திங்கள், 10 பிப்ரவரி, 2020

பவித்திரம்

1) எனது உனது
தன்னந்தனி வலிகள் எனது
எனக்குத் தன்னிகரில்லா உறவு உனது
மங்கைக் கனி மனது எனது
என்னை மாயம் செய்யும் மாமம் உனது
மண்வாச மாளிகை எனது 
இந்தப்  பொன்வாசப் பெண்மை உனது
கனாக்காணும் கண்கள் எனது
என்னைக் கைது செய்யும் படைகள் உனது
உன்னை எண்ணிய எண்ணம் எனது
உரைக்கின்ற உரிமை உனது
தவிக்கின்ற தனிமை எனது
அதைத் தவிர்க்கின்ற வலிமை உனது

2) எவன்
ஆளக் கற்றவன் மன்னன்
அடக்கக் கற்றவன் தலைவன்
ஆளாக்கியவன் தகப்பன்
அடைகாத்தவன்
அருளியவன் சிவன்இன்று என்னை
அழைக்கின்றவன் எமன்.

3) உன் வாழ்க்கை
உனது வாழ்க்கை உனது கொள்கை
உனது உரிமை உனது உலகம்
உய்வது நீ உயர்வதும் நீ
அழைப்பதும் நீ உணர்வாய் நீ
நின்னலம் உன் வளம்
உன்பலம் உனது மூலதனம்

4) உறவு
உறவுகள் கோடி சிறகுகள் வீசிப் பறக்கிறது
உனது இறகா அதனை மறக்கிறது
வறுத்தம் கண்டு வலிமை நின்று
வாழ்ந்தும் மாண்டு கிடக்கிறது

5) வலிகள்
நெஞ்சமெல்லாம் பஞ்சத்தில் ஆழ்ந்தது
உன் அன்பின் ஆதரவின்றி
கொஞ்சம் கொஞ்சம் பாசம் அறிந்தது
உன் பார்வை கனலில்
கெஞ்சக்கெஞ்ச நேசம் அறிந்து
உன் வியர்வைத் துளியில்
மிஞ்சமிஞ்ச வலிந்து நிறைந்தது
உன்னால் தான் வலிகளும் நேர்ந்தது
நேற்றைய நாளை காலம் மறந்தது
நேர்ந்ததை எண்ணி நெஞ்சம் கலைந்தது
இன்றைய நாளை ஏற்காது நின்றது
இறுதியில் தான் கண்கள் சிவந்தது
செம்மண்ணில் பனித்துளி வழிந்தது

6) வேண்டும்
இதழசைக்காமல் பேச வேண்டும்
இமைக்காத கண்கள் வேண்டும்
இசையின்றிப் பாடல் வேண்டும்
பகலிலும் நிலவு வேண்டும்
இரவினிலே வெப்பம் வேண்டும்
கண்ணீரில்லா அழுகை வேண்டும்
பரிமாறப் புன்னகை வேண்டும்
பசிக்கண்ட பாசம் வேண்டும்
ருசி கொண்ட நேசம் வேண்டும்
தாகமில்லாமல் தண்ணீர் வேண்டும்
தேகமெல்லாமல் செந்நீர் வேண்டும்
வேகமில்லா விவேகம் வேண்டும்
சோகமில்லா மனமும் வேண்டும்
சொர்க்கம் இப்புவியிலே வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக