வியாழன், 30 ஜூன், 2022

இலையில் துளி

அலையின் ஒளியில் 
அழகிய கருமேகமோ
கசியும் வண்ணம்...!!! 
துளிக்கும் துளியே
இலையில் விழும் 
கணம் நேறிடுமோ...!!!
வடிவில்லா நீரே
இலையில் மாய்க்கும் 
ஓசையே என் 
செவியில் இசைத்தது... !!
வீசும் தென்றலினால் 
நிலையின்றி உன்னை
(இலை)
வருத்தி நீ (நீர்) விழுவது 
என்னவோ...!!! 
என்  கண்ணின் நீரும் 
இன்று இருளில் 
ஓசையை ரசித்து 
கசிந்தலாயிற்று....!!
Yamini. R  1st B. Sc., CDF ksrcasw

புதன், 29 ஜூன், 2022

*ஒலியின் மாயவர்ணம்..*

குழலின் ஒலிவழி 
கண்ட மாய புனையா ஓவியமே.... !!!
அசிரத்தில் கலந்த 
கணமே  வர்ண ஓவியமாய்
காட்சியளித்தது தான் ஏனோ...!!!
இக்கணமே ஒலியின்றி 
முற்றுகையிட்டே 
சிறையிலடைத்தாயோ ??
உன் வர்ண வடிவில் 
எம்மை...!!!
இவளின் குழலே 
ஒலியின்றி மாய்ந்தது 
உன் வர்ணத்தில்.. !!!
     Yamini. R  1st B.Sc.,CDF ksrcasw

ஞாயிறு, 26 ஜூன், 2022

வாழ்க்கை



அதாவது வாழ்க்கை என்பது காத்தாடி போல..
எண்ணம் என்பது காற்றை போல..
மனம் என்பது நூலை போல..
காற்று(எண்ணம்)நன்றாக வரும் போது தான்..
காத்தாடி (வாழ்க்கை)என்பது உயர தொடங்கும்.!
நூல்(மனம்)ஒரே மாதிரி இருக்க வேண்டும்..
நூல்(மனம்)பின்னால் ஆனால்|| காத்தாடியானது* எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் கூட தாழ்வு அடையும்...*

 கலாதேவி. ச
I b.sc CS  ksrcasw

ஒருவேளை அலையும் கரையும் பேசியிருந்தால்



ஒருவேளை நான் கரை என இருந்திருந்தால் ,

ஒருவேளை நீ அலையென இருந்திருந்தால் ,

ஒருவேளை கார்மேகம் என்னும் தூது புறாவை நான் அனுப்பியிருந்தால்  ,

ஒருவேளை அத்தூதோ என் அன்பெனும் மழையை உன் மீது பொழிந்திருந்தால்  , 

ஒருவேளை என் அன்பு மழையால் உன் மனதின் அலை அதிகரித்திருந்தால் ,

ஒருவேளை அந்த அவையில் ஒன்று என்னை தழுவியிருந்தால் , 

ஒருவேளை அத்தழுவலின் ஈரமோ என் வாழ்வை மாற்றியிருந்தால் , 

ஒருவேளை அலைகள் பெருகி ஓயாமல் நான் நனைந்திருந்தால் , 

ஒருவேளை நீயின்றி நான் இல்லை என்ற நிலை உருவானால் , 

ஒருவேளை அந்த அழகிய வாழ்வை என்னி நிகழ்காலத்தில் நான் வாழ்ந்திருந்தால் , 

நிலை என்னவோ!?..

ஒருவேளை நான் அலையென இருந்திருந்தால் , 

ஒருவேளை நீ கரை என இருந்திருந்தால் , 

ஒருவேளை பகலவனின் ஒளிக்கதிர்கள் உன்னை வாட்டியிருந்தால் , 

ஒருவேளை அத்துன்பத்தை  நீக்கவே என் குளிர் காதலை இரவோனிடம் நான் தூதனுப்பியிருந்தால் , 

ஒருவேளை அத்தூதோ உன்னை இன்பமுறச் செய்திருந்தால் , 

ஒருவேளை அந்த இன்பமே உன்னுள் இருந்த காதலை தூண்டியிருந்தால் , 

ஒருவேளை அக் காதலோ என் வாழ்வை மாற்றியிருந்தால் , 

ஒருவேளை அக் காதலின் தூண்டுதலில் அலையென நான் உன்னை வந்தடைந்தால் , 

ஒருவேளை நீயின்றி நான் இல்லை என்ற நிலை உருவானால் , 

ஒருவேளை அந்த அழகிய வாழ்வை என்னி நிகழ்காலத்தில் நான் வாழ்ந்திருந்தால் , 

நிலை என்னவோ!?...

ஒருவேளை அலையும் கரையும் பேசியிருந்தால் , 

ஒருவேளை அலையும் கரையும் தங்களது முடிவை மேற்கொண்டிருந்தால் , 

ஒருவேளை அம்முடிவே இன்று இப்புவிதன்னில் கடல் கரை என மாறியிருந்தால் , 

ஒருவேளை அந்த அழகிய கடற்கரையில் நின்று இன்று என் எழுதுகோல் இக் கவியை எழுதியிருந்தால் , 

இயற்கையின் மீது காதல் கொள்ள இக் காரனம் போதாதோ!?..❤️

இப்படிக்கு 
இயற்கையின் ரசிகை ரசித்தவை ❤️
கோபிகா ஸ்ரீ குணசீலன்..❣️
 II b.com FMA ksrcasw

தேனியும் மதுரமும்

சிலேடை மொழியாய் இருந்தவள் 
இன்று இரட்டைக் கிளவியாய் மாறினாள்.
கேளாய் மதுரமே!!
சிறுக சிறுக சேமித்தாளோ இனிய மதுரத்தை தன் இதயக் கூட்டில்..
கண் என்னும் கல் பட்டே கூண்டு உடைய 
மதுரம் சொட்ட சொட்ட மனம் உருகி நின்றாளே இன்று!!
சிந்தும் தேனை காத்திட தன் கண் என்னும் கூட்டை தந்தாளே!
உடைந்ததோ மனம்!?
அல்ல உரைந்ததோ!?
புரிந்ததோ இக் கவி!?
கவி மட்டுமே என்றாள் தேனியின் நிலையை
கூறாய் மதுரமே!..❤️

Gopikaa shri. G
II b.com FMA. Ksrcasw

கண்ணீர்



குழாயில் 
சொட்டு சொட்டாக
வீணாகும்
ஒவ்வொரு துளி நீரும்
சொல்லாமல் சொல்கிறது
நாளை
தண்ணீருக்காக விடப்போகும்
கண்ணீரை.....

M.Sanmati 
1st BSC COMPUTER SCIENCE ksrcasw

*வண்ணத்தில் நீ*



கவியோ.... கதையோ...
கண்ணே....!
கண்ணில் தோன்றும் காட்சியோ -
என்னில் வாரணம் ஆயிரமாக உதித்ததை...
மொழித்தேன் வார்த்தையில் வர்ணிக்க....
கண் விளிக்கும் நொடியில் தோன்றும்
பல வண்ணங்களே...
ஏனோ
என்னில் ஒரு மாற்றம்
என்னை நினைத்த உன்னை
நினைக்கும் ஒரு மனம் கண்ணில் தோன்றும்
காட்சியே பல வண்ணமாய் தளிர்ந்தாய்
நீ.. !!
உறவே.... !!

Yamini. R 1st B. Sc.,CDF  ksrcasw

வியாழன், 23 ஜூன், 2022

என் கல்லூரி வாழ்க்கை

அவசரம் இல்லை..
ஆரவாரம் இல்லை..
இறைக்கூட்டம் இல்லை..
சீருடை இல்லை..
விசில் சத்தம் இல்லை..
ஒன்றுபட்ட குரல் இல்லை..
குழந்தையாக இருந்த என் காலம்..
வாழ்க்கையை ருசிக்க...
முகம் தெரியாத மனிதர்களுடன்...
ஆரம்பித்தது என் கல்லூரி வாழ்க்கை...

1st Bsc.nutrition and dietetics 
J . Harshini. Ksrcasw

வளைவு

ஒற்றை பூ தனிமையை ருசிப்பதை விட
ஓர் இதழ் அதை நுகர்தலே
வளைவு தான்
1st B.A Economics Varsha.P ksrcasw

புதன், 22 ஜூன், 2022

முத்துகளை தேடியே தொலைந்தேன்

கவிதையின் கண்களைக் கண்ணீரில் கண்ட நாட்கள்!
இன்று விழியின் விழிம்பில் நதி வற்றிக் கிடப்பது ஏன் ?
தாயின் உறவு தொப்புக்கோடியில்
தந்தையின் உறவு கைப்பிடியில் அண்ணனின் உறவு அறவணைப்பில்
என்று 
உறவுகள் சிற்பிக்குள் உள்ள முத்து போல் ஒன்றாக இருந்த
நாட்கள் ....
ஏனோ!!
சிதறிய முத்துக்கள் நாளடைவில் பிரிந்தன.. 
முத்துகளை தேடியே தொலைந்தேன்!! விழியில் வழிந்த கண்ணீர் வற்றிப் போய்
கலைத்தன
எழுத்துகளை தேடி நான்
துளைந்தேன்
எண் கண்ணில் கவிதையை
காணவில்லை..
என்னோடு சேர்ந்து என் கவிதையும் தொலைந்தது.. !!!
             1st B. Sc., CDF YAMINI. R ksrcasw

ஞாயிறு, 19 ஜூன், 2022

அப்பா

கோபத்தில் நம்மை 
திட்டிவிட்டுப்போனாலும்.....
அடுத்த நிமிடமே நம்மை அன்பாக அறவணைக்கும் இணைபிரியா உறவு அப்பா...!!
      Ramya .M 1st B sc., CDF ksrcasw

அப்பாவின் அன்பு

தான் உலியாக உருவாகி உன்னை செதுக்குவார் சிற்பமாய்!...
அவர் செதுக்கிய வார்த்தைக்களுக்கு 
நீ கொடுக்கும் 
அவ மரியாதையை  தான் துவண்டு போனாலும் உன்னை கை விடாமல், கரை சேர்ப்பார் உன் வாழ்க்கையை !!...

G.Prema 1st B.COM ( FMA ) ksrcasw

அப்பா

விழி மூடிய இருளில் 
வழி இல்லை 
இருப்பினும் 
தேடி அலையும் 
இவளின் 
கரம் பிடித்து 
நீர் வர வேண்டும் 
இயவையில் 
உன்னுடம் இருளில் வாழும் என்னாசை 
அப்பா....!
Yamini. R 1st B. Sc., CDF ksrcasw

*விழியில் வலி*



விழியில் வழியா
நீரே... !!
விழும்பில் நிற்கும்
உன்னை துயரத்தால் சிங்காரிக்கும் நேரம்..!!
யவரிடமும் மொழியாமல்..!!
     Yamini. R 1st  B. Sc., CDF ksrcasw

வெள்ளி, 17 ஜூன், 2022

ஸ்பரிசங்கள்

 புதிதாய் பிறந்திருக்கிறேன்.


பழகிய இருட்டை விட்டு 
வெளிச்சத்தில் உன்னை தேடி

ஸ்பரிசங்கள் யாவும் 
உணர்வையும் உறவையும் உரைக்க

அறுசுவை
அறியா சுவை உணர்த்த

மொழியின் தன்மையில்
ஆதியும் அந்தமும் விளங்க

இவை யாவும் 
உன்னால் நிகழ                            -Varsha.P 1st Economics KSRCASW

இமையில்லா விழி

 நீ கனவாய் இருப்பின்

நிஜமில்லா நித்திரையை ஏற்றுக்கொள்கிறேன்.

நீ நிஜமாய் இருப்பின்
இமையில்லா விழியை ஏற்றுக்கொள்கிறேன்.        ஷாலினி.ரா (1St B.A . Economics) KSRCASW

இவள்

 நீ தந்த மகிழ்ச்சியால்...

மின்மினிப்பூச்சியைப் போல....
வண்ணமயமாக சிறகடித்து பறந்தாள்... இவள்..!!            Ramya.M   1st B sc.,CDF KSRCASW

நினைக்காத நாள்

 *துலைத்து விட்டேனே தவிர...

மறந்தும் கூட நினைக்காத நாள் இல்லை🙂..!*        *C. Aarthi (1st BCA)* KSRCASW


சிறகு

 பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்

தரையில் இருக்கவும் கற்றுக்கொள்...
சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்...                Madhumitha.R(I-N&D)  KSRCASW

ஜொளிக்கும் நட்சத்திரம்

 நீருக்கு பஞ்சமில்லை..... மான்போல் துள்ளி ஓடும் நதியில்......

ஜொளிக்கும் நட்சத்திரமாய் வாழும்
மீன்கள்-ஏனோ.....
துள்ளி குதித்து தாவும்.... மீனை வர்ணிக்க வந்தேன்.......
நீல நதியில் வசிக்கும்.....
வண்ண மீன்களே.....!!
என்னிடம் உரையாட வா!!! 
உன்னிடம் விளையாட வருகிறேன்..! 
என் மனதில் ஏக்கம் ஏனோ...
முத்துகளைப் போல்
குவிந்து கிடக்கின்றது...!!
பல வண்ணங்களை கொண்ட
உன் மேனியை நேசித்தேன்.....
வசிப்பாயா என்னுடன் ? வினவ வந்தேன்
சட்டென்று தடுமாற்றம் படைதேன்....
உன்னை அழைத்துச் செல்ல
மறுக்கிறது என் மனம்... நீ வசிக்கும் உம் இடமே
உன் மகிழ்ச்சிக்கு காரணம்....
நீல நதியில் - நீ !!
துள்ளி விளையாடும்
மகிழ்ச்சியை உன்னிடம் இருந்து
பறிக்கமாட்டேன்......
உன் மகிழ்ச்சியை உன்னிடம் தந்து
உன் மகிழ்ச்சியை கண்டு
நான் மகிழ்ச்சி அடைகிறேன்
கண்ணே !!!                                                    Yamini. R  I - B. Sc.,  CDF    KSRCASW

தந்தையர் தினம்

 தாய் என்பவள் 

பத்து திங்கள் 

வாழ்க்கையை தியாகம் செய்வாள்.. 

தந்தை என்பவன் 

வாழ்க்கையையே தன் பிள்ளைக்காக

 தியாகம் செய்வான்....                                                    ஹேமா.அ  2.B.COM KSRCASW

வெறுமை

 எப்போதும் முடிவதில்லை...!

இயந்திரமாய் வாழ்ந்து முடித்த பின்பும்!
இதயம் நிரம்பாத செயற்கை வாழ்வின்!
வெறுமைகள்....                                                        ச.கலாதேவி 1-bsc CS  KSRCASW

வியாழன், 16 ஜூன், 2022

மனது

 பயணம் கொண்டேன்....

விடியல் நோக்கினேன் ....!

இன்னும் எத்தனை பாதைகள் ?..

நீண்ட பயணம் போல் தோன்றும் வண்ணம்....

நினைத்தது போதும் விடியலை நோக்கி ஓடி என்றது மனது......!! 

                                                                                - Vaishnavi. A 1st BBA   KSRCASW

இசையை வீழ்த்தி

வண்ண விடியலே

மெல்லிய இதழில் 

மெல்லிசையோ...!!

வரும் வேளையிலே...!! 

தென்றலில் மிதக்கும் 

நீ...!!

இன்று யவரால் 

சிறையிடப் படுவாயோ...??

இசையை வீழ்த்தி..!!                                    - Yamini. R 1st B. Sc., CDF    KSRCASW                                                           

தந்தையின் கரம்

 கை விட மாட்டான்;என்ற நம்பிக்கையோடு, 

நான் பிடித்த முதல் ஆண்மகனின் கரம்"

என் தந்தையின் கரம்"

   
                                        -    A. Sowndarya 1st B. Com.  KSRCASW

நீரும் சுகம்தான்

 நிறைவற்ற காட்டில் நிறைவூற்ற கசியும் நீரும் சுகம்தான்... !!


                                                                            Yamini. R  1st B.Sc.,CDF  KSRCASW

அப்பா

 உனது கரம்பிடித்து செல்லும் .....

ஒவ்வொரு கரடுமுரடான பாதையும்....!
என் வெற்றியின்
மிக பெரிய பாதைதான் அப்பா......!

                                                                Ramya.m 1st B.sc.,CDF    KSRCASW

கல்வியும் இன்று காசானது

 மனிதர்களைப் படிக்க வைத்த ஏடுகளை...! 

இன்று மடிக்கக் கிழிக்கிறார்கள் 

மளிகைப் பொருளுக்கு, 

"கல்வியும் இன்று காசானது"!!!                 A.Sowndarya 1st B.COM  KSRCASW

புதையல்

 *கொள்ளைபோன கொள்ளையன்!*


உன் கருங்கூந்தற்கடலில்
என் விரல் கப்பலென;

முத்துமணிகளைத் தேடி
உன் கண்மணிகளில்
உன் விழியின் வழியில்
வழிமாற;

உன் கன்னக்குழியின்
கடுஞ்சுழலில் மூழ்க;

கண்டேன்,
கல்நெஞ்சையும் கவரும்
சிவந்த செந்தேன் செவ்விதழும்
அதனுள் செறிந்த முத்துமணியையும்;

புதையலைக் கண்ட புத்துணர்வில்
புத்தழகில் புதையுற புதையுற
பிறைநுதழில் மனம் பிறழ்ந்தேன்!
அச்சிறு நுதழில் அச்சிழந்து
சில்லறையாய் சிதறினேன்!
புதையலைத் தேடிய நான்
அவளழகில் 
புதையலானேன்!

- என் ஆருயிர் நண்பனின் 
மணிச்சொற்கள்                            K.T.Mekanthini  - 2nd English KSRCASW

மழை

 விவசாயத்தின் உயிர் ஆதாரம் நீ...

விவசாயிகளின் வாழ்வாதாரம் நீ.....

வனத்தில் வசிக்கும் உயிர்களுக்கு உயிர் கொடுப்பதும் நீ......

நீயே இப்புவியுலகின் பேரழகி .....

இசையில் மகிழ்ச்சி

 மகழிசை கணக்கில் மகிழ்ச்சியோ மாயமல்ல...!!

இசையின் பொருட்டு கரணமாயினும் 
கண்ணே...!
இசையுடன் ஒளியும் வந்தனவோ..!
தொன்றுதொட்டு ஏனோ
சிகரமோ நீயே மண்ணில் துளித்து
மரமாய் தளிர்ந்தே
தளர்ந்தனவோ...!
உன்னால் அசிரமே வீசும் என்னில் மாயமே...!!
என் இசையில் மகிழ்ச்சி இவள்...!


                                                                    Yamini. R 1st CDF KSRCASW

அன்னை

உயிருக்குள் அடைக்காத்து...
உதிரத்தை பாலாக்கி...
பாசத்தில் தாலாட்டி...
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து
நமக்காகவே
வாழும் அன்பு
தெய்வம் அன்னை...!!                    k.priyadharshini - 1st B.COM

மனம்

 எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து விடுகிறது 

மனம்.......

வாழ்க்கை.......!

சில நேரங்களில் வார்த்தைகளின் 

ஆழமான அர்த்தம் அறிவதில்லை  

இந்த மனது ....!!!  

அறியும் போது 

முடிந்து போகிறது 

இந்த வாழ்க்கை.......!!!! 

                                  - Vaishnavi. A 1st BBA KSCASW