வெள்ளி, 29 ஏப்ரல், 2016

ஃரான்சிஸ் பேகன்

ஃரான்சிஸ் பேகன்

பேகனின் வாழ்க்கை:
            பேகன் ஜனவரி22,1561ஆம் ஆண்டு பிறந்தார்.கேம்பிரிஜ் பல்கலைக்கலகத்தில் பயின்று சட்டப்படிப்பை தம் தொழிலாக தேர்வு செய்தார்,பின்னர் ராணியின் ஆலேசகராக முன்னேறினார்.மவாழ்வில் மன்னர் ஜெம்ஸ்சின் வருகையும் இவர்க்கு சாதகமாகவே அமைந்த்து.1613இல் வழக்கறிஞர்,1617அல் அரச பாதகாவலர் இருதியாக 1623இல் சென்ட்ஸ் ஆல்பன்ஸ்சில் aristocratic அவைவையில் உறுப்பினரானார்.
             தீடீரென பேகன் வாழ்வில் மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்தார். இவர் தாகாத சில செயல்களில் ஈடுபட்டு40,000ஆயிரம் பவுன்ஸ் அபராதம் விதித்து நாங்கு நாட்கள் சிறை தண்டனையும் ஆனுபவித்தார்.விரைவில் அவர்க்கு மன்னிப்பும் வழங்கப்பட்டது.
பேகனது சில லத்தின் படைப்புகள்:
             டி அக்மென்டிஸ் செயின்டியாரம்
             நொவம் ஆர்காஆனம்
             சில்வ சில்ஃவாரம்
             ஸ்கேலா இன்டலெக்டஸ் அன்ட் ப்ரோட்ரோமி
சில ஆங்கில படைப்புகள்:
             ``தி நியி அட்வான்ஸ்மன்ட் ஆப் லர்நிங்'',``நியு அட்லான்டிஸ்''

பெறும்பாலும் பேகனின் கட்டுரை மனிதன் பொதுவாழ்விலும்,தனிப்பட்ட வாழ்விலும் கடைபிடிக்க வேண்டிய நெறிகளைப்பற்றி அமையும்.மொத்தம்58 கட்டுரைகள் பேகன் எழுதியுள்ளார்.இவரது மொத்தமான சில கட்டுரைகள் ``எஸ்சேஸ் ஆர் கௌன்சில்ஸ் சிவில் ஆன்ட் மாரல்ஸ்``என்ற படைப்பில் வெளிவந்தது.

வாட் மற்றும் சர்ரே

                                             வாட் மற்றும் சர்ரே


16ஆம் நாற்றாண்டின் ஆரம்ப காலத்தில் சர் தாமஸ் வாட் சானட் என்று சொல்லப்படும்14வரிகள் கொண்ட பாடல்வகையை ஆங்கிலத்தில் பயண்படுத்தினர்.இதனை சர்ரே பின்பு விரிவாகப் பயண்படுத்தினர். இத்தாலியில் பெட்ரார்ச் என்பவர்தான் முதன் முதலில் சானட் வகையை அறிமுகப்படுத்தினர்.வாட் இதில் சில வேறுபாடுகளுடன் ஆங்கிலத்தில் பயண்படுத்தினார்.
சர் தாமஸ் வாட்:
            வாட் யார்ஷ்ஷயர் என்ற பரம்பரயை சேர்ந்தவர்.இவர் கேம்ப்ரிஜ் பல்கலைக்கலகத்தில் பயிண்றார்.தன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட கருத்தை உட்கொண்டு இவரது பாடல்கள் அமையும்.இவரது பாடல்கள் மற்றும் சானட் வகைகள் இவர் இறப்பிற்கு பின் டோட்டில்ஸ் மிசிலனி என்ற பதிப்பில் வெளிவந்த்து.மேலும் இவரது பாடல்கள்,சானட்ஸ்,கேலி நடை பாடல்கள்,இற்ப்பாட்டு முதலிய பல வகையான நயங்களைக்கொண்டு எழுதியுள்ளார்.இவரின் குறிப்பிடத்தக்க படைப்புகள்,
            மை லூட், அவேக்
            ஈஸ் இட் பாசிபில் மற்றும்
            ஐ ஃஐன்ட் நோ பீஸ்
ஹென்ரி ஹோவர்ட் இஎல் ஆப் சர்ரே(henry howard earl of surrey):

ஹென்ரி ஃப்ரான்ஸ் மற்றும் ச்காட்லண்டில் போர்வீரராக பணிபுரிந்தார்.இவர் பாடல்கள் வெறுபட்ட கருத்தை வெளிப்படுத்துவார்.இவரின் குறிப்பிடத்தக்க நூல்கள்,
            வின்சர் கேசில்
            வின்சர் வால்ஸ்
            ப்ரவுட் வின்சர்

இருவருக்குமே இயற்க்கைக்கான மென்மையான அன்பு உண்டு.சர்ரேவின் உண்மையான ஈடுபாடு(real passion)அவரது பாடல்களில் தெறியாது ஆனால் கற்பனைக்காதலை கருவாகக் கொண்டு வாசகர்களை ஈர்த்துள்ளார்.

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

ஏக்கம்

               Image result for நிலா

வற்றிப்போன குளங்கள்….
முகம் பார்க்க முடியாத ஏக்கத்தில்
நிலா!

ஜியோஃப்ரி ச்சாசர்

                                     
                           
                                         ஜியோஃப்ரி ச்சாசர்
நவீன ஆங்கில காலம் ச்சாசருடன் தொடங்குகிறது.ஜியோஃப்ரி ச்சாசர்(Geoffrey Chaucer)1340ஆம் ஆண்டு பிறந்தார்.இவர் தந்தை ஒரு செழுமையான மது ஏற்றுமதியாளர்.1366ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்து இரு மகன்கள், ஒரு மகளும் பிறந்தனர்.நூறு வருட போரில் சிப்பாயாகவும் வின்சர் மன்னரிடம் குமாஸ்தாவாகவும் பணிபுரிந்தார்.1400ஆம் ஆண்டு இயற்கை எய்தி வெஸ்ட் மினிஸ்ட்டர் அபே(அ)பொயட்ஸ் கார்னர் என்ற இடத்தில் புதைக்கப்பட்டார்.
இவரது பணிகாலத்தை மூன்றாக பிரிக்கலாம்:
            1.ஃப்ரெஞ்ச் காலம்
            2.இத்தாலி காலம்
            3.ஆங்கில காலம்
ஃப்ரெஞ்ச் காலம்:
            ச்சாசரது ஆரம்பகால படைப்புகள் பெறும்பாலும் மொழிபெயர்ப்பு மற்றும் தழுவல் பாடல்களாகவே அமைந்தது.அவை,
            1.ரொமன் டி லா ரோஸ்(தி ரொமான்ஸ் ஆப் தி ரோஸ்)
            2.தி புக் ஆப் டச்சசீ—இது பிலேன்ச் என்பவருக்கு எழுதப்பட்ட ஓர் இரங்கற்பாட்டு(elegy)
இத்தாலி காலம்:
இத்தாலியின் வருகயில் ஃப்ரெஞ்ச் தாக்கம் மறைந்தது.இக்கால தலைமை படைப்புகள்,
            1.lதி ஹவுஸ் ஆப் ஃஏம்     —முழுமையடையாத கற்பனை கதை
            2.ட்ராய்லஸ்அன்ட் க்கிரிசைட்—இது ச்சாசரது மிகச்சிறந்த இத்தாலி காலத்து படைப்பு.
ஆங்கில காலம்:

            இந்த காலத்தில் மிகச் சிறந்த இரு படைப்புகள் தந்திருக்கிறார். அவற்றுள்‘’க்கேன்ட்டர் பெரி ட்டேல்ஸ்’’(Canterbury tales)என்பது இவரது மிகச்சிறந்த படைப்பாகும்.இதில் ச்சாசருடன் 29பக்தர்கள் தாமஸ் பேக்கெட் என்பவரது கல்லரைக்கு பாதையாத்திரை சென்றனர்.மற்றும் ‘’தி நைட்ஸ் ட்டேல்ஸ்’’என்பதும் இவரது சாதனைப் படைப்புகளில் ஒன்றாகும்.

திங்கள், 25 ஏப்ரல், 2016

யார் அவர் என்று கண்டுபிடிங்கள்



                யார் அவர் என்று கண்டுபிடிங்கள்


அவரது குழந்தைப் பருவம் கொடூர உணர்வை அவரது மனதில் தூண்டிவிட்டது. சுருங்கச் சொன்னால், குழந்தைப் பருவத்தில் அவர் சந்தோசப்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் கிட்டவில்லை.

வாய்ப்புகளுக்காக அவரது குழந்தை மனம் ஏங்கியது! ஆனால், அந்தக் குழந்தையின் தந்தை  தன் மகன் எந்த வகையிலும் சந்தோசப்படுவதற்கான சந்தர்ப்பங்களைத் தரவில்லை. அவர் தன் மகனுக்குத் தந்ததெல்லாம் என்ன தெரியுமா?

அடி, அடி, அடி என்று இருபத்து நான்கு மணி நேரமும் அடித்துக் கொண்டே இருக்கும் சூழலுக்குள் அந்தக் குழந்தை தள்ளப்பட்டிருந்தது. அதாவது, இதற்கு அடிப்பார்கள், இதற்கு அடிக்க மாட்டார்கள் என்று அந்த நிலைமையைப் புரிந்து கொள்ளும் வகையில் இல்லை.

நின்றால் அடி, அமர்ந்தால் அடி, படுத்தால் அடி, சாப்பிட உட்கார்ந்தால் அடி, உடலில் அந்த அடிகள் உருவாக்கிய தழும்புகளுக்குக் கணக்கில்லை.
இவ்வாறு தந்தையின் கரங்களால் அடிபட்டு அந்தக் குழந்தை துடித்தபோது, வாடா, கண்ணே! என்று அக்குழந்தையை வாரி அணைத்துக் கொண்டு, அதன் கன்னத்தில் முத்தமாரி பொழிந்தாள் குழந்தையின் தாய்!

இப்படிப் பட்ட சூழ்நிலையில் அந்தக் குழந்தையின் மனதில் பதிந்த பிம்பம் இதுதான்; “ அப்பா என்றால் அடிப்பவர்; அம்மா என்றால் அணைப்பவர்” அதனாலயே, தன்னை அடிப்பதற்கு தந்தை தன் கையை ஓங்கியபோது, அந்தக் குழந்தை அம்மாவின் பின்னால் பதுங்கிக் கொண்டது. 

மனத்தளவில் அந்தக் குழந்தை தாயின் குழந்தையாக மட்டுமே வளர்ந்து வந்தது.இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்தக் குழந்தை வளர்ந்து வாலிப் பருவம் எய்தி, பிறரது கவனத்தை ஈர்க்கும் வண்ணம் தனது திறமையை வெளிப்படுத்தியது. ஆனால் படிப்பில் ஆர்வம் குறைவாகவே இருந்தது.

டீன் ஏஜ்-க்குள் நுழைந்துவிட்டார் அவர். அதாவது பதினாறவது வயதை அடைந்துவிட்டார். தனது பதிமூன்றாவது வயதில்  தந்தையை இழந்தார். 
அதன் பிறகு மூன்று வருடங்கள் பள்ளியில் பாடங்களுடன் மல்யுத்தமும் நடத்தினார். முடிவில் எந்தத் தகுதியும் பெறாமல் பள்ளியிலிருந்து விடை பெற்றார்.

அவருக்கு படிப்பு ஏறவில்லை என்றாலும், ஓவியத்தில் ஆர்வம் இருந்தது. ஆனாலும் அவரால் சிறந்த ஓவியராக முடியவில்லை. ஓவியத்தைவிட கட்டடக்கலை, சிற்பக்கலையில் ஆர்வம் காட்டும்படி  பிறர் அவரைத் தூண்டினார்கள். அவற்றிலும் நுழைந்து தனது திறமையைக் காட்ட முனைந்தார். ஆனால், அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது.

அவர் சிறு வயது முதலே அரசியல் பற்றிய திண்ணைப் பேச்சுக்களைக் கேட்ட வண்ணமிருந்தார். ஆனாலும் அரசியல் புரியாத வயதில், தனது நண்பர்களுடன் அரசியல் பற்றி, அவருக்குத் தெரிந்த அளவுக்கு விவாதம் நடத்தினார்.

இதற்கிடையே வயிற்றுப் பிழைப்பை நடத்துவதற்காக ஓவியம் வரைந்து விற்பனை செய்தார். அவர் பொதுவாக முதலில் சில தினக்கூலி வேலைகள், அப்புறம் சாயப்பட்டறையில் வேலை, பிறகு, வாழ்த்து அட்டைகளை பார்த்து படம் வரைந்து கொண்டுபோய், கடைகளில் கொடுத்து சில்லறை சேர்க்கிற சுய தொழில் என்று வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தார் அவர்.

காலமும் பொழுதும் அவரை இந்தப் பொழப்பு உனக்கு வேண்டாம் என்று மூலதனம் தேவைப்படாத தொழிலான அரசியலில் மூக்கை நுழைத்து, தலை தூக்கிப் பார் என்று அவரைத் தள்ளிவிட்டன.

அரசியலில் கொள்கையை விடவும், யுக்தியும், சொல்லாடலும் மட்டுமே இருந்தால், குறுகிய காலத்தில் மிக உயர்ந்த இடத்திற்கு சென்றவிட முடியும் என்பதை புரிந்து கொண்டார் அவர்.

பேச்சுக்கலையில் குரல் ஏற்ற இறக்கங்களில், எந்தச் சொல்லுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், எந்தச் சொல்லை வருடிக் கொடுக்க வேண்டும், எப்போது குரலை உயர்த்த வேண்டும், எப்போது சொற்பொழிவை  சங்கீதமாக்க வேண்டும் என்பதையெல்லாம் அவர் மிக விரைவில் கற்று, அக்கலையில் விற்பன்னர் ஆகிவிட்டார்.

எந்த அரசியலில் அவர் மூக்கை நுழைத்து, அதில் அவர் தன்னை முடிசூடா மன்னர் ஆக்கிக் கொண்டாரோ, அந்த அரசியல் களத்தில் தனக்கு எதிராக எவரும் மூக்கை நுழைத்துவிடக்கூடாது என்பதில் கண்கொத்திப் பாம்பாக இருந்தார் அவர்.

காலமும் சூழலும் அவருக்கு கைக் கொடுத்தது. அவரை அரசியல் அரியணையில் ஏற்றிவிட்டு, காலம் அவரை வேடிக்கை பார்த்தது.
இளம் வயதில் ஓரிரு ரொட்டித் துண்டுகள் கிடைக்காதா என்று தெருக்களில் அலைந்து திரிந்து கொண்டிருந்த அவர், ஆட்சி பீடம் ஏறியதும், ஆட்சியில் இருந்ததும் சொற்பகாலமே! அதாவது பன்னிரெண்டு ஆண்டுகள்!

கொலைகளைச் செய்வதற்கென்ற பிறந்து, ஆட்டம் போட்டு அடங்கி போன அவர் யார் என்று கண்டுபிடிங்கள்????

ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

ரெயில் பெட்டி தொழிற்சாலை


Image result for சென்னை பெரம்பூர் இரயில் பெட்டி தொழிற்சாலை

ஆர்ப்பாட்டம் எதுவும் இன்றி சாதனை படைக்கும் நிறுவனம் என்றால் சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையை சொல்லலாம். “இன்டிக்ரல் கோச் பேக்டரி” எனப்படும். இது, சென்னையின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று.இங்கு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளார்கள் வேலை செய்கிறார்கள்.

புதன், 20 ஏப்ரல், 2016

தமிழ் எழுத்துக்கள்



                             தமிழ் எழுத்துக்கள்

முன்னுரை

        தமிழ் எழுத்துகளின் வகைகளையும்  அதை ஒலிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு  பற்றியும் சுருக்கமாக பார்க்கலாம்.
தமிழ் எழுத்துக்களை  உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் என இரண்டு வகையாக பிரிக்கலாம்.  

உயிர் எழுத்துக்கள்
     முதல் வரை உள்ள 12 எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள் என்று அழைக்கிறோம். உயிர் இன்றி எந்த உயிரும் உயிர் வாழ முடியாது, அதுபோல உயிர் எழுத்துக்கள் இன்றி எந்த எழுத்தையும் உச்சரிக்க முடியாது. பிற எழுத்துக்கள் பிறப்பதற்கு அடிப்படையாக இருப்பதால் உயிர் எழுத்து எனப் பெயர் பெற்றது. உயிர் எழுத்துக்களை தனியே ஒலிக்கலாம். உதாரணமாக அ-பசு, ஈ-உயிரினம்.

மெய் எழுத்துக்கள்
      க் முதல் ன் வரை உள்ள 18 எழுத்துக்கள் மெய் எழுத்துகள் எனப்படும். மெய் எழுத்துக்களை தனியே ஒலிக்க முடியாது. தனியே ஒலித்தால் பொருள் தராது. க் தனியே ஒலித்தால் எந்த பொருளும் தராது. உயிர் இன்றி மெய் இயங்காது.
க் என்ற மெய் எழுத்திற்கு முன்னால் “இ” என்ற உயிரும் பின்னால் “உ” என்ற உயிரும் மென்மையாக சேரும் போது க் என்ற மெய் எழுத்து தோன்றுகிறது.

உயிர்மெய்எழுத்துக்கள்
     முதல் வரை உள்ள 216 எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள் எனப்படும். உயிரும் மெய்யும் சேர்ந்து தோன்றுவது உயிர்மெய் எழுத்தாகும். க் என்ற மெய் எழுத்தோடு “அ” என்ற உயிர் சேர்ந்தால் “க” என்ற உயிர்மெய் எழுத்து தோன்றுகிறது. இவ்வாறே பிற எழுத்துக்களும் தோன்றுகிறது.

மாத்திரை
     உயிர் மெய்  எழுத்தை  ஒலிக்க எடுத்துக் கொள்ளும்  கால அளவு மாத்திரை எனப்படும். ஒரு முறை கண்ணிமைக்கும் நேரம் அல்லது ஒரு முறை கைநொடிக்கும் நேரம் ஒரு மாத்திரை எனப்படும். எழுத்துக்களுக்கு ஏற்றார் போல் கால அளவு மாறுபாடுகிறது.

குறில் எழுத்துக்கள்
     ஒரு எழுத்தை உச்சரிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு குறைவாக இருந்தால் அது குறில் எனப்படும்.  அ, இ, உ, எ, ஒ போன்ற எழுத்துக்கள் ஒலிக்க  குறைந்த கால அளவு அதாவது ஒரு மாத்திரை கால அளவு எடுத்துக் கொள்வதால் இது குறில் எனப்படுகிறது.

நெடில் எழுத்துக்கள்
      ஒரு எழுத்தை உச்சரிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு அதிகமாக இருந்தால் அது நெடில் எனப்படும். ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஔ போன்ற எழுத்துக்களை உச்சரிக்க அதிக கால அளவு அதாவது இருமாத்திரை கால அளவு எடுத்துக் கொள்வதால் இது நெடில் எனப்படுகிறது.

மெய் எழுத்திற்குரிய மாத்திரை
      மெய் எழுத்துக்கள் குறுகிய காலத்தில் மறைந்து விடும். மெய் எழுத்தை உச்சரிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு அரை மாத்திரை ஆகும். உயிரும் மெய்யும் சேரும் போது உயிர் தெரியாது மெய் மட்டுமே தெரியும். க் என்ற மெய் எழுத்தோடு அ என்ற உயிர் எழுத்து சேரும் போது க என்ற உயிர்மெய் தோன்றும் க என்ற மெய்யே தெரியும். அ என்ற உயிர் எழுத்து தெரியாது.

ஆய்த எழுத்து
     ஆய்த எழுத்து எப்போதும் உயிருக்கும் மெய்யுக்கும் நடுவில் தான் இருக்கும். அஃது என்ற சொல்லில் வருவது போல உயிர்மெய் நடுவில் மட்டுமே ஆய்தம் இடம்பெறும். எனவே இது உயிருக்கும் மெய்யுக்கும் நடுவில் வைக்கப்படுகிறது. ஆய்த எழுத்து ஒலிக்க ஆகும் கால அளவு சில இடங்களில் ஒரு மாத்திரையாகவும் சில இடங்களில் இரண்டு மாத்திரையாகவும் இருக்கும்.

முடிவுரை
      இத்தகைய பாகுபாடு தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் இல்லை எனலாம். தமிழ் மொழியில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன. இக்கட்டுரையில் தமிழ் எழுத்துக்களின்  வகைகளையும் அதை ஒலிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு பற்றியும் பார்த்தோம். 





செவ்வாய், 19 ஏப்ரல், 2016

குழந்தைகள் பயத்துக்கு பெற்றோரே காரணம்

                குழந்தைகள் பயத்துக்கு பெற்றோரே காரணம்
முன்னுரை


ஒரு குழந்தைப் பயப்படுகிறது என்றால், உடனே நாம் பயம் அவன் கூடவே பிறந்தது என்கிறோம். உண்மையில் பயம் என்ற உணர்வு குழந்தைகள் பிறக்கும் போது கூடவே பிறந்துவிடுகிறதா? இல்லை என்கிறது உளவியல். பயத்துக்கு காரணம் பொற்றோர்களே என்று மேலும் அது தெரிவிக்கிறது.
இளங்கன்று பயமறியாது

பெற்றோர்கள் தங்கள் குழந்தை தைரியமாக இருக்க வேண்டும் என்று, கருவாக இருக்கும் போதே நினைத்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை நிச்சயமாக வாழ்வில் வெற்றியாளனாக திகழ்வான் என்று கூறுகிறது. மாறாக பெரியவர்களுக்கு பயந்து  குழந்தை கட்டுப்பாடோடு வளரவேண்டும் என்று நினைப்பவர்களின் குழந்தைகள், பயம் உடன் பிறந்ததாகி விடுகிறது. அதேபோல் குழந்தைகள் வளரும் பருவத்தில் சாப்பிடுவதற்காகவோ அல்லது வேறு எதற்காகவோ “பூச்சாண்டி வருகிறான்” என்று பயமுறுத்தி வளர்த்தாலே வருங்காலத்தில் அவர்களுக்கு பயம் அதிகமாகி, தன்னம்பிக்கை குறையும் வாய்ப்பு இருக்கிறது.
வேப்பமர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு
விளையாட போகும்போது சொல்லி வைப்பாங்க
அவங்க வீரத்தை முளையிலேயே கிள்ளி வைப்பாங்க என்கிறது ஒரு பாடல்.

பயத்தின் அறிகுறிகள்
அதேபோல், “இவனுடன் பேசாதே”, “அவனுடன் பேசாதே” என்று கூறி  வளர்க்கப்படும் குழந்தைகள் ஒருவித பய உணர்ச்சியோடு வளருவார்கள். பயத்தை உளவியலாளர்கள் உடல்ரீதியாக, உணர்வு ரீதியாக என இரண்டு வகையாக பிரிக்கிறார்கள். உடல் ரீதியான பயத்திற்கு அதிக வியர்வை, வழக்கத்தை விட  அதிகமான இதயத்துடிப்பு போன்றவை அறிகுறிகள். எவ்வளவு பெரிய சோகம் என்றாலும் அதை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே அழுவதும், முகத்தை கடுமையாக உர்ரென்று வைத்துக் கொள்வதும் உணர்வு ரீதியான பயத்தின் வெளிப்பாடுகள். பெரியமீசையோடு திரிபவர்களுக்குத்தான் அதிக பயம் இருக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள். பேய்ப் படங்கள் பயத்தை தருவதற்கு மட்டும் அல்ல, பயத்தைப் போக்குவதற்கும் பயன்படுமாம். அதற்காகவே சிலர் பேய்ப் படங்களை விரும்பிப் பார்க்கின்றனர்.
பயத்திற்கான காரணங்கள்
பயத்துக்கான காரணங்களில் ஒன்று, அளவு கடந்த எச்சரிக்கை உணர்வு கொண்டது. ஒரு சம்பவம் நடப்பதற்கு முன்பே எதிர்மறையாக, நடந்து விடுமோ என்று பூதாகரமாக கற்பனை செய்து கொள்வதில் பயம் தொடங்குகிறது. மேலே சுற்றிக் கொண்டிருக்கும் மின்விசிறி கீழே விழுந்துவிடுமோ, பயணம் செய்யும் பேருந்து விபத்தில் சிக்கி விடுமோ, பாலத்துக்கு அடியில் போகும்போது அந்த  பாலம் இடிந்து தம் தலையில் விழுந்து விடுமோ என்றெல்லாம் நிறைய பேர் பயப்படுவதுண்டு. இத்தகைய பயத்தைப் போக்க முதலில் குழந்தைகளை வெளியுலகோடு பழக விட வேண்டும்.
முடிவுரை

 வீட்டுக்குள்ளே அடைத்து வைத்து வீடியோ கேம்ஸ் ஆடவிடும் போது அவர்களுக்கு பயமும் உணர்ச்சிவசப்படும்  தன்மையும் அதிகமாகி விடுகிறது. அதுமட்டுமல்ல, உடன் பழகும் நண்பர்கள் பயம் மிக்கவர்களாக இருந்தால், உங்களுக்கும் அந்த பயம் குணம் தொற்றி கொள்ளும் என்கிறார்கள். மனநல மருத்துவர்கள்.

சனி, 16 ஏப்ரல், 2016

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் எப்படி..??

அன்புடையீருக்கு வணக்கம்,

கடந்த வாரம் பங்குச் சந்தையில்  ஈடுபடுவர்களை பற்றி பார்த்தோம்.இப்பொழுது  பங்குச் சந்தையில் எவ்வாறு ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகிறது என்பதை பற்றி காணலாம்.

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

அலுவலகங்கள்

              
Image result for அலுவலகம்

ஹந்தி – கார்யாலய்                       தமிழ் – அலுவலகங்கள்

1.ஆயகர் கார்யாலய்         -  வருமானவரி அலுவலகங்கள்
2.ஸர்காரீ தஃப்தர் சாஸகீய கார்யாலய்  -   அரசாங்க அலுவலகங்கள்
3.டாக்கர்                                - தபால் நிலையம்
4.த்தானா                              -  காவல் நிலையம்
5.ரேல்வே ஸ்டேஷன்       - ரயில்வே ஸ்டேஷன்
6.புஸ்தகாலய்                    -நூலகம்
7.பைங்க்                              - வங்கி
8.அதாலத் நியாலய்       -  நீதிமன்றம்
9.பத்ரிகா கார்யாலய்   -  பத்திரிக்கை அலுவலகம்

10.பத்தன் நியாஸ்         -  துறைமுகம்

திங்கள், 11 ஏப்ரல், 2016

மணல் ஒவியம்



மணல் ஒவியம்





ஏலாதி

                   Image result for ஏலாதி நூல்

முன்னுரை:

    பதிணெண் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று. இதன் ஆசிரியர் கணிமேதாவியர். இது 80 வெண்பாக்களைக் கொண்டது.ஏலம் முதலிய வாசனைப் பொருட்களை சேர்த்து தயாரிக்கும் மருந்தை ஏலாதிப்பொடி என்றும் ஏலாதிக் குளிகை என்றும் கூறுவர். இதை போன்று மனதிற்கு உகந்த நல்ஒழுக்கங்களை முதலாவதாக வைத்து புனையப்பட்ட பாடல்களை உடையதால் இது ஏலாதி எனப்பட்டது.

பெரியோர்க்கு உரிய தன்மைகள்:   
                   
தானே ஒருவனை கொலை செய்யாமல் இருத்தல். பிறர் கொலை செய்தலையும் விரும்பாதல், பொய் சொல்லாமல் இருப்பவர் பிறர் மனைவியை விரும்பாதவர். கீழ்மக்களுடன் சேர்தலை விரும்பாதவர். தீய சொற்களை பேசாமல் இருத்தல் ஆகிய இயல்புகள் பெருந்தன்மையில் பெரியவனுக்கு உரியனவாம்.

எளிது அரிது:

 சாவது எளிது, அரிது, சான்றாண்மை, நல்லது
 மேவல் எளிது, அரிது, மெய்போற்றல், ஆவதன் கண்
 சேறல் எளிது, நிலை அரிது, தெள்ளியர் ஆய்
 வேறல் எளிது, அரிது, சொல்.

விளக்கம்:

சாவது எளிது ஆனால் கல்வியில் சிறந்து விளங்குதல் அரிது திருமண வாழ்வை ஏற்பது எளிது ஆனால் பற்றற்ற ஒழுக்கத்தை காத்தல் அரிது. துறவறத்தின் கண் செல்லுதல் எறிது ஆனால் அதன் படு நடப்பது அரிது. எதனையும் சொல்லுதல் எளிது. ஆனால் தெளிந்து அதன்படி நடத்தல் அரிது.

நண்பர்களுக்கான ஆறு குணங்கள்:

 சாதல், பொருள் கொடுத்தல், இன்சொல், புணர்வு உவத்தல்
 நோதல், பிரிவில் கவறலே, ஓதலின்
 அன்புடையார்க்கு உள்ளன ஆறுகுணம் ஆக,
 மென் புடையார் வைத்தார் விரித்து
.
விளக்கம்:

 நண்பர்கள் இறந்தவிடத்து தாமும் துக்கம் தாங்காமல் இறத்தலும் அவர்களுக்கு பொருள்குடுத்து உதவி செய்தலும், இனசொல் கூறுதலும், அவர்களுடன் இருப்பதை விரும்புதலும், அவர்கள் வருந்தும்போது வருந்துதலும் , அவர்கள் பிரியும்போது, கலங்குதலும் ஆன ஆறு இயல்புகளும் நண்பர்களுக்கு இருக்க வேண்டிய குணமாகும்.

மங்கையற்கு அறிவுரை:

 மையேர் தடங்கண் மயில் சாயலாய்!
 மெய்யே உணர்ந்தார் மிக உரைப்பர்; பொய்யே
 குறளை, கடுஞ்சொல், பயன்இல் சொல்நான்கும்
 மறலையின் வாயினவாம் மற்று.

விளக்கம்:
 மைதீட்டிய அழகான பெரிய கண்கனையுடைய மயிலைப் போன்ற பெண்ணே! சான்றோர் மேன்மையான நற்சொற்களையும் மெய்யையும் மிகவும் பேசுவார்.பொய்யும் புறங்கூறலும் வன்சொல்லும் பயனில்லாத சொற்களும் ஆகிய இவை நான்கும் புல்லறிவு உடையான் வாயில் வருவனவாம்.

உதவ வேண்டியவர்கள்:
 தாய்இழந்த பிள்ளை, தலை இழந்த பெண்டாட்டி
 வாய் இழந்த வாழ்வினார், வாணிகம் போய் இழந்தார்
 கைத்தூண் பொருள் இழந்தார், கண்ணிலவாக்கு ஈந்தார்
 வைத்து வழங்கி வாழ்வார்

விளக்கம்:
தாயை இழந்த மகனுக்கும், தன் மணவனை இழந்த மனைவிக்கும், ஊமைக்கும், வாணிகத்தில் பொருள் இழந்தவர்க்கும், கண்ணில்லாத குருடர்களுக்கும் வேண்டுவன கொடுத்தவர்கள் பொருளை மிச்சமாய் வைக்காமல் தனக்கும், மற்றவர்க்கும் கொடுத்து உதவுவர்.


 முடிவுரை:

 இவ்வாறு வாழ்க்கைக்கு தேவையான ஒழுக்கங்களை கணிமேதவியார் ஏலாதியில் கூறியுள்ளார்.