ஈ.கன்னிகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈ.கன்னிகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

என் திசையைத் தேடுகிறேன்

காற்று வந்து என் இதயத்தைச் சுட்டது
இன்று பூத்த பூவின் மனம் ஏனோ கெட்டது
தோன்றி மறையும் வெண்ணிலா
இன்று தேய்ந்துவிட்டது
கரையை அணைக்கும் அலையும் கைவிட்டது
முடியாத என் பாதையில் இன்று
தடை மட்டும் நீண்டது
தீயாய்ச் சுடும் நினைவுகளில் நான்
தென்றலாய் மாறி என் திசையைத் தேடுகிறேன்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

செவ்வாய், 21 ஜனவரி, 2020

நேரம் இல்லை

இதயம் நொருங்குவதற்கு இது கண்ணாடி இல்லை
கதவுகள் திறப்பதற்கு இது வீடு இல்லை
மனதிலே வைப்பதற்கு இடம் இல்லை
என் கதையைச் சொல்வதற்கு இது நேரம் இல்லை

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

குழந்தை

மனதைப் பறிக்கும் பொன்நிறம்
விழிகளைக் கவர்ந்த உன் புன்னகை
செவிகளில் ஒலிக்கும் உன் சிறிய சொற்கள்
புதையலைப்போல் என் கையில்
கிடைத்த நீ என் செல்வா

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

தென்னை மரமே

ஒற்றைக் காலில் நின்று உலகைப் பார்க்கிறது
தாகம் தீர்க்க இளநீர் தருகிறது
குடிசை அமைக்க ஓலையைத் தந்தது
தாயைப்போல் இளம் குருத்தில் இருந்தது
தேங்காயாக வளர்வதற்குப் பத்துமாதம்
பிள்ளைபோல் சுமந்த தென்னைமரமே

ஈ.கன்னிகா
இளங்கலை இரண்டாமாண்டு ஆங்கிலம்

நிலவே நீயும் ஒரு பெண்தானே

நிலவே நீ வானத்தில் மட்டும் உதிக்கிறாய்
நிலத்தில் வாழும் பெண்ணின் முகத்தில் உதிக்கிறாய்
இருண்ட வானில் ஒளியைக் கூட்டுகிறாய்
ஆனால் பெண் இருண்ட வீட்டில்
ஒளியேற்றி அன்பைக் கொடுக்கிறாள்
நீங்கள் இருவரும் ஒருவர் தானே
நிலவே நீயும் ஒரு பெண்தானே

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

உன்னை

அலைகள் ஓடியது
நிலவைத் தேடியது
விழிகள் வாடியது
உன்னை நாடியது

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

பேரழகி

பொன் நகை சூடாமல் இருந்தாலும்
உதட்டில் புன்னகை சூடியிருந்தாள்
உருவத்தில் அழகில்லை என்றாலும்
உள்ளத்தில் அன்பைக் கொண்டவள்
கருப்பு நிறத்தைக் கொண்டாலும்
கணிந்த மொழியைப் பேசுவாள்
காரணம் இன்றிச் சிரிப்பாள்
காரியத்தோடு நடப்பாள் என் அன்பு கண்ணம்மா

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

நல்ல பாம்பு

பிறவியில் கெட்டவன்
பெயரில் நல்லவன்
நீண்ட உடல் ஆனால் கயறில்லை
கண்கள் உண்டு அதில் பார்த்ததில்லை
விடம் பாய்ந்த உடல்
யாரையும் துன்புறுத்துவதில்லை
கேட்டால் நான் நல்ல பாம்பு

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

அன்பு, நட்பு

கண்களில் பூத்த மலர்
கைகளில் மலர்ந்து விரிந்தது
இதயமாகத் தோன்றிய மலர்
இதழ்களில் விரிந்து காணப்பட்டது
கையில் வைத்துக் காத்து விரிவதற்கு வழிகாட்டியது
இதில் சிறந்த பூ அன்பு, நட்பு

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

நிலவே

இருண்ட வானத்தில் மின்னிய முகம்
முகம் பார்க்கப் பெண்போலத் தெரிகிறதே
ஆனால் உருவம் இன்றிக் காணப்படுகிறாள்
இந்த வானத்தில் யார்துணையும் இன்றி நிற்கிறாளே
நிலவே உன் துணை நானே

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

அழகுப் பதுமை

சூரியன் ஒளியைத் தழுவி
உன் நிறத்தை வடிவம் அமைத்தார்
பூவின் இதழ்களைக் கோர்த்து
உன் உடல் வடிவம் கொடுத்தார்
மலரைத் தாங்கும் காம்பைப்போல
விரல்கள் படைத்தார்
மிதக்கும் தாமரையைப்போலப்
பாதம் படைத்தார்
சங்கைப்போல மெல்லிய கழுத்தக் கொடுத்தார்
கருவண்டைப்போல இருவிழிகளைக் கொடுத்தார்
நிலவின் வடிவத்தை எடுத்து உன் முகம் அமைத்தார்
உனக்கு இத்தனை இத்தனை கொடுத்த கடவுள்
நான் உன்னைப் பார்ப்பதற்கு
இருவிழியை மட்டும் கொடுத்தானே

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

உயிரே

உருவம் இல்லாத உடலுக்கு உயிர் கொடுத்தாய்
உயிர் இன்றி திரிந்த எனக்கு உணர்வுகளைக் கொடுத்தாய்
அருகில் இருந்தபோது உன்னை அறியவில்லை
உன் அருமையை அறிந்த பிறகு
நீ என் அருகில் இல்லை
உன்னை நினைக்க என்னை மறந்தேன்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

சிரிப்பு

பூமியில் விளைந்த பூ ஒன்று
மக்கள் விதை இல்லாமல் பூத்த பூ
செடி கொடியில் விளையாத பூ
காம்பும் இலையும் தீண்டாத பூ
பார்க்கவும் கேட்கவும் மலர்ந்த பூ
உலகில் யாருமே பறிக்க முடியாத பூ
முகத்தில் மலரும் பூ அதுவே சிரிப்பு

ஏறு தழுவல்

முரட்டுத் தோள்கள் கருப்பு நிறத்திலே
மலைபோல் திமில் ஏற்றிச்
சிங்கம்போல் பாய்ந்து வரும்
உன்னோடு வாடி வாசலில் நின்று
ஏறுதழுவி விளையாடி
இரும்புக்கரம் கொண்டு அடக்கி
உன்னை வீழ்த்தியதால்
நான் வீரன் ஆகவில்லை காளையே
உன்னைத் தோற்க வைத்தாலும்
வெற்றிபெறச் செய்தாலும்
இந்நாட்டில் சிறந்த வீரன் நீயே

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

அன்பைப் பெற்றேன்

தாயின் உருவத்தைப் பெற்றேன்
தந்தையின் குணத்தைப் பெற்றேன்
தம்பியின் ஆற்றல் பெற்றேன்
ஆசிரியரிடம் அறிவைப் பெற்றேன்
தோழிகளிடம் நட்பைப் பெற்றேன்
இறைவனிடம் அருளைப் பெற்றேன்
இவர்கள் அனைவரிடத்திலும்
தூய அன்பைப் பெற்றேன்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

நிழல் ஒளிர்ந்தது

வார்த்தை இன்றிப் பாடிய குயில்
வாடை இன்றிப் பூத்த மலர்
ஓடை இன்றிப் பாய்ந்த நீர்
உருவம் இன்றிப் பார்த்த நிழல்
உன் முகமாய் ஒளிர்ந்தது

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

காட்டில் திருவிழா

மயில் தோகைவிரித்து நடனம் ஆடியது
மான் காடெங்கும் துள்ளி விளையாடியது
கரடி தேனைச் சேகரித்து வைத்தது
குதிரை அணியாக வலம் வந்தது
குரங்கு தோரணம் கட்டி வைத்தது
முயல் மலர்களைப் பறித்து வந்தது
யானை தண்ணீர் கொண்டு வந்தது
அணில் பழங்கள் சேமித்து வைத்தது
குருவிகள் இனிய குரலில் கச்சேரி செய்தன
பறவைகள் அழைப்பிதழ்களை அனைவருக்கும் கொடுத்தன
இவர்கள் எல்லோரும் இணைந்து
காட்டு ராஜா சிங்கத்தின் பிறந்தநாளைக் கொண்டாடினர்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

என் அன்பு உள்ளமே

கவிதை பாடும் மேகம் காணுவோம்
வானிலே நாம் இங்கே
கண்கள் ஓரம் ஏன் இந்தக் கண்ணீர்
உன்னிலே என்னைக் கண்டும் ஏன் ஏக்கம் உன்னிலே
உன்னை அடைந்தேன் என்னை இழந்தேன்
மீண்டும் பிறந்தேன் உயிரே

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

தோழி நீ எனக்கு

அருகில் இருந்த உன்னை அறிய மறந்துவிட்டேன்
ஆசை இருந்தும் உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன்
கையில் கிடைத்த உன்னை இழந்துவிட்டேன்
தவறவிட்ட உன் நட்பை நீ எனக்கு மீண்டும் தருவாயா?

நிலவே

இருண்ட வானத்தில் மின்னிய முகம்
முகம் பார்க்கப் பெண் போலத் தெரிகிறது
ஆனால் உருவம் இன்றிக் காணப்படுகின்றாள்
இந்த வானத்தில் யார் துணையும் இன்றி நிற்கிறாளே
நிலவே உன் துணை நானே

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்