வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

அறம் செய் ! புறம் பேசாதே !

                        ஒரு குறையும் இன்றி நாம் நம் வாழ்க்கையை வாழ விரும்பினால் ,அதற்கு ஏற்ற செயலை மட்டும் செய்து மறுபிறவி ஒன்று ஏற்பட்டால் அப்போதேனும் அந்த அறிய வரத்தினை பெற வேண்டும்.
                       அங்ஙனம் இன்றி இன்று நினைப்பதனை இன்றே பெற வேண்டும் என்று எண்ணி ,நாளை என்றொன்று இருப்பதனை மரத்தால் . அதாவது வரும் முன் காப்போம் என்பதனை அறியாதிருத்தல் .
                       எல்லாம் அறிந்தும் அறியாமையை தேடுகின்றனர் இன்றைய தமிழர் இந்நிலை மாற வேண்டும் . அறியாமையிலும் ,அறிவீனம் என்று நினைத்துக்கொண்டு தன் நலத்திற்காக பிறரை துன்புறுத்துகின்றனர் .                    உண்மை கண்முன் என்றாலும் பொய்மையின் பின்னால் கண்மூடி தனமாக கண்ணை திறந்தே நடக்கின்றனர் .
                       பிறரை நோக்கியேனும் அறிவோ , ஆக்கமோ கொள்ளாது பொறாமையும், பேராசையையும் கொள்கின்றனர் . தான் வெல்லாவிட்டாலும் , பிறர் வெல்ல கூடாதென்று சூழ்ச்சிகளை செய்யவும் துணிகின்றனர.
                      மனம் என்ற ஒரு இனம் அறத்தின் வளமாய் இருப்பதனை மறந்து சாதி ,மதம் , குலம் என்னும் என்றோ அறுத்தெறியப்பட்டதை . தான் நூலெடுத்து கோர்ப்பதாய் எண்ணி பிறரை ஊசியால் குத்துகின்றனர் .                  வன்முறையை அளிக்காவிட்டால் ,அறநெறியை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பதனை இன்றளவிலும் உணராது செயல்பட்டு வருகின்றனர். .                         இன்றைய தமிழர் । நம் பிறப்பென்பதை யார் தீர்மானித்தாலும் !இறப்பை எமன் தீர்மானித்தாலும் ! நம் வாழ்வை நாம் தீர்மானிக்க வேண்டும் !                        அவற்றை அறிவாய், அளவாய், அழகாய், அமுதாய் அதாவது "ஆற்றில் போட்டாலும் அளந்து போடு " போல  வாழ்க்கையை கழிக்க வேண்டும் ।
                      அழியா வரம் வேண்டாம் , மறையும் வரை வாழ்ந்திடும் (ஆழ்த்திடும் ) வரத்தினை பெறவேண்டும். வாழ்க்கையை அழியா புகழோடும் , அனைவரும் அறியும் மிதலோடும் ,அணுகும் மனதோடும் ,அறியும் குணத்தோடும் வாழ்தல் வேண்டும் .
                       உன் தலையெழுத்து குறையாக இருந்தாலும் உன் கையெழுத்து முறையாக இருக்க வேண்டும் . தம் முன்னால் பிறர் போடாவிட்டாலும் ,பின்னால் பரைய கூடாது .
                                         நன்மை ஒன்றும் செய்யாவிட்டாலும் 
தீமையை என்றும் நீ தீண்டாதே
              கடவுளை காணாவிட்டாலும் உன் உள்ளம் அதை நீ உணர்த்திருக்காதே . காலம்  அது  கரைந்து போகையிலே 
கல்லாய் நீயும் மாறிவிடாதே .
                  கவிதை பேசும் வார்த்தைகள் எல்லாம் கல்லறைகள் கேட்காத என்பது போல,  இன்று உன் முன்னால் பயத்தினாலோ அல்லது எதிர்பார்ப்பினாலோ காலத்தையும் ,சூழ்நிலையையும் ,சுல்லலையும் பார்த்து உன்னை பாடிப் போற்றி பேசினாலும் , பேசாவிட்டாலும் .
                      பின்னால் இகழ்வதனை நீ அனுமதிக்காதே । உன்னை இகழ்வதனை நீ அறியாமல் இருக்காதே அவ்வஞ்ச புகழ்ச்சியினை உன் கல்லறையும் கேட்டவிடாதே
அறத்தினை செய் கூசாதே புரம் நின்று பேசாதே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக