ஆங்கிலத் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆங்கிலத் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

விசுவாசம்


எந்த இடத்தில் நீ இருந்தாலும்
எவ்வுயரத்தில் நீ பறந்தாலும்
ஊக்குவித்வனையும் உதவியவனையும்
ஒரு போதும் மறக்காமல் நன்றியுடன் இரு
ஏன் எனில் நம்பிக்கையும் நன்றிவிஸ்வாசமே
உன் வெற்றியின் கரு.......

வியாழன், 13 செப்டம்பர், 2018

வாழ்க்கை


நம் வாழ்க்கை ஒரு கட்டுரை
நம் பிறப்பு அதற்கு ஒரு முன்னுரை
நாம் வாழ்கை அதற்கு ஒரு பொருளுரை
ஆனால் நம் இறப்பு அதற்கு ஒரு முடிவுரையாக இல்லாமல்
நம் வாழ்வின் முத்திரையாக இருக்க வேண்டும்

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

சில புகைப்படங்களுக்கு விரிவுரை தேவையில்லை

சில புகைப்படங்களுக்கு விரிவுரை தேவையில்லை

 நாம் அனைவரும் சரியான தொழில்நுட்பங்களை பயண்படுத்துகிறோமா என்பதைத் தாண்டி அதனை சரியான வகையில் பயண்படுத்துகிறோமா?என்பதில் அடங்கியுள்ளது புதிர். இளஞர்கள் அனைவருக்கு நாட்டை அடுத்த கட்டத்திற்க்கு எடுத்து செல்லும் பொறுப்பு உண்டு.ஆகையால், நாம் நமக்கு கிடைக்கப்பட்ட அனைத்தையும் சரியான வகையில் பயண்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்.

வரலாற்றில் மிக சோகமான வாக்கியங்கள் எவை?

                வரலாற்றில் மிக சோகமான வாக்கியங்கள் எவை?

``என் மகனை என்னால் திரும்ப காண இயலுமா?”
                -போருக்கு சென்ற தனது மகனை எதிர்பார்த்து தாய் கூறிய வார்த்தைகள்.

``இன்றிரவு நான் பட்டினியாகத்தான் உரங்க வேண்டும்”
                -ஒரு விவசாயியின் குமுரல்.


``எனது குடும்பம் இன்றும் பட்டினியாகதான் இருப்பர்”

                -ரிக்ஷா தள்ளுபவனிம் மனக்கனக்கு.
                    

ரஜினிகாந்தின் தந்தை(கல்யாணசுந்தம்)

                                ரஜினிகாந்தின் தந்தை(கல்யாணசுந்தம்)

நன்கொடை என்ற சொல்லிற்க்கு முழூ விலக்கம் கொடுத்தவர். தமிழகத்தில் மேலக்கருவெங்குலம் என்ற கிராமத்தில்  10 மே 1940இல் பிறந்தார். 30 வருடமாக நூலகராக பணியாற்றினார்.இவரது மொத்த சம்பளத்தையும் ஏழைகளுக்கு நன்கொடையாக கொடுத்தவர்.சில நேரங்களில் ஒணவகங்களில் சர்வராக பணியாற்றியும் இவரது தேவைகளை பூர்த்தி செய்து கொள்தும் உண்டு. இவருக்கு உதவித் தொகையாக வந்த 10இலட்சம் ரூ பணத்தையும் ஆதறவற்றவர்களுக்கே தந்தார். இது மட்டும் அல்ல இந்தியா-சீனா  போரின்போது, இவர் மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் பயிண்று வந்தார் அப்போது அவர் இந்திய பாதுகாப்புத் துறைக்கு உதவி செய்வதற்க்காக தன்னிடம் அப்பொழுது இறுந்த 65கிராம் தங்க சங்கிளியை அடமானம் வைத்து உதவினார்.

உலகிலேயே தன் வாழ்நாள் வருமானம் முழுவதையும் நன்கொடைக்காகவே செலவிட்ட முதல் மனிதர் இவர்தான்.
இவரது சேவையை பாராட்டி (UNO) இவரை 20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த மனிதருள் ஒருவராய் அறிவித்தது.

ஒரு அமெரிக்க நிறுவனமும் இவரை``மேன் ஆப் மில்லினம்” என்ற பரிசு கொடுத்து கௌரவப் படுத்தியது. மேலும் 30கோடி இவரது செயலை பாராட்டி இவருக்கு நன்கொடையாக கொடுத்தார் அதனையும் வழக்கம்போல் இல்லாதவர்களுக்கு கொடுத்து நன்கொடை என்ற சொல்லுக்கு இலக்கணம் வகுத்தார். இவரை தனது தந்தையாத அழகாக தத்தெடுத்துக்கொண்டு அவருடன் செயல்படுவதாக கூறுகின்றனர். இவர் திருமணமும் செய்து கொள்ளாமல் வாழ்நாள் முழுவதும் இந்த சமுதாயத்திற்க்கு தொண்டாற்றுவதே தன் கடமையாக கொண்டுள்ளார்.

மெதுவாக பயணப்படுவதில் எந்த தவரும் இல்லை

                                மெதுவாக பயணப்படுவதில் எந்த தவரும் இல்லை


பன்முகத்திறன் படைத்த தன்மையாளராக அனைவராலும், அனைத்து நேரங்களிலும் செயல்பட இயலது. ஆனால் நம்மிடம் என்ன குறை என்று விரைவில் கண்டறிந்து அதனை சீர்திருத்த நாள்தோறும் சிறு சிறு முயற்ச்சி செய்வதில் தவறில்லை. ``நாம் எவ்வளவு மெதுவாக செல்கிறோம் என்பது முக்கியமல்ல, நம் பாதையில் முன்னேறி செல்கிறோமா என்பதுதான் முக்கியம்.”

நெகிழவைக்கும் சிறுவனது எண்ணம் நமக்கு வேண்டும்

                நெகிழவைக்கும் சிறுவனது எண்ணம் நமக்கு வேண்டும்

இந்த சிறுவனின் நிலையை வலைதளங்களின் வழியாக அறிந்த ஒரு வெளியாட்டு பெண், பல நிறுவணங்களின் மூலம் நிதி திரட்டி இந்தியாவின் சிறந்த முதுகு தண்டு நிபுணர் டாக்டர். இராஜகோபாலன் கிருஷ்னன் என்பவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிறுவன் பட்டிப்பிலும் மிகுந்த ஆர்வம் உடையவனாக இருந்தது இந்த புகைப்படத்தில் தென்படுகிறது.


தன் 13வயதில் சில நுரையீரல் காரணமாக அந்த சிறுவன் மன்னைவிட்டு நீங்கினான்.
ஆனால் அவனது பெற்றோற் அவனை குறிப்பிடுகையில், தான் வாழ்ந்த காலத்தில் அவன் எதை பற்றியும் கவலை படாமல், எந்த குறையும் கூறாமல், மிகவும் திருப்தியுடனும் சந்தோஷத்துடனும், உற்ச்சாகத்துடனும் வாழ்ந்தான் என்றனர். நாம் நமது வாழ்நாளில் எவ்வளவோ காரணங்கள் கூறி எத்தனையோ காரியங்களை தள்ளி போடுகிறோம், ஆனால் தான் வாழ்ந்த அந்த காலங்களில் மற்றவர்க்கு அவர் கற்றுத்தந்த பாடம் மிகவும் பெரிது.

காலம்

நமது கடந்த காலத்தை திரும்ப வாங்கும் அளவிற்க்கு யாரும் பணக்காரர்கள் இல்லை.                      -ஆஸ்கர் வைல்ட்


எதுவுமே நமக்கு அருகாமையில் இருக்கும்போது அதன் அருமை தெரியாது. அதே போன்று தான் நாம் செலவிடும்போதும், வீணலிக்கும்போதும் நமக்கு அதன் அருமை தெரியாது, எப்பொழுது நாம் நமது வாழ்வின் ஒரு கட்டத்தில் நின்று இதுவரை எத்துனை செயல்களை சாதித்துள்ளோம்?எவர் எவர்க்கெல்லம் நன்மை செய்துள்ளோம்?நமக்காகவோ? நம் மொழிக்காகவோ?நம்மை சுற்றி வாழும் எளியவர்க்கோ என்றாவது பயண்பெரும் வகையில் எதாவது செய்ததுண்டா என்று யோசிக்கும் போது காலத்தின் அருமை நமக்கு புரியும்.
எவன் ஒருவன் காலத்தை சரியாக பயண்படுத்துகிறானோ? அவனே வாழ்வில் வெற்றி பெருவான்.            -முனைவர்.இரா.குணசீலண்


தமிழ்நாட்டை சேர்ந்த உலக பிரபலமான ஆலுமைகளில் சிலர் உங்கள் பார்வைக்காக;

தமிழ்நாட்டை சேர்ந்த உலக பிரபலமான ஆலுமைகளில் சிலர் உங்கள் பார்வைக்காக;
கிரிகெட்டில் பல  கொடி மக்களின் மனதை பந்தாடிய வீரர்களான முரளி விஜய், ரவி அஷ்வின், தினேஷ் கார்த்திக், லக்ஷ்மிபதி பாலஜி மற்றும் கிருஷ் ஸ்ரீகாந்.


விஸ்வனாதன் ஆனந்தன். சதுரங்கத்தில் தன் திறமையால் இந்த உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியவர்.


மகேஷ் பூபதி; இவர் வரிப்பந்தில் உலகறிந்த பிரபலமாவார்.


சர்.சி.வி. இராமான்; தனது ``இராமன் இஃபேக்ட்(விளைவு) என்ற கண்டுபிடிப்பிற்க்கு இயற்பியலில் நோபில் பரிசு பெற்றவர்.


சுந்தர் பிச்சை; உலகெங்கும் பயண்படுத்தும் கூகுள் தேடுகருவியின் நிறுவாகி.


இந்திரா நோயி; பேப்ஸி மற்றும் கோக் நிறுவணத்தின் நிறுவணர் ஒரு சென்னை பெண்மனி மேலும் இவர் ICC நிறுவணத்தின் முதல் பெண் தனிமுறையான அவைத்தலைவராவார்.


சிவ ஜயாதுரை; நாம் இன்று அலுவலகம் சார்ந்து தகவல்தொடர்புக்கு பயண்படுத்தும் இ-மேயிலை கண்டறிந்தவர்.


சிவ் நாடார்; HCL நிறுவணத்தின் நிறுவனர் மற்றும் தலையவராவார்.



வினு சீனிவாசன்; சுந்தரம் கிலேடன் நிறுவணம் மற்றும் TVS (இரு சக்கர வாகணங்கள் தயாரிப்பில் இந்தியாவின் முன்றாம் பெரும் நிறுவனம்) அமைப்பின் தலைவராவார்.

ட்ரூடோ அவர்களுக்கும் தெரேசா மே அவர்களுக்கும் தமிழர்களின் நெஞ்சார்ந்த நன்றி

ட்ரூடோ அவர்களுக்கும் தெரேசா மே அவர்களுக்கும் தமிழர்களின் நெஞ்சார்ந்த நன்றி


எந்த மாதம் பிரதமர் மோடி பொங்கல் தினத்திற்க்கி விடுமுறை அவசியம் இல்லை என்று அறிவித்தாறோ, அதே தினம் கெனடாவின் பிரசிடென்ட் ட்ரூடோ ஜனவரி மாதத்தை ``பாரம்பரிய மாதமாக”(heritage)அறிவித்தார். அது மட்டுமின்றி அழகு தமிழில் ஒரு உரையும் கொடுத்தார்.தமிழ் மக்களுக்கு அன்று பொங்கல் தின நல்வாழ்த்துக்களும் கூறினார். 

சிறிய மீசை கொண்ட இரு பெரும் மனிதர்கள்

 சிறிய மீசை கொண்ட இரு பெரும் மனிதர்கள்


முதலில் அந்த படத்தில் காணப்படுபவர் அடால்ப் ஹிட்லர் இந்த உலகையே தன் அதிகாரத்துக்கு கீழ் கொண்டுவர விரும்பியவர். இன்னொறுவரான சார்லி சாப்லின் இந்த உலகையே தனது நகைச்சுவை திறனால் கவற விரும்பியவர். ஒரே முக பாவனை கொண்ட இரு வித்தியாசமான ஆளுமைகள். 

காரணங்களும், போலி சாக்குகளும் முட்டால்களுக்கே!

                   காரணங்களும், போலி சாக்குகளும் முட்டால்களுக்கே!

நமக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையானது மிகவும் அழகானது. அதன் அவசியம் எப்பொழுதும் ஒரு கரையில் நின்று பார்க்கும்போது தெரியாது. அத்தகையது அமையாது வாழ போராடிக்கொண்டு இருப்பவர்க்கே அதன் அத்தியாவசியம் புரியும்.குறை கூறவும், இல்லாததை பற்றி கவலை படுவதும், அடுத்தவரை பற்றி பொறாமை கொள்வதும், ஏமாற்றுத்தனமும், நயவஞ்சகமும், சுறன்டல்களும், கொண்ட இந்த உலகில் இன்னும் சிலர் தங்களை மாற்றிக்கொண்டு, தங்களை சுற்றி இருப்பவர்களையும் மாற்ற முயற்ச்சிக்கின்றனர்.


எப்பொழுதும் நம்மை நாம் நம்ப வேண்டும்

 எப்பொழுதும் நம்மை நாம் நம்ப வேண்டும்
(அந்த பறவையின் நம்பிக்கை அதன் இறகில் அந்த கிளையில் இல்ல)

வாழ்வில் பல சூழல்களில் நாம் நமது இலச்சியத்தை அடைய இயலுமா? இயலாதா?என்று எண்ணி வருந்துவது உண்டு. நம்மால் இந்த இலக்கை அடைய இயலுமா? நமக்கு அத்தகைய திறமை இருக்கிறதா? உலகில் நம்மை விட திறமை படைத்தவர்கள் பலர் இருக்கின்றனரே? நமது இந்த குடும்ப சூழலில் நம்மால் இதனை சாத்தியப்படுத்த இயலுமா?என்று பல கோள்விகளோடே பதிலை கண்டுகொண்டு நம்மை நாம் திருத்தாமல் இருக்கிறோம். நாம் எப்போழுது நம்மீது நம்பிக்கை கொண்டு முழுமையாக நம்மை ஒரு செயலில் ஈடுபடுத்துகிறோமோ ! அப்போழுதுதான் நமக்கு வெற்றி கிடைக்கும். 

உறுத்தும் பொன்மொழிகளின் தமிழாக்கம்

 உறுத்தும் பொன்மொழிகளின் தமிழாக்கம்
-உங்கள் நேரத்தை உபயோகிப்பீர் இல்லை உதாசனப் படுத்துவீர்.


-உங்கள் எதிர்காலமானது நீங்கள் இன்று என்ன செய்கிறீர்கள் என்பதில் உருவாகிறது.


-வழக்கமாக என்று அவர்கள் அழைக்கும் வகையில் உருவாதலை நான் மறுக்கிறேன்.(எதிலும் வித்தியாசம் வேண்டும்)


-கற்றுக்கொள்வதை என்றும் நிறுத்தக் கூடாது ஏனெனில் வாழ்க்கை நமக்கு என்றும் கற்ப்பிப்பதை நிறுத்துவது இல்லை.


-வெற்றியாளர்கள் என்றும் வெறும் சாக்குகளை உறுவாக்குவதில்லை.


-பாதுகாப்பான தோர்வுகளை அமைப்பவர் எவரும் வாழ்வில் வளருவதில்லை.


-உங்களை வெறுப்பவர்களை நீங்கள் மதிக்க வேண்டும் ஏனெனில் உங்களை அவர்கள் தான் சிறந்தவர் என்று எண்ணுபவர்கள்.

இரு கைகளின்றி அழகிய ஓவியங்களை வரையும் அழகிய பெண்

இரு கைகளின்றி அழகிய ஓவியங்களை வரையும் அழகிய பெண்


தனது இரு கைகளை இழந்து கால்களை மட்டுமே கொண்டு ஓவியங்களை வரைந்து வரும் இவரது பெயர் ``சுவப்னா அகஸ்டின்”. கேரள மாநிலத்தில் போத்தனிக்காட் என்ற இடத்தில் பிறந்த இவர் பள்ளி காலம் முதலே வரைவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார். சிறு வயது முதலே இவரது ஆசிரியர்களும் பெற்றோர்களும் இவருக்கு பக்கபலமாய் இருந்தனர். இவரது ஓவியங்கள் பல நாளிதள்களிலும், வார இதல்களிளும்,இளஞர் பத்திரிக்கைகளிலும் வெளிவந்தன. 

இந்தியாவின் முதல் பெண் போர் விம்மானிகள்

                                இந்தியாவின் முதல் பெண் போர் விம்மானிகள்

ஆவனி சத்ருதேவி, பாவனா காந்த் மற்றும் மோகனா சிங்.

இது போன்ற உண்மையான பெண்ணுரிமை எழுச்சிகளும் நமது நாட்டில் நடந்து கொண்டு தான் வருகின்றன. எனினும் பலதரப்பட்ட காரணங்களால் பல நேரங்களில் மக்களிடமிருந்து சாதணை புரிந்தும் அதனை பார்த்து பாராட்ட நம் மக்களுக்கு நேரம் இல்லாமல் போய்விடுகிறது. எது அவசியம் எதை நோக்கி நாம் பயணப்பட்டால் நமக்கும் நம்மை சுற்றி உள்ளவற்க்கும் நன்மை பிறக்கும் என்று நமக்கு தெளிவான சிந்தனை வேண்டும். நமது இலக்கு நமக்கு மட்டும் பயண்தரக்கூடியனவாக இருக்கக் கூடாது, அதனை பார்த்து பிறர் சிந்தித்து செயல்படும் வகையில்  அமைய வேண்டும். நாம் பிறந்ததற்க்காக நாடும் நம் வீடும் நம்மை போற்றும் வகையில் செயல்படுபவரது வாழ்க்கையையே வரலாறு பேசும்.

இந்திய பாதுகப்புத் துறையிடம் உள்ள சில சிறிய வித்தியாசங்கள்

 இந்திய பாதுகப்புத் துறையிடம் உள்ள சில சிறிய வித்தியாசங்கள்
இந்திய இரானுவம் – முழுமையாக உள்ளங் கை நமக்கு முன்னால் நிற்ப்பவரை நோக்கி காட்டுதல்.


இந்திய கப்பற் படை – முழுமையாக நமக்கு கீழுள்ள நிலத்தை நோக்கி காட்டுதல்.



இந்திய விமானப்படை – சரியாக 45 டிகிரி கோணத்தில் தரையை பார்த்த அளவிற்க்கு சல்யூட் செய்வர்.

இந்த அறிவாலியும் நமது நாட்டில் தான் வாழ்ந்தர்.

 இந்த அறிவாலியும் நமது நாட்டில் தான் வாழ்ந்தர்.



இவர் ஒரு ஐ.எ.எஸ், ஐ.பி.எஸ்., மருத்துவர், வழக்கறிஞர், சமஸ்கிறுதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், புகைப்படப்பாலர், நடிகர், வானொலி இயக்குனர், மிக இளமையான எம்.எல்.ஏ இருபது பட்டங்களும், 28 தங்கப்பதக்கங்களும், 25,000 புத்தகங்களையும் தனது வீட்டு நுலகத்தில் கொண்ட மாபெறும் அறிஞர். ஆனால், துரசஷ்டவசமாக தனது 49ஆம் வயதில் ஒரு நான் விபத்தில் இவர் மரணமடைந்தார்.

இக்கால உண்மை

                                                  இக்கால உண்மை


நாம் நம்மை சுற்றி பல விதத்தில் நவீன வளர்ச்சி பெற்று வருகிறோம். காலை எழுந்து இரவு தூங்கச் செல்வதற்க்கு முன் வரை நாம் எத்தணையோ நவீண தொழில்நுட்ப்பத்துடன் செயல்பட்டு வருகிறோம்.அவை அனைத்தும் இருந்தும் நோய்களின் எண்ணிக்கைகள் என்னவோ அதிகரித்துக்கொண்டுதான் வருகின்றன. எத்தணை ஆயிரம் பொருட்களையும், புதிய புதிய கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடித்துதான் வருகிறோம் ஆனால், அவை நமக்கு எவ்வுளவு தூரம் உண்மையிலேயே பயணுள்ளவையாக இருக்கிறது என்பதை எண்ணாமல், நம்மை சுற்றி இருக்கும் அன்றாட இயற்க்கை மருந்துகளை மறந்து, நம்மை நோமே தொலைத்து விட்டோம்.

அப்பா என்ற சொல் ஒரு அழகிய கலையாக உறுவாகிறது

                     அப்பா என்ற சொல் ஒரு அழகிய கலையாக உறுவாகிறது