செவ்வாய், 21 ஜனவரி, 2020

மழலைச் செல்வம்

தாயின் கருவறையில் உருவாகி
தங்கத் தாமரைபோல் முகம்மலர்ந்து
முத்துப் பற்களில் சிரித்து
முல்லை வண்ண வடிவம் கோர்த்து
கடல் அலையாக தவழ்ந்து
கொடியினைப் போலக் கைகளை நீட்டி
தேனில் நனைந்த பழத்தையும்
நிலவைப் பிழிந்துவைத்த பாலையும்
மேலே கிண்ணத்திலே உண்ண வா
என் அன்பு மழலைச் செல்வமே

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக