வெள்ளி, 31 ஜனவரி, 2020

இன்றைய தினம்

31.01.2020 (வெள்ளி) 
இன்றைய தினம்
       நகைச்சுவை நடிகர் நாகேஷ் நினைவு தினம்.
நேற்றைய தொடர்ச்சி 
சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் 
       21.பாரிமகளிர்
       22.பூங்கன் உத்திரையார்
       23.பூதப்பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு
       24.பேய்மகள் இளவெயினி
       25.பொதும்பிற் புல்லாளங் கண்ணியார்
       26.பொன் முடியார்
       27.பொன் மணியார்
       28.போந்தப் பசலையார்
       29.மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
       30.மாற்பித்தியார்
       31.மாறோக்கத்து நப்பசலையார்
       32.முடத்தாமக் கண்ணியார்
       33.முள்ளியூர்ப் பூதியார்
       34.வருமுலையாரித்தி
       35.வெண்ணிக் குயத்தியார்
       36.வெண்பூதியார்
       37.வெண்மணிப் பூதியார்
       38.வெள்ளி வீதியார்
       39.வெள்ளைமாளர்
       40.வெறி பாடிய காமக்கண்ணியார்
விவேகானந்தர் 
       உன்னை நீயே பலவீனம் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.
அப்துல்கலாம்
       சூரியனைப் போல ஒளிர வேண்டுமென்றால், முதலில் சூரியனைப் போல்
       எரிய வேண்டும்.
இன்றைய வெளிச்சம் 
       பணத்தால் பசியைப் போக்க முடியும், துக்கத்தைப் போக்க முடியாது.
       வருத்தமோ, துன்பமோ இன்றி எவராலும் எளிதில் புகழைப் பெற முடியாது.

வெற்றி

வெற்றி என்பது
மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும்
அயராமல் முயற்சியைத்
தொடர்வதால் கிட்டுகிறது.

வியாழன், 30 ஜனவரி, 2020

வில்லிபாரதத்தின் மரபுக் குறிப்பு

மகாபாரதப் பருவங்களில் வில்லிப்புத்தூராரால் எழுதாமல் விடுக்கப்பட்ட பருவங்கள் 8. அவை,
1.ஸ்திரீ பருவம்.
2.சாந்தி பருவம்.
3.அனுசாசன பருவம்.
4.அசுவமேத பருவம்.
5.ஆரம பருவம்.
6.மௌசல பருவம்.
7.மகாப்ரஸ்தான பருவம்.
8.ஸ்வர்க்கா ரோஷண பருவம்.

இன்றைய தினம்

30.01.2020 (வியாழன்)
இன்றைய தினம்
        ராமலிங்க அடிகள் நினைவு தினம்.
        தியாகிகள் தினம்
சங்ககாலப் பெண்பாற் புலவர்கள்
        1.அஞ்சியத்தை மகள் நாகையார்
        2.அஞ்சிலஞ்சியார்
        3.அள்ளூர் நன்முல்லையார்
        4.ஆதிமந்தியார்
        5.ஊன் பித்தையார்
        6.ஒக்கூர் மாசாத்தியார்
        7.ஔவையார்
        8.கச்சிப்பேட்டு நன்னாகையார்
        9.கழார்க்கீரன் எயிற்றியார்
       10.காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்
       11.காமக்கணிப் பசலையார்
       12.காவற்பெண்டு
       13.குமிழி ஞாழலார் நப்பசலையார்
       14.குறமகள் இளவெயினி
       15.குறமகள் குறியெயினி
       16.குன்றியனார்
       17.தாயங்கண்ணியார்
       18.நக்கண்ணையார்
       19.நல்வெள்ளியார்
       20.நெடும் பல்லியத்தை       -   தொடரும்...
அப்துல்கலாம்
      வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், சிந்திப்பதை
      நிறுத்தாதே...அதுதான் மூலதனம்.
அன்னை தெரசா
      பிறருடைய துன்பத்தை நீக்கும் வல்லமை உனக்கு வர வேண்டுமானால்
      அத்துன்பத்தை நீயும் அனுபவித்து உணர வேண்டும்.
இன்றைய வெளிச்சம்
      உயர்ந்த இலட்சியங்களைக் கொண்டே வாழ்க்கையே தலை சிறந்த
      பெருமையுள்ள வாழ்க்கை.
      நல்லொழுக்கம் மட்டுமே புயலுக்கும் அசையாமல், உறுதியாக நிற்கும்.

தனிமரம்

நான் தனி மரம்தான்
பல கிளைகளைப் படைப்பேன்
அதில் பாசத்தைக் கொடுப்பேன்
நேசத்தைச் சோலையாக்குவேன்
நந்தவனச் சொல்லை ஏற்று நாளும்
அதை வளர்ப்பேன்
நல்லதோர் உலகம்
அதை நாளை நான் கொடுக்க உழைப்பேன்.


22.7.19 அன்று தினத்தந்தி  நாளிதழில் வெளியான கவிதை.

குணம்

அறிவு உங்களுக்கு
அதிகாரத்தை வழங்கலாம்
குணம்தான்
மரியாதையைப் பெற்றுத் தரும்

குறுகிய வாழ்க்கை




நாம் ஆசைப்படும் பல விஷயங்கள் கேட்கும்போது கிடைப்பதில்லை
அது நமக்குக் கிடைக்கும்போது தேவையில்லாத ஒன்றாக மாறிவிடுகிறது.
எனவே நாம் வாழும் இந்தக் குறுகிய வாழ்வில் அனைவரிடமும் அன்பாகவும், பிறருக்கு விட்டு கொடுத்து, எதிர்காலைத்தை எண்ணிக் கவலைப்படாமல் இப்போது நம் கையில் உள்ள நிஜமான நிகழ்காலத்தைச் சந்தோசமாக வாழ்வோம்.

புதன், 29 ஜனவரி, 2020

இன்றைய தினம்

29.01.2020 (புதன்)
இன்றைய தினம் 
      இந்திய செய்தித்தாள் தினம்.
நிகண்டுகள் 
      1.திவாகர நிகண்டு
      2.பிங்கலந்தை நிகண்டு
      3.அகராதி நிகண்டு
      4.சூடாமணி நிகண்டு
      5.உரிச்சொல் நிகண்டு
      6.அரும்பொருள் விளக்க நிகண்டு
      7.பொருள் தொகை நிகண்டு
      8.பொதிகை நிகண்டு
      9.உசித சூடாமணி நிகண்டு
      10.நாபதீப நிகண்டு
விவேகானந்தர் 
       உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும்
      அணுகக்கூடாது.
இன்றைய வெளிச்சம் 
       எல்லோரையும் நம்புவது ஆபத்து, ஒருவரையும் நம்பாதிருப்பது பேராபத்து.
       செலவுகள் யாவற்றிலும் காலத்தை வீணாக்குதலே அதிக செலவும்,
       ஊதாரித்தனமுமாகும்.

செவ்வாய், 28 ஜனவரி, 2020

திருமணத்தின் போது மோதிர விரலில் மோதிரம் அணிவது ஏன்?

நமது இரண்டு கைகளிலும் உள்ள நடு விரல்களை உட்புறமாக மடக்கிக்கொள்ள, மற்ற அனைத்து விரல்களையும் தனித்து பிரிக்க முடியும். ஆனால், மோதிர விரலை மட்டும் தனித்துப் பிரிக்க முடியாது. அதுபோல, கணவனும் மனைவியும் தங்களது இன்ப, துன்பங்களில் எப்போதும் ஒருவருக்கொருவர் பங்கேற்று அனுசரணையாக வாழவேண்டும். இக்காரணத்தினாலேயே திருமணத்தின்போது மோதிர விரலில் மோதிரம் அணிவிக்கப்படுகிறது.

அன்புத் தோழி

எனது தாயிடம் இருந்து கிடைக்காத சுகத்தை
உனது கைத்தீண்டலே எனக்கு அளித்தது

ஆனால்

ஆண் : நான் உங்களை விரும்புகிறேன்.
பெண் : உனது தகுதி என்ன?  சொந்தமாக வீடு வைத்து இருக்கிறாயா?
ஆண் : இல்லை. ஆனால்...
பெண் : பி. எம். ட்புல்யு. கார் வைத்திருக்கிறாயா?
ஆண் : இல்லை. ஆனால்...
பெண்: ஆனால் என்று சொல்வதை நிறுத்து..வேலையாவது பார்க்கிறாயா?
ஆண் : இல்லை. ஆனால்...
பெண் : போதும், போதும் நிறுத்து. எந்தத் தகுதியும் இல்லாத உன்னை
               எவ்வாறு ஏற்றுக்கொள்வது...
               (பெண் சென்று விடுகிறாள்)
ஆண் : எனக்குச் சொந்தமாக வீடு இல்லை. ஏனெனில் எனக்குச் சொந்தமாக வில்லா உள்ளது. என்னிடம் லம்பொஉர்க்ஹினி கார் இருக்கும்போது அதை விட விலை குறைவான பி. எம். டபில்யு.-க்கு அவசியம் இல்லாது போயிற்று. சம்பளம் கொடுக்கும் முதலாளியாக இருக்கும் நான் மற்றவர்களிடம் கைகட்டி வேலை பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. என்னை ஏற்றுகொள்ளும் தகுதி அவளுக்குத்தான் இல்லை.

முயற்சி

கருக்காத வெண்மேகம் மழையாகாது
செதுக்காத கல் சிற்பமாகாது
உரசாத தீக்குச்சி நெருப்பாகாது
தெளிவில்லாத நீரில் முகம் தெரியாது
அதேபோல முயற்சி இல்லாத கனவு வெற்றியாகாது


15.7.19 அன்று தினத்தந்தி  நாளிதழில் வெளியான கவிதை.

வெள்ளி, 24 ஜனவரி, 2020

இன்றைய தினம்

24.01.2020 (வெள்ளி)
இன்றைய தினம்
         தேசிய பெண் குழந்தைகள் தினம்
         இந்திய அணுக்கருவியலின் தந்தை ஹோமி பாபா நினைவு தினம்.
பன்னிரு ஆழ்வார்கள் 
         1.பொய்கையாழ்வார்
         2.பூதத்தாழ்வார்
         3.பேயாழ்வார்
         4.திருமழிசை ஆழ்வார்
         5.நம்மாழ்வார்
         6.மதுரகவி ஆழ்வார்
         7.குலசேகர ஆழ்வார்
         8.பெரியாழ்வார்
         9.ஆண்டாள்
         10.திருபாண் ஆழ்வார்
         11.தொண்டரடிப்பொடி ஆழ்வார்
         12.திருமங்கை ஆழ்வார்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்   அக நூல்கள்  - 6 
          1.கார் நாற்பது
          2.ஐந்திணை ஐம்பது
          3.ஐந்திணை எழுபது
          4.திணைமொழி ஐம்பது
          5.திணைமாலை நூற்றைம்பது
          6.கைந்நிலை
புறநூல்  - 1
          1.களவழி நாற்பது
தன்னம்பிக்கை 
          உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே... தாழ்வு மனப்பான்மை
          வரும்.! உனக்குக்கீழே உள்ளவனை ஏளனமாய்ப் பார்க்காதே...
          தலைக்கனம் வரும்.! உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு...
          தன்னம்பிக்கை வரும்...!
இன்றைய வெளிச்சம் 
          உங்களைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையே வெற்றி தரும்.
          நம்பிக்கை மட்டும் இருந்தால் போதாது சிந்திக்கவும் தெரிய வேண்டும்.
         அன்பும் இரக்கமும் இரட்டைக் குழந்தைகள்.      

வியாழன், 23 ஜனவரி, 2020

இன்றைய தினம்

23.01.2020 (வியாழன்) 
இன்றைய தினம் 
         நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்ததினம்
விவேகானந்தர்
         நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது.
திருவள்ளுவரைக் குறிக்கும் வேறு பெயர்கள்
        1.தெய்வப்புலவர்
        2.நாயனார்
        3.முதற்பாவலர்
        4.பெருநாவலர் 
        5.செந்நாப் போதார்
        6.மாதானுபங்கி
        7.நான்முகனார்
        8.தேவர்
  திருக்குறளின் வேறு பெயர்கள் 
         1.திருவள்ளுவம்
         2.தமிழ்மறை
         3.பொதுமறை
         4.முப்பால் நூல்
         5.பொய்யாபொழி
         6.தெய்வ நூல்
         7.வாயுறை வாழ்த்து
         8.உத்தரவேதம்
தன்னம்பிக்கை
         நிமிர்ந்து நிற்பதெல்லாம் பலம் என்றோ,வளைந்து கொடுப்பதெல்லாம்
         பலவீனம் என்றோ முடிவெடுத்து விடாதீர்கள். நிமிர்ந்து நிற்கும் வேலை
         விட, வளைந்து கொடுக்கும் வில் அம்பு அதிக தூரம் பாயும்....!!
இன்றைய வெளிச்சம் 
         ஊக்கத்துடன் உழைத்தால் அதிர்ஷ்டம் நம் வீட்டுக் கதவைத் தட்டும்.
         ஒரு நூல் நிலையக் கதவு திறக்கும் போது, ஒரு சிறைச்சாலைக் கதவு
         மூடப்படுகிறது.

புதன், 22 ஜனவரி, 2020

இன்றைய தினம்

22.01.2020 (புதன்)
இன்றைய தினம் 
       தமிழறிஞர் தி.வே.கோபாலையர் பிறந்த தினம்.
புறநானூறு பாடிய பெண்பாற் புலவோர் 
       1.ஔவையார்
       2.பாரிமகளிர்
       3.வெண்ணிக் குயத்தியார்
       4.ஒக்கூர் மாசாத்தியார்
       5.காவற்பெண்டு
பத்துப்பாட்டு நூல்கள்
        1.திருமுருகாற்றுப்படை
        2.பொருநராற்றுப்படை
        3.சிறுபாணாற்றுப்படை
        4.பெரும்பாணாற்றுப்படை
        5.முல்லைப்பாட்டு
        6.மதுரைக்காஞ்சி
        7.நெடுநல்வாடை
        8.குறிஞ்சிப்பாட்டு
        9.பட்டினப்பாலை
        10.மலைபடுகடாம்
பௌத்த பக்தி இலக்கியங்கள்
        1.மணிமேகலை
        2.குண்டலகேசி
        3.விம்பிசாரக்கதை
        4.அபிதர்மாவதாரம்
        5.திருப்பதிகம்
        6.சித்தாந்தத்தொகை
தன்னம்பிக்கை
       தேதி போல உங்கள் கவலைகளை தினமும் கிழித்து எரிந்துவிடுங்கள்.
       ஒவ்வொரு நாளும் உங்களுக்கானதாக எண்ணிப் புதிதாய் வாழுங்கள்.
இன்றைய வெளிச்சம் 
    நாகரிகம் முன்னேறுவது புத்தகங்களால் தான்.
    சோதனை அதிகமாக இருந்தால் சுகம் பெரிய அளவில் வரப்போகிறது என்று
    அர்த்தம்.
    ஒருவனின் அறிவை அறிந்து கொள்வதற்கு அவனது பேச்சே அளவுகோல்.

செவ்வாய், 21 ஜனவரி, 2020

அம்மா

சுட்டெரித்திடும் சூரியனும் நீ
வளம்தரும் மழையும் நீ
மனதில் விதை விதைத்தவளும் நீ
மவுனத்தின் காரணமும் நீ
மகிழ்ச்சியின் காரணமும் நீ
தேவதையின் வடிவமும் நீயே
என் தாயும் நீயே... அம்மா...


8.7.19அன்று தினத்தந்தி  நாளிதழில் வெளியான கவிதை.

நேரம் இல்லை

இதயம் நொருங்குவதற்கு இது கண்ணாடி இல்லை
கதவுகள் திறப்பதற்கு இது வீடு இல்லை
மனதிலே வைப்பதற்கு இடம் இல்லை
என் கதையைச் சொல்வதற்கு இது நேரம் இல்லை

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

குழந்தை

மனதைப் பறிக்கும் பொன்நிறம்
விழிகளைக் கவர்ந்த உன் புன்னகை
செவிகளில் ஒலிக்கும் உன் சிறிய சொற்கள்
புதையலைப்போல் என் கையில்
கிடைத்த நீ என் செல்வா

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

தென்னை மரமே

ஒற்றைக் காலில் நின்று உலகைப் பார்க்கிறது
தாகம் தீர்க்க இளநீர் தருகிறது
குடிசை அமைக்க ஓலையைத் தந்தது
தாயைப்போல் இளம் குருத்தில் இருந்தது
தேங்காயாக வளர்வதற்குப் பத்துமாதம்
பிள்ளைபோல் சுமந்த தென்னைமரமே

ஈ.கன்னிகா
இளங்கலை இரண்டாமாண்டு ஆங்கிலம்

நிலவே நீயும் ஒரு பெண்தானே

நிலவே நீ வானத்தில் மட்டும் உதிக்கிறாய்
நிலத்தில் வாழும் பெண்ணின் முகத்தில் உதிக்கிறாய்
இருண்ட வானில் ஒளியைக் கூட்டுகிறாய்
ஆனால் பெண் இருண்ட வீட்டில்
ஒளியேற்றி அன்பைக் கொடுக்கிறாள்
நீங்கள் இருவரும் ஒருவர் தானே
நிலவே நீயும் ஒரு பெண்தானே

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

உன்னை

அலைகள் ஓடியது
நிலவைத் தேடியது
விழிகள் வாடியது
உன்னை நாடியது

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

பேரழகி

பொன் நகை சூடாமல் இருந்தாலும்
உதட்டில் புன்னகை சூடியிருந்தாள்
உருவத்தில் அழகில்லை என்றாலும்
உள்ளத்தில் அன்பைக் கொண்டவள்
கருப்பு நிறத்தைக் கொண்டாலும்
கணிந்த மொழியைப் பேசுவாள்
காரணம் இன்றிச் சிரிப்பாள்
காரியத்தோடு நடப்பாள் என் அன்பு கண்ணம்மா

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

நல்ல பாம்பு

பிறவியில் கெட்டவன்
பெயரில் நல்லவன்
நீண்ட உடல் ஆனால் கயறில்லை
கண்கள் உண்டு அதில் பார்த்ததில்லை
விடம் பாய்ந்த உடல்
யாரையும் துன்புறுத்துவதில்லை
கேட்டால் நான் நல்ல பாம்பு

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

அன்பு, நட்பு

கண்களில் பூத்த மலர்
கைகளில் மலர்ந்து விரிந்தது
இதயமாகத் தோன்றிய மலர்
இதழ்களில் விரிந்து காணப்பட்டது
கையில் வைத்துக் காத்து விரிவதற்கு வழிகாட்டியது
இதில் சிறந்த பூ அன்பு, நட்பு

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

நிலவே

இருண்ட வானத்தில் மின்னிய முகம்
முகம் பார்க்கப் பெண்போலத் தெரிகிறதே
ஆனால் உருவம் இன்றிக் காணப்படுகிறாள்
இந்த வானத்தில் யார்துணையும் இன்றி நிற்கிறாளே
நிலவே உன் துணை நானே

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

இன்றைய தினம்

21.01.2020 (செவ்வாய்)
இன்றைய தினம்
            இந்திய விடுதலை போராட்ட வீரர் ராஷ் பிஹாரி போஸ் நினைவு தினம்.
குறுந்தொகை பாடிய பெண்பாற் புலவோர் 
            1.ஆதிமந்தி
            2.ஊன்பித்தை
            3.ஔவையார்
            4.நன்னாகையார்
            5.வெண்பூதியார்
            6.வெள்ளிவீதியார்
இலக்கண நூல்கள்
            1.அவிநயம்
            2.யாப்பருங்கலம்
            3.யாப்பருங்கலக்காரிகை
            4.நேமிநாதம்
            5.வச்சணந்திமாலை
            6.நன்னூல்
            7.நம்பியகப்பொருள்
நற்றிணை குறிக்கும் மன்னர்கள்
            1.அதியமான் அஞ்சி
            2.அழிசி
            3.ஆய் அண்டிரன்
            4.உதியன்
            5.ஓரி
            6.காரி
            7.குட்டுவன்
            8.சேந்தன்
            9.நன்னன்
            10.தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.
தன்னம்பிக்கை
         வருங்காலத்தைப் பற்றி வருடங்களாய் யோசிப்பதை விட
         நிகழ்காலத்தைப் பற்றி நிமிடங்கள் சிந்தித்தால் போதும் வாழ்வை
         வென்றிடலாம்..!
இன்றைய வெளிச்சம்
        புத்தகங்கள் நிறைந்த வீடு மலர்கள் நிறைந்த தோட்டம் போன்றது.
        உடலுக்குத் தேகப் பயிற்சிபோல மனதிற்குப் புத்தகங்கள்.

அழகுப் பதுமை

சூரியன் ஒளியைத் தழுவி
உன் நிறத்தை வடிவம் அமைத்தார்
பூவின் இதழ்களைக் கோர்த்து
உன் உடல் வடிவம் கொடுத்தார்
மலரைத் தாங்கும் காம்பைப்போல
விரல்கள் படைத்தார்
மிதக்கும் தாமரையைப்போலப்
பாதம் படைத்தார்
சங்கைப்போல மெல்லிய கழுத்தக் கொடுத்தார்
கருவண்டைப்போல இருவிழிகளைக் கொடுத்தார்
நிலவின் வடிவத்தை எடுத்து உன் முகம் அமைத்தார்
உனக்கு இத்தனை இத்தனை கொடுத்த கடவுள்
நான் உன்னைப் பார்ப்பதற்கு
இருவிழியை மட்டும் கொடுத்தானே

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

இன்றைய தினம்

இன்றைய தினம்
20.01.2020 (திங்கள்) 
           நிலாவில் இறங்கிய இரண்டாவது மனிதர் பஸ் ஆல்ட்ரின் பிறந்த தினம்.
அகத்தியரின் மாணவர்கள்  
            1.தொல்காப்பியன்
            2. அதங்கோட்டாசான்
            3.அவிநயன்
            4.கழா அரம்பன்
            5.நந்தத்தன்
            6.சிகண்டி
            7.துராலிங்கன்
            8.வையாப்பிகன்
            9.வாய்பிகன்
            10.பனம்பாரனார்
            11.செம்பூட்சேய்
            12.பெரிய காக்கைப் பாடினி
அப்துல்கலாம்
        பிஞ்சு மனதில் பதியும் நற்கல்வி வாழ்வின் முழுமைக்கும் நல்லுணர்வு   
       என்ற தன்மையின் தாக்கத்தை உருவாக்கும்.
தன்னம்பிக்கை
       யாரிடமும் எதையும் கற்றுக் கொள்ள வெட்கப்படாதே.. கற்பதற்கு
       வெட்கப்பட்டு தலை குனிந்தால் பின் கரையேறுவதற்குத் தலை நிமிரவே
       முடியாது...!
இன்றைய வெளிச்சம்
      இயற்கை என்ற புத்தகத்தின் ஆசிரியர் இறைவன்.

தேர்தல்

"எங்களுக்குள்
ஓர்  ஒப்பந்தம் !
ஐந்து  வருடத்திற்கு
நீங்கள்  ஏமாற்றுங்கள் !
ஐந்து வருடத்திற்கு
ஒரு முறை  நாங்கள்
ஏமாற்றுகிறோம் !
பார்க்கலாம் !
நீங்களா ? நாங்களா ? என்று !"

அப்பன்

அதிகாலையில்  அதிபதியாய்
அந்திமாலையில் அவையகனாய்
அன்றிரவில் நிலா அவனாய்
உன்னை மடி சேர்த்திடுவான்
அன்பு மனம் காட்டிடுவான்
அறிவு குணம் சூட்டிடுவான்
அமைதி வனம் ஆக்கிடுவான்
அய்யன் குறள் கூறிடுவான்
அன்னை மடி சேர்த்திடுவான்
அழாய் என சொல்லிடுவான்
அன்பில் அன்னையையே தோற்கச் செய்வான்
































x

உயிரே

உருவம் இல்லாத உடலுக்கு உயிர் கொடுத்தாய்
உயிர் இன்றி திரிந்த எனக்கு உணர்வுகளைக் கொடுத்தாய்
அருகில் இருந்தபோது உன்னை அறியவில்லை
உன் அருமையை அறிந்த பிறகு
நீ என் அருகில் இல்லை
உன்னை நினைக்க என்னை மறந்தேன்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

சிரிப்பு

பூமியில் விளைந்த பூ ஒன்று
மக்கள் விதை இல்லாமல் பூத்த பூ
செடி கொடியில் விளையாத பூ
காம்பும் இலையும் தீண்டாத பூ
பார்க்கவும் கேட்கவும் மலர்ந்த பூ
உலகில் யாருமே பறிக்க முடியாத பூ
முகத்தில் மலரும் பூ அதுவே சிரிப்பு

ஏறு தழுவல்

முரட்டுத் தோள்கள் கருப்பு நிறத்திலே
மலைபோல் திமில் ஏற்றிச்
சிங்கம்போல் பாய்ந்து வரும்
உன்னோடு வாடி வாசலில் நின்று
ஏறுதழுவி விளையாடி
இரும்புக்கரம் கொண்டு அடக்கி
உன்னை வீழ்த்தியதால்
நான் வீரன் ஆகவில்லை காளையே
உன்னைத் தோற்க வைத்தாலும்
வெற்றிபெறச் செய்தாலும்
இந்நாட்டில் சிறந்த வீரன் நீயே

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

அன்பைப் பெற்றேன்

தாயின் உருவத்தைப் பெற்றேன்
தந்தையின் குணத்தைப் பெற்றேன்
தம்பியின் ஆற்றல் பெற்றேன்
ஆசிரியரிடம் அறிவைப் பெற்றேன்
தோழிகளிடம் நட்பைப் பெற்றேன்
இறைவனிடம் அருளைப் பெற்றேன்
இவர்கள் அனைவரிடத்திலும்
தூய அன்பைப் பெற்றேன்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

நிழல் ஒளிர்ந்தது

வார்த்தை இன்றிப் பாடிய குயில்
வாடை இன்றிப் பூத்த மலர்
ஓடை இன்றிப் பாய்ந்த நீர்
உருவம் இன்றிப் பார்த்த நிழல்
உன் முகமாய் ஒளிர்ந்தது

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

காட்டில் திருவிழா

மயில் தோகைவிரித்து நடனம் ஆடியது
மான் காடெங்கும் துள்ளி விளையாடியது
கரடி தேனைச் சேகரித்து வைத்தது
குதிரை அணியாக வலம் வந்தது
குரங்கு தோரணம் கட்டி வைத்தது
முயல் மலர்களைப் பறித்து வந்தது
யானை தண்ணீர் கொண்டு வந்தது
அணில் பழங்கள் சேமித்து வைத்தது
குருவிகள் இனிய குரலில் கச்சேரி செய்தன
பறவைகள் அழைப்பிதழ்களை அனைவருக்கும் கொடுத்தன
இவர்கள் எல்லோரும் இணைந்து
காட்டு ராஜா சிங்கத்தின் பிறந்தநாளைக் கொண்டாடினர்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

என் அன்பு உள்ளமே

கவிதை பாடும் மேகம் காணுவோம்
வானிலே நாம் இங்கே
கண்கள் ஓரம் ஏன் இந்தக் கண்ணீர்
உன்னிலே என்னைக் கண்டும் ஏன் ஏக்கம் உன்னிலே
உன்னை அடைந்தேன் என்னை இழந்தேன்
மீண்டும் பிறந்தேன் உயிரே

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

தோழி நீ எனக்கு

அருகில் இருந்த உன்னை அறிய மறந்துவிட்டேன்
ஆசை இருந்தும் உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன்
கையில் கிடைத்த உன்னை இழந்துவிட்டேன்
தவறவிட்ட உன் நட்பை நீ எனக்கு மீண்டும் தருவாயா?

நிலவே

இருண்ட வானத்தில் மின்னிய முகம்
முகம் பார்க்கப் பெண் போலத் தெரிகிறது
ஆனால் உருவம் இன்றிக் காணப்படுகின்றாள்
இந்த வானத்தில் யார் துணையும் இன்றி நிற்கிறாளே
நிலவே உன் துணை நானே

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

அன்பே

என்னை யாரென்று கேட்டாயே
நான் யாரென்று உனக்குத் தெரியாதா
உண்மை தெரிந்
தால் என்னிடம் திரும்பி வருவாயா
எப்பொழுது உன் அன்பை என்மீது காட்டுவாய்
அதுவரை உன் அன்பிற்காகக் காத்திருப்பேன்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

நட்பு

மழை வந்தால் மண் மணம் பெருகும்
தாய் என்றால் மனதில் பாசம் வரும்
தந்தை என்றால் புது நேசம் வரும்
மழை வந்தால் மயில்கள் தோகை விரியும்
உலகைப் புரிந்துகொள்ளக் காலம் வரும்
என் நட்பைப் புரிந்துகொள்ள அன்பு மட்டுமே வரும்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

உலக வாழ்க்கை

நாட்கள் நகருகின்றன அதன் பாதை காலம்
காலத்தின் கைகளில்தான் நம் வாழ்க்கை
வாழ்க்கையின் முடிவு செல்லும் பாதை கடவுள்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

அன்பு

மரம் வளர வருடம் போதும்
நெல் வளர மாதம் போதும்
செடி வளர வாரம் போதும்
கொடி வளர நாட்கள் போதும்
என் அன்பை நீ புரிந்துகொள்ள
ஒரு நொடி போதும்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

மனம் மாறவில்லை

காலங்கள் மாறினாலும்
கனவுகள் மாறினாலும்
என் கடமைகள் மாறினாலும்
உன்னை நினைத்த
என் மனம் மட்டும் மாறவில்லை

முத்து

சிப்பியின் வயிற்றில் பிறந்த முத்தே
கடல் அலையைத் தழுவி விளையாடி
நிலவின் வடிவம் பெற்ற
மின்னிய ஒலியுடன் கரை சேர்ந்து
நூலுடன் நட்பினால் இணைந்து
பெண்ணின் கழுத்தில் அணிகலனாய்த் திகழ்கின்றாய்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

மலர் முகம்

அல்லியைப்போல் முகம் மலர்ந்தது
சிவப்பு ரோஜாவைப்போல் இதழும்
சங்குப் பூவைப்போல் காதுகளும்
முருங்கைப் பூவைப்போல் மூக்கும்
மொட்டுகளைப்போல் இருவிழிகளும்
முத்து மல்லியைப்போல் பற்களும்
மலர் இதழ்களில் விழும் கோடுகளைப்போல் நெற்றியில் வாக்கும்
வண்ணமலர் எல்லாம் பெண்ணின் முகம் ஆகும்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

மதிமுகம்

வெள்ளைத் தாமரை விரிந்த முகம்போல நிலவு வந்தது
மேகக்கூட்டம் வானில் படர்ந்து நின்றது
உதிர்ந்த முத்துகள் விண்மீனாய்ச் சிதறின
சுற்றிலும் கார் இருள் சூழ்ந்திருக்க
விண்மீன்கள் கோலம் இட்டிருக்க
இரவு வந்தது புவியை உறங்கவைக்க

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

சாலை

நாட்டில் என்ன மாறியது?
நாட்கள் மட்டும் ஓடியது
நாம் நடப்பதற்குச் சாலையா?
நம்மை அழிப்பதற்குச் சாலையா?

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

கதிர் அறுப்போம்

காத்திருந்து நாத்து நட்டு
ஏர்பிடித்து காட்டில் களையெடுத்து
நீர் பாய்ச்சி உரம் போட்டு
கண்ணைப்போல் நெல்மணியைப் பார்த்து
மூன்று திங்கள் காத்திருந்து
முதல்நாள் அன்று கதிர் அறுத்து
உயிரைப்போலப் பயிரைக் காத்து
ஊரோடு சேர்ந்து உண்ணலாம்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

மழலைச் செல்வம்

தாயின் கருவறையில் உருவாகி
தங்கத் தாமரைபோல் முகம்மலர்ந்து
முத்துப் பற்களில் சிரித்து
முல்லை வண்ண வடிவம் கோர்த்து
கடல் அலையாக தவழ்ந்து
கொடியினைப் போலக் கைகளை நீட்டி
தேனில் நனைந்த பழத்தையும்
நிலவைப் பிழிந்துவைத்த பாலையும்
மேலே கிண்ணத்திலே உண்ண வா
என் அன்பு மழலைச் செல்வமே

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

திங்கள், 20 ஜனவரி, 2020

தமிழ் மீது பற்று

பிறக்கையிலே நான் பிடி கொண்டேன்
தாய் தழுவையிலே நான் விழி கொண்டேன்
தந்தை அழைக்கையிலே நான் செவி கொண்டேன்
தாமரை மலர்கையிலே நான் மதி கண்டேன்
தமிழே உன்னைப் படிக்கையிலே
உன் மீது நான் பதி கொண்டேன் 

திங்கள், 13 ஜனவரி, 2020

இறப்பில் தான் பிறப்பு

இன்பமான வீட்டில்,
         இனிக்கும் சொந்தங்கள்,
இனிமையான நாட்டில்,
         இருக்கும் பந்தங்கள்,
இறப்பின் முடிவு,
         இனியொரு பிறவியின் தொடக்கம்,
இருளின் தேடல்தான்
           வெளிச்சம் என்ற வெற்றி !
இவ்வையம்  மூழ்கட்டும்,
            மகிழ்ச்சியில் நிறையட்டும்,
நெகிழிச்சியினம் தொடரட்டும் .........

வெள்ளி, 10 ஜனவரி, 2020

கண்களில் தோன்றிய முகம்

பூமியில் சூரியன் உதிக்க மறந்தாலும்
பூக்கள் எல்லாம் மலர்வதற்கு மறந்தாலும்
பூமிக்கு மழை வராமல் இருந்தாலும்
கடல்அலை என்னைத் தீண்டாமல் போனாலும்
என் கண்களில் தோன்றிய உன் முகம்
என்றும் மறையாது

என்னுள் வந்த மாற்றமோ

நீ என்னைப் பார்த்தபோது
உன் விழி அம்பு எந்தன்
இதயத்தைத் துளைத்தது

கண்களில் கண்ணீராய் வழிந்தது

நான் பார்த்த இடம் எங்கும்
இருள் சூழ்ந்து இருந்தது
உன் பார்வை பட்டதும்
ஒளியாக அனைத்து இடங்களும் மின்னின

நாட்கள் குறைந்தாலும்
உன்னைப் பார்த்த பார்வை குறையவில்லை
இது எல்லாம் என்னுள் வந்த மாற்றமோ

வெள்ளி, 3 ஜனவரி, 2020

கற்பின் வகைகள்

1.தலைக்கற்பு
2. இடைக்கற்பு
3.கடைக்கற்பு

நற்றிணை குறிக்கும் மன்னர்கள்

அத்தியமானஞ்சி
அழிசி 
ஆய் அண்டிரன் 
உதியன் 
ஓரி  
காரி  
குட்டுவன் 
சேந்தன் 
நன்னன் 
பாண்டியன்நெடுன்செழியன்  

நட்பு

நாளைய வெற்றியை நோக்கி
செயல்படும் நீ
இன்றைய பிரிவை நினைத்து
கலங்காதே என் தோழி