திங்கள், 29 பிப்ரவரி, 2016

ஹிட்லர் நன்மையும் செய்துள்ளார்



             ஹிட்லர் நன்மையும் செய்துள்ளார்

முன்னுரை

         உலகில் யாவரும் நூறு சதவிதம் நல்லவர்களும் இல்லை. நூறு சதவிதம் கெட்டவர்களும் இல்லை. ஒருவர் எவ்வளவு நல்லவராக இருந்தாலும்  அவர் செய்யும் ஒரு சில தவறு அவர் செய்த அத்துனை நன்மைகளையும் மறைத்துவிடும்.அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக ஹிட்லரைக் கூறலாம்.
ஜெர்மனியின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர்

             உலகமே கொடுங்கோலனாக நினைக்கும் ஹிட்லர் தான் ஜெர்மனியின் வளர்ச்சிக்கு அடிப்படையானவர். பின்னாளில் அவர் நடத்திய கொடுங்கோலாட்சி காரணமாக அவருடைய சாதனைகள் யாருக்கும் தெரியாமல் போய்விட்டன.
நல்லவர் என்று பெயர் எடுப்பது கடினம்
கெட்டவர் என்று பெயர் எடுப்பது எளிது

அளவைகள் பிறந்த கதை

                   
Image result for மைல்


        ஜீலியஸ் சீசரின் ரோமானிய படைகள், சீரான வேகத்தில் 
நடப்பதற்காக சிறிது இடைவெளி விட்டு நிற்பார்கள். அதுபோல 1000 தடவை இடைவெளியை குறிக்கும் தொலைவை ‘மில்லியாபாசம்’ என்று லத்தின் மொழியில் கூறினார்கள். அந்த அளவே இன்று ‘மைல்’ என்று குறிப்பிடப்பிடப்படுகிறது.அதேபோல ஒருவனின் மூக்கு நுனியில் இருந்து அவரது நீட்டிய கையின் நுனி வரை உள்ள நீளமே ’கெஜம்’ என அழைக்கப்பட்டது.

சூரிய உதயத்தில் இருந்து, மறையும் நேரம் வரை ஒருவன் இரண்டு காளைகளையும் கொண்டு உழுகின்ற நிலப்பரப்பின் அளவே ஓர் ஏர் எனப்பட்டது.



ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

தொகுக்கப்பட்ட விவரங்களுக்கு இடைநிலை காணல்



    தொகுக்கப்பட்ட விவரங்களுக்கு இடைநிலை காணல்

குவிவு நிகழ்வெண் (cumulative frequency)

     ஒரு நிகழ்வெண் பட்டியலில் குவிவு நிகழ்வெண் என்பது அந்தப் பிரிவு இடைவெளி வரை உள்ள நிகழ்வெண்களின் கூடுதல் ஆகும்.
50 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களுக்கான இடைநிலை
மதிப்பெண்கள்  20 27 34 43 58 65 89
மாணவர்களின் எண்ணிக்கை 2 4 6 11 12 8 7

                  
மதிப்பெண்        மாணவர்களின்எண்ணிக்கை           நிகழ்வெண் குவிவு

 20                                                                  2                                                                 2

27                                                                   4                                                             (2+4) =  6            

34                                                                   6                                                            (6+6) = 12

43                                                                  11                                                           (12+11) = 23

58                                                      12                                                 (23+12) =35                                                                                                
65                                                                   8                                                             (35+8) = 43

89                                                                   7                                                             (43+7) = 50
                                                                 N=50

                          N/2 = 50/2
                                
                                  = 25
இடைநிலை = (N/2) வது மதிப்பு = 25ஆவது உறுப்பின் மதிப்பு
ஆனால் 25 ஆவது உறுப்பு குவிவு நிகழ்வெண் நிரலில் உள்ள 35 என்ற இடத்தில் உள்ளது. இதற்குத் தொடர்பான மதிப்பு 58.
                       இடைநிலை = 58
சரியான இடைநிலை இல்லாவிடில் அடுத்து உள்ள முதல் மதிப்பை இடைநிலையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

1.ஒரு வகுப்பிலுள்ள 50 மாணவர்களின் உயரங்களுக்கான இடைநிலை காண்க

புதியவர்களுக்கான லேப்டாப் டிப்ஸ் ..!!





தொடர்ந்து மடிகணினியை உபயோகித்துவரும் பயனாளர்களுக்கு ஒரு நியாயமான  சந்தேசம் வரும்.அது தங்களது மடிகணினியை ஷட்டௌன் செய்யாமல் மூடி வைக்கும்பொழுது sleep mode இதற்கு செல்ல வேண்டுமா..?? hibernate ஆக வேண்டுமா..??அல்லது எதுவுமே ஆகக் கூடாதா..??shut down  ஆக வேண்டுமா..?? இதில் ஏதாவது ஒரு வசதிக்கு நமது மடிக்கணினியை மாற்ற என்ன செய்ய வேண்டும் ..??


விண்டோஸ் taskbar system tray இல் உள்ள battery ஐகானை வலது க்ளிக் செய்து power option லிங்கை க்ளிக் செய்யுங்கள்.



இப்பொழுது திறக்கும் திரையில் இடது பிரிவில் உள்ள choose what closing the lid does என்ற லிங்கை  க்ளிக் செய்து கொள்ளுங்கள் இதில் sleep  வசதி உகந்தது.சில சமயங்களில் திரை அவசியப்படாமல் ஏதாவது பாடல்களை கேட்க வேண்டுமென்றால்  do nothing  வசதியை தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த டிப்ஸ்-ஐ நான் செய்து பார்த்துவிட்டேன் இப்பொழுது நீங்களும் செய்து பார்த்து பயன்பெறுங்கள் ..நன்றி..!!

சங்க காலம் பொற்காலம்

          சங்க காலம் பொற்காலம்


முன்னுரை;


       1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலம் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. இதற்கு காரணம் அக்கால மக்களின் வாழ்க்கைமுறை, அரசியல், தமிழ்மொழி ஆட்சி, இலக்கியவளம், புலமைப்போற்றல், பண்பாடு நாகரிகம் என சொல்லிக் கொண்டே போகலாம்.
அரசியல்;




     இனக்குழு சமுதாயம் ஒழிந்து நிலவுடைமைச் சமுதாயமும் முடியாட்சி சமுதாயமும் தோன்றிய காலம் சங்க காலம் எனப்படுகிறது. ஊர்ப்புறங்கள் இனக்குழு நாகரிகத்தையும், நகரங்கள் நிலவுடைமை நாகரிகத்தையும் கைக்கொண்டிருந்தன. ஊர்ப்புறத்தலைவர்கள் குடைவோலை முறையிலும், அரசர்கள் வாரிசு அடிப்படையிலும் தேரந்தெடுக்கப்பட்டனர். போரும், பூசலும் மக்களை பெரிதாகப் பாதிக்கவில்லை. மக்கள் போர்க்காலத்தும் அமைதி வாழ்க்கையே வாழ்ந்தனர் என்பதும் போர் என்பது மன்னர்க்கும் மறவர்க்கும் உரியது என்பதும் அக்கால இயல்பாய் இருந்தது. ஒரு நாட்டு புலவரும் வாணிகரும் வேறு நாடு செல்வதற்கு எத்தடையும் விதிக்கப்படவில்லை. பொதுமக்களிடையே கிளர்ச்சி போன்றன நடைபெறவில்லை. மன்னன் மக்கள் மனமறிந்து செயல்பட்டான். மக்கள் கருத்துகளை அவர்கள் சார்பாகப் புலவர்கள் மன்னனிடம் எடுத்துக் கூறினர். நல்லாட்சி நடந்தது. தமிழ் வேந்தர்கள் வெற்றிகள் பல பெற்றன.

தமிழ்மொழி ஆட்சி;
       தமிழ்  நாட்டைத தமிழர்களே ஆண்ட காலம் சங்ககாலம். அக்கால அரசில் தமிழொன்றே ஆட்சி மொழியாய் இருந்தது. பின் ஆண்ட களப்பிரர்களோ, பல்லவர்களோ தமிழைப் புறக்கணித்தனர். அவர்கள் காலத்தில் சமஸ்கிரதமும், பாலியும், பிராகிருதமும் ஆட்சி செய்தன. பிற்கால பல்லவர் காலத்தில் தமிழ் தலையெடுத்து     ஆட்சிமொழி ஆயிற்று என்றாலும் சமஸ்கிருத ஆதிக்கம் ஓய்ந்து விடவில்லை. பிற்கால சோழர் காலத்திலும் இதே நிலை, ஊர்ப்புறத்தலைவர்கள் குடைவோலை முறைக்குத் தகுதியாக வேண்டுமெனில் வேத கல்வி பயின்றாக வேண்டும். பின் வந்தவர்களும் தங்கள் தாய் மொழியையே ஆட்சி மொழியாக கொண்டனர். இத்தகைய வரலாற்றில் ஆராயும் போது தமிழ் ஆட்சி செய்தகாலம், தமிழனால்  தமிழன் ஆழப்பட்ட காலமாகிய சங்ககாலம் பொற்காலமே.

இலக்கியவளம்;

          ஆட்சி  அரசியல்தான்  மொழியின் இலக்கிய வளர்ச்சிக்கு அடித்தளம். கம்பராமாயணமும், பெரியபுராணமும் சோழர் காலத்தின் தான் தோன்றியது. பாட்டும் தொகையுமாகிய சங்ககால இலக்கிய விழுமத்திற்கு அக்கால அரசியலும் நல்லாட்சியுமே காரணமாக இருக்க முடியும். சிறந்த இலக்கியங்கள் தோன்றும் காலம், ஒரு நாட்டிற்கு நற்காலம் என்பது உண்மை. ஈடும் இணையுமற்ற தூய தனித்தமிழ் இலக்கியங்கள் தோன்றிய காலம் சங்ககாலமாகும்.
புலமை போற்றல்;
               அறிவுடை யோனாறு அரசும் செல்லும்
என்று  அறிவாளிகளின் மேன்மையை அரசனே அறிவிக்கிறான். இனம் குலம் ஆகிய வேற்றுமைக்கு அப்பாற்பட்டதாகக் கல்வி போற்றப்பட்டது.
              கற்கை நன்றே  கற்கை நன்றே
              பிச்சை புகினும் கற்கை நன்றே
எனச் செல்வத்தினும் கல்வியே பெருமை சேர்ப்பது என அக்காலத்தார் கருதினார். அறிவுக்கும் கல்விக்கும் முதன்மை கொடுக்கும் சமுதாயம் செல்வத்திலும் முதன்மை பெறுதலை இன்றும் காணலாம்.
                அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
                 அஃதறி கல்லா தவர்.
என்ற வள்ளுவர் சொல் பொய்யன்று. அறிவார்ந்த சமுதாயம் அறிஞர்களை போற்றியது.
புலவரின் செயற்பாடு;

         பொருளையும் பொன்னையும் பரிசாகப் பெறும் இரவலர்கள் தாம் புலவர்கள் என எள்ளி நகையாடுவோர் உளர். புலமைக்குப் பரிசு ஒரு மதிப்பீடு என்றே அக்காலப்புலவர்கள் எண்ணினர். பரிசுக்காக பொய் கூறி ஒருவனை வாழ்த்தியதில்லை. அஙர்கள், வரிசைக்கு வருந்தும் பரிசில் வாழ்க்கையை மேற்கொண்டவராயினும், எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே என மன்னனை எதிர்ப்பதில் இறுமாப்புற்றனர். அவர்தம் அறிவு, ஆட்சிக்கும் மக்களுக்கும் மன்னனுக்கும் பயன்பட்டது. அறிவுடையோர் வழிகாட்ட அரசன் ஆட்சி புரிந்ததால் ஆட்சி சிறப்புற்றது.
பெண்மை போற்றல்;

           பெண்களில் பெருந்தொகையினர் படித்தவராயிருந்தனர், பெருமைமிகு புலவர்களாக முப்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் விளங்கினர். ஔவையார், வெள்ளி வீதியார், நக்கண்ணையார், ஆதிமந்தியார் போன்ற பெண்பாற் புலவர்களின் பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன. கல்வியுரிமை மட்டுமன்றிச் சமுதாயத்தின் பிற உரிமைகளும் பெற்றிருந்தனர். பெண்கள் விரும்பியவனைக் கணவாக்ப் பெறும் உரிமை, கணவன் தேடிவந்த பொருளைப் பாதுகாக்கவும் செலவிடவும் உரிமை, அரசு பணிகளில் பணியாற்றும் உரிமை எனப் பெண்கள் பெற்ற உரிமைகள் பல.
பண்பாடும் நாகரிகமும்;
         சங்க சமுதாயம் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் மேம்பட்டு விளங்கியது. சிற்பம், ஓவியம், போன்ற கலைகள் வளர்ச்சி பெற்றிருந்தன. கலைஞர்களாகிய பாணர்களும், கூத்தரும், விறலியும் அரசராலும் ஏனைப் புரவலராலும் மதிக்கப்பட்டனர். சங்க கால மக்கள் உடல்சார் வாழ்க்கையைவிட உள்ளஞ்சார்ந்த வாழ்க்கைக்கு சிறப்பிடம் கொடுத்தனர். அதனால் அன்பு, அருள், வாய்மை, நட்பு போன்ற நற்பண்புகளைப் பெற்று விளங்கினர்.
பொதுமை அறம்;
         சாதிசமய பூசல்கள் சங்ககாலத்தில் இல்லை. தீண்டாமைக் கொடுமை அறவே இல்லை. ஏற்றத்தாழ்வற்ற அக்காலச் சமுதாயத்தில் எல்லா இனத்தவரும் ஒன்றி வாழ்ந்தனர். காதலர்களை இனம், சாதி, கொடுமை ஆகியன கட்டுப்படுத்தாத காலம் அது. நீதி, தண்டனை போன்றவை அனைவர்க்கும் பொதுவாய் இருந்தன.
தொழில்வளர்ச்சி;

         உழவு, நெசவு போன்ற அடிப்படைத் தொழில்கள் மேலோங்கி இருந்தன. உழவுத்தொழில் வளர்ச்சிக்காக கரிகாலன் காவிரியில் கல்லணை கட்டினான்.  தமிழ் அரசர்கள் பலர் பாசன ஏரிகளை ஏற்படுத்தி நீர்வளம் பெருகச் செய்தனர். பட்டினும், மயிரினும், பருத்தி நூலினும் நெய்யப்பட்ட ஆடைகள் உள்நாட்டு தேவைகட்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் உற்பத்தி செய்யப்பட்டன.
முடிவுரை;
       சங்க காலத்தின் பெருமைகளை சங்க இலக்கியங்களும், கல்வெட்டுகளும், பிறநாட்டார் குறிப்புகளும் அழகாக எடுத்துரைக்கின்றன. பொற்காலம் என்ற ஒன்று தமிழ்நாட்டில் நிலவியிருக்குமானல் அது சங்க காலமாகத்தான் இருக்கும்.


இணைய வசதி இல்லாமலும் கூகுள் மேப்பை பயன்படுத்தலாம்!

Image result for கூகுள் மேப் படம் தமிழ்

கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்படும் சேவைகளுள் ஒன்றான கூகுள் மேப் சேவையின் ஊடாக மில்லியன் கணக்கானவர்கள் பயன்பெறுகின்றனர்.
தற்போது iOS மற்றும் Android சாதனங்களில் பயன்படுத்தும் கூகுள் மேப் அப்பிளிக்கேஷனுக்கான புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் இணைய வசதி இல்லாத நிலையிலும்(Offline Navigation) இச்சேவையினை பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.
இது தவிர அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் கேஸ் விலையினை அறிந்துகொள்ளக்கூடிய வசதியும் இந்த அப்பிளிக்கேஷனில் உள்ளடக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
மேலும் இந்த அப்பிளிக்கேஷனை iTunes, Play Store ஆகிய தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
Image result for கூகுள் மேப் படம் தமிழ்

மொபைல் போன்களை சார்ஜ் செய்யும் காற்சட்டை கண்டுபிடிப்பு..!!



இனி பற்றறிகளைச் சார்ஜ் செய்ய நீங்கள் இடம் தேடி அலையத்தேவையே இல்லை. பிற்பாக்கெட்டில் போட்டால் போதும் சார்ஜ் செய்துகொள்ளலாம். 

லண்டனில் உள்ள சவுத்ஹம்டன் பல்கலைக் கழகமும் வோடாபோனும் இணைந்தே இந்தனைக் கண்டுபிடித்துள்ளார்கள். 

நாம் அணியும் கால்சட்டையாக இருக்கலாம் இல்லை என்றால் ஜீன்சாக இருக்கலாம். 

ஆனால் நாம் நடக்கும்வேளை பின் புறத்தில் (அடிப்பகுதியில்) உராய்வு ஏற்படுவது வழக்கம். 

இதனை தான் விஞ்ஞானிகள் டெக்னிக்காகப் பாவித்துள்ளார்கள்.


உராய்வு ஏற்படும் பகுதியில் இவர்கள் ஒருவகையான நார் இழைகளை இணைத்துள்ளார்கள். 

உராய்வினால் ஏற்படும் வெப்பம் மற்றும் அதன் உராய்வை இந்த நார் இழை மின்சாரமாக மாற்றுகிறது.

எனவே நீங்கள் நடந்தால் மற்றும் உங்கள் உடல் உஷ்ணமாக இருந்தால் போதும் உடனே காற்சட்டை மின்சாரத்தை தயாரிக்க ஆரம்பித்துவிடும். 

பின்னர் என்ன அதில் ஒரு வயரைப் பொருத்தி மோபைல் போனுக்கு கொடுத்தால் போதும், அது சார்ஜ் செய்யப் பயன்படும். 

ஐபேட், ஐபொட், வாக்மென், மோபைல் போன் என பல சாதங்களை இனி சார்ஜ் செய்வது சுலபமாகிறது. ஆக நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ஒன்று தான். இக் கால்சட்டையை அணியவேண்டியது தான். 

இல்லை என்றால் அவர்கள் தரும் ஒரு விதமான நார் இழைகளை உங்கள் கால்சட்டையில் பொருத்தவேண்டும்.

இதற்கு பவர் பாக்கெட் என்று பெயரும் வைத்துவிட்டார்கள்.





இனி மின் வசதி இல்லாமலே மொபைல் போன்களை சார்ஜ் செய்யலாம் போல் இருக்கே..!!!

கூகுள் இல்லம்..!!!

இது பெங்களூருவில் இருக்கும் கூகுள் இல்லம். அந்த நிறுவனம் உருவாக்கும் புதுமையான கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துவதற்காக இப்படி ஒரு தியேட்டர் போன்ற இடத்தை அலுவலக வளாகத்தில் அமைத்திருக்கிறார்கள்.


சனி, 27 பிப்ரவரி, 2016

தமிழ் இலக்கண வரலாறு


முன்னுரை
            தமிழ் நூல்களில் மிகப் பழமையாக விளங்கும் நூல் தொல்காப்பியம் ஆகும்.இதனை இயற்றியவர் தொல்காப்பியர்.இவரை சமணர் என்றும் சைவர் என்றும் கருதுவர்,மற்றும் பிற இலக்கண நூல்கள் அபிநயம்,யாப்பருங்கலம்,யாப்பருங்கலக்காரிகை,வச்சனந்திமாலை,நன்னூல் போன்ற இலக்கண நூலின் ஆசிரியர்கள் சமணர்கள் ஆவார்.

அபிநயம்
            அகத்தியரின் மாணவர் அவிநயரால் இயற்றப்பட்ட இலக்கணநூல் இது. இது அகவலாலும்,வெண்பாவலும் ஆனது.இந்த நூல் எழுத்து,சொல்,யாப்பு, பாட்டியல் பற்றி கூறும்.இதன் காலம் கி.பி.5அல்லது 6 ஆம் நூற்றாண்டு. யாப்பருங்கலவிருத்தி,வீருத்தி,வீரசோழியம்,நேமிநாதம்,மயிலைநாதர் உரை ஆகியவற்றில் 90-ஆம் மேற்பட்ட அவிநயனார் நூற்பாட்கள் மேற்கோளாக காட்டப்பட்டுள்ளன.இது முத்தமிழ் பற்றியதாக இருக்கலாம் என்பர்.
யாப்பருங்கலம்
            இதன் ஆசிரியர் அமிர்தசாகர்,குணசேகரர் என்றும் கூறுவர்.இந்த நூல் சந்தம்,தாண்டகம் ஆகியவற்றிற்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது.இது சூத்திப்பாவால் ஆன யாப்பு நூல்.இதன் காலம் 10-ஆம் நூற்றாண்டு.

யாப்பருங்கலங்காரிகை
            இதன் ஆசிரியர் அமிர்தசாகர்.இது கட்டளை கலித்துறையால் ஆனது.இதன் உரை ஆசிரியர் குணசாகரர்.``காரிகை கற்று கவிபானடலாம்’’. இதன் உரை ஆசிரியர் குணசாகரர்.காரிகை காலம் 10-ஆம் நூற்றாண்டு.
நேமிநாதம்
            22-ஆம் தீர்த்தங்கர் நேமிநாதர் பெயரால் இந்நூல் அமைந்தது. இதன் ஆசிரியர் குணவிர பண்டிதா.இதன் அதிகாரங்கள் எழுத்தும்,சொல்லும் 96-சூத்திரங்களை கொண்டுள்ளது.இதன் அளவு கருதி சின்னூல் என்பர்.

வச்சணந்திமாலை
            இதனை வெண்பா பாட்டியல் என்பர்.இந்த நூல் 96-வகை பிரபந்தங்கள்,மங்கள எழுத்து ஆகியன பற்றி கூறும்.மொழி,செய்யுள்,பொது எனும் மூன்று இயல்களை பெறும்.இதன் ஆசிரியர் குணவீர பண்டிதர்.அலர் தன் ஆசிரியர் அச்சணந்தி பெயரால் யாத்தார்.என்பர்.இதன்ர காலம் கி.பி.13-ஆம் நூற்றாண்டு.

நன்னூல்
            தொல்காப்பியம் இதன் முதல் நூல்.இருப்பினும் பல இடங்களில் மாற்றம் கொண்டுள்ளது.எளிமையும்,தெளிவும்,பகுப்பு வகைகளும் கொண்டுது. இதற்கு காண்டிகை உரை,விருந்தி உரை உள்ளன இந்த நூலுக்கு மயிலைநாதர்,சங்கரநமச்சிவாயர்,இராமானுஜ கவிராயர்,சிவஞானமுனிவர் போன்ற பல சமயத்தாரும் உரைகூறியுள்ளனர்.இதன் ஆசிரியர் பவணந்திமுனிவர்.இதன் காலம் 13-நூற்றான்டின் பகுதி ஆகும்.

நம்பியகப்பொருள்
            இந்நூலை அகப்பொருள் விளக்கம் என அழைப்பர்.இதன் ஆசிரியர் நற்கவிராசநம்பி அகம் பற்றிக் கூறும் இந்நூல் அகத்தினையில்,ஒழியல் எனும் ஐந்து இயல்களை கொண்டது.தஞ்சை வாணண் கோவை.இந்நூலின் துறைகளுக்கு ஏற்ற இலக்கியமாக,இயற்றப்பட்டது.

முடிவுரை

            இவ்வாறாக மேலே கூறப்பட்ட இலக்கண நூல்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு பெற்று சிறந்து விளங்குகின்றன.

பங்கு சந்தை வர்த்தகம்..!!

Image result for share market photo in tamil

அன்புடையீருக்கு வணக்கம்,
 கடந்த பதிவு(ஏன் தேவை பங்கு சந்தையில் முதலீடு) இதுக் குறித்து இன்று  ஒரு தொலைநோக்கு பார்வையை பார்க்கலாம் நண்பர்களே..!!

பங்குச்சந்தை என்றால் என்ன?

            பொருட்களை வாங்கவும் விற்கவும் பலரும் கூடுமிடம் சந்தை எனப்படுவது போல, பங்குகளை வாங்கவும் விற்கவுமான இடமே பங்குச் சந்தை எனப்படும். ஆனால், காய்கறிக்கோ, மற்ற பொருட்களுக்கோ தேவைப்படுவது போல, பங்குச்சந்தைக்கு ஒரு குறிப்பிட்ட இருப்பிடம் தேவையில்லை. கணிணி மூலமாகவும், முகவர்கள்(Brokers) மூலமாகவும் பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியும். இன்றைய தேதியில் உலகப் பொருளாதாரம் பங்குச்சந்தையைப் பெரும்பாலும் சார்ந்துள்ளது என்றால் அது மிகையன்று. எனவே பங்குச் சந்தையைப் பற்றி நாம் அறிந்துகொள்வது இன்றியமையாதாகிறது. 


பங்குச்சந்தையைப் பற்றி அறிந்துகொள்ளுமுன் வேறு சிலவற்றைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.அவற்றைப் பார்ப்போமா?


Image result for share market photo in tamil


முதலீடு செய்யும் வழிகள் :

                                மிகவும் கடினமாக உழைத்து நாம் சேமித்த பணத்தை, சரியான முறையில் முதலீடு செய்வது அவசியம். முதலீடு செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. அவற்றின் சாதக பாதகங்களைப்  பார்க்கலாமா?


அசையும் சொத்துகள்;

     நகை,வங்கிச்சேமிப்புகள்,கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகள்  முதலியவை இவ்வகைச் சாரும்.தங்கள் என்பது நல்ல முதலீடாக கருதப்படுகிறது.ஆனால் அதை பாதுகாப்பு குறித்து சற்று பயம் தான்.ஆனால் தங்கத்தை வாங்கி அதை விற்றால் அதிக இலாபம் ஈட்டலாம்.விலை உயரும் போது நல்ல இலாபம் பெற இயலும்.

வங்கிச் சேமிப்புகள்(Bank Deposits) நடுத்தர வர்க்கத்தினராலும், முதியவர்களாலும் மிகவும் விரும்பப் படுவது. அபாயமில்லாதது(Risk free). பரிவர்த்தனைகள் (Transactions) எளிமையானவை. ஆனால், இதில் வரவு, சற்றே குறைவுதான். கடன் பத்திரங்கள் (Bonds) பொதுவாக வங்கிச்சேமிப்புகளை விட அதிகமாகவும், பங்குகளை விடக் குறைவாகவும் லாபம் ஈட்டித்தரும் முதலீடுகள்.

அசையாச் சொத்துகள்;

     நிலம், வீடு முதலியவற்றில் செய்யப்படும் முதலீடு மிகவும் லாபகரமானது. இவற்றின் மதிப்பு பொதுவாக உயருமே அன்றிக் குறைவதில்லை. ஆனால், இது, சிறு முதலீட்டிற்கு ஏற்றதில்லை. நிலமோ, வீடோ வாங்கவேண்டுமானால், பொதுவாகப் பெருந்தொகை தேவைப்படக்கூடும். மேலும், இவற்றை, இலகுவாக அவசரத் தேவையின்போது விற்க இயலாது, மொத்தமாக, ஏதேனும் உபரிப்பணம் வரும்போது, நீண்ட காலத்தேவையை மனதில் கொண்டு, செய்யக்கூடிய சிறந்த முதலீடு இது எனினும், சிறு வருமானம் உடையவர்களோ, குறுகிய காலத்தில் தமது முதலீட்டைப் பணமாக மாற்ற வேண்டுமென்று நினைப்பவர்களோ இவ்வகை முதலீட்டினை மேற்கொள்ளுவது கடினம்.

சரி பங்கு என்றால் என்ன அதற்கு முதலில் விடை வேண்டுமல்லவா..??

Image result for பங்குகள்

பங்குகள்;

    நீங்கள் ஒரு தொழிலை தொடங்க வேண்டும் என்றால் அதற்கு மூலதனம் வேண்டுமல்லவா..??.........................................................


என்ன புரியவில்லையா நண்பர்களே இப்படினா இந்த பதிவு தொடரும் என்ற அர்த்தம்.தொடர்ந்து இணைந்திருங்கள் இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்.நன்றி..

Image result for பங்குகள்