சங்கீதவாணி தியாகராஜன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சங்கீதவாணி தியாகராஜன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 ஜனவரி, 2020

திருமணத்தின் போது மோதிர விரலில் மோதிரம் அணிவது ஏன்?

நமது இரண்டு கைகளிலும் உள்ள நடு விரல்களை உட்புறமாக மடக்கிக்கொள்ள, மற்ற அனைத்து விரல்களையும் தனித்து பிரிக்க முடியும். ஆனால், மோதிர விரலை மட்டும் தனித்துப் பிரிக்க முடியாது. அதுபோல, கணவனும் மனைவியும் தங்களது இன்ப, துன்பங்களில் எப்போதும் ஒருவருக்கொருவர் பங்கேற்று அனுசரணையாக வாழவேண்டும். இக்காரணத்தினாலேயே திருமணத்தின்போது மோதிர விரலில் மோதிரம் அணிவிக்கப்படுகிறது.

ஆனால்

ஆண் : நான் உங்களை விரும்புகிறேன்.
பெண் : உனது தகுதி என்ன?  சொந்தமாக வீடு வைத்து இருக்கிறாயா?
ஆண் : இல்லை. ஆனால்...
பெண் : பி. எம். ட்புல்யு. கார் வைத்திருக்கிறாயா?
ஆண் : இல்லை. ஆனால்...
பெண்: ஆனால் என்று சொல்வதை நிறுத்து..வேலையாவது பார்க்கிறாயா?
ஆண் : இல்லை. ஆனால்...
பெண் : போதும், போதும் நிறுத்து. எந்தத் தகுதியும் இல்லாத உன்னை
               எவ்வாறு ஏற்றுக்கொள்வது...
               (பெண் சென்று விடுகிறாள்)
ஆண் : எனக்குச் சொந்தமாக வீடு இல்லை. ஏனெனில் எனக்குச் சொந்தமாக வில்லா உள்ளது. என்னிடம் லம்பொஉர்க்ஹினி கார் இருக்கும்போது அதை விட விலை குறைவான பி. எம். டபில்யு.-க்கு அவசியம் இல்லாது போயிற்று. சம்பளம் கொடுக்கும் முதலாளியாக இருக்கும் நான் மற்றவர்களிடம் கைகட்டி வேலை பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. என்னை ஏற்றுகொள்ளும் தகுதி அவளுக்குத்தான் இல்லை.