கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

பொன்னியின் செல்வன்

ஆசிரியர் குறிப்பு:
கல்கி கிருஷ்ணமூர்த்தி,
 ராமசாமி ஐயர் கிருஷ்ணமூர்த்தி என்பதே இவரது இயற்பெயராகும். கல்கி என்பது விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்தில் இருந்து தன் பெயரை மாற்றம் செய்து கொண்டார். இவரது காலம் 1899-1954. இவர் ஒரு பத்திரிகையாளர், கவிஞர், எழுத்தாளர், விமர்சகர். இவர் 120 சிறுகதைகளையும், ஐந்து புதினங்களையும், மூன்று வரலாற்று காதல் காவியங்களையும் இயற்றியுள்ளார். கல்கி அவர்கள் மூன்று முறை சிங்கள தீவுகளுக்கு சென்று இக்கதையின் அமைப்புகளை எழுதியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு மேல் இக்கதைகளை முடிக்க காலமாயிற்று. இக்கதை 1951-1954 கல்கி நாள் இதழில் வெளிவந்தது. பின் மக்களிடம் அதிக அளவில் வரவேற்பு பெற்றதால் இதன் ஆசிரியர் இக்கதையினை புதினமாக வெளியிட்டார். அன்று முதல் இன்றுவரை அனைவரையும் ஈர்த்து வருகிறது இக்கதை.
கதையின் களம்:

"கடலைச் சுருக்கி கட்டுரையாக்க முடியாது, இருப்பினும் இது என் சிறிய முயற்சியே". பொன்னியின் செல்வன், பொன்னி இச்சொல் காவேரி நதியினை குறிக்கிறது. ஒவ்வொரு நாகரிகமும் ஒரு நதிக்கரையில் பிறக்கிறது."தஞ்சை மாநகரின் நாகரிகமும் சோழநாட்டின் பண்பாடும் பிறந்த நதிக்கரையை காவேரி". சோழநாட்டின் மக்கள் வழிபடும் கடவுளும் தாயும் அக்கறையை. பொன்னியின் செல்வன் இக்கதையில் பொன்னியின் செல்வனாக அதாவது காவேரி நதிக்கரையில் செல்வனாக இராஜராஜ சோழன் வளம் வருகிறான்.
இக்கதை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நூல் பக்கங்களை கொண்டது. அக்கால மன்னனின் பெருமைகளையும் ஆட்சித் திறன்களையும் மக்களின் வாழ்வியல் நெறிகளையும் கூறுகிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இராஜராஜ சோழனின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கியமான ஆறு மாத காலத்தில் கதையே இக்கதையின் கருவாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தஞ்சை மாநகர்

சுந்தர சோழன் மன்னனால் ஆட்சி செய்யப்பட்டது. தஞ்சை மாநகரின் அரசன் தீராத நோயினால் பாதிக்கப்பட்டான். அப்பொழுது பதவிக்காக ஒரு குழப்பம் ஏற்பட்டது. அரசனின் பங்காளி முறையில் தம்பியான
மதுராந்தகச் சோழன் பதவிக்காக ஆசைப்பட்டு அந்நாட்டு அமைச்சர்களின் உதவியுடன் மன்னனை அழிக்க திட்டமிடுகிறான். சோழனுக்கோ மூன்று குழந்தைகள். முதலாவது மகனின் பெயர்
ஆதித்திய கரிகாலன், இரண்டாம் மகளின் பெயர்
குந்தவை, மூன்றாவது மகனின் பெயர்
ராஜராஜ சோழன், இவரது இயற்பெயர் அருள்மொழிவர்மன் . இருப்பினும் இவர் மக்களால் இராஜராஜ சோழன் என்று அழைக்கப்பட்டார். சுந்தர சோழ மகாராஜா தனது முதலாவது மகன் ஆதித்திய கரிகாலனை ஆட்சிக்கு வர சொல்லி அறிவுரை அழைத்தார். இருப்பினும் ஆதித்திய கரிகாலனுக்கு அதில் விருப்பம் இல்லை. சோழ நாடு பரந்து விரிந்தவை இன்றைய ஆந்திரம்,கர்நாடகம்,கேரளா தமிழ்நாடு,சிங்களம் இவையெல்லாம் சோழநாட்டு மன்னர்களால் தஞ்சையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்யப்பட்ட நகரங்களாகும். நாட்டின் வடபகுதி ஆதித்ய கரிகாலனால் ஆட்சி செய்யப்பட்டது. நாட்டின் மையப்பகுதி குந்தவை மற்றும் அவளின் தந்தையான சுந்தர சோழனால் ஆட்சி செய்யப்பட்டது. நாட்டின் தென்பகுதி அருள்மொழி வர்மனால் ஆட்சி செய்யப்பட்டது. ஆதித்திய கரிகாலன் மிகவும் கோபம் குணம் கொண்டவன். ஆனாலும் அவர் மனம் தூய்மையானது. இவர் சோழ நாட்டின் படைத்தளபதியாக பணியாற்றினார். குந்தவை தன் அறிவுத் திறனால் நாட்டின் மையப்பகுதியை வழிநடத்தினார். அருள்மொழி வர்மன் தென் சோழநாட்டை ஆட்சி புரிந்ததும் இல்லாமல் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க சிங்கள தீவுகள் மீது போர் தொடுத்து சோழர்களின் வீரத்தினை உலகிற்கே எடுத்துக்காட்டினார். ஆதித்திய கரிகாலனுக்கு மதுரை மாநகரை சேர்ந்த வீரபாண்டியன் உடன் பகை. வீரபாண்டியனை துரத்திக்கொண்டு சென்றார் ஆதித்திய கரிகாலன். வீரபாண்டியனும் ஒரு இடத்தை சென்றடைந்தான் அங்கு ஒரு பெண் இருந்தாள்.
அவள் பெயரோ நந்தினி, இவள் பாண்டியனின் காதலி. ஆதித்திய கரிகாலன் வீரபாண்டியனை கொள்ள வந்துள்ளார் என்பதை உணர்ந்த நந்தினி ஆதித்திய கரிகாலனிடம் வீரபாண்டியனுக்காக உயிர்ப்பிச்சை  வேண்டினாள். ஆதித்திய கரிகாலனுக்கு நந்தினி மீது ஒரு காதல் ஏற்பட்டது. இருப்பினும் பகையின் காரணமாக வீரபாண்டியனை கொலை செய்கிறார், ஆதித்திய கரிகாலன். அன்றே சபதம் எடுக்கிறாள் நந்தினி ஆதித்திய கரிகாலனை கொலை செய்ய வேண்டும் என்று. சோழநாட்டின் அரச குடும்பத்தில் ஒருத்தியாக மாற வேண்டும் என்று அரச பதவியில் இருக்கும் ஒருவரை திருமணம் செய்கிறாள் நந்தினி. இந்த அனைத்து உண்மைகளையும் அறிந்தார் ஆதித்திய கரிகாலனின் உயிர்த்தோழன்

வந்தியத்தேவன். தன் தோழனிடம் அவருக்கும், அவரின் தந்தைக்கும் ஏற்பட இருக்கும் ஆபத்தினை தெரிவிக்கிறார். ஆதித்திய கரிகாலன் வந்தியத்தேவனிடம் இரு ஓலைச்சுவடிகளை கொடுத்து தன் தங்கையிடமும் தந்தையாரிடமும் அளிக்குமாறு கூறுகிறார். வந்தியத்தேவனும் ஆதித்திய கரிகாலனின் வேண்டுகோளுக்கு இணங்க தஞ்சை மாநகரை நோக்கி பயணம் செய்ய தொடங்கினார்.
வந்தியத்தேவன் செல்லும் வழியில் சோழநாட்டின் தாயான பொன்னி நதி கரை எப்படி எல்லாம் இருக்கிறது என்பதெல்லாம் கண்டு கழித்தும் ,மக்கள் வாழ்க்கையில் எப்படி நெறிகளோடு வாழ்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டும். சோழ சாம்ராஜ்யத்தின் பெருமைகளையும் அழகிய அமைப்புகளையும் கண்டு வியந்தும் சென்றடைகிறார் வந்தியத்தேவன். ஆதித்திய கரிகாலனை நந்தினி தனிமையில் சந்திக்க அழைப்பு விடுகிறாள். ஆதித்திய கரிகாலனும் நந்தினியின் அழைப்பை ஏற்று அவளை காண சென்றான். ஆதித்திய கரிகாலனுக்கு நந்தினியின் திட்டம் தெரிந்தும் அவர் சென்றார். அதற்கு காரணம் அவர் நந்தினியை காதலித்ததே ஆகும். அன்று முதல் இன்றுவரை ஆதித்திய கரிகாலனின் மரணம் ஒரு மர்மமே. அவர் யாரால் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. நந்தினியா அல்லது பாண்டிய மன்னர்களால் என்பது புதிரே. மறுபக்கம் வந்தியதேவன் சுந்தர சோழனிடமும் குந்தவை இடமும் ஆதித்திய கரிகாலன் அளித்த சுவடியை ஒப்படைத்தான்.

குந்தவை மீது காதல் கொள்கிறான் வந்தியத்தேவன். குந்தவைக்கும் வந்தியதேவன் மீது விருப்பம் ஏற்பட்டது. ஆனால் அவ்விருவரும் சோழநாட்டை பகைவர்களிடமிருந்து பாதுகாக்க எண்ணினர். குந்தவை வந்தியத்தேவனிடம் தன் தம்பியான அருள்மொழிவர்மன் சிங்க தீவுகளில் இருப்பதை கூறி அவரிடம் நாட்டின் நிலைமையும் தந்தைக்கு ஏற்பட இருக்கும் அபாயங்களையும் கூறுமாறு அவரை சிங்கள தீவுகளை நோக்கி பயணிக்க சொன்னாள், குந்தவை. அருள்மொழிவர்மனும் எவருக்கும் தீங்கு செய்ய எண்ணாதவர், அனைவருடனும் நட்புடன் பழகும் ஆற்றல் கொண்டவர். போர்த்திறன், கலைத்திறன் ஆகியவற்றை மிகவும் திறனை கொண்டவர். வந்தியத்தேவன் கொண்டு சென்ற செய்தி அருள்மொழிவர்மனை வடக்கு நோக்கி பயணம் செய்ய தூண்டியது. கோபம், பொறாமை இவையெல்லாம் சிறிதும் அருள் மொழி வர்மன் இடம் இல்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர சோழன் தஞ்சையின் அரசன் காலமானார். இதனால் நாட்டில் பல குழப்பம் ஏற்படுகிறது. இவை அனைத்துக்கும் அருள்மொழிவர்மன் எவ்வாறு தீர்வு காண்கிறார் என்பதும் சோழ சாம்ராஜ்யத்தை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதும் இக்கதையின் முக்கியமான பகுதியாகும். குந்தவை தன் தம்பிக்கு உதவி நாட்டின் பெருமையை நிலைநாட்டினாள்.
தவறு செய்யும் அனைவரையும் அருள்மொழிவர்மனும் குந்தவையும் கண்டுபிடித்து நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தனர். முடிசூடும் விழாவும் வந்தடைந்தது, நாட்டு மக்கள் அனைவரும் இராஜராஜ சோழனே தஞ்சையை ஆள வேண்டும் என்று விருப்பம் கொண்டனர். முடிசூடும் விழாவின் பொழுது தன்னைத் தேடி வந்த கிரீடத்தையும் அருள்மொழிவர்மன் ஆன இராஜராஜ சோழன், மதுராந்தக சோழனுக்கு அளித்தார். இதனால் இராஜராஜ சோழனுக்கு தியாகச் செம்மல் என்ற பட்டமும் மக்களிடம் இருந்து கிடைத்தது. மதுராந்தகச் சோழன் 14 ஆண்டுகள் தஞ்சையை ஆட்சி செய்தார். பின் அவர் காலமானார். மக்களின் விருப்பத்திற்கேற்ப ராஜராஜ சோழனும் அரசன் ஆனார். அதற்குப் பின்னரே சாணக்கிய மன்னனை போரில் வீழ்த்தி அதன் வெற்றியை கொண்டாடும் வகையில் தஞ்சை பெரிய கோயிலை கட்டத் தொடங்கினார். எந்தவித பதவி ஆசையும் இல்லாதவர் ராஜராஜசோழன். மக்கள் அனைவரும் இராஜராஜ சோழன் மீது பெரும் மரியாதையை கொண்டிருந்தன. மக்களோடு மக்களாய் வாழ்ந்து வரும் இவரை. இதுவே இப்புதினத்தின் கருவாகும். கடலை சுருக்கி கடுகு ஆக்க முடியாது. அன்றைய கால மக்கள் முதல் இன்றைய நவீன உலக மக்களிடமும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது, பொன்னியின் செல்வன். அவ்வாறு தமிழ் வார்த்தைகளை வர்ணனையோடு இயல்பான நடையில் கூறியுள்ளார், கல்கி. இன்றைய கால திரைப்பட இயக்குனர்கள் பொன்னியின் செல்வன் கதையை இயக்க முடியாது என்பது அசைக்க முடியாத உண்மை. இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் கதையும் சிறிது ஆசிரியரின் கற்பனையில் தோன்றியவை ஆகும். சிறிதளவு கற்பனை பல உண்மைகள் நம் நாட்டு பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு அனைத்தையும் கூறும் இன்னும் இன்று வரை சிறப்பினைக் கொண்டது.தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் என்றும் அழியாத ஒன்று ஆகும்.ஆயிரம் படை எடுப்பிற்கு பின்னும் நம்மால் நம் தாய் மொழியை மிக விரிவாய் தெரிந்து கொள்ள முடிகிறது காரணம் நம் தமிழ் மொழி ஆழமாக வேர் ஊன்றி நிற்பதே காரணம் ஆகும்.உலக மொழிகளில் தமிழ் மிகபழமையான மொழி ஆகும்.இன்னும் ஆயிரம் படை எடுப்பு வந்தாலும் நம் தாய் மொழி மிக உயர்ந்த இடத்தில் இருக்கும். இவை அனைத்திற்கும் எடுத்துக்காட்டு பொன்னியின் செல்வன் போன்ற நூல்களே ஆகும்."வாழ்க தமிழ்".


ஓவியங்கள் நன்றி-மணியன் செல்வன்
மேலும் தஞ்சை பெரிய கோயிலின் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள:http://aiswaryasaravanan.blogspot.com/2018/09/blog-post.html?m=1