ஞாயிறு, 28 அக்டோபர், 2018

என் அம்புலி தோழி

வாழ்க்கையைப்  புரிய வைத்த
வானின் வதனம் நீ !
தனிமையில் வாடிய போது
தோள் கொடுத்தத் தோழி நீ !
ஒப்பனை செய்யாத
ஓவியம் நீ !
உன்னை நெருங்க முயலவில்லை,
உறவு முறியக்கூடாது என்பதால்.
தொலைவில் இருந்தே,
தொடர்வேன் உன்னை ஒரு தோழியாக !


சனி, 27 அக்டோபர், 2018

எது உயரம்

உடல் அளவில் உயர்ந்து பெற்றோரை நிமிர்ந்து உன் தலையை பார்க்க வைப்பதை விட...
உழைப்பால் உயர்ந்து உன் பெற்றோரை தலை நிமிர்ந்து நடக்க செய்....
அதுவே சிறந்த உயரம்.....

வியாழன், 25 அக்டோபர், 2018

தமிழ் இலக்கியம்

புரிந்த வரிகளை கட்டுரை என்றும்
புரிவது போல் இருக்கும் வரிகளை கவிதை என்றும் ...
புரியாதது போல் புரியும் வரிகளை ஹைக்கூ என்றும் தமிழ் இலக்கியத்தை பிரித்தறிய முடிகிறது......

A lesson

Everyone teaches a lesson,
  Lesson gives the knowledge,
Knowledge gives the experience,
  Experience gives a new life,
So remain patience and achieve
  the goal.

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

பாரதிக்கு ஓர் புகழாரம்

முண்டாசு கட்டாலும் ,
முருக்கு மீசையாலும் ,
என்னை மூழ்கடித்தாய்.

அடர்ந்த புருவத்தாலும் ,
அனல் பார்வையாலும் ,
என்னை ஆட்கொண்டாய்.

புரட்சி வார்த்தைகளாலும் ,
புதிய சிந்தனையாலும் ,
என்னை பூரிக்க வைத்தாய்.

ஓர் மகளாய் உன்மேல்
மாறாத காதல் கொண்டேன்.



திங்கள், 15 அக்டோபர், 2018

Dr. A.P.J.Abdul kalam

Man of humanity;
Man of love;
Man of divine;
Man of honor;
Man of mission;
Man of respect;
And the person of
Dedication that is
Dr A.P.J ABDUL KALAM”

கலாமுக்கு எனது கவிகளின் சலாம்..




என்னை செதுக்கிய சிற்பிக்கு பிறந்தநாள்..
என்னை வழிநடத்திய குருவிற்கு பிறந்தநாள்..
என்னை தளரவிடாமல் செய்த தன்னம்பிக்கைக்கு பிறந்தநாள்..
என்னை தலையில் குட்டும் சிந்தனையாளனுக்கு பிறந்தநாள்..
என்னை துன்பத்தில் இருந்து காக்கும் காவலனுக்கு பிறந்தநாள்..
என்னை முத்தமிடும் எண்ணங்களின் எழுத்தாணிக்கு பிறந்தநாள்..
என்னை ஆதரித்த அழகியத்தமிழ் மகனுக்கு பிறந்தநாள்..
என்னை தழுவி அனைத்து கொண்ட அன்னைக்கு பிறந்தநாள்..
என்னை வீழாமல் தோள் கொடுத்த தோழனுக்கு பிறந்தநாள்..
என்னை மனிதியாக வெளிவர உதவிய சிறகுக்கு பிறந்தநாள்..
என்னை மட்டுமல்ல பல இளைஞர்களை கனவு காண செய்த கனவு நாயகனுக்கு பிறந்தநாள்..
என்னை பெறாமல் நான் தத்தெடுத்த என் தந்தைக்கு பிறந்தநாள்..
உன்னை போற்றி பேசிட என்னிடம் வார்த்தைகள் இல்லை..
எனவே உனது கால்களை முத்தமிட்டு வணங்கி தொழுகிறேன்.. 


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கலாம் அப்பா..

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

வெற்றியை நோக்கி

                    சிந்திக்க முயலும் சில நொடியும்

                    சிறைபிடிக்கப்படுகிறது.

                    கவலையால் அல்ல,

                    வாழ்க்கைப் பற்றிய கற்பனையால்.

                    கற்பனை உண்மையாகும் வரை

                    காய்நகர்த்தப் போகிறேன்.

                    இடையில் துவண்டுபோவேன். 
                    
                    ஆனால் தோற்கமாட்டேன்.

வியாழன், 11 அக்டோபர், 2018

எனது மற்றொரு பாதி

எங்கு இருந்தோ வந்து
     ஒன்று கூடினோம்
இக்கல்லூரி தாயின் கருவறையில்
      சிரித்துப் பேசிய நாட்களும்
சிந்தித்து பேசிய நாட்களும்           
      சொல்லும் நம் கல்லூரி தாயின்
கருவறை இரகசியம் என்னவென்று
      வெகுதூரம் செல்லுமா என்று
தெரியாத உறவிது, ஆனால்
      தேன் சிந்தும் மாலையில் கண்ட காதலனை விட, கண்ணீர் சிந்தும்
      வேளையில் யான் கண்ட நட்பு
பெரிதென்று கூறுவேன் நம்
      நட்பின் பெருமையை!!!
       
   

வாழ்நாள் பயணம்

வாழ்நாள் என்னும் கடலில்
        வாழ்க்கை என்னும் கப்பலில்
          கல்லறை என்னும் கடற்கரையை அடைய எத்தனை எத்தனை போராட்டங்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது...........




செவ்வாய், 9 அக்டோபர், 2018

என் தங்கத் தாரகைக்கு

                           சற்றும் எதிர்பாராத நேரத்தில் ,
                           
                           சாவின் வலியை  உணர்த்தும் , ஓர்
                           
                           உன்னத ஆயுதம் என் தாயின் கண்ணீர் .
                            
                          
                           அதே போல்
                       
                           சாகா வரம் தரும் , ஓர்
                       
                           சத்தியச் சாரல்

                           என் அன்னையின் புன்னகை .


திங்கள், 8 அக்டோபர், 2018

கசக்கும் சில உண்மைகள்

                                  ஆடை என்னும் அவசியத்தை
                        
                                    அறைகுறையாக அணியும் வரை,
                         
                             குமரி என்பது மதுவாகும் ,
                         
                                    குற்றம் புரிவது எளிதாகும் ,
                          
                             பதுமை என்பதை மறந்துவிட்டு ,
                          
                                    புதுமையை நாட விரும்பாதே .
                           
                            அடக்கம் என்னும் அரும்மருந்து ,
                          
                                   அவசியம் அறிந்து அதை அருந்து .         

Predominant

Most predominant gift is parents;
Most predominant jewel is education;
Most predominant thing is water;
Most predominant word is love;
Those predominant stuffs
Rules the world.

ஞாயிறு, 7 அக்டோபர், 2018

நேற்று இன்று நாளை

முடிந்து போனது என்பது நேற்று
நிகழ்வது என்பது இன்று
நிகழப்போவது என்பது நாளை
முடிந்ததை மறக்க வேண்டும்
நிகழ்வதை நினைவு கொள்ள வேண்டும்...


நிகழப்போவதை எண்ணி திட்டமிட வேண்டும்...
மொத்தத்தில் எதுவுமே நிரந்திரமில்லை...
வாழ்க்கை ஒரு தொடர் சுழற்சியாகவே உள்ளது ..சுழன்றும் நம் குறிக்கோளை அடைய வேண்டும்..






பாடம்

தேங்கிய தண்ணீரும் தேக்கி வைத்த தனித்திறமையும் எவருக்கும் பயன்படாத ஒன்று ....
அதனால் உங்கள் திறமையை வெளிகாட்டுவது நன்று...
அதற்கான முயற்சியை எடுத்திடுங்கள் இன்று......

பெண் குழந்தைகளின் நிலை (கோபத்தின் வெளிபாடு)

                        சுற்றித்  திரியும்  அசுரர்களால்
                                   சூறையாடப்படும்  பெண்சிசுக்கள்
                       கன்னித்  தன்மை  அழிந்து
                                   கதறுகிறது  தமிழகம்
                       அவலம்  போக்க  அகிம்சை  முறையில்
                                  அடங்கிக்  கிடக்கும்  அர்ப்பப்  பதர்கள். 

Real Beauty

Beauty rules the world;
Even
   Admires all;
Creates envy in heart;
   But,
Real beauty -mercy"

சனி, 6 அக்டோபர், 2018

அன்னைக்குச் சில ஆசை வரிகள்

தொட்டணைத்துத் தூக்கி
தொட்டிலில் போட்டு,
முத்தமெனும் முத்திரையால்
முகத்தினை நிரப்பி,
பாசம் என்னும் இசையினிலே
தாலாட்டுப் பாடி,
கல்வி என்னும் கலையறிய
கல்லூரி அனுப்பி,
அணிகலன்கள் பலபூட்டி
அழகு பார்க்கும்,
அன்பு சிறிதும் குறையாத,
அழகு பொழியும் அன்னையை,
நினைவது தவறும் வரை
நித்தமும் மதித்திருப்பேன்.

நீ

நீ நெல்லாக இரு நெல் உமியாக இருக்காதே...
நீ கைத்தட்டலை பெறுபவனாக இ்ரு கை தட்டுபவனாக இருக்காதே...
நீ பூச்செடியின் வேர்களாக இ்ரு பூவாக இருக்காதே...
நீ பல்கலைகழகமாக இரு அதன் கிளைகளாக இருக்காதே...
நீ எறும்பாக இரு எருமையாக இருக்காதே....
நீ கீரிப்பிள்ளையாக இரு கிளிப்பிள்ளையாக இருக்காதே...
நீ எப்படி இருந்தாலும் நீ நீயாக மட்டுமே இரு... நீ உனக்கென ஒரு எல்லைக்கோட்டை வரையாதே ஏனென்றால் உன் முயற்சிக்கு எல்லையே இல்லையே.....


வெள்ளி, 5 அக்டோபர், 2018

தமிழ் பண்பாட்டுச்சிறப்பு

பட்டில்  தெரியும்  பண்பாடும்,
பொட்டில்  தெரியும்  புன்னகையும்,
மஞ்சளில்  தெரியும்  மங்களமும்,
மலரில்  கமலும்  நறுமணமும்,
தலைகீழாக  நின்றாலும்,
தலைவிரி  கோலத்தில்  தெரிவதில்லை.

புதன், 3 அக்டோபர், 2018

To My Friends

We are born with difference,
  But with same thoughts.
They do good deeds,
  Without any expectation.
Friends are the only treasure,
  Understanding us without any profit.

செவ்வாய், 2 அக்டோபர், 2018

என் தமிழாசிரியர்க்கு


ஆருயிர்த் தமிழின் பெருமையும் அருமையும் உணர்த்தியது நீங்கள் ஐயா...
தங்கிலீஷ் பேசிய எங்களை தமிழ் பேச வைத்தது நீங்கள் ஐயா..
நீங்கள் முத்தமிழில் முத்தெடுத்தவர்..
நாங்கள் மக்கா குப்பைகள் மறுசுழற்சி செய்தது நீங்கள் ஐயா..
பாறைகளாய் இருக்கின்ற எங்களை சிலைகளாக செதுக்கப்போகும் சிற்பி நீங்கள்..
தவிடாக இருந்த எங்களை தமிழச்சிகளாக்கியது நீங்கள் ஐயா..
இலக்கண சுவைகளை ருசிக்க செய்தது நீங்கள் ஐயா..
நீங்கள் ஒரு தேடுதளம் அதன் பயனாளர்கள் நாங்கள் ...உங்களை போற்ற வார்த்தைகள் என்னிடம் இல்லை ஐயா..
செந்தமிழ் செல்வனாகிய வீரத்தமிழனே எங்களை முத்தமிழின் தமிழச்சிகளாக்கிய உங்களுக்கு என்ன கைம்மாரு செய்யப்போகிறோம்??.?.............

- இந்திராணி - முதலாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்

மதிப்பு

தெய்வத்திற்கு இவ்வுலகில் உயிர் உண்டா?கற்களையும் ஒளியையும்  தெய்வம் என்று கருதுகிறோம்
ஆனால் உயிரோடு நடமாடும்
நம்மை காக்கும் பெற்றோரை இறைவனாக ஏன் வணங்குவதில்லை? அப்படி
வணங்கினால் ஏன் தோன்றுகிறது
முதியோர் இல்லம்? கற்களுக்கும்
ஒளிக்கும் இருக்கும் மரியாதை
ஏன் நம் பெற்றோருக்கு இல்லை?
எல்லாவற்றையும் இழந்த பின்
திரும்பிப் பார் உன்னை தாங்க
உன்னைப் பெற்ற பெற்றோரே ஆதரவாக இருப்பார்கள்.

திங்கள், 1 அக்டோபர், 2018

முயற்சி



எவ்வளவு பெரிய வன்கொடுமைகளினாலும்
பூக்களை மலர வைக்க முடியாது...
அதுபோலத்தான்,
நீ எவ்வளவு பெரிய சூழ்நிலை கைதியாய் இருந்தாலும்
உன் முயற்சியை கைவிடாதே...

.