வியாழன், 30 மார்ச், 2017

இன்றை சிந்தனை (காணொளி)









வாய்ப்புக்காகக் காத்திருக்காதே உருவாக்கு!
என்று என் மாணவிகளுக்கு அடிக்கடி சொல்வதுண்டு..
என் மாணவிகளுள் தமிழ்மணி முருகன் அவர்கள் எங்கள் கல்லூரியில் வேதியியல்துறை பயின்று வருகிறார். இவருக்கு வானொலி அறிவிப்பாளராகவேண்டும் என்பது பெரிய கனவு.
அதற்கான வாய்ப்புக்காக பலமுறை என்னைச் சந்தித்தார்..
அவருக்கான வாய்ப்பை நான் அவருக்காக உருவாக்கியுள்ளேன்.
இனி நாள்தோறும் ஒரு சிந்தனையை வேர்களைத்தேடி என்னும் யுடியுப் வலைக்காட்சி வழியாக இணையத்தில் பதிவேற்றவுள்ளேன்.
உங்கள் ஊக்குவித்தலுடன் இன்று அவரது குரல் யுடியுப், முகநூல், கட்செவி உள்ளிட்ட பல்வேறு சமூகத் தளங்களிலும் ஒலிக்கிறது.
வாழ்த்துக்கள் தமிழ்மணி முருகன்!
எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும் உங்கள் குரல்!


புதன், 29 மார்ச், 2017

உழைப்பின் அருமை...




Image result for டால்ஸ்டாய்...



 இரஷ்ய நாட்டில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவர் இருந்தார். அவ்வப்போது உழவுத்தொழிலையும்  செய்து வந்தார்.  ஒருமுறை தொடர்வண்டி நிலையத்தில் அவர் நின்றிருந்தபோது, அங்கிருந்த பெண்மணிஒருவர் அவரைக் கையைத்தட்டி அழைத்தார். அவரின் தோற்றம் ஒரு கூலிக்காரர்போல் இருந்ததோ என்னவோ?

ஐயா, தொடர்வண்டி புறப்படும் நேரமாகிவிட்டது.  என் கணவர் அருகிலுள்ள சிற்றுண்டி விடுதியில் உள்ளார்.  அவரை, இங்கு அழைத்து வாருங்கள். நீங்கள் செய்கின்ற இந்த உதவிக்குக் கூலி பெற்றுக்கொள்ளுங்கள்எனக் கூறிய அப்பெண்மணி, அவருடைய கணவரின் தோற்ற அடையாளங்களைக் குறிப்பிட்டார்.

அவரும் ஒப்புக்கொண்டு அப்பெண்மணியின் கணவரை உடனடியாக அழைத்து வந்தார்.  அவர் செய்த வேலைக்கான கூலியாகச் சிறுதொகையைப் பெற்றுக்கொண்டார்.

சிறிதுநேரங்கழித்த பின்னர்தான்  அப்பெண்மணிக்கு, அவர்தாம் இரஷ்ய நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் என்பது தெரிந்தது.

தான் செய்த தவற்றை உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டார் அப்பெண்மணி.  ஆனால் டால்ஸ்டாயோ, “அதனால் என்ன, நீங்கள் சொன்ன வேலைக்காகப் பெற்றுக்கொண்ட கூலியைத் திருப்பித் தரமாட்டேன்என்றார். புகழ் பெற்றவராயினும் உழைப்பின் அருமையை அவர் அறிந்திருந்தார்.

உழைத்து உண்ணும் உணவே சுவைக்கும். உழைக்காமல் உண்பது பிறர் உழைப்பைச் சுரண்டுவதற்கு ஒப்பாகும்.  எந்த வயதினராக இருப்பினும், உழைத்தே உண்ணுதல் வேண்டும்.  அப்பொழுதுதான் அந்த வீடும் நாடும் முன்னேறும்……

புதன், 22 மார்ச், 2017

நம்பிக்கை



அண்ட வெளியில் சுற்றித் திரியும்
சூரியன், பூமி, நட்சத்திரம் யாவும்
தன்னைத்தவிர வேறு ஒருவரை
நம்பி இல்லை!
நண்பனே நீயும் உன்னை
முழுமையாக நம்பு
உன்னை வெற்றி கொள்ள
வேறொருவர் இங்கில்லை!

திங்கள், 20 மார்ச், 2017

நல்லதை செய் நல்லதே நடக்கும்


                               
  ஒரு வகுப்பில் முத்து, கண்ணன் என்னும் சிறுவர்கள் இருந்தார்கள்.அதில் முத்து என்பவன் நாய், பூனை, அணில், ஓணான் போன்ற வாயில்லா பிராணிகளை கண்டால் கல்லால் அடித்து மகிழ்வான். அவனுடைய பெற்றோர் எவ்வளவோ அறிவுரை கூறியும் அவன் திருந்தவில்லை. ஒரு நாள் அவன் தன் வீட்டின் முன் உட்காந்து வாழைப்பழம் சாப்பிட்டான். சாப்பிட்டு விட்டு அத்தோலை தெருவில் வீசினான். ஒருவர் அதில் வழுக்கி விழுவதைக்கண்டு அவன் சிரித்து மகிழ்ந்தான். மீண்டும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை தெருவில் வீசினான் வழியே வந்த ஒருவர் அதில் வழுக்கி விழுவதைக் கண்ட முத்து மிகவும் மனம் வருந்தி அழுதான் காரணம் அது அவனுடைய ”தந்தை”.

          கண்ணன் என்பவன் அனைவரிடமும் அன்பாக பழகுவான். ஒருவருக்கு உதவி செய்ய எந்த நிலையிலும் தயங்க மாட்டான். ஒருமுறை அவனுடைய நண்பன் ஒருவன் மதிய உணவு கொண்டு வரவில்லை. அவன் மிகவும் பசியினால் வாடினான். அதையறிந்த கண்ணன் தன்னுடைய உணவை நண்பனிடம்  கொடுத்தான். இருப்பினும் அவனுக்கு பசி இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு மாணவன் கண்ணனை அழைத்து அவனுடைய உணவை இருவரும் பகிர்ந்து உண்டார்கள். இதனால் அவனுடைய பசியும் அடங்கியது.

மையக்கருத்து: நாம் செய்கின்ற செயல் நல்லதாக இருந்தாலும் தீயதாக இருந்தாலும் அது நமக்கே திரும்பும்.

ஞாயிறு, 19 மார்ச், 2017

அக்கால பெண்கள் விளையாடிய விளையாட்டுகள்



அக்கால பெண்கள் விளையாடிய  விளையாட்டுகள்






விண்வெளி களஞ்சியம்



விண்வெளி களஞ்சியம்



பீடல்ஜீயஸ் (BETELGEUSE)

விண்வெளியில் எராளமான நட்சத்திர குழுக்கள் உள்ளன. அவற்றில் நேர்த்தியுடன் அமைந்த நட்சத்திர குழு ‘ஆல்பா ஒரியனிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திரக்குழு பூமியில் இருந்து 640 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரக்குழுவில் உள்ள ஒரு நட்சத்திரம் தான் பீடல்ஜீஸ்.
இந்திய வானியல் மரபு மற்றும் ஜோதிட மரபுப்படி தமிழில் இது ‘திருவாதிரை’ என்றும் ’சிவப்பு அரக்க விண்மீன்’ என்றும் அழைக்கப்படுகிறது . இரவு நேரத்தில் வானில் இது சிவப்பு புள்ளியாக காட்சியளிக்கும். இந்த நட்சத்திரத்தின் ஆயுள் இன்னும் பத்து லட்சம் ஆண்டுகளில் முடிந்துவிடும் என்றும் அதன்பிறகு இது வெடித்துச்சிதறும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
தடைபடும் சுழல் பால் மண்டலம்;
விண்வெளியில் நமது சூரியக்குடும்பம் உள்பட பல் வேறு கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் கொண்ட அண்ட வெளிக்கூட்டங்கள் உள்ளன. இந்த அண்டவெளிக்கூட்டங்கள் இருக்கும் பகுதி பால்வெளி வீதி (மில்கி வே) என்று அழைக்கப்படுகின்றன. இதில் உருண்டையான வடிவத்தில் நட்சத்திரங்கள் கூட்டம் அமைக்கப்படுகின்றன. இந்த நட்சத்திரங்கள் ஒரு மத்திய சட்டத்தின் பிணைப்பில் அமைந்துள்ளது போல இந்த மண்டலம் உருவாகி இருக்கிறது. இது தடைபடும் சுழல் பால் மண்டலம் என்று அழைக்கப்படுகிறது.


பியோன் (BION):
சோவியத் யூனியன் கூட்டமைப்பின் (ரஷ்யா) விண்வெளி ஆய்வுத் திட்டத்தின் பெயர் தான் “பியோன்” என்பதாகும். நுண்ணுயிர்கள் தொடர்பான ஆய்வுகளை விண்வெளியில் நடத்தியதால் அதற்கு இந்த பெயர் வந்தத . 1973 முதல்1966 வரை இந்த ஆய்வுகளை ரஷ்யா நடத்தியது. இந்த காலகட்டத்தில் பல்வேறு உயிரிகள் கொண்ட செயற்கை கோள்களை ரஷ்யா விண்வெளிக்கு அனுப்பி ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வுக்காக முதலில் அனுப்பட்ட செயற்கைகோளின் பெயர் காஸ்மோஸ் 605. இதில் பூஞ்சை காளான், பூச்சின், எலிகள் மற்றும் ஆமைகள் போன்றவை அனுப்பி வைக்கப்பட்டன. இந்த உயிரினங்கள் விண்வெளியில் எப்படி செயல்படுகின்றன என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்றது. இந்த உயிரினங்கள் சுமந்து கொண்டு காஸ்மோஸ் 605 செயற்கைகோள் விண்ணில் செலுத்தி வைக்கப்பட்டது. சுமார் 22 நாட்கள் இந்த செயற்கைகோள் விண்ணில் சுற்றிவிட்டு பூமிக்கு திரும்பியது.


நீல நிலவு (BLUE MOON);

ஒரு மாதத்தில் இரண்டு பவுர்ணமிகள் வந்தால் இரண்டாவதாக வரும் பவுர்ணமி ‘நீல நிலவு’ என்று அழைக்கப்படுகிறது. இது போன்று நிகழ்வு ஒவ்வொரு 2% ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது. இதனால் தான் அபூர்வமாக நடைபெறும் நிகழ்வுகளை ‘ஒன்ஸ் இன் எ புளூ மூன்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன.


பெர்னார்ட் எட்வர்டு எமர்சன் (BARNARD EDWARD EMERSON):
பெர்னார்ட் எட்வர்டு எமர்சன் அமெரிக்கா வானியல் ஆய்வாளர் ஆவார். 1829 ம் ஆண்டு இவர் வானில் உள்ள 16 வால் மீன்களை கண்டுபிடித்தார். அதுபோல ஜீபிடர் கோளுக்கு துணைக்கோள் இருப்பதையும் கண்டுபித்தவர் இவர் தான். 200 ஆண்டுகளில் அதிகபட்சமாக கோள்களை கண்டுபிடித்தவர் என்ற பெருமையும் உண்டு. சூரியனுக்கு அருகே உள்ள நட்சத்திரம் ஒன்று குறித்து அவர் ஆய்வுகள் நடத்தினார். இதனால் அந்த நட்சத்திரத்திற்கு இவரது பெயரான பெர்னார்ட் என்ற பெயரே சூட்டப்பட்டது.



                                 



தமிழ்


தமிழ் வளர போராடுவோம்!

 தமிழ் மறைந்துக்கொண்டுவரும் இக்காலத்தில்

இளைஞர்கள் அனைவரும் ஒன்றுகூடி

 தமிழை வளர்க்க வேண்டும்.

எவ்வாறு தமிழர் பண்பாடான ஜல்லிக்கட்டுக்காக ஒன்றுகூடினோமோ

அதே போன்று தமிழுக்காகவும் ஒன்றுக்கூட வேண்டும்.

 உதாரணமாக  சொல்ல வேண்டுமானால்

தமிழ் என்பது பழச்சாறு மாதிரி,

ஆங்கிலம் என்பது பெப்சி   கொக்ககோலா  மாதிரி

எது  ஆரோக்கியமானது என்று நீங்களே  முடிவு  செய்யுங்கள்.

                                  தமிழை அழிக்க   நினைப்பது
                           
                        தமிழர்களின்  உயிரை  எடுப்பது  போன்றது.
 
                              விடமாட்டோம் தமிழர்  உயிர் உள்ளவரை. 

சனி, 18 மார்ச், 2017

கண்ணாடி

            Image result for கண்ணாடி      
நான் ஒரு கண்ணாடி நீ
சிரித்தால் நானும் சிரிப்பேன் நீ
அழுதால் நானும் அழுவேன் நீ
கோபம் பட்டால் நானும் கோவபடுவேன் நீ
அடித்தால் நான்  திருப்பி அடிக்க மாட்டேன்
ஏனென்றால் நான் உடைந்து விடுவேன்...

                                                                                                                

தெரிந்து கொள்ளுங்கள்

 Whatsapp-புலனம்,
 youtube-வலையொளி,  
 kype-காயலை,
 bluetooth-ஊடலை, 
 wifi- அருகலை
,hotspot-பகிரலை,     
 broadband-ஆலலை, 
 online-இயங்கலை,
 offline-முடக்கலை, 
  thumdrive-விரலி,
  hard disk-வன்தட்டு,     
  gps-தடங்காட்டி.                                 

எவ்வளவு தான் ஆங்கில வார்த்தைகள் வந்தாலும் அனைத்திற்கும் தமிழ் மொழியிலும் பொருள் உண்டு என்பது  பெருமைக்குரிய செய்தி ஆகும்.

ஆசிரியர்களிடம் மாணவர்கள் எதிர்பார்ப்பது..............

   




ஒரு ஆசிரியரிடம் அச்சம் இருக்க வேண்டும் 

அதே நேரத்தில் ஒரு துன்பத்தில் தோள் கொடுக்கும் தோழன், 

தோழியாகவும் 

மற்றும்

நமது திறமைகளை வெளிக்கொணர உறுதுணையாக 

இருக்க வேண்டும். 

பாடத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களை தெரியப்படுத்த வேண்டும்.

 மாணவர்களின் முன் உதாரணமாக ஆசிரியர் திகழ வேண்டும். 

இவ்வாறு இருந்தால்ஒவ்வொரு மாணவனும் வெற்றி இலக்கை நிச்சயம் அடைவான். 

வெள்ளி, 17 மார்ச், 2017

கணித்தமிழ் நூலகம் !

கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் சிறப்பாக செயல்பட்டு வரும் கணித்தமிழ்ப் பேரவைக்கான ஆதார நிதியாக ரூ 25000 வழங்கப்பட்டது. கணித்தமிழ் வளர்ச்சியை மாணவிகளிடம் கொண்டுசெல்லும் முயற்சியாக ரூபாய் 8000 மதிப்புள்ள நூல்கள் வாங்கி கணித்தமிழ் நூலகத்தை எம் கல்லூரியில் உருவாக்கியுள்ளோம்.

ஆதார நிதி வழங்கிய தமிழ் இணையக் கல்விக் கழக இயக்குநருக்கும், மாநில கணித்தமிழ்ப்பேரவை ஒருங்கிணைப்பாளர் தமிழ்ப்பரிதி ஐயா அவர்களுக்கும் எமது நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

எம் முயற்சிக்கு என்றும் துணை நிற்கும் முதல்வர் முனைவா் மா.கார்த்திகேயன் அவர்களுக்கும்
எம் கல்லூரி நிர்வாகத்துக்கும் நன்றிகலந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

எம் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவையின் செயல் வீராங்கனைகளான மாணவிகளுக்கு நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

கணித்தமிழ் நூலகத்துக்காக வாங்கிய நூல்களின் விவரம்..

தமிழ்த் தட்டச்சுப்பயிற்சி

செல்பேசி பழுது நீக்குதல்

கீ போர்டு சார்ட் கட் எம் எஸ். ஓ

கீ போர்டு சார்ட் கட் - சி ஜி டி

கணினியின் அடிப்படை

கட்டற்ற மென்பொருள் ஜிம்ப்

போட்டோ சாப், கோரல் டிரா செயல்முறைப் பயிற்சிகள்

கணினிப் பராமரிப்பு

இணையத்தை அறிவோம்

இது உங்களுக்கானதா பாரு்ஙகள்

கணினித் தமிழ் - இல.சுந்தரம்

தமிழ் விக்கிப்பீடியா

நெட்வொர்க் தொழிலநுட்பம்

லினக்சு

நீங்களும் உருவாக்கலாம் வலைப்பூ

கட்டற்ற மென்பொருள்

லினக்சு

சிஎஸ்எஸ்

எச்டி எம் எல்

மை எக்யூல்

ரூபி

மற்றும் தமிழ்க் கம்யூட்டர்,

கம்யூட்டர் உலகம் இதழ்களின் ஒரு ஆண்டு சந்தா.

கட்டற்ற மென்பொருள் குறுவட்டு 8

கணித்தமிழ் மென்பொருள்கள் குறுவட்டு 2

கணித்தமிழ் வளர்ப்போம்! காலத்தை வெல்வோம்!