வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

பவித்திரம்


16.மெய்தான்
கண்மூடித் திறக்கும் போதெல்லாம் நீ வந்தாய்
கண்ணென்பதின்றியும் நீ என் நெஞ்சில் நின்றாய்
கண்கள் சொல்வது பொய்யானாலும்
கண்ணே நீ என்னை வென்றது மெய்தான்
இனி நம் வாழ்வோ தீபம் ஏற்றிய நெய்தான்

17.உன் பாசம் அறிந்தேன்
உன்னைக் கண்ட நொடியினிலே
நான் உனதானேன்!
உன்னைக் காணாத வலியினிலே
நான் உயிர் சாய்ந்தேன்!
உயிர் உருகும் நிலையினிலும்என்
உள்ளிதையம் சொன்னதே
உன் பெயரையமனும் தவறிவிட்டான்
பாசைக் கயிரைநானும்
அறிந்து கொண்டேன்உன்
திடமான பாச கயிரை உயிரே.

18.வீழாது
உந்தன் ஒரு சொல்லுக்காக
ஜென்மம் மாய்ப்பேன், என் மரணத்தை ஜெயிப்பேன்
உன்னுள் வாழ, மீண்டும் பிறப்பேன்
உன் மீது நான் கொண்ட காதல், என்னோடு சாகாது
உன்னுள் என் எண்ணம் தீண்டாமல் போகாது
என்றும் என் காதல் வீழாது.

19.தாமதம் வேண்டாம்
உன் விழியால், நான் வீழ்ந்ததும்
என் வழியில், நீ நடந்ததும்
நம் காலத்தை, நாம் வென்றதும்
நம்முள் நாம் இணைந்ததும்,
நாமே இணையானதும், நம் இதயம்
நம்மைத் துறந்ததும், சிறகைக் கொண்டு
பறந்ததும்
நம் கனவில் நாம் கரைந்ததும்
காதல் அல்லவா
இனியும் தாமதம் இன்றி என்னை
அள்ளிச் செல்லவாதலைவனே!.

20.உன்னை நான் சந்திக்கிறேன்
நான் சிந்திக்கும் ஒவ்வோரு நொடி சிந்திப்பிலும் நீ
என்னைச் சந்திக்கிறாய் நிலவாக
இவ்வுலகமே மாறியதே இருளாக! – என்னுடன்
இணைந்திடவே நீ வரவேண்டும்என்
ஜீவனின் ஒளியாக என் ஏழு
ஜென்மத்தின் வரமாக..
காலங்கள் கரைந்து ஓடினாலும்,
கவிதையில் வரிகள் மாறினாலும்,
உன்னுள்தான் நான் வாழவேண்டும்
உன்னைத்தான் நான் உணரவேண்டும்
உயிரெங்கே ஓடினாலும்..
உறவெல்லாம் வாடினாலும்..
உன்னுள்ளத்தில் உயரவேண்டும்
உன் மடியில்தான் விழவேண்டும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக