திங்கள், 24 பிப்ரவரி, 2020

உறவு என்னும் ஏமாற்றம்



             

                  ஒருவர் நம்மை விட்டு விலகும் போது சில விஷயங்களில் விட்டு கொடுத்து அவர்களை தக்க வைத்து கொள்ள முயலுகிறோம்.  ஆனால் இதற்கு பிரிவு மட்டும் தான் முடிவு என்று தெரிந்த உடன் அவர்களை அவர்கள் போக்கில் விட்டு விட வேண்டும் ஒரு பொருளின் மீது அதிகம் அழுத்தம் செலுத்தும் போது தான் அது வெடிக்கும் அதை விட்டு விட்டால் அதன் வீரியம் குறைந்து விடும். நம் வாழ்க்கையில் ஆயிரம் பொய்யான உறவுகள் இருக்கும், தேவைக்கு மட்டும் பழகும் அதி பயங்கர சுயநலம் மிக்க கூட்டத்தில் நாம் மிகவும் சுயநலமாக இருக்க வேண்டும். அனுதாப பட்டால் நாம் தான் பாவ பட்டவர்கள் ஆகி விடுவோம். தாய் தந்தை மற்றும் சிலரை  தவிர எந்த உறவும் நிரந்தரம் இல்லை. சில நண்பர்கள் நம் காலம் முழுவதும் இருப்பார்கள். பத்து நபருடன் பேசி மகிழ்ந்தாள் தான் நட்பு என்று அர்த்தம் அல்ல. நம்மை புரிந்து கொள்ள ஒரு உயிர் இந்த உலகத்தில் இருந்தால் கூட போதுமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக