திங்கள், 17 பிப்ரவரி, 2020

தலை புரண்ட தமிழகமே ! தத்தளிக்கும் தாயகமே !

தமிழா தரணியிலா ? தண்ணீரிலா ? நீ கல்லாகக் கரைந்தது?
மண்ணிலா ? மலையினிலா ? உன் மனம் கல்லாக உரைந்தது ?

உயிர்வாழ உணவிட்டான் தமிழன். பின்பு உறவிற்கே உணவிட்டான் அமிழ்தன். பின்பு உரையிட உணவிட்டான் எனில் விற்றான். பாசம் என்பது பணத்திற்கு அடிமையானது!. பந்தம் என்பது கடமைக்கென்றது!. நேசம் என்னும் சொல்லே நாசமாய்ப் போனது!. புது வாழ்வு என்ற பெயரில் பொதுவாழ்வையே மறந்தனர் தமிழர்.

சுயவாழ்வு என்ற பெயரில் நன்றாகச் சூரனையும் வென்றனர். சொர்க்கபதம் வேண்டில் சொற்பதம் வேண்டும் ஐயா நம் நாவில். இவை அனைத்தும் அற்புதம் தான் இன்று நம் வாழ்வில் .

அன்னையே, அய்யனே என்பவைகூட அந்நிய சொல்லால் பிணமே, சவமே என்றாயின. எனினும் அதில்தானே நாம் பெருமிதம் அடைகிறோம்.

பத்து மாதம் சுமந்தெடுத்த பச்சை முத்து அம்மா என்றழைத்தால், அதனைக் கேட்க ஆறளவு காதுகள் போதுமா!. அதனைக் காண ஆயிரம் கண்தான் ஆகிடுமா!.

அய்யன் என்பது ஆயிரமாயிரம் அடியெடுத்த இமயத்தின் இருதயமாய் விளங்கும் சிவனடியானை அல்லவா குறிக்கும்.

அம்மையப்பனின் முகமே  ஆட்கடவுள் எனத்தானே தன்னை ஈன்ற பெருமானை ஈசனுக்கு ஒப்பாக அழைத்தான் அன்றைய தமிழன்! அறிய வேண்டாமா? அறிந்துதான் திருந்த வேண்டாமா?
                    
தொட்டிலில் அழும் குழந்தைக்குத் தன் உறவு, சொந்தம், பந்தம், மாமன், மைத்துனன் பெயர் சொல்லி, இன்னார் உனக்கு இவ்வழி உறவினரப்பா! இவருக்கு நீ இதை செய்யம்மா! எனத் தன்னையறியா வயது முதலே தன் கடமையை அறியச்செய்து தாலேலோ பாடிய அன்றைய அன்னையை அன்னப்பறவைக்கு  உவமயக்கவா? அவளையே உரிமை கேட்கவா? இன்றைக்குத் தாலேலோ தாயகமே இங்கு தலைபுரண்டு கிடக்கிறதே!. வீட்டில் மூத்தவரோ, குடும்பத்தில் ஒருவரோ இறந்துவிட்டால்! அவரை, நினைவுகூறவும், அவரது சந்ததிகளை நிலை நிறுத்தவும்। இன்னது செய்து என்னை ஆளாக்கினீர்! இன்னதைச்செய்ய என்னை வேராக்கினீர் என்று பாடினர்.
                          
இன்றோ உயிர் வாழ்ந்தும் நடை பிணமாக இருக்கின்றனர். இல்லம் என்பது மட்டுமே இவர்களின் அடையாளமாய் இருக்கின்றது. இன்றையநிலை வயதானதா, தசை சோர்ந்ததா! எனக்கு மணமுடிந்ததா உடன் பணம் சேர்ந்ததா! இனி அன்னையில்லை, தந்தையில்லை அநாதை எனினும் அதில்தான் ஆனந்தம் இருப்பதாக நாம் அலைகிறோம்.
                          
அறியாத தவறினால் ஏற்படும் புரியாத வலிக்கு! மருந்தும் மனதிற்கு விருந்தும் அவர்களால் மட்டுமே தரஇயலும் என்பதனை இன்னோடியும் நாம் உணரவில்லை .
                          
அவர்கள் சொல்லிற்கு என்றும் செவிசாய்ந்ததுமில்லை! அந்நியர் சொல்லுக்கு என்றும் செவி ஓய்வதுமில்லை! அந்நியனாயினும் அவனுக்குத்தான் நான் அடிமை. என்னதான் நாம் ஒரு சுதந்திர மனிதராக இங்கு இருந்தாலும் .
                             
இப்பொழுதும், இன்னோடியும் அடிமைத்தனம் ஒன்றே நமது அங்கீகாரச் சின்னமாக இருக்கிறது. மாற்றம் தேவை! ஈன்றாலே தாய் அவளைத்தான் மறைப்பாயா? உன் ஈட்டியான தந்தையையே நீ சிதைப்பையா! தன்னை வளர்த்த தாய், தந்தைக்கே  கடமைப்பட்டேன் என்பனவே மாமனிதன்.

இச்சொல்லை ஏற்பவனே மனித குலத்தவன். சிந்தித்து செயல்பட்டால் சீர்திருத்தப் பள்ளி வேண்டுமா!. சிந்தையை உன்னித்தால் சிறை காட்டும் நிலை கூடுமா!. சொல்லால்பிறர் சொல்வதால்  விளங்காமையும் இவ்வாறான ஆயுத எழுத்தால் ஆணிபோல் ஆழ்மனதில் அச்சிடும் என்னும் நோக்கோடு செயல்பட்டேன்!  சிந்தித்தால் மந்தையில் உமக்கு எல்லை ஏது?

சிந்திப்பீர் செயல்படுவீர்! சிந்தைக்கே சலாமிடுவீர்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக