முனைவர் பு.பிரபுராம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முனைவர் பு.பிரபுராம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

கல்வி

நல்ல மனிதர்களுடன் பழகும் அனுபவமும் ஒருவிதமான கல்விதான். (கலாமின் திருப்புமுனைகள், பக்கம் 104).

இடையூறுகளுக்கு எஜமானனாகு

இடையூறுகள் உனது தலைவனாக மாறி உன்னை அதிகாரம் செய்ய அனுமதித்துவிடாதே. நீ அவற்றின் எஜமானனாக மாறி அவற்றை உன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு வெற்றியடை. - சதிஷ் தவன்.
(கலாமின் திருப்புமுனைகள், பக்கம் 101)

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

புதன், 5 பிப்ரவரி, 2020

ஆர்வம்

நம்மிடம் சிறப்பான தனித்திறன்கள் இல்லாவிட்டாலும் ஆர்வம் இருப்பின் எதையும் சாதிக்கலாம்.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

புதுச்சட்டை

மூதறிஞர் ராஜாஜியைப் பார்த்து ஒரு பத்திரிகை நிருபர் கேட்டார். “சென்ற ஆண்டு ஆதரித்த கட்சியை இந்த ஆண்டு அகற்ற எண்ணியது ஏன்? உங்களுக்கு ஒரு நிலையான கொள்கை இல்லையென்று ஆகிவிட்டதா என்றார்”.

அதற்கு ராஜாஜியின் பதில், “சென்ற ஆண்டு வரை எனக்குப் பொருத்தமாயிருந்த சட்டை, இந்த ஆண்டு சின்னதாகச் சுருங்கிவிட்டதால் நான் புதுச்சட்டை தைத்துக்கொண்டேன். இதிலென்ன தப்பு”? என்றார்.

திங்கள், 3 பிப்ரவரி, 2020

எமில்

“எமில் அடொல்ஃப் வான் பெ(ஹ்)ரிங்

பிறப்பு - மார்ச் 15, 1854
இறப்பு - மார்ச் 31, 1917
நாடு - ஜெர்மனி

இவர் தொண்டை அடைப்பான் எனும் கொடூர நோய்க்குத் தடுப்பூசி மருந்து கண்டறிந்த மனிதக் காவலர். உயிர் குடிக்கும் இந்நோய்க்கு அற்புதமான தீர்வைத் தந்ததற்காக 1901-ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான முதல் நோபல் பரிசு எமிலுக்கு வழங்கப்பட்டது” (நோபல் வெற்றியாளர்கள், பாகம் 3, விகடன் பிரசுரம், முதற்பதிப்பு, சூன் - 2009, பக்கம் 10-12)