புதன், 4 மார்ச், 2020


               தமிழ் நூல்களும், தமிழர் வாழ்வும்

                   உலகில் எங்கு  சென்று பெற்ற இயலாத வாழ்க்கை தத்துவ நெறிகளை தொகுத்து வழங்கிய சிறப்பு மிக்க செம்மொழி நம் தாய்மொழி.
                   ஐய்யன் வகுத்த திருக்குறளில் இல்லா நெறி அவரது ஈரடி குறளில் இல்லா வழி வாழ்க்கை இதில் மீதும் ஏதேனும் உண்டோ. இன்று நமது  சமூகத்தில் ஏற்படும் அத்துணை இல்லற பிரச்சனைகளுக்கும் நாம் இவ்வாறான நூல்களை தவிர்ப்பதேயாகும்.
                      பகவத்கீதையில் இருக்கும் வாழ்வியல் செயல்திட்ட தத்துவங்கள் ஜென்மங்கள் கடந்து செய்ய  வேண்டிய அறநெறிகளை வலியுறுத்துகிறது.
                      அன்றைய தமிழர்கள் அனைவருமே அதனை கற்று, அதன் நுட்பத்தினை ஏற்று வாழ்க்கையை இன்புற்று வாழ்ந்தனர்.
                      ஆனால், இன்றோ திரைப்படத்தின் மோகத்திற்கு ஆளாகி தமது வாழ்க்கையில் தோற்று அனைத்து விதமான தீமைகளிலும் எளிதில் ஈடுபட்டு வருந்துகின்றனர்.
                       குழந்தைகளை வளர்க்கும் வேளைகளில் தொலைநோக்கு சிந்தனைகள் இன்றி செயல்பட்டு அவர்களையும் வழிநடத்த தவறிவிட்டனர்.அந்தந்த சமயங்களுக்கு ஏற்றவாறு கட்டுப்பாட்டுடன் அனைத்து மக்களும் செயல்பட்டு மகிழ்வோடு வாழ எழுதிய நூல்களை படித்து பயன்பெறாது.
                        சாதி,சமயமாய் மாற்றி ஒரு சில சுயநலவாதிகளால் பொதுமக்களின் வாழ்வியல் நெறிகளை  சிதைத்துவிட்டனர்.  இந்நிலையினை போக்க வேண்டும்.
                        நம் முன்னோர்கள் எவ்வித வேறுபாடும் கருதாமல் சகோதரத்துவத்தினை வளர்த்துவிட்டனர்  இன்றோ உடன்பிறந்த சகோதர்களே வேற்றுமையுணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர்.
                         நாம்,நமது முன்னோர்கள் வாழ்ந்த வரலாற்றை அறியவும், வாழ்வியல் நெறிகளை கற்கவும் நமது சங்க நூல்களே சிறந்த வழியாகும்.
                        அண்டை நாடுகளில்  இருந்து வந்த பிற பொழுதுபோக்கு செயல்களை செய்து நேரத்தினை  செலவழிக்காமல் நல்ல நூல்களை கற்று பின் மற்றவர்களுக்கு கற்பித்து வாழ்வதே இன்பத்தினை தரும்.
                          இத்துணை தலைமுறைகள் ஈடேறாமல் பூண் கட்டுக்கதைகளை பேசி காதுகளை களைப்படைய செய்யாதீர்கள்.
                          வரலாறாய் மாறி வருங்காலம் போற்ற உரமாகுங்கள்!  
                     உயிர் பிரிந்தாலும் உயர்ந்து நிற்பாய்!
                     இவ்வுலகில் தமிழுடன், தமிழனாய் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக