திங்கள், 17 பிப்ரவரி, 2020

பவித்திரம்

 91.அன்புள்ள ஆசிரியருக்கு
அன்புள்ள ஆசிரியருக்கு
அன்பளிப்பு அளிப்பதற்கு
ஆசான்வில் தொடுப்பதற்கு
அமுதமதில் தெளிப்பதற்கு
அர்த்தங்களை உரைப்பதற்கு
ஆசான்களே கூடி வருகஎமக்கு
அறிவுப்பொருள் தந்து அருள்க

92.காலம்
வாழ்ந்த காலம்
கவிதையைப் போன்றது
வாழும் காலம்
கடிதமே ஆனது
வாழ்க்கையே ஓர்
கதைபோல் தோன்றுது

93.சேதி
பாடியது பாதி
பாடுவது மீதி
நாடே நம் வீதி
நன்மை தரும் நீதி
நட்பே  நம் ஜாதி
இதுவே ஏன் சேதி

94.மறுக்குமா
காண மறுக்குமா
நம் கண்கள்
கேட்க மறுக்குமா
நம் செவிகள்
பேச மறுக்குமா
நம் இதழ்கள்
என் மனம் மறுக்குமா
உன்னை நினைக்க

95.இல்லை
நீ ஒன்றும் அழகில்லை
அழகால் எதுவும் பயனில்லை
உன் அறிவிற்கோர் எல்லையில்லை
ஆனாலும் அதை நீ வாடவிடுவதில்லை
நீ அன்பிற்கு அணையிட
அது ஆற்றோர  அலையில்லை
உனக்கு அக்கடலினும் சுமை கொள்ளை
ஆனால் அதை நீ பொருட்படுத்தவில்லை
எனவே நீ வெற்றியை விட்டதில்லை
தோல்வியைத் தொட்டதில்லை

96.என் ஆசிரியை
என் செவிலித்தாயே
என்னை நீ ஜெவித்தாயே
நீர் ஓர் பெண் மகளின் தாயே
எம்முள் ஓர் பொன்மகளும் நீயே
உன் ஆற்றல்தான் உன் மேனி
அச்சமின்றி பணியாற்றலாம் வா நீ
உந்தன் சிரிப்பே  உனக்குச் சிறப்பு
உந்தன் உன்னதமேஇங்கு
தோன்றுது எனக்கு

97.உனக்கென நான்
பூ மணம்
உதிரியாகும் வரை நிலைக்கும்
என் மனம் உனக்காக
உயிர்சாயும் வரை நிலைக்கும்

98.அகிம்சையின் காந்தியடிகள்
அமைதி வழி சுதந்திரம் பெற்ற
ஆத்ம சாந்தியே
அறம்வழி வாழ்க்கை வாழ்ந்த
அமுத சுரபியே
அன்றாடம் அன்பை வளர்த்த
அய்யனும் நீயேஎமக்கு
ஆதரவாகத் தோள் தந்த
ஆற்றல் தலைவனே
அச்சம் இன்றிப் போராடி
அந்நியனை வென்றவனே
அகிம்சை நாயகனே
மகாத்மா காந்தியானவனே

99.உனைப் பிரிந்தும் நான் உன்னால் தானே
உயிர்துறக்க நினைத்தால்கூட
உனைப்பிரியும் நிலையென்றேன்
என் உயிராக நீ நின்றால்கூட
உனைப்பிரிந்து நான் நின்றேன்
விழி இமைக்காது காத்திருக்க என்
விழியின் எல்லை நான் மறக்கிறேன்
விழிக்கையிலும் இருளில் வாழ்ந்து
இங்கு நான் தாழ்கிறேன்
இமைக்கையிலும் ஒளியைக் கண்டு
பயந்து நான் வீழ்கிறேன்
என் உயிரே இன்னோடியும் உன்னை
நினைத்தே வாழ்கிறேன்
உன்னைக் கண்ட நொடியினிலே
சாகாவரம் பெற்றிருந்தேன்
இலையுதிர் காலத்திலும் 
இரையாமல்தான் நானிருந்தேன்
என் இதயம் உன்னால் இரையா
இறப்பும் இன்று இனிதென்றேன்
என்னை அறியா நான் அழுகையிலே
மழைத்துளி போலும் என்றிருந்தேன்
சுட்டெரிக்கும் வெய்யிலிலும் குளிரால்
நானும் உறைந்து நின்றேன்
சுலைப்பணிக் குன்றிலேறி  வெட்கை
உதறி நான் சென்றேன்
உன்னைக் காணும் வரம் கிடைத்தால்
ஏறி மலையை நான் அணைப்பேன்
ஆழ்கடலை அதில் தெளிப்பேன்
பாலை வனத்தினில் பயிரிடுவேன்
பசும்பொன் அதில் விளைப்பேன்
பரிசம் போட நீ வருக!!!! பாவை மனம் அமுதனுக!!!!
காத்திருப்பேன் மனமுருக!!!! என்னைக்
காண வந்து இக்கவி பெறுக!!!!
கவிதை ரசம் நீ பருக!!!! காட்சி வசம்தான் தருக!!!!

100.மாயமாய்
மேகத்தில் கருநீலமாய்
வானம்போல் தொலைதூரமாய்
நிலவைப்போல் வெண்மணமாய்
சூரியனைப்போல் வெகுவேகமாய்
பூமியைச் சுற்றி வந்தாயே வீரமாய் நான்
காற்றைப்போல் சில காலமாய் உன்னைத்
தொடர்கிறேனே உன் தேகமாய் இன்று
நான் உன்னில் தொலைந்தேனே
ஏதோ மாயமாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக