வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

பவித்திரம்

6.உன் வாழ்க்கை
உனது வாழ்க்கை, உனது கொள்கை
உனது உரிமை, உனது உலகம்
உய்வது நீ, உயர்வதும் நீ
அழைப்பதும் நீ, உணர்வாய் நீ
நின்னலம், உன் வளம்
உன்பலம், உனது மூலதனம்..

7.எண்ணம்
பாக்களில் பலவகை
புன்னகை ஓர் புதுசுவை
பூக்களில் பல மணம்
பதறுமோ என் மனம்
சலிக்கிறது ஏழு வண்ணம்
விழிக்கிறது உன் எண்ணம்..

8.உணர்ந்துவிட்டேன்
காலம் கடந்து நான் வந்துவிட்டேன்
காகம் கரையும் நான் உணர்ந்துவிட்டேன்
காதல் கடந்து நான் வந்துவிட்டேன்
கல்லும் கரையும் நான் உணர்ந்து கொண்டேன்

9.வலிகள்
நெஞ்சமெல்லாம் பஞ்சத்தில் ஆழ்ந்தது
உன் அன்பின் ஆதரவின்றிக்
கொஞ்சம் கொஞ்சம் பாசம் அறிந்தது
உன் பார்வைக் கனலில்
கெஞ்சக்கெஞ்ச நேசம் அறிந்து
உன் வியர்வைத் துளியில்
மிஞ்சமிஞ்ச வலிந்து நிறைந்தது
உன்னால்தான் வலிகளும் நேர்ந்தன
நேற்றைய நாளைக் காலம் மறந்தது
நேர்ந்ததை எண்ணி நெஞ்சம் கலைந்தது
இன்றைய நாளை ஏற்காது நின்றது
இறுதியில் தான் கண்கள் சிவந்தன
செம்மண்ணில் பனித்துளி வழிந்தது..

10.நீங்காது
என்றும் நீங்காது உன்
நினைவு என்னுள்ளும்
என் நிறைவிலும் கூட.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக