வியாழன், 29 நவம்பர், 2018

பனை மரம்🌴🌴🌴🌴

     



   சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலின் பாதிப்பால் பல லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டது என்பதை கேள்விப்பட்டோம் ஆனால் நமது மாநில மரமான பனையின் நிலை என்ன ஆனது????
      நமது நாட்டின் மாநில மற்றும் நெய்தால் திணைக்கு உரிய மரம் தான் பனை மரம். இது வளர பல ஆண்டுகள் ஆகுமாம். இம்மரத்தின் வேர்கள் மிகவும் ஆழமாகவும் இதன்  தண்டு வளைந்து கொடுக்கும் தன்மை உடையது. அதனால் புயல் காற்றை எதிர் கொள்ளும் அளவிற்க்கு சக்தி கொண்டது. மேலும் புயல் காற்றின் வேகத்தை குறைக்கும் தன்மையும் இதில் உள்ளது. இந்த மரங்கள் முன் காலத்தில் கடல் கரையில் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது ஆனால் இப்போது செங்கல் சூளையில் தான் அதிகம் காணப்படுகிறது காரணம் இதன் பயன் தெரியாதது தான். முன் காலத்தில் நுங்கு மரங்கள் அதிகம் இருந்ததால் தான் நுங்கம்பாக்கம் என்று பெயர் வந்தது என்று ஆய்வியல் அறிஞர் பலர் கூறுகின்றனர். மொத்தம் 30 வகையான பனை மரங்கள் உள்ளன ஆனால் நம் நாட்டில் 3 வகையான மரங்கள் மட்டுமே அதிகம் உள்ளது. பனை மரம் உள்ள இடத்தில் மண் வளமும் நீர் வளமும் சிறந்து விளங்கும்.  எனவே இந்த பனையின் பலன் அறிந்து இந்த மரத்தின் வளர்ச்சியை அதிக படுத்த வேண்டும்.

செவ்வாய், 20 நவம்பர், 2018

சாதிகள் இல்லையடி பாப்பா ☠️☠️


 

சாதி என்னும் கூட்டிற்குள் மறைந்து இருக்கும் மனிதனே விழித்திரு     
உன் பிறப்புக்கு உதவ ஒரு மருத்துவச்சியும்
உனது ஆடைகளை சுத்தம் செய்ய ஒரு சலவை காரனும்
உனக்கு உணவு வழங்க ஒரு விவசாயியும்
உன் அறிவை வளர்க்க ஒரு  ஆசானும்
உன் திருமனத்திற்கு ஒரு துணையும்
நீ இறந்தபின் உன்னை தூக்கி செல்ல எட்டு கால்கள் மட்டும் தான் தேவை

சாதி என்னும் முகமூடி அணிந்து திரியும் மானுடமே இதை புரிந்துகொள்
விழித்துக்கொள்

போலி செய்திகள் 🗞️🗞️

 
         

     இன்று whatsupp ல் பகிர படும் செய்திகளில் பாதி செய்தி போலியான செய்தி என்பது தற்போதய bbc யின் அறிக்கையில் தெரிவிக்க  பட்டு உள்ளது.                       தற்போது ஊடகங்களில் மஹாமேரு என்ற ஒரு பூ இமயமலையில் 400 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் என்று தவறான செய்தி பரப்ப படுகிறது. ஆனால் குறிஞ்சி மலர் மட்டும் தான் அதிகபட்சமாக 12 ஆண்டுகுளுக்கு ஒரு முறை பூக்கும் எனவும் அதற்கான காரணமே இன்னும் தெரியவில்லை என்கிறார்கள் தாவரவியல் நிபுனர்கள். எனவே ஒரு செய்தியை பகிரும் முன்பு அதன் உண்மை தன்மையை ஆராய்ந்த பிறகு பகிரவும்.

சனி, 17 நவம்பர், 2018

குழவியின் ஏக்கம்

பண்டிகை நாட்களில் எல்லாம் குழந்தைகள் குற்றவாளிகளாக மாற ஆசை படுகிறார்கள்.
அப்போதாவது தனது தந்தை தன்னுடன் இருப்பார் எனும் நம்பிக்கையில்.
தந்தைகள் காவலர்களாய்  இருப்பதால்.

வெள்ளி, 16 நவம்பர், 2018

Corruption

Corruption in fund;
Corruption in food;
Corruption in education;
Corruption in entertainment;
At last corruption in man's life..
Is anything exist without corruptions?

வியாழன், 15 நவம்பர், 2018

தாமரை இலைத் தத்துவங்கள்

துன்பத்திலிருந்து வெளிவர,
துணையை நாடும், ஒவ்வொரு
நொடியும், தோல்வி அடைகிறோம்.
தன்னம்பிக்கையோடு வெளியே வா !
தடைகள்கூட தயங்கி நிற்கும்,
தனிமைகூட வரமாய் அமையும்.
நெருங்கிப் பழகினால் நசுக்கப்படுவாய், 
ஒதுங்கி வாழ்ந்தால் ஒடுக்கப்படுவாய்,
ஆகையால் தாமரை இலையாய் இரு.

புதன், 14 நவம்பர், 2018

Masters of the world


You are the one who loves all;
You are the one who admires all;
You are the one who motivates all;
You are the one who tolerate all;
And you are the one who,
Is our second parent?
This is none other than TEACHERS.

Music


You make me relax in
Moody time;
I listen to you when I am
Happy;
I admire you when I am
Sad;
You always deserve a place
In Heart;
Guess who is she?
It is you my dear, melody…

வியாழன், 8 நவம்பர், 2018

கண் தானம்👁️👁️👁️

   

           

 நாம் தாயின் கருவறையில் வெறும் பத்து மாதங்கள் கண்ட இருளை தினம் தினம் அனுபவிக்கும் சாமணியர்களுக்காக
எனது   வேண்டுகோள்.
        நாம் இறந்தபின் மண்ணுக்கு இறையாகும் கண்களை தானம் செய்திருந்தால் நம் நாட்டில் இத்துணை பேர் பார்வை இன்றி இருந்திருகமாட்டார்கள்.
         20 முதல் 30 நிமிடம் மட்டுமே ஆகுமாம் நம் கண்களை தானம் செய்ய, நமது ஒருவரின் தானம் இரு மனிதரின் வாழ்வில் ஒளியை கொடுக்கும்.
          எனவே நாமும் நம் சுற்றத்தாரும் இனைந்து கண்  தானம் செய்து பார்வையற்றோர் இல்லாத  நிலையை உருவாக்க உறுதி அளிப்போம்.