பவித்ரா வெங்கடேசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பவித்ரா வெங்கடேசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 மார்ச், 2020

தன்னாட்சியை இழந்த நமக்கு
தமிழர்  என்ற பெயர் எதற்கு ?

                   தமிழர் தமது குல தொழில்களை பரம்பரை ,பரம்பரையாக செய்து கொண்டு அவரவர் பழக்க ,வழக்கங்களை பின்வரும் சந்ததியருக்கு கற்பித்து வாழ்ந்து வந்தனர் .
                   எவரும் ஒருவருக்கொருவர் சாலைப்பிள்ளை என்று தன்னாட்சியாக நின்று உழைத்தனர் .அவரவர் கடமைகளை கருத்தோடு செய்வதுமட்டுமின்றி, திறமைகளை வளர்த்துக்கொள்வதிலும் ஆர்வம் கொண்டனர்.  அனால்,          இன்றோ விவசாயின் மகன்! பர்கர்,பீசாவை கேட்கிறான்!
                   சோற்றையும், சேற்றையும் வெறுக்கிறான்.பட்டினம் தேடி பட்டினி கிடக்கின்ற இந்நிலைக்கு நாம் தலைப்படவில்லை நாமே துள்ளிக் குதித்துவிட்டோம்.
                   தமிழர் வலிமையிலும்,திறமையிலும் பிறரை பார்த்து போட்ட காலம் போய் வாகனங்களையும்,வசதிகளையும் பார்த்தும் பேராசைக் கொள்கின்றனர்.
                  நெல்லின் இடுப்பொடியாமல் நுட்பமாக சேற்றில் ஊன்றிய காலம் போய் இன்று தொழிலநுட்பம் என்ற பெயரில் நம் இடுப்பெலும்பு ஊனற்று போக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
                  இயற்கையினை பாதுகாக்க ஊரோடு இணைந்து செய்யப்பட்ட நாம், இன்றளவில் இல்லறத்தையே விட்டு விலகி இல்லம் சேரா அனாதைகளாய் வாழ்கிறோம்.
                  ஏழைகளின் முகத்தில் இறைவனை காண சொன்ன காலங்கள் மாறி இப்போதெல்லாம் ,இறைவனே ஏழைகளை தன்னை தரிசிக்க கட்டணமின்றி அனுமதிப்பதில்லை.
                 ஐந்து முதல் எட்டு நபர்கள் வரை பயணிக்கும் மாட்டுவண்டி ஏற்படுத்தாத காற்று மாசுபாட்டை இன்று தனி ஒருவரின் இருசக்கர வாகனம் ஏற்படுத்துகிறது.
                 தானாய் விளைந்த புல்லிற்கு பதிலாய் பால்,தயிர்,நெய் மற்றும் உரமாக சாணம் என எண்ணற்ற இயற்கை பொருட்களை தந்த மாடுகளை விட்டுவிட்டு.
                காற்றை மாசுபடுத்தும் இயந்திர வாகனத்திற்கு செலவு செய்து வருகிறோம் .
அழிந்து வருவது மாடுகளின் இனம் அல்ல! 
மனுடனின் மானம்!
                எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு உதவிய கரங்கள், இன்று யாசிக்கின்ற நிலைமைதான் ஏனோ?
சுய தொழில் செய்வதை விட்டு! 
சுக வாழ்வு கேட்ட தமிழன் !
                 இன்றைக்கு தன சுயமரியாதையை விட்டு சுயநலத்திற்காக வாழ்ந்து வருகின்றார்.
                  சுக துக்கங்களை விட்டு சுற்றத்தோடு இன்பமாய் வாழ்ந்த தமிழன். இன்று சுதந்திரம் இழந்து தனது குடும்பத்துடனும் எவ்வித இணைப்பும் இன்றி பிறரின் கட்டளைகளுக்கு செவிசாய்த்து தன்னை தானே தாழ்த்தி வருகிறான்.
                 ஒற்றை பிடி சோற்றில் பங்கு போட்ட தமிழர்,ஒன்றாக கூடிய காட்சியை தான் நம் இன்று காணாமல் விடுகிறோம்.
                 தமிழன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்த போதிலும் கூட தன்னாட்சியாக வாழ்ந்தான்। தன் வீட்டிற்கு தானே ராஜாவாக இருந்தான்.தன் தொழிலுக்கும் முதல்வனாய்,தனக்கு வேண்டிய பொருளை தானே தேடி, தன்னம்பிக்கையை கைவிடாதும் இருந்தான்.
                  முயற்சிகளுக்கு இடைவிடாது செயல்பட்டான் முயன்றதில் கிடைத்ததை மூலதனமாய் கொண்டான். முயற்சி பல மேலும் செய்து முதன்மை நிலையை தானாய் வென்று இருந்தான்.
தன்னாட்சியாய்! தனித்துவமாய் !
தனிமனிதனாய்! தமிழனாய்!
இன்றோ தன்னாட்சியை இழந்து தமது பெயரில் மட்டும் தமிழர் என்பதனை வைத்து வருகின்றனர்। நம் கொள்கையை பின்பற்றா நமக்கு தமிழன் என்ற பெயர் எதற்கு ?

புதன், 4 மார்ச், 2020

சங்க தமிழரே ! சரிக்கின்ற தமிழரே !

                     சங்க கால தமிழர்கள் சங்கம் வைத்து தமிழை வளர்த்து சரித்திரம் படைத்தனர். இன்றோ ஆங்காங்கே இருக்கும் பள்ளிக் கூடங்களில் கற்பிக்கப்படும்.  நமது தாய் மொழியான தமிழ் வழி கல்வியை நாமே ஏற்க மறுக்கின்றோம்.
                     வெளிநாட்டவர் இங்கு வந்து தமிழ் கற்று அதனை தங்கள் நாடுகளில்,அவரவர் மொழிகளில் மொழி பெயர்த்து கொண்டனர்.ஆனால், தமிழ் மண்ணில் பிறந்து வாழ்ந்து வாழ்ந்து வரும் தமிழர்களாகிய நாமே தமிழ் வழிக்கல்வியை வெறுக்கின்றனர்.
             வரலாற்றை புரட்டி பார்த்தால் சாதனைகள் எத்துணை சரித்திரங்கள் எத்துணை இருகின்றது நம் தமிழ் மண்ணில் விமானத்தை கண்டெடுக்கும் முன்னரே புராணக்கதைகளில்  பறவைகளை வாகனமாக கொண்டு விண்தொட்ட காட்சிகள் தான் மறக்குமா நமக்கு !
சங்கம் வைத்த தமிழனின் ,சரித்திரத்தை உடைக்கும் நிகழ் மனிதர்களே !
            சாதனைகள் பல புரிந்து தனிமொழியாய் விளங்கி , மொழிகளில் சிறந்தது நம் தமிழ் மொழி . சோதனைகள் பல கடந்து சரித்திரத்தை படைத்தது நம் தமிழ் குலம்.
                  தமிழரின் சிந்தைக்கு நிகரென ஏதேனும் உண்டா 
                       ஒழுக்க நெறிக்கு குருகுலம் ,ஓங்கி உயர்ந்த மலைகளின் இயற்கை வளம் , பண்பாடு போற்றும் தனிக்குலமே நமது தமிழரின் குலம்
பெரியோர் சொல்லுக்கு எதிர்ப்பில்லா இருந்த நமது சமூகம் இன்று பெற்றவர்களையே மறுத்து ,மறந்தும் வருகிறது.
                    வீரம் கோபமாய் மாறியது ,விவேகம் மூடமாய் மாறியது , எண்ணங்கள் எண்ணிக்கைகளில் அடங்கியது. இந்நிலை நீடித்தால் சரித்திரம் பேசிய தமிழர்களின் வாழ்வு ।நமது தலைமுறையோடு  முடிந்துவிடுமா।
எல்லோரும் வெளியூரில் வேலை செய்து அடிமைகளாய் வாழ்வதை காட்டிலும் .உன் ஊரில் நீ உனக்கு வேண்டியதை செய்து மகிழ்வோடு வாழ்வதே மேல்.
இதனை , அறியா இன்றைய தமிழ் சமூகம் சீர்குழைந்த நிலையை எய்தியுள்ளது.இந்நிலையை போக்க வேண்டும்.
தமிழன் வாழ்வதற்காக பிறந்தவனல்ல ஆள்வதற்காக பிறந்தவன் என்பதனை அனைவருமே உணர வேண்டும் !
இன்றளவில் ,பெரும்பாலான மக்கள் வாழ்க்கையை சரியான வழியில் நடத்துவதாக எண்ணி எந்தவிதமான சமுதாய இன்னல்களிலும் ஈடுபடாமல்। தமது சுய வாழ்வை வாழ்ந்துவருகின்றனர் .
முறைகேடுகளை தடுக்கும் முயற்சிகளை விட்டுவிட்டு ஒருவருடன் ஒருவர் எந்தவித தொடர்பும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர் .
சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று கேட்டு திரியும் தமிழர்களாகிய நாம் சட்டங்கள் நிறுவப்படாத காலத்தில் நமது சங்க தமிழர்கள் படைத்த சாதனைகளையும் ,போதனைகளையும் செவியேறா கதைகளாய் கொண்டுள்ளனர்.
இன்று உங்கள் செவிகளில் ஏற துடிக்கும் இதுபோன்ற சரித்திரம் சரியவில்லை .நாளை நீங்கள் படைக்க காத்திருக்கும், வரலாரே சரிந்து கொண்டு தான் இருக்கிறது .
நமது சரித்திரத்தை பாதுகாக்க வேண்டியது நம் கடமை ।நமது கடமையை நாம் செய்ய எந்த தயக்கமும் கொள்ளக் கூடாது.
துணிவுடன் செயல்பட்டு ,துன்பங்களை அகற்றி பிறருக்கு தூணாக நிற்பதே நமது வழக்கம் .அதனையே, நாமும் பின்பற்றுவோம் .
சரிவிலிருந்து மீண்டும் எழுவோம் ,தாய் மொழியையும் ,தாய் நாட்டையும் வரலாற்று பெட்டகங்களில் நிகழ்வாக பதிவிடாது ।நிலையான  சரித்திரமாக மாற்றுவோம் .
சங்க தமிழனுக்கே தலை வணங்குவோம் !

               தமிழ் நூல்களும், தமிழர் வாழ்வும்

                   உலகில் எங்கு  சென்று பெற்ற இயலாத வாழ்க்கை தத்துவ நெறிகளை தொகுத்து வழங்கிய சிறப்பு மிக்க செம்மொழி நம் தாய்மொழி.
                   ஐய்யன் வகுத்த திருக்குறளில் இல்லா நெறி அவரது ஈரடி குறளில் இல்லா வழி வாழ்க்கை இதில் மீதும் ஏதேனும் உண்டோ. இன்று நமது  சமூகத்தில் ஏற்படும் அத்துணை இல்லற பிரச்சனைகளுக்கும் நாம் இவ்வாறான நூல்களை தவிர்ப்பதேயாகும்.
                      பகவத்கீதையில் இருக்கும் வாழ்வியல் செயல்திட்ட தத்துவங்கள் ஜென்மங்கள் கடந்து செய்ய  வேண்டிய அறநெறிகளை வலியுறுத்துகிறது.
                      அன்றைய தமிழர்கள் அனைவருமே அதனை கற்று, அதன் நுட்பத்தினை ஏற்று வாழ்க்கையை இன்புற்று வாழ்ந்தனர்.
                      ஆனால், இன்றோ திரைப்படத்தின் மோகத்திற்கு ஆளாகி தமது வாழ்க்கையில் தோற்று அனைத்து விதமான தீமைகளிலும் எளிதில் ஈடுபட்டு வருந்துகின்றனர்.
                       குழந்தைகளை வளர்க்கும் வேளைகளில் தொலைநோக்கு சிந்தனைகள் இன்றி செயல்பட்டு அவர்களையும் வழிநடத்த தவறிவிட்டனர்.அந்தந்த சமயங்களுக்கு ஏற்றவாறு கட்டுப்பாட்டுடன் அனைத்து மக்களும் செயல்பட்டு மகிழ்வோடு வாழ எழுதிய நூல்களை படித்து பயன்பெறாது.
                        சாதி,சமயமாய் மாற்றி ஒரு சில சுயநலவாதிகளால் பொதுமக்களின் வாழ்வியல் நெறிகளை  சிதைத்துவிட்டனர்.  இந்நிலையினை போக்க வேண்டும்.
                        நம் முன்னோர்கள் எவ்வித வேறுபாடும் கருதாமல் சகோதரத்துவத்தினை வளர்த்துவிட்டனர்  இன்றோ உடன்பிறந்த சகோதர்களே வேற்றுமையுணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர்.
                         நாம்,நமது முன்னோர்கள் வாழ்ந்த வரலாற்றை அறியவும், வாழ்வியல் நெறிகளை கற்கவும் நமது சங்க நூல்களே சிறந்த வழியாகும்.
                        அண்டை நாடுகளில்  இருந்து வந்த பிற பொழுதுபோக்கு செயல்களை செய்து நேரத்தினை  செலவழிக்காமல் நல்ல நூல்களை கற்று பின் மற்றவர்களுக்கு கற்பித்து வாழ்வதே இன்பத்தினை தரும்.
                          இத்துணை தலைமுறைகள் ஈடேறாமல் பூண் கட்டுக்கதைகளை பேசி காதுகளை களைப்படைய செய்யாதீர்கள்.
                          வரலாறாய் மாறி வருங்காலம் போற்ற உரமாகுங்கள்!  
                     உயிர் பிரிந்தாலும் உயர்ந்து நிற்பாய்!
                     இவ்வுலகில் தமிழுடன், தமிழனாய் !


                           தமிழும்   தமிழரும்

                               உடலும், உயிருமாய் விளங்கிய தமிழ்மொழியும், தமிழரும் இன்றியமையா  புகழப்படைத்து இவ்வையத்தையே வியப்பில் ஆழ்த்தினர். உடலுக்கு உடையை வைத்தது போல் தமிழுக்கு வைத்தான் சங்க தமிழன்.
             ஆனால், இன்று உயிரான தன் மொழியின் பயன்பாட்டினை குறைப்பதனாலும், தன் தாய்மொழி கல்வியை வெறுப்பதனாலும் உயிரற்ற நடைபிணமாய் வாழ்கிறான் இன்றைய தமிழன்.
              தமிழ்பாடி நாடெல்லாம் திரிந்த அன்றைய தமிழுக்கு அமிர்தமாய் இருந்த நம் தாய்மொழி, இன்று வின்வெளிக்கு செல்லும் அளவிற்கு வளர்ச்சி பெற்று உயர்ந்து நிற்கும் நம் நாட்டு மக்களுக்கு நம் தாய்மொழி விதமாய் தோன்றுகிறது.
              முன்னேற்ற பாதையில் செல்வதை எண்ணி நாம் அனைவருமே நமக்கு சொந்தமான நாட்டை அந்நியனுக்கு கொடுத்துவிட்டு, நிபந்தனைகளை ஏற்று செயல்பட்டு வருகின்றோம்.
              தன்னுடைய தாய்மொழியை மதிக்காத இடத்தில் நின்று பொன், பொருள் தேடி நிற்பது தாயை விட்டு பிறரிடம் யாசிப்பதற்கு சமம்.வளம் மிகுந்த நாட்டின், செல்வங்கள் நிறைந்த நாட்டின் பிள்ளைகளாகிய நாம் மட்டும் யாசிக்கவில்லை.
               அத்துணை வளமும், பலமும் கொண்ட நம் தாய்திருநாட்டின் தரத்தினையும் குறைத்து வருகிறோம்.
                எத்துணை பெரிய துன்பத்திலும், நம் நாட்டை அந்நியரிடம் இருந்து காப்பாற்றி சுதந்திரம் பெற்ற அன்றைய தமிழன் தமிழ் மொழியை தன் உயிராய் ஏற்று, தமிழ்மொழியின் உடலாக செயல்பட்டான்.
                  தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக பாடுபட்டான்
பண்டையத் தமிழன்!
              கல்வி, தொழில், அறிவியல், வணிகம்,அரசியல் என நாட்டின் அத்தனை செயல்பாடுகளும் என்று நம் தாய்மொழியில் நடக்கின்றதோ அன்று தான் நம் நாடு முழுமையான சுதந்தர நாடாக தோன்றும்.
                   பிற மொழியை கற்பது தவறல்ல! தம் தாய்மொழியையும் பிறர் கற்கும் அளவிற்கு பரவச் செய்பவனே உண்மையான தமிழன்!
                    அன்றைய காலகட்டத்தில் தமிழன், தாய்மொழியில் நுணுக்கமாக பெற்ற அறிவும், ஆளுமையும் இன்னும் அத்துணை அண்டை மொழிகளை கற்றாலும் அதற்கு ஈடாகாது.

செம்மொழியாம் தமிழ்மொழி 

                   சொல்வளங்கள் மிஞ்சும் மொழியாம் செம்மொழி சொற்களுக்கே உரிய மொழியாம் நம் தமிழ்மொழி எம்மொழியும் பெறா இலக்கணம் பெற்ற பொன்மொழியம் தமிழ்மொழி.
                                 செல்வதை மிஞ்சும் மொழியாம் தமிழ்மொழி 
            செய்யுளின் ஆயுள் மொழியாம் செம்மொழி தமிழ்மொழி இறக்கும் வரை புதிய புதிய நடைகளும் இலக்கிய, இலக்கண வகைகளும் தோன்றி கொண்டே தான் இருக்கும்.
                              சேரனின்  ஆட்சிமொழியாம் செம்மொழி 
           முச்சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த சிறப்பு மிக்கமொழி தான் நம் தாய்மொழி . மதுரை மண்ணின் மைந்தனாய் தோன்றிய மொழியே நமது தமிழ்மொழி.
               மாறாத மதிப்பின் மொழியாம்  தமிழ்மொழி .இன்னும் எத்துணை ஆண்டுகள் கழிந்தாலும் துடிப்புடன் செயல்பட்டு விளங்கும் அறிய மொழி தான் நமது தாய்மொழி
                     அன்றும்,இன்றும்,என்றும் தனிமொழி நம் தமிழ்மொழி                     எம்மொழியின் உதவியும் இன்றி பேசுவதற்கு இயன்ற மொழிநடையை உடையது தமிழ்மொழி.
                உணர்வினை ஊட்டும் மொழியான நமது தமிழ் மொழி கேட்ட்கும் செவிகளுக்கு விருந்தாக , பேசும் வாய்ற்க்கு அமுதாக இருக்கின்றது
ஊக்கத்தின் உச்ச நிலையாம் தமிழ்மொழி குழந்தைகளுக்கு பாடும் தாலாட்டு முதலே ஊக்கத்தோடு  செயல்பட உதவும் உன்னதமான மொழியானது நம் தாய்மொழி.
                   விதைகளின் விருட்ச மொழியே தமிழ்மொழி
          விதைகளில் இருந்து விருட்சமாய் வளர்ந்த வீரமான மொழி நம் தமிழ்மொழி புல்வெளியில் பனித்துளியே செம்மொழி அழகிய நடைகளை உடைய மொழியே நம் தமிழ்மொழி
                 இருளின் சுடர் ஒளியே செம்மொழி 
             வாழ்க்கையில் திறன் கொண்டு தத்தளித்த பலருக்கு எளிய நடையில் பேச, படிக்கச் உதவி இருளில் இருந்து மீது ஒளி தந்து உதவிய நட்புணர்வுடையது நம் தமிழ்மொழி
             அன்னையின் அன்புமொழியே தமிழ்மொழி அய்யன் குறளில் மிதந்த ஆற்றல் மிக்க மொழியே செம்மொழி ।  வாழ்க்கை நெறியை தொகுத்து காட்டிய தொன்மையான மொழி
               அழியா  புகழில் ஆழ்ந்த மொழியே செம்மொழி 
              உலகின் உன்னத மொழியே தமிழ்மொழி ஊர் போற்றும் கோவில் மணியாய் விளங்கியது நம் தாய்மொழி 
                     கம்பர் கவியின் வாரியாம் செம்மொழி 
              கற்பதிலும்,கற்றவர் போற்றுவதிலும் என்றுமே செம்மொழியாம் நம் தமிழ்மொழி 

புதன், 26 பிப்ரவரி, 2020

பொய் மானிடா..... நீ எம் மண்ணிலா..... 

                தமிழ் தோன்றி பல நூறு ஆண்டுகள் ஆகிறது இன்றும் தனிமொழி என்ற சிறப்பினை இழக்காமல் இருக்கிறது.
                ஆனால் , தமிழர்களாகிய நாம் என்ன செய்கிறோம் . நம் தாய்மொழி கல்வியை கற்க விருப்பமில்லாமல் , பிறமொழி கல்வியை கற்றுவருகிறோம்.
                இதில் தான் நம் அடிமைத்தனம் வெளிப்படுகிறது . ஆங்கிலேயர் ஆண்ட காலம் கடந்து சுதந்திர நாடக மாறியது என்று நாம் குறிக்கொண்டிருக்கிறோம் .
                ஆனால் , இன்றும் அந்நிய மொழிக்கு நாம் அடிமைகளாகவே இருக்கிறோம் . அதனையே நம் சந்ததிக்கும் கொடுக்கிறோம் .
                உண்மையிலேயே நமக்கு நம் மண்மீது  பற்று இருந்திருந்தால் , நாம் நம் மொழியை  தான் முதன்மைப்படுத்தி  தாய்மொழி கல்வியை  உயர்த்தியிருக்க வேண்டும். உலகளவு பரவிய மொழியாய் மாற்றியிருக்க வேண்டும். 
                எம்மொழியிலும் இல்லா இலக்கணமும் , சொற்களும் உடையது ,  நம்மொழி .
                எளிதில் கற்க  , உணர வளம் கொண்ட நம் மொழி சிறப்புப்பெற செய்பவனே உண்மையான பற்றுடையோன் செயல் .
               நாம் அனைவருமே இன்றளவில் பொய் மானிடர்களாய் தான் நம் மண்ணில் இருக்கின்றோம் !
               தன் தாய்நாட்டிற்கும் , தாய்மொழிக்கும் வளர்ச்சியை  கொடுக்க செயல்பட்டு உழைப்பவனே என்றும் உண்மையான மானிடன் .
               நாம் எவ்வளவு தான் அறிவியல்  ரீதியாகவும் , பொருளாதாரரீதியாகவும்  உயர்ந்தாலும் நம் நாட்டையும் , மொழியையும் உயர்த்துவதில்லை .
               நீ விண்ணில்  நின்று பேசினாலும் ,விவாதமாய் பேசினாலும் உன் தாய் மொழிக்கு தலைவணங்கு .
       உன் மொழியில் பாடி நில் ! உலகமெங்கும் பரவ  செய் !
               உலகமெங்கும் தமிழர்கள் பல்வேறு இடங்களில் சென்று சாதனை புரிந்தால் அது சரித்திரமில்லை!
தமிழ் மொழியை ஆங்காங்கே பரப்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் . அதுவே , உண்மையான சரித்திரம் !
               அவர்களை அடிமையாக்கவிட்டாலும் , நம் மொழியின் அருமையையும் , ஆழமும் அறிய செய்ய வேண்டும் .
               அடிமை தன்மையின் வலி உணர்ந்த  தமிழனுக்கு மற்றவர்களை அடிமையாகும் எண்ணம் என்றும் இருக்காது. இருப்பினும் ,
தன் மொழியின் சிறப்பை இழக்க  தமிழனின் மணம் ஏற்காது !
               இவாறான ,தமிழின் பெருமையை உணராது பிறமொழி மோகம் கொண்டு திரிபவனே பொய் மானிடன் !
பொய் மானிடன் எம் மண்ணில் மாண்டாலும் பயனடையான் !

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

துடித்தெழு தமிழா 

                                          உயிரினமே நீ உயிர் இழந்து இருப்பதனை இன்னுமா அறியவில்லை. உலகில் உயிர்கலெல்லாம் உணர்ச்சியற்று கிடக்கின்றன.உறவுகள் கோடி இருப்பினும் உன்னதம் அறியா பிழைக்கின்றன .
               உடல் மண்ணுக்கில்லையாம் ! உயிர் உற்றோருக்கில்லையாம் !                                                உடன் பிறந்தோராயினும் வெவ்வேறு உருவமாம்.  உயிர் பிழைத்தால் போதும் உணர்வுகள் இல்லையாம் . உயிர்கள்கொள்ளையாம்,உள்ளமே இல்லையாம்
உணர்வுகள் தொல்லையாம்! உம்மின் உணர்ச்சிகளுக்கே எல்லையாம்।                              உருகிய பனிமலையே ஓடாத ஓடையானால் ! எரியும் எரிமலையே எரிந்து சம்பலானால், உச்சியில் ஊற்றுகளே  உக்கிரத்தில் வேர்த்து போனால். இந்த உணர்ச்சியிலா உயிரினம் ஈடேறுமா, இல்லை கடேறுமா . கவலைகள் இல்லையாம் நம் நாடு கலையிழந்தாலும் ! இங்கு அடிமைகள் கொள்ளையாம் நம் மண்ணில் விதை விளைந்தாலும் !
                       ஐவகை நிலங்களுக்கு தொப்புள் கொடி அறுத்து நம் தாய் நாடாம்!ஆனால், இன்று தொட்டிலில் அழும் குழந்தைக்கு தினைமாவு தீவனமாம்.தீர்த்தார் பசிபோகும் தீர்ந்தால் ருசிபோகும் .
                        தாய் பால்(வெள்ளை) மனம் மறந்ததென்ன.நம் பாண்டியர் குலநாட்டிலே ! ஆவின் துயர்த்தித்தான்(பசுவின் துன்பத்தினை போக்கினான் ) ,புறாவுக்கு ஈடறுத்தான் (புராவிற்கு நஷ்டஈடாக  தன் தசையை  கொடுத்தான் ) என்றல்லவா போற்றியது சங்க நூல்கள் .
                       தமிழர் , புலவர்களின்  ஓலைச்சுவடிகளை ஆற்றில் விட்டு , அந்நியர் அண்டை நாட்டவர்கள் அதனை பெற்று , ஐம்புலன்களை  அனைத்தையும் கற்று , அடிமைகளாய் நம்மை ஏற்று , அதிர்வில்லா அடைக்கலம் இட்டு .
                      நம் ஐம்பொறிகளை தீயில் சுட்டு, நடைபிணமாய் ஆக்கினரே அன்றாவது அறியவேண்டாமா ? அவர் சுட்ட புண் எரிச்சலை தாங்கிக்கொண்டோம் . நம் உணர்ச்சிகள் பொங்கி வழிவதனை நாம் எங்கே கண்டோம் .
                      சேரன்,சோழன் ,பாண்டியன் என்னும் மூவரை வைத்து முக்காலம் வென்று ! முற்றையும் அறிந்து நாம் என்னத்தை கையாண்டோம்.  நமது , எண்ணத்தையே நாம் கைதீண்டோம்.  இஸ்லாமியன் ஆயினும் என் தமையன்! கிருத்துவன் ஆயினும் என் மைத்துனன் என்றெல்லாம் ஊரறிய உமிழ் இறைத்தோம் !
                     இன்றோ , ஒரு படி நெல்லுக்காக உற்றானும் ஊரான் என்கிறோம் . பஞ்சம் பாடுகிறது நாம் அதில் தான் ஆடுகிறோம் . என்ன தான் நாம் நம் தாய் திருநாட்டில் வாழ்ந்தாலும் , தமிழ் மொழி  ஆயிந்தாலும், அறிகிறோமா நாம் ஆயிரத்தில் ஒன்றென ! மொழிகிறோமா என் தாய் திருநாடென! அன்று அவனாய் வாழ்ந்தான் ! இன்று இவனாய் வாழ்க்கிறான் ! நாளை எவனோ வாழ்வான் ! என்று தானே நாம் இன்னும்  ஏய்கிறோம்.
                   முக்காலத்தையும் வென்ற முந்தைய தமிழர்களே கேளுங்கள் ! முயற்சிகள் இன்றி முன்னேற்றம் கண்டதுண்டோ ? இகழ்ச்சிகள் இன்றி நாம் இன்னிமைகள் வென்றதுண்டோ ? இன்னா சொல்லையும்  இன்சொல்லாக ஏற்று ஈடுகொடுங்கள் ! இடைவிடாது ஈரம் விடுங்கள் ! " ஆற்றில் கடப்பதனால் பாறை கரைவதில்லை , ஆழம் இருப்பதனால் கடலும் வற்றவில்லை " கரையில் மிதக்கும் காகித கப்பலா ?
 கடலில் கிடக்கும் முத்தின் சிப்பிகளா ? முடிவெடுங்கள் ! - முடிவாய் எண்ண முயன்றால் கூட முட்டாள் என்ற சொற்பதம் அடைவாய் ,சரியாய் பாதையை தொடுத்தல் சொர்க பதம்  அடைவாய் .

திங்கள், 17 பிப்ரவரி, 2020

தலை புரண்ட தமிழகமே ! தத்தளிக்கும் தாயகமே !

தமிழா தரணியிலா ? தண்ணீரிலா ? நீ கல்லாகக் கரைந்தது?
மண்ணிலா ? மலையினிலா ? உன் மனம் கல்லாக உரைந்தது ?

உயிர்வாழ உணவிட்டான் தமிழன். பின்பு உறவிற்கே உணவிட்டான் அமிழ்தன். பின்பு உரையிட உணவிட்டான் எனில் விற்றான். பாசம் என்பது பணத்திற்கு அடிமையானது!. பந்தம் என்பது கடமைக்கென்றது!. நேசம் என்னும் சொல்லே நாசமாய்ப் போனது!. புது வாழ்வு என்ற பெயரில் பொதுவாழ்வையே மறந்தனர் தமிழர்.

சுயவாழ்வு என்ற பெயரில் நன்றாகச் சூரனையும் வென்றனர். சொர்க்கபதம் வேண்டில் சொற்பதம் வேண்டும் ஐயா நம் நாவில். இவை அனைத்தும் அற்புதம் தான் இன்று நம் வாழ்வில் .

அன்னையே, அய்யனே என்பவைகூட அந்நிய சொல்லால் பிணமே, சவமே என்றாயின. எனினும் அதில்தானே நாம் பெருமிதம் அடைகிறோம்.

பத்து மாதம் சுமந்தெடுத்த பச்சை முத்து அம்மா என்றழைத்தால், அதனைக் கேட்க ஆறளவு காதுகள் போதுமா!. அதனைக் காண ஆயிரம் கண்தான் ஆகிடுமா!.

அய்யன் என்பது ஆயிரமாயிரம் அடியெடுத்த இமயத்தின் இருதயமாய் விளங்கும் சிவனடியானை அல்லவா குறிக்கும்.

அம்மையப்பனின் முகமே  ஆட்கடவுள் எனத்தானே தன்னை ஈன்ற பெருமானை ஈசனுக்கு ஒப்பாக அழைத்தான் அன்றைய தமிழன்! அறிய வேண்டாமா? அறிந்துதான் திருந்த வேண்டாமா?
                    
தொட்டிலில் அழும் குழந்தைக்குத் தன் உறவு, சொந்தம், பந்தம், மாமன், மைத்துனன் பெயர் சொல்லி, இன்னார் உனக்கு இவ்வழி உறவினரப்பா! இவருக்கு நீ இதை செய்யம்மா! எனத் தன்னையறியா வயது முதலே தன் கடமையை அறியச்செய்து தாலேலோ பாடிய அன்றைய அன்னையை அன்னப்பறவைக்கு  உவமயக்கவா? அவளையே உரிமை கேட்கவா? இன்றைக்குத் தாலேலோ தாயகமே இங்கு தலைபுரண்டு கிடக்கிறதே!. வீட்டில் மூத்தவரோ, குடும்பத்தில் ஒருவரோ இறந்துவிட்டால்! அவரை, நினைவுகூறவும், அவரது சந்ததிகளை நிலை நிறுத்தவும்। இன்னது செய்து என்னை ஆளாக்கினீர்! இன்னதைச்செய்ய என்னை வேராக்கினீர் என்று பாடினர்.
                          
இன்றோ உயிர் வாழ்ந்தும் நடை பிணமாக இருக்கின்றனர். இல்லம் என்பது மட்டுமே இவர்களின் அடையாளமாய் இருக்கின்றது. இன்றையநிலை வயதானதா, தசை சோர்ந்ததா! எனக்கு மணமுடிந்ததா உடன் பணம் சேர்ந்ததா! இனி அன்னையில்லை, தந்தையில்லை அநாதை எனினும் அதில்தான் ஆனந்தம் இருப்பதாக நாம் அலைகிறோம்.
                          
அறியாத தவறினால் ஏற்படும் புரியாத வலிக்கு! மருந்தும் மனதிற்கு விருந்தும் அவர்களால் மட்டுமே தரஇயலும் என்பதனை இன்னோடியும் நாம் உணரவில்லை .
                          
அவர்கள் சொல்லிற்கு என்றும் செவிசாய்ந்ததுமில்லை! அந்நியர் சொல்லுக்கு என்றும் செவி ஓய்வதுமில்லை! அந்நியனாயினும் அவனுக்குத்தான் நான் அடிமை. என்னதான் நாம் ஒரு சுதந்திர மனிதராக இங்கு இருந்தாலும் .
                             
இப்பொழுதும், இன்னோடியும் அடிமைத்தனம் ஒன்றே நமது அங்கீகாரச் சின்னமாக இருக்கிறது. மாற்றம் தேவை! ஈன்றாலே தாய் அவளைத்தான் மறைப்பாயா? உன் ஈட்டியான தந்தையையே நீ சிதைப்பையா! தன்னை வளர்த்த தாய், தந்தைக்கே  கடமைப்பட்டேன் என்பனவே மாமனிதன்.

இச்சொல்லை ஏற்பவனே மனித குலத்தவன். சிந்தித்து செயல்பட்டால் சீர்திருத்தப் பள்ளி வேண்டுமா!. சிந்தையை உன்னித்தால் சிறை காட்டும் நிலை கூடுமா!. சொல்லால்பிறர் சொல்வதால்  விளங்காமையும் இவ்வாறான ஆயுத எழுத்தால் ஆணிபோல் ஆழ்மனதில் அச்சிடும் என்னும் நோக்கோடு செயல்பட்டேன்!  சிந்தித்தால் மந்தையில் உமக்கு எல்லை ஏது?

சிந்திப்பீர் செயல்படுவீர்! சிந்தைக்கே சலாமிடுவீர்! 

பவித்திரம்

 91.அன்புள்ள ஆசிரியருக்கு
அன்புள்ள ஆசிரியருக்கு
அன்பளிப்பு அளிப்பதற்கு
ஆசான்வில் தொடுப்பதற்கு
அமுதமதில் தெளிப்பதற்கு
அர்த்தங்களை உரைப்பதற்கு
ஆசான்களே கூடி வருகஎமக்கு
அறிவுப்பொருள் தந்து அருள்க

92.காலம்
வாழ்ந்த காலம்
கவிதையைப் போன்றது
வாழும் காலம்
கடிதமே ஆனது
வாழ்க்கையே ஓர்
கதைபோல் தோன்றுது

93.சேதி
பாடியது பாதி
பாடுவது மீதி
நாடே நம் வீதி
நன்மை தரும் நீதி
நட்பே  நம் ஜாதி
இதுவே ஏன் சேதி

94.மறுக்குமா
காண மறுக்குமா
நம் கண்கள்
கேட்க மறுக்குமா
நம் செவிகள்
பேச மறுக்குமா
நம் இதழ்கள்
என் மனம் மறுக்குமா
உன்னை நினைக்க

95.இல்லை
நீ ஒன்றும் அழகில்லை
அழகால் எதுவும் பயனில்லை
உன் அறிவிற்கோர் எல்லையில்லை
ஆனாலும் அதை நீ வாடவிடுவதில்லை
நீ அன்பிற்கு அணையிட
அது ஆற்றோர  அலையில்லை
உனக்கு அக்கடலினும் சுமை கொள்ளை
ஆனால் அதை நீ பொருட்படுத்தவில்லை
எனவே நீ வெற்றியை விட்டதில்லை
தோல்வியைத் தொட்டதில்லை

96.என் ஆசிரியை
என் செவிலித்தாயே
என்னை நீ ஜெவித்தாயே
நீர் ஓர் பெண் மகளின் தாயே
எம்முள் ஓர் பொன்மகளும் நீயே
உன் ஆற்றல்தான் உன் மேனி
அச்சமின்றி பணியாற்றலாம் வா நீ
உந்தன் சிரிப்பே  உனக்குச் சிறப்பு
உந்தன் உன்னதமேஇங்கு
தோன்றுது எனக்கு

97.உனக்கென நான்
பூ மணம்
உதிரியாகும் வரை நிலைக்கும்
என் மனம் உனக்காக
உயிர்சாயும் வரை நிலைக்கும்

98.அகிம்சையின் காந்தியடிகள்
அமைதி வழி சுதந்திரம் பெற்ற
ஆத்ம சாந்தியே
அறம்வழி வாழ்க்கை வாழ்ந்த
அமுத சுரபியே
அன்றாடம் அன்பை வளர்த்த
அய்யனும் நீயேஎமக்கு
ஆதரவாகத் தோள் தந்த
ஆற்றல் தலைவனே
அச்சம் இன்றிப் போராடி
அந்நியனை வென்றவனே
அகிம்சை நாயகனே
மகாத்மா காந்தியானவனே

99.உனைப் பிரிந்தும் நான் உன்னால் தானே
உயிர்துறக்க நினைத்தால்கூட
உனைப்பிரியும் நிலையென்றேன்
என் உயிராக நீ நின்றால்கூட
உனைப்பிரிந்து நான் நின்றேன்
விழி இமைக்காது காத்திருக்க என்
விழியின் எல்லை நான் மறக்கிறேன்
விழிக்கையிலும் இருளில் வாழ்ந்து
இங்கு நான் தாழ்கிறேன்
இமைக்கையிலும் ஒளியைக் கண்டு
பயந்து நான் வீழ்கிறேன்
என் உயிரே இன்னோடியும் உன்னை
நினைத்தே வாழ்கிறேன்
உன்னைக் கண்ட நொடியினிலே
சாகாவரம் பெற்றிருந்தேன்
இலையுதிர் காலத்திலும் 
இரையாமல்தான் நானிருந்தேன்
என் இதயம் உன்னால் இரையா
இறப்பும் இன்று இனிதென்றேன்
என்னை அறியா நான் அழுகையிலே
மழைத்துளி போலும் என்றிருந்தேன்
சுட்டெரிக்கும் வெய்யிலிலும் குளிரால்
நானும் உறைந்து நின்றேன்
சுலைப்பணிக் குன்றிலேறி  வெட்கை
உதறி நான் சென்றேன்
உன்னைக் காணும் வரம் கிடைத்தால்
ஏறி மலையை நான் அணைப்பேன்
ஆழ்கடலை அதில் தெளிப்பேன்
பாலை வனத்தினில் பயிரிடுவேன்
பசும்பொன் அதில் விளைப்பேன்
பரிசம் போட நீ வருக!!!! பாவை மனம் அமுதனுக!!!!
காத்திருப்பேன் மனமுருக!!!! என்னைக்
காண வந்து இக்கவி பெறுக!!!!
கவிதை ரசம் நீ பருக!!!! காட்சி வசம்தான் தருக!!!!

100.மாயமாய்
மேகத்தில் கருநீலமாய்
வானம்போல் தொலைதூரமாய்
நிலவைப்போல் வெண்மணமாய்
சூரியனைப்போல் வெகுவேகமாய்
பூமியைச் சுற்றி வந்தாயே வீரமாய் நான்
காற்றைப்போல் சில காலமாய் உன்னைத்
தொடர்கிறேனே உன் தேகமாய் இன்று
நான் உன்னில் தொலைந்தேனே
ஏதோ மாயமாய்