கன்னிகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கன்னிகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 டிசம்பர், 2019

பெண் ஒருத்தி

தேன் வடியும் மலரைச் சூடி
செங்கதிரவனைப் பொட்டாக வைத்து
கார் இருள் மேகங்களைக் கண்களுக்கு மையாகத் தீட்டி
விண்மீனைத் தோடாக அணிந்து
சங்குக்கழுத்தில் முத்துகளைச் சேர்த்து
வானவில்லை வளைக் கரங்களில் பூட்டி
செந்தாமரைபோல் கன்னம் சிவக்கப்
பெண்னொருத்தி வந்தாள்

-கன்னிகா, இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்.

சிவபெருமான்

காலத்தைக் கண்ணில் காட்டியவன்
கதிரவனுக்கே ஒளியைக் கொடுத்தவன்
கங்கையைச் சடைமுடியில் வைத்திருப்பவன்
இதயத்தில் குடிகொண்டவன்
வாழ்க்கையின் அர்த்தத்தைத் தெரிந்தவன்
வானத்தைவிட உயர்ந்தவன்
நெடிய கூந்தலை உடையவன்
நஞ்சினை உண்டு தேவர்களைக் காத்தவன்
நாகத்தை மாலையாகச் சூடியவன்
உமையம்மைக்கு இடது பாகத்தை அளித்தவன்
உள்ளத்தில் சிறந்தவன்
அன்பால் இணைந்தவன்
அறிவில் உலகைவிடப் பெரியவன்
அவரே நம் எம்பெருமான்