புதன், 31 ஆகஸ்ட், 2022

ஆனை முகனே

உன் தாயயை

காத்து - உயிர்விட்ட 

பாச மகனே

மறு வாழ்வு பெற்ற 

ஆனை முகனே

நீ - தெய்வத்தின் 

ஆசியின் வழி 

முதற்கடவுளாக

காட்சியளிக்கும்

கொழுக்கட்டை பிரியனே...!!!

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

தானமும் தர்மமும்....



தானம் கொடுப்பது
அன்னமே யாயினும்

அங்கத்தை நிறைத்து
இன்பம் பயக்கும்.

தானம் கொடுப்பது
உடையே யாயினும்

மானத்தை காத்து
மனதினில் நிற்கும்.

மறுகை அறியா 
மகிழ்ந்து கொடுப்பது

மனித   தர்மமே 
நம்மை வாழவைக்குமே

பிறர்க்கு உதவுவதை 
புகழ் தேட நினைப்பது 

புண்ணியமாகாது அது
சுய   இன்பமே

தானமும் தர்மமும்
தலைத்தோங்க வேண்டும்

தரணியில் ஈகையாளர்
செழித்தோங்க வேண்டும்

        கலாதேவி.ச
II-Bsc Computer Science ... Ksrcasw 

சனி, 27 ஆகஸ்ட், 2022

மழை....🌧️🌧️🌧️


வான்முகில் வழங்கும் நீரை
வான்சிறப் பென்று சொன்னார்!
வானமும் பொய்த்து விட்டால்,
வாழ்வது கடின மாகும்!
மாமழை போற்றி னாரே,
மாக்கவி இளங்கோ தாமும்!
நீரது குன்றிப் போனால்,
நிலவுல கென்ன வாகும்?
M.Sanmati 
II-BSC Computer Science. Ksrcasw 

அன்னை தெரேசா ‌‌......



அனாதையாய் இருக்கும் குழந்தைகளின்...

ஆதாரமாக வந்த அன்னையே...

உன் முதுமைப் பருவத்திலும்....
 
உனது விழிகள் உரங்க வில்லையே...
 
பாசத்தின் பள்ளி கூடமே...

உன் எல்லை இல்லாத பாசம்....
 
மழலைகள் மனதில் பல ஆண்டுகள் தாண்டியும்...
 
நல் உள்ளம் கொண்டு விழுமே....


ச.கலாதேவி 
II-Bsc.Computer science   Ksrcasw 

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

தனிமை

ஒரு வழி தடத்தில் என் பயணம்

தொடங்கிய நிலையில்

இருளின் சிகரத்தில்

ஓர் ஒளி ...!!!

ஓசையின்றி தொடரும்

பயணம் – இக்கணமே

தனிமையின்

இசையில்

வசிக்கின்றது....!!!

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

ரணம்

குளிர்ந்த காற்றில்

பற்றி எறியும்

தீயின் மேல்

தளிர்ந்த இலையின்

பசுமை

இன்று அனலில் சிவந்தது என் ??

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

தனிமையின் கதை

கண்ணெதிரே  கலைகள் 

அலையில் சிக்கிய 

பிடியில்...!!!

என் தடத்தில்

ஓர் கலை 

தனிமையின் 

கதை... !!!

சனி, 20 ஆகஸ்ட், 2022

தமிழ்

பழ மொழியை 

அறியும் கணமும் 

ஒரு நொடியும் 

மறவா எம்முயிர் 

தமிழே...!!!!

என் கவியும் 

உன் வழி

மெய்யான நிலையில் 

படைப்பானது தான் 

இந்நொடியில்...!!!!

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

கவியின் நதி

மெல்லிசையாய் நகரும் 

நதியின் இசையே...!!!

அலை அலையாய் - என்

கவியின் இசை 

நகரும் வேளையில் 

நதியின் முற்றே

கடலின் படைப்பாய் 

மாறிய என் 

கவிகள்.... !!!

வாழ்க்கை...


கானலாகும் கனவுகளும்..
நிறந்தரமில்லா நிஜங்களும்..
நிறைந்த வாழ்கை இது.......!!!
இழந்தைவைக-ளை கடந்து போவதும்.. நினைத்து மகிழ்வதும் ஏதார்த்தம்..!!!
ஏமாற்றங்களை ஏற்று..
ஏற்றங்களை        எளிதாகக் கடந்து...
வாழ்க்கையை வாழ்ந்திடுவோம்...!!!

S. Priya  2nd Bsc.MB  ksrcasw 

புதன், 17 ஆகஸ்ட், 2022

கற்பனை வண்ணம்

கதையின் விடியல் 

என் இருளில் 

கற்பனை 

வண்ணமாய் ஒளியும் 

நொடியும் 

இதழின் ஒரு ஓரம் 

சிறு புன்னகை...!!!

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

ரோஜா

அழகின்  வடிவமே - நீ 

அசைவுடன் வசிப்பில் 

இருக்கும் வண்ணம்... !!

முள்ளுடன் கதைப்பது 

தான் ஏன்.... ??

திங்கள், 15 ஆகஸ்ட், 2022

காத்திருப்பு

உன் பாதையில் 

தவழ்கின்றேன்.... !!

தடமின்றி  தொலைந்த 

என்னை... !!

உனை காணும் 

நொடியிற்காக 

என்றும் என்

காத்திருப்பு....!!!

எனை உன்னில் 

தொலைக்க... !!


ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

ஆழ்கடல் 🌊🌊


இவளின் வசிப்பே
கடலின் உள்ளத்தை
நேசித்ததேனோ...!!!!
உன் ஓசையை ரசித்த
என்னை
நனைய வைத்தாய் ...!!!
என்று உன் ஆழமனதில்
இடம் பிடிப்பேனோ....!!!
ஓசையின்றி என்
மனதை உன்னுடன்
இசைக்கும்
காதலி இவள்
உன்னிடத்தில் ஆழ்கடலே... !!!



சனி, 13 ஆகஸ்ட், 2022

சுதந்திர தினம்..🇮🇳🇮🇳🇮🇳

இந்திய வானில் விரிந்த சுதந்திரச் சிறகுகள் பல்லாயிரம் தியாக வீரர்களால் சாத்தியமாயிற்று! வேற்றுமை மலர்களால் ஆக்கப்பட்ட, ஒற்றுமை மாலையை சூட்டி மகிழ்ந்தோம்! பாரத அன்னைக்கு வண்ணம் மாறாமல் வாசம், பிறழாமல் வணங்கி காப்போம்! அனைவருக்கும்  இனிய சுதந்திர தின வாழ்த்துகள் !



அ.ஹேமா  3ஆம் ஆண்டு வணிகவியல்  ksrcasw 

நட்பு 👭👫👭.......

அவளுக்கான கடமைக்காக அழைத்துசெல்ல
பதினாரில் பயணம் துடங்கியது
பயணத்தின் சுவாரசியதிற்கு அவளை
அவளின் உள்வெளி அழகை மெருகேற்றினான்
பெற்ற தந்தை வேடிக்கை பார்க்க
தந்தையாய் மாறிய தோழன் 
சேர வேண்டிய கைகளில்  
சேர்ப்பான்......



Varsha.P 2nd BA Economics ksrcasw 

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

கவி

ஒளியில் ஒளியின்றி 

தவித்த 

இவளின் வழிக்கு 

ஒளியாய் 

வந்த கவியின் 

இருளே...!!

உன் விழி வழி கவியாய் 

ஒளிந்தாய்... !!!

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

கல்வி

நுணியின் கீறலில் 

செதுக்கிய வண்ணம்...!!

கல்வியின் வடிவில் 

சிலையானேன்.... !!

புதன், 10 ஆகஸ்ட், 2022

இசை🎶🎼🎶



இசையே தூங்கவை எங்களை
உன் மயிற்பீலி விரல்கொண்டு
மனசு தடவு இரத்தக் குழாய்களின்
துருக்கள் துலக்கு உள்ளிருக்கும்
விலங்குத்தோல் உரி
மென்குணங்கள் மேம்படுத்து
நாங்கள் இறுகி இறுகிக் 
கல்லாகும்போது இளகவிடு
குழைந்து குழைந்து கூழாகும்போது 
இறுகவிடு நீயில்லாத பூமி
மயானம் மன்னித்துவிடு
மயானத்திலும் இசை உண்டே.
M.Sanmati II-BSC Computer Science ksrcasw 

தனிமை

கண்ணின் கேள்வி 

காணும் கணமே நேரிடுமோ....!!!!

என்னவளே  (தனிமை)

உனைக் கண்ட கணமே

கேள்வியே விடையாய் 

மாறிய என் கண்கள்....!!!

சந்திரன் 🌒




நான் பூரண சந்திரன் எனக்கு வளர்பிறையுமில்லை...
தேய் பிறையுமில்லை
நான் என்றும் நானாகவே
முழுச் சந்திஷரனாகவே வாழ்கிறேன்...
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...
வாழ்ந்து கொண்டிருப்பேன்...


நான் பிறரை நோக்கும்  பார்வை....
என் மனம் சார்ந்ததாக இருக்கிறது...
இது சரியெனில்...அது சரியே...
இது தவறெனில்
...அது தவறே...

II BCA -S.JENIFER ksrcasw 

சனி, 6 ஆகஸ்ட், 2022

☀️ சூரியன் ☀️

 
மாலை நேரம் மேற்குதிசையில்

   தென்னைமரத்தின்  பின்னால்

ஒளிந்து  கொள்கிறது சூரியன்...

     கிழக்கு திசையில் இருந்து

  சென்றுவிட்டாயா?

      என எட்டிபார்க்கும் சந்திரன்...

          - Shastika.s III BCOM FMA

வெண்ணிலா

வட்ட மான வெண்ணிலா

வானில் காணும் வெண்ணிலா!

தட்டுப் போன்ற வெண்ணிலா

தாவிச் செல்லும் வெண்ணிலா!

பாதி மாதம் தேய்கிறாய்

பாதி மாதம் வளர்கிறாய்!

சோதி காட்ட வருகிறாய்!  

சொல்லி நாங்கள் மகிழுவோம்!

                             M.Sanmati II-BSC Computer science

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

அருவி

மாமலை மீதி ருந்தே,

மாமழை பெய்ய வீழும்!

வீழ்ந்திடும் அருவி நீரால்,

விளைந்திடும் தாவ ரங்கள்!

குறிஞ்சியின் குழந்தை யன்றோ,

குதித்திடும் அருவி தானும்!

ஆறுகள் அருவி யாலே,

ஆவதும் உண்மை யன்றோ!

                          -M.Sanmati II-BSC Computer Science.

புதன், 3 ஆகஸ்ட், 2022

தனிமை

 தனிமை என்னும் 

மண்ணில் விழுந்த 

சிறு துளியாய் 

இருந்த என்னை  

கட்டியணைத்தாய் நீ....!!!

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

என் ஒளியே

சிப்பிக்குள் உறங்கும் 

முத்துகளே.... !!

மாயவன்  சிப்பியை 

மாய்கும் கணமே 

உன் ஒளியின் வண்ணம் 

என்றும் 

என் ஒளியே.....!!!