ஐஸ்வர்யா முருகேசன்இளங்கலை வணிகவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐஸ்வர்யா முருகேசன்இளங்கலை வணிகவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 ஆகஸ்ட், 2018

பள்ளிக்கூட நாட்கள்

                பள்ளிக்கூட நாட்கள்



             






கிழிஞ்ச மஞ்சப்பையோடு
ஒட்ட சிலேட்டடோடும்
ஒடுங்கிப்போன தட்டோடும்
இன்று யாரும் பள்ளி செல்வதில்லை.


புத்தகங்களை மலை போல
சுமந்து கொண்டு
மனதிலே வீட்டுப்பாடத்தை
எழுதவில்லையே என்ற பயத்தை
சுமந்து கொண்டு வேன் என்று சொல்லப்படும் அந்த நாய் பிடிக்கும்
வண்டியில் அவர்களது பயணம்
தொடங்குகிறது.

அன்று,
மதிய உணவு இடைவேளையில்
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"
என்று குறள் சொல்லி தோழி,காகம்,மைனாவோடு
பகுத்து உண்டதை மனம் மறக்க மறுக்கிறது.

முட்டை சாப்பிடவேண்டும்
என்ற ஆசையில் தான்
வருகைப்பதிவேட்டில் 100/100 கிடைத்தது

தாய்மொழியாம் தமிழில்
ஆசிரியர் பாடம் நடத்தும் வேளைகளில்,
முணுமணு வென்று பேசிய தருணங்கள்
ஆனால்,
 இன்றோ தாய்மொழியில் பேசினால்
அபராதமாம்...
ஆசிரியர் அடித்தால் கூட "அம்மா" என்று  கத்தக்கூடாது. "மம்மி" என்றே கத்த வேண்டும்.
பள்ளிக்கு செல்வதை மாணவர்கள்
நேசிக்க வேண்டும்
வெறுக்க கூடாது.
பள்ளிக்கூடங்கள்
எவ்வாறு சாதிக்க வேண்டும் என்பதை
கற்றுக்கொடுக்கவேண்டும்
எவ்வாறு சம்பாதிக்க வேண்டும்
என்பதை அல்ல......