புதன், 12 பிப்ரவரி, 2020

பவித்திரம்


7.தனிமை
நான் தனி மரம்தான்
தனிமையும் ஒரு வரம்தான்
பல கிளைகளை நான் படைப்பேன்
பாசங்களை நான் கொடுப்பேன்
நேசமதைக் கோலைப் போட்டு
                     நந்தவன் சொல்லை ஏற்று  
நாளுமதை நான் வளர்பேன்
நல்லதொரு உலகம் படைப்பேன்

8.எண்ணம்
பாக்களின் பலவகை
புன்னகை ஓர் புதுசுவை
பூக்களில் பல மணம்
பதறுமோ என் மனம்
சலிக்கிறது ஏழு வண்ணம்
விழிக்கிறது உன் எண்ணம்..

9.காதல்
உன்னை நான் காதலித்த நாட்கள்
கடந்துவிட்டது
என்னை நீ கண்ட காட்சியெல்லாம்
கலைந்துவிட்டது
நாம் கொண்ட கனவெல்லாம்
கரைந்துவிட்டது
நம் காதல் மட்டும் மீண்டும்
ஏனோ, மலர்ந்துவிட்டது

10.மனமே நீயாக
நானும் கூடப் பார்த்ததில்லைஅந்த
மனம் என்னும் ஒன்றைஅதை
மறக்க நினைத்த நேரத்திலேதான்
தெரிந்தது, என் மனமே நீ என்று
தவித்தேன் உயிருடன், மறந்தேன் நான்
மறக்க நினைத்த நிகழ்வினைக் கூட

11.துணையானது
சில நினைவுகள் சிறிதாயினும்,
பல நினைவுகள் பெரிதாயினும்,
உன் நினைவுகளுடன் என் உயிர் சாயனும்
நாம் காதலில் மலர்வளையம் சூடனும்
காதல் அழியாதது, கனவோ களையாதது
மனமோ மாறாதது உன் நினைவே துணையானது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக