வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

என் திசையைத் தேடுகிறேன்

காற்று வந்து என் இதயத்தைச் சுட்டது
இன்று பூத்த பூவின் மனம் ஏனோ கெட்டது
தோன்றி மறையும் வெண்ணிலா
இன்று தேய்ந்துவிட்டது
கரையை அணைக்கும் அலையும் கைவிட்டது
முடியாத என் பாதையில் இன்று
தடை மட்டும் நீண்டது
தீயாய்ச் சுடும் நினைவுகளில் நான்
தென்றலாய் மாறி என் திசையைத் தேடுகிறேன்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக