் விளைந்த உப்பை நன்செய் நிலத்தில் விளைந்த உப்பினைவிட பெரியதாக கருதுவர். தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் ஆயினும் கல்வி கற்றோரை உயர் குடியில் பிறந்தவராகவே கருதுவர்.


கல்வியின் சிறப்பு:

             கல்வியை யாராலும் களவாட முடியாது. பிறருக்கு வழங்குவதால் நன்மை மட்டுமே உண்டாகும். மன்னர் சினம் கொண்டு போர் புரிந்தாலும் கல்விச் செல்வத்தை மட்டும் கைப்பற்ற இயலாது. எனவே, ஒருவன் தமக்குப் பிறகு தம்முடைய அடுத்த தலைமுறைக்கு எஞ்சிய பொருளாக சேர்த்து வைக்க வேண்டியது கல்விச் செல்வம் மட்டுமே. பிற செல்வங்கள் அல்ல.

கல்வி கற்கும் முறை:

               கல்விக்கு கரை இல்லை, ஆனால் அதைக் கற்போருக்கோ சிறிய ஆயுட்காலம். அந்த குறுகிய காலத்திலும் அவர்களுக்கு பல பிணிகள் உண்டாகின்றன. அன்னப் பறவை பாலில் கலந்திருக்கும் நீரைத் தவிர்த்து எவ்வாறு பாலை மட்டும் அருந்துகிறதோ அது போல கல்வியை ஆராய்து தெளிவாக கற்க வேண்டும்.

கல்வி கற்றோரின் சிறப்பு:

                    தோணி இயக்குபவனை தாழ்ந்த குலத்தார் என்று இகழ்வர். ஆனால் அவனையே துணையாய் கொண்டு ஆற்றைக் கடப்பர். அதுபோல நால் கற்ற துணையால் நல்ல பயன்களை அடையலாம்.

தேவலோகத்தை விட சிறந்தது:

                  தேவலோகமே சிறந்தது என்ற கருத்துடையவர், குற்ற மற்ற நூல்களைக் கற்று நல்ல கேள்வித் தன்மையை உடைய சான்றோருடன் உரையாட வேண்டும். அவ்வாறு உரையாடிய பின்பு அவர் மனதில் கற்றோர் சபையை விட தேவலோகமே சிறந்தது என்ற கருத்து உண்டானால் அவர் தேவலோகம் செல்லலாம்.    

கற்றவரோடு நட்பு கொள்ளுதல்:

                 கல்லாதவரோடு ஒருவன் கொள்ளும் நட்பு கரும்பின் சுவைமிக்க அடிப்பகுதியை விட்டு நுனிப் பகுதியை உண்பதற்கு ஒப்பாகும். கற்றலரோடு ஒருவன் கொள்ளும் நட்பு கரும்பின் சுவை மிக்க அடிப் பகுதியை உண்பதற்கு ஒப்பாகும்.

கற்றாரோடு கொண்ட நட்பின் தன்மை:

               தண்ணீரில் உள்ள பாதிரிப் பூ எவ்வாறு அத்தண்ணீருக்கும் தன் மணத்தைத் தருகிறதோ கற்றவரோடு கல்வி அறிவு இல்லாத ஒருவன் கொள்ளும் நட்பு அவனுக்கு நாளும் நன்மையைத் தேடித் தரும்.

அறிவு சார்ந்த நால்களைக் கற்க வேண்டும்:

            மிகுதியான நூல்களைக் கற்று அறிவு சார்ந்த நால்களைக் கல்லாதவனுக்கு அதனால் பயன் ஒன்றும் இல்லை.

முடிவுரை:

          நாலடியார் மூலம் கல்வியின் சிறப்பையும், கற்றவரோடு கொள்ளும் நட்பின் தன்மையையும் அறியலாம். கல்வியின் பயன் அதன் வழி ஒழுகுவதால் மட்டுமே அடைய முடியும்.

புதன், 25 மே, 2016

பகுபதத்தின் கடைசி மூன்று உறுப்புகள்..!!



எது சந்தி..???
பகுதிக்கும்,இடைநிலைக்கும் நடுவில் வருவது சந்தி எனப்படும்.இரண்டையும் இணைக்கும் ஒரு சொல் சந்தி ஆகும்.
(எ-கா) படித்தான்-படி+த்+த்+ஆன்
படி-பகுதி,த்-சந்தி,த்-இறந்த கால இடைநிலை,ஆன்-ஆண்பால் விகுதி.
இதில் பகுதிக்கும் இடைநிலைக்கும் நடுவில் வருவது சந்தி.
(எ-கா) கொடுத்தான்-கொடு+த்+த்+ஆன்
கொடு-பகுதி,த்-சந்தி,த்-இறந்தகால இடைநிலை,ஆன்-ஆண்பால் விகுதி.
சுருக்கம்; பொதுவாக ஒரு சொல்லை பிரிக்கும் போது பகுதிக்கும் இடைநிலைக்கும் நடுவில் வரும் சொல் சந்தி எனப்படும்.
எது சாரியை..???


இடைநிலைக்கும் விகுதிக்கும் நடுவில் வருவது சாரியை எனப்படும்.இதுவும் சந்தியை போல் ஒரு சொல்லை இணைப்பது ஆகும்.
(எ-கா)உண்டனன்-உண்+ட்+அன்+அன்
உண்-பகுதி,ட்-இறந்தகால இடைநிலை,அன்-சாரியை,அன்-பலர்பால் விகுதி.
இதில் விகுதிக்கும் இடைநிலைக்கும் நடுவில் வருவது சாரியை ஆகும்.
(எ-கா)செய்குவேன்-செய்+கு+வ்+ஏன்
செய்-பகுதி,கு-சாரியை,வ்-எதிர்கால இடைநிலை,ஏன்-தன்மை ஒருமை வினைமுற்று.
இதில் பகுதிக்கும் இடைநிலைக்கும் நடுவில் சாரியை வந்துள்ளது.ஏதாவது ஒரு சமயங்களில் மட்டுமே சாரியை என்பது பகுதிக்கும் இடைநிலைக்கும் நடுவில் வரும்.
சுருக்கம்;விகுதிக்கும் இடைநிலைக்கும் நடுவில் இணைக்கும் ஒரு சொல் சாரியை எனப்படும்.
எது விகாரம்…???
விகாரம் என்பதன் பொருள் மாறுதல் எனப்படும்.ஒரு சொல் மாறி வருவது விகாரம் எனப்படும்.
(எ-கா) கண்டான்-காண்+ட்+ஆன்
கண்-காண் எனத் திரிந்தது.
வருகிறான்.வா+கிறு+ஆன்
வரு-வா எனத் திரிந்தது.
சுருக்கம்;பொதுவாக ஒரு சொல் வேறு ஒரு சொல்லாக மாறி வருவது விகாரம் எனப்படும்.

முற்றும்...

செவ்வாய், 24 மே, 2016

பகுபதத்தின் முதல் மூன்று உறுப்புகள்..!!!


முதல் மூன்று உறுப்புகள்;
1.பகுதி-பெயர்,வினை குறித்து வரும்.
2.விகுதி-பால்,இடம்,திணை குறித்து வரும்.
3.இடைநிலை-காலம் குறித்து வரும்.
எது பகுதி..??
ஒரு சொல்லின் முதல் பகுதியில் அதாவது முதல் உறுப்பு பகாப்பதமாக இருக்கும் அதுவே பகுதி எனப்படும்.
(எ-கா) பாடினான்=பாடு+இன்+ஆன் என்று பிரிக்கலாம்.இது ஒரு பகுபதம்.
பாடு-பகுதி.
முதல் உறுப்பு என்பது பாடு.இது ஒரு பகாப்பதம்.அதாவது செய்யும் வினையைக் குறிக்கும்.பாடு என்பதனை பிரித்தால் பொருள் தராது.எனவே இது பகாப்பதம்.
(எ-கா)காடன்-காடு+அன்.
காடு-பகுதி.
காடு என்பது முதல் பகுதி.இது  பெயர்ச்சொல்லைக் குறிக்கும்.இதனை பிரித்தால் பொருள் தராது.எனவே இது பகாப்பதம்.
சுருக்கம்; ஒரு சொல்லை முதலில் பிரித்துப் பார்த்தால் அதில் எது பகாப்பதமாக இருக்கிறதோ,அதுவே பகுதி எனப்படும்.
எது விகுதி..??
விகுதி என்பது ஒரு சொல்லின் கடைசி உறுப்பைக் குறிப்பது.செய்யுளில் அதிகமாக விகுதிகள் அமைவதற்கு காரணம் அவற்றின் ஓசையைக் (சந்தம்)குறிக்கும்.
(எ-கா)ஓடினான்-ஆன் என்பது கடைசி உறுப்பு.இது ஆண்பால் விகுதி.
ஓடினாள்-ஆள்.இது பெண்பால் விகுதி.
ஓடினார்-ஆர்.இது பலர்பால் விகுதி.
ஓடியது-து.இது ஒன்றன்பால் விகுதி.
ஓடின-.இது பலவின்பால் விகுதி.
ஓடினேன்-ஏன்.இது தன்மை ஒருமை விகுதி.
ஓடினம்,ஓடினாம்,ஓடினோம்,ஓடினொம்-அம்,ஆம்,ஒம்,ஓம்.இது தன்மை பன்மை விகுதிகள்.
கண்டாய்,சொல்லுதி,செய்வை-ஆய்,இ,ஐ.இவைகள் முன்னிலை ஒருமை விகுதிகள்.
வருவீர்-இர்,ஈர்.இவைகள் முன்னிலை பன்மை விகுதிகள்.
வளர்க.வாழிய-க,இய.இவைகள் வியம்கோள் வினைமுற்றுகள்.
சுருக்கம்;உயர்திணையா,அஃறிணையா என்பதை பற்றியும் ஒருமையா பன்மையா என்பதை பற்றியும் அறிவது விகுதி.
 எது இடைநிலை..??
பகுதிக்கும்,விகுதிக்கும் இடையில் வருவது இடைநிலை எனப்படும்.இதனை பெயர் இடைநிலை,வினை இடைநிலை என்று இரு வகையாகப் பிரிக்கலாம்.
பெயர் இடைநிலை;
(எ-கா)தலைவர்-தலை+வ்+அர்
காலம் காட்டாது.எனவே இது இடைநிலையைக் குறிக்காது.
வினை இடைநிலை;(இறந்த கால இடைநிலைகள்)
(எ-கா)படித்தான்-படி+த்+த்+ஆன்.முதல் த் சந்தி.இரண்டாவது த் இடைநிலை.
உண்டான்-உண்+ட்+ஆன்.இதில் ட் இடைநிலை.
தின்றான்-தின்+ற்+ஆன்.இதில் ற் இடைநிலை.
உறங்கினான்-உறங்கு+இன்+ஆன்.இதில் இன் இடைநிலை.
(த்,ட்,ற்,இன் இறந்த கால இடைநிலைகள்)
நிகழ்கால இடைநிலை;
(எ-கா)படிக்கிறான்-படி+க்+கிறு+ஆன்.இதில் கிறு இடைநிலை.
படிக்கின்றான்-படி+க்+கின்று+ஆன்.இதில் கின்று இடைநிலை
பேசாநின்றான்-பேசு+ஆநின்று+ஆன்.இதில் ஆநின்று இடைநிலை.
(கிறு,கின்று,ஆநின்று நிகழ்கால இடைநிலைகள்)
எதிர்கால இடைநிலைகள்;
(எ-கா)காண்பான்-காண்+ப்+ஆன்.இதில் ப் இடைநிலை.
செய்வான்-செய்+வ்+ஆன்.இதில் வ் இடைநிலை.
(ப்.வ் எதிர்கால இடைநிலைகள்)
சுருக்கம்;மூன்று காலத்தை உணர்த்தி பகுதிக்கும்,விகுதிக்கும் நடுவில் வருவது இடைநிலை எனப்படும்.

   தொடரும்....

ஞாயிறு, 22 மே, 2016

பதங்கள் பற்றி அறிவோம்..!!!




நாம் பார்த்திருப்போம்,சில பள்ளி மாணவர்கள் தமிழ் பாடம் என்றாலே பிடிக்காது என்பார்கள்.காரணம் இலக்கணம் பகுதி தான்.தமிழில் மிகவும் கடினமானது இலக்கணம் பகுதி தான் என்பது அவர்களின் கருத்து.அதற்கு காரணம் அவர்களின் ஆர்வமின்மை மற்றும் ஆசிரியர்கள் கற்றுவித்தல் முறை ஆகியவை தான் இலக்கணம் பகுதியை கடினமானது என்று கருதுக்கின்றனர்.இலக்கணத்தில்  நான் புரிந்துக் கொண்டதை  தங்களோடு பகிரவுள்ளேன்.


பதங்கள்;

பதம் என்றாலும்,மொழி என்றாலும்,கிளவி என்றாலும்,சொல் என்றாலும் ஒன்று தான்.

பதங்களின் வகைகள்;

1.பகாப்பதம்

2.பகு பதம்

பகுத்தல்;

பகுத்தல் என்றால் பிரித்தல் என்று பொருள்படும்.

1.பகாப்பதம்;

பிரிக்க முடியாதவை பகாப்பதம் எனப்படும்.

சொல் வகைகள்;

1.பெயர்ச்சொல்

2.வினைச்சொல்

3.இடைச்சொல்

4.உரிச்சொல்

பகாப்பதம் வகைகள்;

1.பெயர் பகாப்பதம்.

2.வினை பகாப்பதம்.

3.இடை பகாப்பதம்.

4.உரி பகாப்பதம்.

பெயர் பகாப்பதம்;

(எ-கா) நீர்,அம்மா,மான்,மலர்.

இவைகளை பிரித்தால் பொருள் இருக்காது.

வினை பகாப்பதம்;

(எ-கா) ஓடு,பாடு,வா

செய்யும் செயலை குறிப்பதால்,இவைகள் வினைகள் எனப்படும்.பிரித்தால் பொருள் தராது.

இடை பகாப்பதம்;

(எ-கா) போல,ஆல்,ஐ,அது.

வேற்றுமை உருபுகளை பிரிக்க இயலாது.

உரி பகாப்பதம்;

(எ-கா) சால,கடி,உறு

இவைகளை பிரித்தால் பொருள் தராது.

2.பகு பதம்;

பிரிக்க முடியும்.பிரித்தால் பொருள் தரும்.அவைகளே பகு பதம் எனப்படும்.

பகு பதத்தின் வகைகள்;

பெயர் பகுபதம்.

வினை பகுபதம்

பகுபதத்தின் உறுப்புகள்;

1.பகுதி-முதல் பகுதி.

2.விகுதி-கடைசி பகுதி.

3.இடைநிலை-நடுப்பகுதி.

4.சந்தி-இணைப்பது

பகுதிக்கும் இடைநிலைக்கும்  நடுவிலும் அல்லது இடைநிலைக்கும் பகுதிக்கும் நடுவிலும் வருவது சந்தி  ஆகும்.

5.சாரியை-இதுவும் கிட்டதட்ட சந்தியை போல தான் வரும்.

6.விகாரம்-மாறுதல்.

அதாவது ஒரு சொல் திரிந்து வருவது.

(தொடரும்)………

அடுத்த பதிவில் பகுபதத்தின் உறுப்புகள் பற்றி விரிவாகவும் எளிமையாகவும் பார்க்கலாம்.நன்றி.












செவ்வாய், 10 மே, 2016

மரம் வளர்ப்போம்!! புவியை காப்போம்!!



                மரம் வளர்ப்போம்!! புவியை காப்போம்!!

முன்னுரை

 



      கோடை காலம் என்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. காலம் செல்ல செல்ல வெப்பம் அதிகரிக்கிறதே இன்றி குறைந்தபாடில்லை.இதற்கு முக்கிய காரணம் புவி வெப்பமாதல் தான். புவி வெப்பமடைய காரணங்கள் பல. அவற்றுள் முக்கியமான காரணம் மரங்களை வெட்டுவதுதான்.
மரம் என்றாலே நன்மை தான்
      மரங்களும் குழந்தைகளைப் போலத் தான் விதை மண்ணில் விழுந்து சிறு செடியாய் முளைத்து அது மெல்ல மெல்ல வளர்ந்து மரமாகிறது. ஒரு செடி மரமாக வளர குறைந்தது 2 ஆண்டுகளாவது ஆகும். புவியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் ஆயுட்காலம் உண்டு. ஆனால் ஆயுட்காலம் இல்லாத ஒரே உயிர் மரம் மட்டும் தான். மனிதர்களாலும் இயற்கையாலும் எந்தவித இடையூறும் ஏற்படாத வரை மரங்கள் எத்தனை ஆண்டு காலம் வேண்டுமாலும் புவியில் உயிர்வாழ முடியும். மரங்கள் நமக்கு தரும் நன்மைகள் பல. எதை எடுத்துக்கொண்டாலும் நன்மை தீமை என்று இரு பக்கம் இருக்கும். நன்மை மட்டுமே அதிக அளவில் நிறைந்திருக்கும் ஒரே உயிர் மரம் தான்.
புவி வெப்பமடைதலை தடுக்கிறது
       மரங்களால் உயிரனங்கள் அடையும் நன்மைகள் பல பல. மரங்கள் புவி வெப்பமாதலைத் தடுக்கிறது. மரங்கள் வாகனங்களில் இருந்து வெளிவரும் கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. இதனால் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும் அதிக கார்பன் வெளியேற்றதாலும் 2000 ஆண்டு வரை 25% மாக இருந்த புவி வெப்பம் இன்று 37%மாக அதிகரித்துள்ளது. இவற்றை கட்டுப்படுத்தும் திறன் மரங்களுக்கு மட்டுமே உண்டு. நன்றாக வளர்ந்து முதிர்ந்த ஒரு மரம் ஒரு ஆண்டில் 48 பவுண்ட் கார்பன்-டை-ஆக்ஸைடை இழுத்துக் கொள்கிறது.