திங்கள், 17 பிப்ரவரி, 2020

பவித்திரம்

82.கனவு
ஒரு நாள் கண்ட கனவு
ஒரு நாள் ஆகும் நினைவு
இருபால் கொண்ட துணிவு
நம் மனம் பெற்ற அமைவு
பெற்றதோர் திருமணம் என்ற உறவு.

83.நட்பு
கனம் கண்டு தயங்காதிருந்தால்
குணம் கண்டு மறுக்காதிருந்தால்
இனம் கண்டு வெறுக்காதிருந்தால்
இறுதிவரை இணைந்திருப்பவர்கள் மட்டுமல்ல
இரண்டு நிமிடம் பேசிச் சிரித்தவர்களும் மட்டுமல்ல
இமையசைக்கும் நேரத்தில் இழந்தவர்களும் நண்பர்கள் தான்

84.என்னுள்ளே எண்ணங்கள்
ஏதோ எண்ணங்கள் எண்ணுள்ளே தோன்றியதே
அதை எண்ணித்தான் பார்க்கையிலே
என்னைத்தான் காணலயே
விடியலையே காணாமல் என் விழிகள் இருக்கிறதே
இருளைத்தான் போக்கிவிட்டால் - என்
இதயம்தான் தவிக்காதே
எரிமலையே வெடித்தாலும் என்னுள்ளே
பனித்துளியாய்ப் பொழிகிறதே
பனிமலையே சரிந்தாலும்உன்
வெப்பம் என்னைக் கொல்கிறதே
சூரியனாய் நீ சுட்டெரித்தால்
சுகமாய் நான் செத்தொழிவேன்
நிலவாய் நீ ஒளிதந்தால்
நீங்காமல் நின்றிருப்பேன்
நீதிசொல்ல நீ வந்தால்
குற்றங்கள்தான் வாழாதே
நிஜத்தைச் சொல்லி நீ சென்றால்
என் மனமும் தான் வாடாதே
சொல்லாமலே உன் விழிசொல்ல
மெளனம் கொண்டு நீயும் ஏங்காதே

85.உன் நினைவு வேண்டும்
உன்னைப் பார்த்த சில நாட்கள் கடக்க நிலையாகும் 
இன்னேரத்தில் நீ என்னைப் பிரிய நேர்ந்த காரணம் என்னவோ 
அறிய மனமில்லை
உன் அன்பில் வாழவே இந்நொடியும் எனக்கு ஆசை கொள்ளை
அழாத விழிகள் உலகில் இல்லை அழுகின்ற விழிகள் உனக்கு
கொள்ளை புன்னகை தேடியதே உன்னை என் இடம் எங்கேயென
புலம்பலும் கூடியதே நீதானே என்
உன்னுள் உணா்வாய் வாழ ஆசைப்பட்ட என் இதயத்திற்கு
நினைவாய் வாழும் தகுதியேனும் கிட்டுமோ தெரியவில்லை
ஆனால் உன் நினைவோ என் நிறைவிலும் கூடநிற்கும்
நீண்டநாள் கனவு, நனவாகும் என்று எதிர்பார்ப்பது வழக்கம்
ஆனால், இன்று என் சிலநாள் நினைவு நீண்டகாலக்
கனவிலும் வேண்டும்
உறக்கத்தில் அணையா உயிராக
உணர்வில் உந்துகோலாக
உன் உறவு வேண்டுமடி என் உயிர்தான் வாடுமடி

86.தேடல்
உன்னைக் காணாத காரணமே
என் கண்கள் கலங்க
உன்னுள் வாழ்கின்ற உணர்வுகளே
என் காதல் சிறக்க
உன்னகம் சேர நாடுகிறேன்
உன்னைத்தான் - நான்
இங்கு தேடுகிறேன்

87.உன்னைத் தொடர்வேன்
தொட முடியாத உயரத்தை
நான் உன்னால் தொட்டேன் அன்று
இன்று உன்னுடன் தொடர்கிறேன்
என் உயிருடன் என்றும் தொடர்வேன்

88.வீழ்ந்தேன்
என் கண்கள் என்ன பாவம் செய்தன
உன்னைக் காணாது தவிக்கின்றன
என் நெஞ்சம் கொண்ட தவத்தின் வரவோ
உன் நினைவு கொள்கிறது
ஏன் பஞ்சம்? உன்னைக் காணாமலா
நீ சொல் கொஞ்சம் இதுவே முடிவா ?
நம் காதல் என்ன சிதறிய கடுகா
விரும்பியே விடத்தினை விழுங்கிவிடவா
வீரத்தை இழந்து வீழிந்தேன்  தலைவா

89.ஓடு
உயிர்வாழு உறவோடு
உன்னதம் உன் உயர்வோடு
உமக்காக விரைந்தோடு
வேர்த்தாலும் கரைந்தோடு
காற்றோடு கலந்தோடு
காயங்கள் கடந்தோடு
தலைகனம் தவிர்த்தோடு
சரிந்தாலும் நீ மீண்டும் எழுந்தோடு

90.சிறந்தது
குயிலின் அழகை விட
மயிலின் அழகு சிறந்தது
மயிலின் குரலை விட
குயிலின் குரல் சிறந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக