வ.கீா்த்தனா. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வ.கீா்த்தனா. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 9 ஜூலை, 2016

கனவு

                                                             Image result for dream     

கற்பனையை முதலெழுத்தாய் கொண்டிருப்பாய் !
உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் இயக்குனரை
தூக்கத்தில் வெளிக்கொணர்வாய் !
எண்ணுவன எல்லாம் நிறைவேறுவது உன்னில் மட்டுமே !
கடவுளின் கற்பனை இந்த உலகமென்றால் – அந்த
கடவுளும் கனவு கண்டிருப்பாரோ !
சில நேரங்களில் நித்திரையில் வருகிறாய் ;
சில நேரங்களில் நித்தம் நித்தம் வருகிறாய் !
அந்த ஆதி மனிதனும் சக்கரத்தை
முதலில் உன்னில் தான் கண்டானோ !
மனிதனின் நினைவளைகள் நீ என்றால்
உன்னுடைய நினைவளைகள் தான் மனிதனா ?
கனவு என்னும் மூன்றழுத்தும் ,
கற்பனை என்னும் நான்கெழுத்தும் சேர்ந்துதான்

கண்டுபிடிப்பு என்னும் ஏழெழுத்தை உருவாக்கியதோ ?

புதன், 1 ஜூன், 2016

பள்ளியின் முதல் நாள்...

                                      
Image result for பள்ளியின் முதல் நாள்

என்னமோ பட்டப்படிப்பு படிப்பது போல
தேவையானதை எல்லாம் தயார் செய்ததும்!
அ, ஆ போட்டு போட்டு பழகியதும்!
போகும் வழியில் அனைவரிடமும் பள்ளிக்குச்
செல்வதை தெரியமாய் கையசைத்து கூறியதும்! ஆனால்
பள்ளியில் நுழைந்ததும் பயம் தொற்றிக்கொண்ட நிமிடங்களும்!
காதிற்கு கை எட்டவில்லை என்றாலும் எட்டி எட்டி
     காதை தொட்டு ஏமாற்றியதும்!
அம்மாவின் கையை பற்றி இருக்கும் வரை
     இருந்த அந்த நம்பிக்கை ஆசிரியர் என்
கையை பிடித்து கூப்பிடும் போது கண்ணீராய் கரைந்ததுமாக
     இப்படி, கண்களில் கண்ணீர் வடித்த அந்த
பள்ளி முதல் நாள் இன்று நினைத்தால்
     இதழ்களில் புன்னகை தவழ்கிறது!

    



சனி, 26 மார்ச், 2016

கல்லூரி காலம்

Image result for கல்லூரி காலம்

புன்னகை செய்து வரவேற்ற
முகம் தெரியாத தோழிகள்!
பின் உறவென பழகிய நிமிடங்கள்!
     போதிமரமாய் திகழ்ந்த வகுப்பறை!
பேசியே கடத்திய பாடவேளைகள்!
     புரியாத மொழியில் தாலாட்டு பாடும் ஆசிரியர்கள்!
வகுப்பறையில் என்னை கேட்காமல்
     வரும் குட்டித் தூக்கம்!
உள்ளங்கை கோர்த்து திரிந்த நாட்கள்!
     மனதின் நினைவிலிருந்து கரையாத நிமிடங்கள்!
கண்மூடித் திறப்பதற்குள் முடிந்து விட்ட
     இந்த கல்லூரிக் காலம் – இனி
கண் மூடினால் கனவில் மட்டுமே!


செவ்வாய், 8 மார்ச், 2016

வாய்ப்புக்களை உருவாக்குவோம் சாதனை படைப்போம்

விண்வெளியில் கால் பதித்த கல்பனா சாவ்லாவோ;
தன் முதுகில் குழந்தையை சுமந்து; கையில்
வாளை ஏந்தி போர் புரிந்த ஜான்சி ராணியோ;
பாரதத்தின் முதல் பெண் மருத்துவரான
     முத்துலட்சுமி ரட்டியோ;
பாரதத்தின் முதல் பெண் நீதிபதியான
     பத்மினி ஜேசுதுரையோ;
பாரதத்தின் முதல் பெண் காவல் துறை அதிகாரியான
     கிரண் பேடியோ;
வாய்ப்புக்காக காத்திருக்கவில்லை!
தன் இலட்சியத்தின் வழி வாய்ப்புக்களை
உருவாக்கிக் கொண்டதால் தான் சாதனை
என்னும் சிகரத்தை எட்டிப்பிடித்தார்கள் ஆனால்
நாம் மட்டும் ஏன் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்?
இந்த மகளிர் தினத்தில் இருந்தாவது வாய்ப்புக்காக
காத்திருக்காமல் வாய்ப்புக்களை உருவாக்கி

சாதனை படைக்க முயற்சிப்போம்!

திங்கள், 7 மார்ச், 2016

அன்புள்ள அம்மா

அன்பின் வடிவமான கனிவுள்ளம் கொண்டவள் அவள்!
     தன் குழந்தையின் சிரிப்பில் தன்னையே மறந்திடுவாள்!
முளைத்து விடுவோம் என்னும் எதிர்ப்பார்ப்பில் தான்
     மண்ணுக்குள் புதைகிறது அந்த விதை! ஆனால்
இவளோ தன் குழந்தைக்காக எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி
     தன் வாழ்க்கையையே செலவிடுவாள்!
பிள்ளையின் எச்சில் சோற்றையும் அமிர்தம் என உண்டிடுவாள்!
நிலவை காட்டி நிலாச்சோறு ஊட்டிடுவாள்!
அவளுக்கு தெரியுமா? அந்த நிலவும் ஏக்கம் கொள்ளும்;
     இந்த அன்னையின் அன்பை பெற என்று!
ஒவ்வொன்றிலும் தியாகம் செய்கிறாள்;
     அதிலும் மகிழ்ச்சித் தான் அவளுக்கு!
சிலர் வாழ்க்கையில் தான் தியாகம் செய்வார்கள் ஆனால்
     இவளோ தன் குழந்தைக்காக தன்
வாழ்க்கையையே தியாகம் செய்கிறாள்!
     மனிதரில் மட்டுமா இந்த அன்பு!
ஒவ்வொரு உயிரிலும் அன்னையின் அன்பு
     அதிகமாகிக் கொண்டே தான் இருக்கும்!
நானும் முயற்சிக்கிறேன் அவள் அன்பை வெல்ல!
     ஆனால் முயன்று முயன்று தோற்கிறேன் அந்த
தோல்வியிலும் சுகம் தான் அவள் மடியில்
     குழந்தையாய் தவழும் போது!


சனி, 5 மார்ச், 2016

அன்பிற்காக ஏங்கும் இரு மனம்

இங்கோ,
     Image result for sad love of mother and child in india


   அந்த பிஞ்சு விரலை கொஞ்சி விளையாடவும்,
    கண்ணத்தில் அன்பு முத்தமிடவும்,
    நிலாச் சோறு ஊட்டி மகிழ்ந்திடவும்,
     குறும்புத் தனத்தை கண்டு ரசித்திடவும்,
     அம்மா என்ற வார்த்தையை செவி வழி கேட்டிடவும்
     ஏங்குது அவளின் உள்ளம்!

அங்கோ,
     
Image result for sad love of mother and child in india

   கீழே விழுந்தால் தூக்கி விடவும்,
     அன்போடு கொஞ்சி விளையாடவும்,
     பாசத்தோடு கண்டிக்கவும்,
     யாருமில்லாத தனிமை!
     தன்னந்தனிமையில் அன்பைத் தேடி
     தவிக்குது பிஞ்சு நெஞ்சம்!

அவளின் ஏக்கம் இந்த குழந்தைக்கு தெரியவில்லையா?
இல்லை அந்த குழந்தையின் தவிப்பு இவளுக்கு புரியவில்லையா?
ஏன் இந்த இடைவெளி? இவர்களை தடுப்பது எது?