சனி, 15 பிப்ரவரி, 2020


21.மண்ணையடைந்தேன்
உன்னை என் வாழ்வில்
வானவில்லாய் வரைந்து
வண்ணங்கள் தீட்டி
வானாக வளர்ந்து
வாழ ஆசைப்பட்டேன்
எந்தன் எண்ணம் இன்று
வீணாகிபோக
வின்னைவிட்டு, மண்ணையடைந்தேன்.

22.திக்குமுக்கானேன்
காற்றிற்கு கூட எல்லை உண்டு
நம் காதலுக்கில்லை
என்றிருந்தேன், என் காதலே
என் மூச்சுக்காற்றை
முடக்க திக்குமுக்காடி நின்றேன்.







23.வாடுதே
உன்னோடு தான்
என் உயிர் வாழுதே
உன் பேர் சொன்னால்
என் இதல் வாடுதே
24.வாடினோம், நாடினோம்
நான் இன்று காணுகின்ற காட்சியெல்லாம் நீயாக
நான் இரவில் காணுகின்ற நிஜமாக
நீ என்னை காண வேண்டும்
நம் காதல் வாழ…. காலம் வீழ….
இனி நாம் ஆகவேண்டும்நதியோர கரையாக..
இதுவரை,
நதியாக ஓடினோம்
விதியாலே வாடினோம்
பதியாக வேண்டினோம்
மதியாலே மாறினேன்
எனினும்,
நாம் நற்கதியையே நாடினோம்..





25.திகைப்பு
நீ நீர், நிலவு, காற்று
நான் உன் பகலின் இரவு
வேர் என்ன நமக்குள் மறுப்பு
பார் உந்தன் வண்ண சிரிப்பு
உன் மேல் ஏனோ திகைப்பு
உன்னால் தானே ஆனது என் மனதும் சிகப்பு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக