ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

புதுமைப் பெண்

மலர்களில் இதழ்களைப் போல
ஒவ்வொரு பருவ நிலையிலும்
 உதிர்ந்தது என் கனவு,
சோர்வடைந்த பெண்ணாய்          திகழவில்லை
வீழ்ச்சியும் எழுச்சியும் கொண்ட
பெண்மையின் நற்குணத்தின் நறுமணத்தோடு திகழும்
பாரதியின் புதுமைப் பெண்                                    

சனி, 29 செப்டம்பர், 2018

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

நீ யார்

குழந்தையாக பிறந்தேன்
சிறுமியாக  வளர்ந்தேன்
மாணவியாக பயனிக்கிறேன்
ஒரு சிறந்த செய்தியாளராக
உருவெடுத்து பெண் என
பெருமிதம் கொள்ள .....
இதுவே நான் !!!

சூழ்நிலைக் கைதிகள்


சூழ்நிலையில் சுயநினைவை          இழந்த மானிடப் பிறவியே கட்டாயத்தின் அடிப்படையில்  
உன்னை தாங்கிக் கொண்டிருக்கும்
பூமித்தாய் தன் அகங்காரத்தில்
உன்னை எரிக்க முயன்றால்
மண்ணில் வந்த நீ மண்ணாகி விடுவாய்.....உன்னால் அவளை போற்ற இயலவில்லை என்றாலும் அவளை அழிக்க முயலாதே
அதன் பின்விளைவு உன் மரணம்!
                     

வன்கொடுமை

விதையாய் விதைத்து
மரமாய் வளர்ந்தது
பெண் விடுதலை அல்ல
விதைத்து மரமாய் வளர்ந்தது
பெண் வன்கொடுமை
நாகரிகத்தோடு வளர்ந்த சமூகம்
ஏன் நாகரிகம் இழந்து
பெண்ணை தீமை என்னும்
தீயால் துன்புறு செய்கிறது
கேள்விகளுக்கு விடை இன்றி
தவிக்கும் பெண்ணினம்
                     
               

ULTIMATE THING

Behind a success there is
     A sweat;
Behind a sweat there is
     A hard work;
Behind a hard work there is
     A pain;
Behind a pain there is
     An offend;
So never care about anything,
     Try till the last breath;
Then you will be an ultimate.

உனக்காக நான்

சூரியனாக நீ இருந்தால் 
உன்னை சுற்றி வரும் பூமியாகநான் வருவேன்
நிலவாக நீ இருந்தால் 
ன்னை ரசிக்கும்
இரவாக நான் வருவேன் 
நிலமாக நீ இருந்தால் 
உன்னை நனைக்கும் மழையாக நான் வருவேன் 
கரையாக நீ இருந்தால் 
ன்னை தொடும் 
அலையாக நான் வருவேன் கவலையாக நீ இருந்தால் அனைக்கும் காற்றாக நான்வருவேன்
சோர்வுற்று நீ இருந்தால் 
உன்னை தாங்கும் தோள் கொண்டு நான் வருவேன் இதயமாக நீ இருந்தால் 
உன்னுள் இசையாக நான் வருவேன் 
தனியாக நீ இருந்தால் 
உனக்கு துணையாக நான் வருவேன் 

கோ.சௌந்தர்யா 
கணினி பயன்பாட்டியல்

பொன்னியின் செல்வன்

ஆசிரியர் குறிப்பு:
கல்கி கிருஷ்ணமூர்த்தி,
 ராமசாமி ஐயர் கிருஷ்ணமூர்த்தி என்பதே இவரது இயற்பெயராகும். கல்கி என்பது விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்தில் இருந்து தன் பெயரை மாற்றம் செய்து கொண்டார். இவரது காலம் 1899-1954. இவர் ஒரு பத்திரிகையாளர், கவிஞர், எழுத்தாளர், விமர்சகர். இவர் 120 சிறுகதைகளையும், ஐந்து புதினங்களையும், மூன்று வரலாற்று காதல் காவியங்களையும் இயற்றியுள்ளார். கல்கி அவர்கள் மூன்று முறை சிங்கள தீவுகளுக்கு சென்று இக்கதையின் அமைப்புகளை எழுதியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு மேல் இக்கதைகளை முடிக்க காலமாயிற்று. இக்கதை 1951-1954 கல்கி நாள் இதழில் வெளிவந்தது. பின் மக்களிடம் அதிக அளவில் வரவேற்பு பெற்றதால் இதன் ஆசிரியர் இக்கதையினை புதினமாக வெளியிட்டார். அன்று முதல் இன்றுவரை அனைவரையும் ஈர்த்து வருகிறது இக்கதை.
கதையின் களம்:

"கடலைச் சுருக்கி கட்டுரையாக்க முடியாது, இருப்பினும் இது என் சிறிய முயற்சியே". பொன்னியின் செல்வன், பொன்னி இச்சொல் காவேரி நதியினை குறிக்கிறது. ஒவ்வொரு நாகரிகமும் ஒரு நதிக்கரையில் பிறக்கிறது."தஞ்சை மாநகரின் நாகரிகமும் சோழநாட்டின் பண்பாடும் பிறந்த நதிக்கரையை காவேரி". சோழநாட்டின் மக்கள் வழிபடும் கடவுளும் தாயும் அக்கறையை. பொன்னியின் செல்வன் இக்கதையில் பொன்னியின் செல்வனாக அதாவது காவேரி நதிக்கரையில் செல்வனாக இராஜராஜ சோழன் வளம் வருகிறான்.
இக்கதை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நூல் பக்கங்களை கொண்டது. அக்கால மன்னனின் பெருமைகளையும் ஆட்சித் திறன்களையும் மக்களின் வாழ்வியல் நெறிகளையும் கூறுகிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இராஜராஜ சோழனின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கியமான ஆறு மாத காலத்தில் கதையே இக்கதையின் கருவாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தஞ்சை மாநகர்

சுந்தர சோழன் மன்னனால் ஆட்சி செய்யப்பட்டது. தஞ்சை மாநகரின் அரசன் தீராத நோயினால் பாதிக்கப்பட்டான். அப்பொழுது பதவிக்காக ஒரு குழப்பம் ஏற்பட்டது. அரசனின் பங்காளி முறையில் தம்பியான
மதுராந்தகச் சோழன் பதவிக்காக ஆசைப்பட்டு அந்நாட்டு அமைச்சர்களின் உதவியுடன் மன்னனை அழிக்க திட்டமிடுகிறான். சோழனுக்கோ மூன்று குழந்தைகள். முதலாவது மகனின் பெயர்
ஆதித்திய கரிகாலன், இரண்டாம் மகளின் பெயர்
குந்தவை, மூன்றாவது மகனின் பெயர்
ராஜராஜ சோழன், இவரது இயற்பெயர் அருள்மொழிவர்மன் . இருப்பினும் இவர் மக்களால் இராஜராஜ சோழன் என்று அழைக்கப்பட்டார். சுந்தர சோழ மகாராஜா தனது முதலாவது மகன் ஆதித்திய கரிகாலனை ஆட்சிக்கு வர சொல்லி அறிவுரை அழைத்தார். இருப்பினும் ஆதித்திய கரிகாலனுக்கு அதில் விருப்பம் இல்லை. சோழ நாடு பரந்து விரிந்தவை இன்றைய ஆந்திரம்,கர்நாடகம்,கேரளா தமிழ்நாடு,சிங்களம் இவையெல்லாம் சோழநாட்டு மன்னர்களால் தஞ்சையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்யப்பட்ட நகரங்களாகும். நாட்டின் வடபகுதி ஆதித்ய கரிகாலனால் ஆட்சி செய்யப்பட்டது. நாட்டின் மையப்பகுதி குந்தவை மற்றும் அவளின் தந்தையான சுந்தர சோழனால் ஆட்சி செய்யப்பட்டது. நாட்டின் தென்பகுதி அருள்மொழி வர்மனால் ஆட்சி செய்யப்பட்டது. ஆதித்திய கரிகாலன் மிகவும் கோபம் குணம் கொண்டவன். ஆனாலும் அவர் மனம் தூய்மையானது. இவர் சோழ நாட்டின் படைத்தளபதியாக பணியாற்றினார். குந்தவை தன் அறிவுத் திறனால் நாட்டின் மையப்பகுதியை வழிநடத்தினார். அருள்மொழி வர்மன் தென் சோழநாட்டை ஆட்சி புரிந்ததும் இல்லாமல் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க சிங்கள தீவுகள் மீது போர் தொடுத்து சோழர்களின் வீரத்தினை உலகிற்கே எடுத்துக்காட்டினார். ஆதித்திய கரிகாலனுக்கு மதுரை மாநகரை சேர்ந்த வீரபாண்டியன் உடன் பகை. வீரபாண்டியனை துரத்திக்கொண்டு சென்றார் ஆதித்திய கரிகாலன். வீரபாண்டியனும் ஒரு இடத்தை சென்றடைந்தான் அங்கு ஒரு பெண் இருந்தாள்.
அவள் பெயரோ நந்தினி, இவள் பாண்டியனின் காதலி. ஆதித்திய கரிகாலன் வீரபாண்டியனை கொள்ள வந்துள்ளார் என்பதை உணர்ந்த நந்தினி ஆதித்திய கரிகாலனிடம் வீரபாண்டியனுக்காக உயிர்ப்பிச்சை  வேண்டினாள். ஆதித்திய கரிகாலனுக்கு நந்தினி மீது ஒரு காதல் ஏற்பட்டது. இருப்பினும் பகையின் காரணமாக வீரபாண்டியனை கொலை செய்கிறார், ஆதித்திய கரிகாலன். அன்றே சபதம் எடுக்கிறாள் நந்தினி ஆதித்திய கரிகாலனை கொலை செய்ய வேண்டும் என்று. சோழநாட்டின் அரச குடும்பத்தில் ஒருத்தியாக மாற வேண்டும் என்று அரச பதவியில் இருக்கும் ஒருவரை திருமணம் செய்கிறாள் நந்தினி. இந்த அனைத்து உண்மைகளையும் அறிந்தார் ஆதித்திய கரிகாலனின் உயிர்த்தோழன்

வந்தியத்தேவன். தன் தோழனிடம் அவருக்கும், அவரின் தந்தைக்கும் ஏற்பட இருக்கும் ஆபத்தினை தெரிவிக்கிறார். ஆதித்திய கரிகாலன் வந்தியத்தேவனிடம் இரு ஓலைச்சுவடிகளை கொடுத்து தன் தங்கையிடமும் தந்தையாரிடமும் அளிக்குமாறு கூறுகிறார். வந்தியத்தேவனும் ஆதித்திய கரிகாலனின் வேண்டுகோளுக்கு இணங்க தஞ்சை மாநகரை நோக்கி பயணம் செய்ய தொடங்கினார்.
வந்தியத்தேவன் செல்லும் வழியில் சோழநாட்டின் தாயான பொன்னி நதி கரை எப்படி எல்லாம் இருக்கிறது என்பதெல்லாம் கண்டு கழித்தும் ,மக்கள் வாழ்க்கையில் எப்படி நெறிகளோடு வாழ்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டும். சோழ சாம்ராஜ்யத்தின் பெருமைகளையும் அழகிய அமைப்புகளையும் கண்டு வியந்தும் சென்றடைகிறார் வந்தியத்தேவன். ஆதித்திய கரிகாலனை நந்தினி தனிமையில் சந்திக்க அழைப்பு விடுகிறாள். ஆதித்திய கரிகாலனும் நந்தினியின் அழைப்பை ஏற்று அவளை காண சென்றான். ஆதித்திய கரிகாலனுக்கு நந்தினியின் திட்டம் தெரிந்தும் அவர் சென்றார். அதற்கு காரணம் அவர் நந்தினியை காதலித்ததே ஆகும். அன்று முதல் இன்றுவரை ஆதித்திய கரிகாலனின் மரணம் ஒரு மர்மமே. அவர் யாரால் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. நந்தினியா அல்லது பாண்டிய மன்னர்களால் என்பது புதிரே. மறுபக்கம் வந்தியதேவன் சுந்தர சோழனிடமும் குந்தவை இடமும் ஆதித்திய கரிகாலன் அளித்த சுவடியை ஒப்படைத்தான்.

குந்தவை மீது காதல் கொள்கிறான் வந்தியத்தேவன். குந்தவைக்கும் வந்தியதேவன் மீது விருப்பம் ஏற்பட்டது. ஆனால் அவ்விருவரும் சோழநாட்டை பகைவர்களிடமிருந்து பாதுகாக்க எண்ணினர். குந்தவை வந்தியத்தேவனிடம் தன் தம்பியான அருள்மொழிவர்மன் சிங்க தீவுகளில் இருப்பதை கூறி அவரிடம் நாட்டின் நிலைமையும் தந்தைக்கு ஏற்பட இருக்கும் அபாயங்களையும் கூறுமாறு அவரை சிங்கள தீவுகளை நோக்கி பயணிக்க சொன்னாள், குந்தவை. அருள்மொழிவர்மனும் எவருக்கும் தீங்கு செய்ய எண்ணாதவர், அனைவருடனும் நட்புடன் பழகும் ஆற்றல் கொண்டவர். போர்த்திறன், கலைத்திறன் ஆகியவற்றை மிகவும் திறனை கொண்டவர். வந்தியத்தேவன் கொண்டு சென்ற செய்தி அருள்மொழிவர்மனை வடக்கு நோக்கி பயணம் செய்ய தூண்டியது. கோபம், பொறாமை இவையெல்லாம் சிறிதும் அருள் மொழி வர்மன் இடம் இல்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர சோழன் தஞ்சையின் அரசன் காலமானார். இதனால் நாட்டில் பல குழப்பம் ஏற்படுகிறது. இவை அனைத்துக்கும் அருள்மொழிவர்மன் எவ்வாறு தீர்வு காண்கிறார் என்பதும் சோழ சாம்ராஜ்யத்தை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதும் இக்கதையின் முக்கியமான பகுதியாகும். குந்தவை தன் தம்பிக்கு உதவி நாட்டின் பெருமையை நிலைநாட்டினாள்.
தவறு செய்யும் அனைவரையும் அருள்மொழிவர்மனும் குந்தவையும் கண்டுபிடித்து நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தனர். முடிசூடும் விழாவும் வந்தடைந்தது, நாட்டு மக்கள் அனைவரும் இராஜராஜ சோழனே தஞ்சையை ஆள வேண்டும் என்று விருப்பம் கொண்டனர். முடிசூடும் விழாவின் பொழுது தன்னைத் தேடி வந்த கிரீடத்தையும் அருள்மொழிவர்மன் ஆன இராஜராஜ சோழன், மதுராந்தக சோழனுக்கு அளித்தார். இதனால் இராஜராஜ சோழனுக்கு தியாகச் செம்மல் என்ற பட்டமும் மக்களிடம் இருந்து கிடைத்தது. மதுராந்தகச் சோழன் 14 ஆண்டுகள் தஞ்சையை ஆட்சி செய்தார். பின் அவர் காலமானார். மக்களின் விருப்பத்திற்கேற்ப ராஜராஜ சோழனும் அரசன் ஆனார். அதற்குப் பின்னரே சாணக்கிய மன்னனை போரில் வீழ்த்தி அதன் வெற்றியை கொண்டாடும் வகையில் தஞ்சை பெரிய கோயிலை கட்டத் தொடங்கினார். எந்தவித பதவி ஆசையும் இல்லாதவர் ராஜராஜசோழன். மக்கள் அனைவரும் இராஜராஜ சோழன் மீது பெரும் மரியாதையை கொண்டிருந்தன. மக்களோடு மக்களாய் வாழ்ந்து வரும் இவரை. இதுவே இப்புதினத்தின் கருவாகும். கடலை சுருக்கி கடுகு ஆக்க முடியாது. அன்றைய கால மக்கள் முதல் இன்றைய நவீன உலக மக்களிடமும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது, பொன்னியின் செல்வன். அவ்வாறு தமிழ் வார்த்தைகளை வர்ணனையோடு இயல்பான நடையில் கூறியுள்ளார், கல்கி. இன்றைய கால திரைப்பட இயக்குனர்கள் பொன்னியின் செல்வன் கதையை இயக்க முடியாது என்பது அசைக்க முடியாத உண்மை. இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் கதையும் சிறிது ஆசிரியரின் கற்பனையில் தோன்றியவை ஆகும். சிறிதளவு கற்பனை பல உண்மைகள் நம் நாட்டு பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு அனைத்தையும் கூறும் இன்னும் இன்று வரை சிறப்பினைக் கொண்டது.தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் என்றும் அழியாத ஒன்று ஆகும்.ஆயிரம் படை எடுப்பிற்கு பின்னும் நம்மால் நம் தாய் மொழியை மிக விரிவாய் தெரிந்து கொள்ள முடிகிறது காரணம் நம் தமிழ் மொழி ஆழமாக வேர் ஊன்றி நிற்பதே காரணம் ஆகும்.உலக மொழிகளில் தமிழ் மிகபழமையான மொழி ஆகும்.இன்னும் ஆயிரம் படை எடுப்பு வந்தாலும் நம் தாய் மொழி மிக உயர்ந்த இடத்தில் இருக்கும். இவை அனைத்திற்கும் எடுத்துக்காட்டு பொன்னியின் செல்வன் போன்ற நூல்களே ஆகும்."வாழ்க தமிழ்".


ஓவியங்கள் நன்றி-மணியன் செல்வன்
மேலும் தஞ்சை பெரிய கோயிலின் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள:http://aiswaryasaravanan.blogspot.com/2018/09/blog-post.html?m=1

வியாழன், 27 செப்டம்பர், 2018

அடைப்பட்ட பறவைகள்

சாதிக்க முயலும் பெண்களையும்
சபிக்கும் சமூகம்.......
ஆண்களின் அடிமையாக வாழ
விருப்பமின்றியும் வாழும் கைதிகள்
அடிகளையும் முயற்சி படிகளாய்
மாற்றும் ஓரினம்.... என் இனம்
துயரங்கள் பல இருப்பினும்
இன்முகம் சிரிப்புடன் வாழ்ந்து
வரும் இச்சமூக கைதிகள்.....
விடுதலை இல்லா பறவைகள்
சிறகுகள் இருந்தும் பறக்க
முயலா நிலை....என்றுதான் மாறும்?

தோல்வி

தோற்றபின் துவண்டுவிடாதே...
தோற்றதன் காரனத்தைத் தேடு...
தேடிய காரணத்தின் பின் ஓடு..
பிறகு வெற்றி மாலையை சூடு...

கருத்தரங்கப் பதிவுப் படிவம்

தமிழ் - ஆங்கிலம் - கணிதம் கற்றல் கற்பித்தல் உத்திகள்

நான்காம் ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கம்

12.12.2018

புதன், 26 செப்டம்பர், 2018

எவன் சிறந்தவன்

எவன் சிறந்தவன் பணம் உள்ளவனா.....
இல்லவே  இல்லை...
பெற்றோர் உடன் உள்ளவனே
சிறந்தவன்.....

அன்புள்ள அம்மா

உன் கருவரையை எனக்கு
வசிப்பிடம் ஆய் தந்தவள் நீ
நான் கொடுக்கும் வலியிலும்
இன்பம் கண்டவள் நீ
நான் தவழ்ந்து நடக்கும்
நடையில் நயம் கண்டவள் நீ
என் மழலைப் பேச்சினை
ரசித்தவள் நீ....
என் அறியா பருவம் முதல்
இன்றுவரை எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி என்னை
காதலித்ததும் நீ...... என்னுயிர் தாயே

ஊழல்

    

      ஊழல் என்பது புற்றுநோய் போல் வளர்ந்து கொண்டிருக்கும் இந்நிலையில் உச்சநீதிமன்றதின் புதிய யோசனை.
 
  தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களும் தன் மேல் உள்ள வழக்கின் விவரம் பற்றியும் குற்றங்களை பற்றியும்  அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.   

     ஓட்டு போட வேண்டும் என்ற அதிகாரம் உள்ள மக்களுக்கு யார் மெல் எவ்வளவு குற்றங்கள் உள்ளது என்பது பற்றியும் தெரிந்து கொள்ள உரிமை உண்டு.

    மேலும் தன் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் வழக்கு ரீதியான செய்திகளை தன் கட்சி இணையத்தில் வெளியிட வேண்டும்.

       மேலும் இவ்வாறு செய்வது மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான வழி இல்லை. நம் ஓட்டை யாருக்கு போட வேண்டும் என்பதை யார் அதிகமாக பணம் தந்துள்ளார் என்பதை சார்ந்து இருக்க கூடாது.

   அரசால் மட்டும் ஊழலை ஒழிக்க முடியாது. மக்களாகிய நாமும் ஒரு படி சென்று ஊழலை அழிக்க முற்பட வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்குவதும், இலவசத்தை எதிர்பார்ப்பதும் ஒரு வகையில் ஊழல் என்பதை மக்கள் உணர வேண்டும்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

முதல் பிரிவு

என் கண்களில் ஒரு நீர்த்துளி
நம் காதலை எண்ணி....
எனது இதழ்களில் சிறிது சிரிப்பு
நம் கால நினைவுகளை எண்ணி
மறுவாழ்வு தேடி சென்றது
நீயா? அல்லது உன் நிழலா?
நீ சென்றுவிட்டாய்...
இருப்பினும் ஏன் உன் நிழல்
மீண்டும் நான் உன் காதலியாக வேண்டும் என்று
என் பின்னே நிற்கிறது?

திங்கள், 24 செப்டம்பர், 2018

ஏழை என்றால் எவர்க்கும் எளிது

           
                                       காய்கறிகளை தெருக்களிலும் காலணிகளை பெரிய மால்களிலும் விற்கும் நிலைக்கு ஆலகிய இவுலகில் ஏழைகளுக்கு உதவ நம் மனம் மறுக்கிறது. பெரிய கடைகளில் விலை அதிகமாக விற்கும் பொருள்களை பேரம் பேசாமல் வாங்கி கொண்டு செல்லும் நாம் வயதான ஏழை விற்கும் கடைகளில் தான் நம் சதுரியத்தை காட்டி பேரம் பேசி ஒரு பொருளை வாங்கி விட்டு அதுவும் போதாமல் இலவசமாக கொத்தமல்லி கருவேப்பிள்ளை கேட்கும் நம் மக்கள் அந்த ஏழை  வியாபாரியின் வலியையும் துன்பத்தையும் புரிந்து கொள்வதில்லை. இந்நிலை மாற வேண்டும். இனியாவது ஏழைகளின் வழியை புரிந்து கொண்டு நம் எண்ணத்தை உயர்த்துவோம்....

சனி, 22 செப்டம்பர், 2018

பெண் சுதந்திரம்

                                                                                       
                                                               ஒரு பெண் நகை போட்டுகொண்டு இரவில் தனியாக சாலையில் நடப்பது மட்டும் சுதந்திரம் கிடையாது. தன் சுய சிந்தனையை வளர்க்க உதவும் மனிதர்களால் சூழப்பட்டு இருப்பதையே உண்மையில் சுதந்திரம் என்று சொல்ல முடியும். எண்ணென்றால் ஒரு சிறிய செயலை செய்ய கூட அவள் அனைவரிடமும் ஒப்புதல் வாங்க வேண்டும். அதை மீறி முடிவு செய்தால் அவளுக்கு இந்த உலகமும் சமூகமும்  கொடுக்கும் பெயர் திமிரு பிடித்தவள். இந்த பரந்த உலகத்தில் என்று ஒரு பெண் தன் முடிவை யார் உதவியின்றி எடுத்து செயல்படுத்தி வெற்றி காண்பதையே உண்மையில் சுதந்திரம் என்று கூற முடியும். இந்த எண்ணம் அனைவரின் எண்ணத்தில் தோன்றும் வரை பெண்ணுக்கு உண்மையான சுதந்திரம் கிடையாது 

சில தமிழாக்கப்பட்ட தன்னம்பிக்கை பொன்மொழிகள்;

             சில தமிழாக்கப்பட்ட தன்னம்பிக்கை பொன்மொழிகள்;

1. பலர் தொடங்குகின்றனர் சிலரே முடிக்கிளனர்.( beginners are many         finishers are few)

2. கற்பது கடினம் ஆனால் தோற்றுப்போவது அதனினும் கடினம். (studying sucks but not more than failure )

3.மிகப் பெரிய வெற்றியே மிகப் பெரிய பதில். ( the best revenge is massive success )

4. பணி முடியும் வரை தூங்காதே. (Don't sleep until the job is done)

5. கணவு இல்லாதவர்களுக்கே காரணங்கள் படைக்கப்பட்டன. (Excuses are for those who have no desire to succeed)

6. வைரமாக முதலில் வெட்டுக்களை தாங்க பழக வேண்டும். (To be a diamond, you should have guts to bear cuts )

7. நீ கற்றுக்கொள்ள தயாராக இல்லை எனில் எவராலும் உனக்கு உதவ இயலாது, நீ உறுதியாக இருந்தால் எவராலும் உன்னை தடுக்க முடியாது. (If you are not willing to learn, no one can help you. if you are determined to learn, no one can stop you).

8. உனக்கு நீ ஏற்படுத்திக்கொண்ட சுவருகளே உன்னை தடுக்கின்றன. (You are confused only by the walls you build yourself).

9. நமது முளை ஒரு ஆயுதம் அதில் ஏற்றப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். (Your mind is a weapon keep it loaded)

10. எல்லா முடிவும் ஒரு புதூ ஆரம்பம். (Every end is a new beginning).

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

விவேகம்

வெல்லும் வரை வேகமாக இரு
வென்ற பின் விவேகத்துடன் இரு
ஏன்எனில் வேகமும் விவேகமும்
இல்லா வாழ்க்கை சக்கரம் இல்லா
வண்டி போல நின்றுவிடும்........

புதன், 19 செப்டம்பர், 2018

தித்திக்கும் தமிழே

தித்திக்கும் தேனைவிட சுவையான தமிழே !!!
உன்னை என்னவென்று போற்றுவேன் !!!
திசையெங்கும் தடையின்றி சுலபமாக பரவியிருக்கிறாய் நீ !!!
தினமும் விடையின்றி பலமாக யோசிக்கிறேன் உன்னை மட்டும் எவ்வாறு மக்கள் போற்றுகிறார்கள் என்று!!!
தேசம் முழுவதும் உன் வாசம் வீசுகிறதே!!!
உன்னோடு நட்புக் கொள்ள ஆசை படுகிறேன் நான்!!
செம்மொழியாம் தமிழ் மொழி
என  புகழ்ந்து  பிறநாட்டினர் பெருமைபடுகிறனர் !!!
எம்மொழியாம் தமிழ்மொழி என நான் மகிழ்ந்து பிறநாட்டினரிடம் 
பெருமைப்பேசிவருகிறேன் !!!
   வெறும் பேச்சில் மட்டுமல்ல!!!
       ‌ என் உயிர் மூச்சிலும் !!!
           வாழ்க தமிழ்!வளர்க தமிழ்!!

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

விசுவாசம்


எந்த இடத்தில் நீ இருந்தாலும்
எவ்வுயரத்தில் நீ பறந்தாலும்
ஊக்குவித்வனையும் உதவியவனையும்
ஒரு போதும் மறக்காமல் நன்றியுடன் இரு
ஏன் எனில் நம்பிக்கையும் நன்றிவிஸ்வாசமே
உன் வெற்றியின் கரு.......

வியாழன், 13 செப்டம்பர், 2018

வாழ்க்கை


நம் வாழ்க்கை ஒரு கட்டுரை
நம் பிறப்பு அதற்கு ஒரு முன்னுரை
நாம் வாழ்கை அதற்கு ஒரு பொருளுரை
ஆனால் நம் இறப்பு அதற்கு ஒரு முடிவுரையாக இல்லாமல்
நம் வாழ்வின் முத்திரையாக இருக்க வேண்டும்

புதன், 12 செப்டம்பர், 2018

சுதந்திரத்தை போற்றுவோம்





Image result for independence



        நம்மில் பலர் போராடி பெற்ற சுதந்திரத்தை பொறுப்பின்மை காரணமாக உதாசீனப்படுத்திகின்றனர் . இந்த சுதந்திரம் பெற எத்துணை பெறோர்கள் தன் பிள்ளைகளையும் , எத்துணை  மனைவிகள் தன்  கணவன்மார்களையும், எத்துணை குழந்தைகள் தன் பெற்றோர்களை இழந்தனர்.
     ஆனால் நம்மில் பலர் சுதந்திரம் என்றால் என்ன என்பது அறியாமல்  பல படித்த  பள்ளி மற்றும்  கல்லூரி மாணவ மாணவிகள் வாழ்க்கையை கேளிக்கை  விருந்துகளிலும், தவறான செயல்களிலும் ஈடுபட்டு தன் அரிதினும் அரிதான வாழ்க்கையை அளித்து கொண்டு இருக்கின்றனர் . இந்த நிலை மாற வேண்டும் . இதை மற்ற நம்மால் மட்டும் தான்  முடியும். தன்  சொந்த நலத்தை தாண்டி தான்  பிறந்த நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம்  தோன்ற வேண்டும்.
      அப்துல் காலம் ஐயா  கூறியது 2020 இல் இந்தியா வல்லரசு ஆகா வேண்டும் என்றால் நம்மால் இயன்ற சிறு சிறு தொண்டை நாட்டிற்காக செய்ய வேண்டும்.  சிறு துளி பெருவெள்ளம் என்பதுக்கேற்ப   சிறு சிறு மாற்றமே நம் நாட்டின் முன்நேற்றத்திற்கு   காரணமாக இருக்கும்.  ஆனால் சிலரோ சிறு தவறு தானே என்று செய்யும் ஒவ்வொரு  செயலும் பெரிய தவறு செய்ய ஒரு சிறு பொறியாக மாறி  விடும்.    

ksrcasw Teen Talk Oct ' 2018








K.S.R.COLLEGE OF ARTS AND SCIENCE FOR WOMEN                                          TIRUCHENGODE - 637 215     
                                                  
KSRCASW TEEN TALK – 2018 REGISTRATION FORM                                                                                                                                                                    Event Date:            12.10.2018

Prize worth
Rs. 1 Lakh &
Best School Award




Name of the School


Address


Name of the Faculty
(Accompanying the students)
Mr./Ms.


Mobile Number



Students Details (Maximum 10 students per school & Female Candidates only)
S.No.
Student Name
Group/Std.
Mode of Speech
(Tamil / English)
Contact Number

1




2




3




4




5




6




7




8




9




10





                                                                      Signature of the Principal with Seal

No Registration Fee | No Spot Registration | Download the registration form from website | Email or Courier the registration
form | Refreshment and Lunch will be provided to the Participants | Prelims - 6 mins Speech | Finale – 8 mins Speech
Dr.R.Gunaselan – 9894829151 (Tamil) | Mrs.J.Mary Mimicklin Rexella - 8526738364 (English)
www.ksrwomenarts.edu.in | ksrcaswteentalk@gmail.com



K.S.R. COLLEGE OF ARTS AND SCIENCE FOR WOMEN
TIRUCHENGODE – 637 215
Teen Talk –OCT ‘ 2018
Rules and Regulations

Ø  Reporting Time : 9.30 am
Ø  Prelims – 6 mins (Speech – 5 mins, Queries – 1 min),
Final – 8 mins (Speech – 6 mins, Queries – 2 mins)
Ø  Lunch and Refreshment shall be provided
(Lunch Break : 12.30 pm - 1.30 pm)
Ø  Prelims Result will be declared at 1.45 pm
Ø  Event Finals : 2.15 pm - 4.00 pm
Ø  Chief Guest Speech and Prize Distribution : 4.00 pm – 4.45 pm
Ø  Students will be selected based on the performance
ü  Fluency  - 5 Marks
ü  Pronunciation  - 5 Marks
ü  Facial Expression - 5 Marks
ü  Body Language - 5 Marks
ü  Attractive Topics - 5 Marks
ü  Self Content Delivery - 5 Marks

Ø  The decision of Jury will be final
Ø  Student participants and faculty co-ordinators are requested to stay till Valedictory function.
Ø  The Presence of the student participants and faculty co-ordinators are mandatory to receive the Best School Award.
Ø  We are pleased to invite the Chairman /Headmaster/Headmistress for the Best School Award, if possible.