இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 டிசம்பர், 2019

சிவபெருமான்

காலத்தைக் கண்ணில் காட்டியவன்
கதிரவனுக்கே ஒளியைக் கொடுத்தவன்
கங்கையைச் சடைமுடியில் வைத்திருப்பவன்
இதயத்தில் குடிகொண்டவன்
வாழ்க்கையின் அர்த்தத்தைத் தெரிந்தவன்
வானத்தைவிட உயர்ந்தவன்
நெடிய கூந்தலை உடையவன்
நஞ்சினை உண்டு தேவர்களைக் காத்தவன்
நாகத்தை மாலையாகச் சூடியவன்
உமையம்மைக்கு இடது பாகத்தை அளித்தவன்
உள்ளத்தில் சிறந்தவன்
அன்பால் இணைந்தவன்
அறிவில் உலகைவிடப் பெரியவன்
அவரே நம் எம்பெருமான்

திங்கள், 4 நவம்பர், 2019

காட்சி

திரைபடங்களை போன்றதே
நம் வாழ்வு...
தினந்தோறும் காட்சிகள்
ஏராளம்....
அதில் வில்லனை‌ போல்
பழிவாங்கும் எண்ணம் இல்லாமல்
காமேடியனை போல் அனைத்தையும்
நகைச்சுவையாக எண்ணி வாழவேண்டும்.....
அப்போது தான் வாழ்க்கை அழகாகும்

திங்கள், 23 செப்டம்பர், 2019

துணிந்து எழுங்கள்

விடிந்ததும் வருவதோ  சூரியன்
விடிவதற்குள் இருப்பதோ சந்திரன்
இரண்டும் ஒரே இடத்தில் இருக்காது
ஆனால் இரண்டிலும் பயன் உண்டு

இரவில்  வெளிச்சம் தருவது சந்திரன்
பகலில் வெளிச்சம் தருவது சூரியன்
அதுபோலத்தான் நம் வாழ்வில்
வெற்றியும் தோல்வியும்
வெற்றி பெற்றால் வேகம்
தோல்வி அடைந்தால் விவேகம்

அதனால் எதையும் கண்டு துவண்டுபோகாதீர்
துணிந்து எழுங்கள்
வாழ்ந்து காட்டலாம்


ப.லட்சுமிப்பிரியா, 
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்.

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

தேவை

அதிகம் பேசாதே
அடக்கம் தேவை
விவாதம் செய்யாதே
விவேகம் தேவை
தயக்கம் காட்டாதே 
தைரியம் தேவை
எதையும் எண்ணாதே
எளிமை தேவை
அலட்சியம் கொள்ளாதே
ஆற்றல் தேவை
முயற்சியை விடாதே
பயிற்சி தேவை
இவை எதையும் மறந்துவிடாதே
ஏனெனில் 
வாழ இவையே தேவை....!!!!!!!!!

ப.லட்சுமிப்பிரியா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்