ப.லட்சுமிப்பிரியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ப.லட்சுமிப்பிரியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 நவம்பர், 2019

கடினம்

கடினம் ,எது கடினம்?
என்னடா வாழ்க்கை
என்று புலம்புவதா...
அல்ல என்னால் முடியும்
என்று சொல்வதைவிட
செய்து பிறரை மெய்ச்
சிலுக்க வைப்பதா...
எது கடினம்...




செவ்வாய், 19 நவம்பர், 2019

கண்ணாமூச்சி ரே ரே

கண்ணாமூச்சி ரே ரே
கண்டுப்புடி யாரு...
உன் வாழ்வில் 
நல்லவர் யார்?
தீயவர் யார்?
உண்மை எது .
தீமை எது...
அனைத்தையும்
அறிந்திடு...
அன்பின் அடையாளமாக
உருவெடு.....
கண்ணாமூச்சி ரே ரே.....

சனி, 16 நவம்பர், 2019

விதை

விடாமல் முயற்சி செய்.....
விடியலுக்கு காத்திருக்காதே...
திணராமல் பயிற்சி செய்...
தயங்கி பின்வாங்கி 
விடாதே..
ஏன் எனில் ..
இங்கு எவரும் நம்மை 
வளர்த்துவிட மாட்டார்கள்....
நாமே தான் வளரவேண்டும்
அதனால் நீ...
வளர்ந்து பிறை வளர வைக்கும்....
விதையாக உருவெடு

திங்கள், 4 நவம்பர், 2019

காட்சி

திரைபடங்களை போன்றதே
நம் வாழ்வு...
தினந்தோறும் காட்சிகள்
ஏராளம்....
அதில் வில்லனை‌ போல்
பழிவாங்கும் எண்ணம் இல்லாமல்
காமேடியனை போல் அனைத்தையும்
நகைச்சுவையாக எண்ணி வாழவேண்டும்.....
அப்போது தான் வாழ்க்கை அழகாகும்

செவ்வாய், 15 அக்டோபர், 2019

அறிந்திடு

வித்தியாசங்களின் விதையாக
நீ இரு..........
விடையாக மட்டும் இல்லாமல்
கேள்வியாகவும் இரு...
தெரிந்ததை பகிர்ந்திடு......
அறிந்தை அள்ளிக்கொடு
ஏன் எனில்
அழிக்க முடியாத ஒரே விசியம்
கற்றதை கற்று தருதல்....
படித்தை பகிர்ந்து தருதல்...

திங்கள், 14 அக்டோபர், 2019

திருத்தம்

தினமும் பலரை சந்திக்கும் நாம்
சிலரிடம் சிலவற்றை கற்கிறோம்
அந்த கற்றலை சிலருக்கு கற்றும் தருகிறோம்....
ஆனால் அதை எவரும் நம் வாழ்வில்
பயன்படுத்துவதில்லை...
ஆனால் அறிவுரை கூற நம்மைவிட
ஆள் இங்கு இல்லை....
இனியாவது திருத்திக் கொள்வோம்....

வியாழன், 10 அக்டோபர், 2019

இருக்கும் வரை


விடையில்லா பயணம்
விடைகிடைத்தால் மரணம்
இதுதான் வாழ்க்கை...
அதனால் இருக்கும் வரை
இரக்கத்துன் இருப்போம்
இறந்த பின் ..
பலரின் இதயங்களில் வாழ்வோம்
எண்ணம் போல் வாழ்க்கை..
எண்ணம் போல தான் வாழ்க்கை

புதன், 9 அக்டோபர், 2019

கொலுசு

அவள்தான் !
அவளேதான்!!
என்று காட்டிக்கொடுக்கும் கொலுசே

வாசல் வரை வந்தவள்
வாழ்க்கை வரை வருவாளா

கண்களில் காதலைத் தூவிப்
பேனாவில் பதிலைக் கூறி

என் கையை அவள் கையோடு
இணைத்து நடைபோட ஆசை

அவள் வருவாளா

அவள் விரும்பவில்லை எனில்
இனி வரும் பிறவிகள் அனைத்திலும்
உன்னைப்போல் கொலுசாக மாறி
அவள் விருப்பத்தை மீறி
அவள் காலில் பற்றிக்கொண்டு
அவளுடன் இராஜ நடைப்போடுவேன்
பார்க்கிறாயா

திங்கள், 30 செப்டம்பர், 2019

பணிவு

எங்கு சென்றாலும் பணிவோடு நடக்கக் கற்றுக்கொள் 
ஏனெனில் பணிவே பல இடங்களில் பாராட்டைத் தேடித்தரும்....

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

நண்பா!! நண்பா!!

நண்பா நண்பா
துவண்டு போகாதே
தோல்வி அடைந்தாய் என்று

நண்பா நண்பா
திகைத்துப் போகாதே
வெற்றி பெற்றாய் என்று

நண்பா  நண்பா
தொலைத்து விடாதே
உன் திறமையை கேலி
செய்பவர்கள் முன்பு

உன்னை அனைவரும் புரிந்துகொள்வார்கள்
உன்னை அறிந்த பின்பு

நண்பா வா
செல்வோம் சரித்திரம் படைக்க

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

அவள் ❣️

உன் ஒற்றைப் பார்வையில்
என்னைக் கொள்ளையடித்து விட்டாயடி

உன் செய்கையால்
என் நேரங்கள் அனைத்தையும்
உனக்கானதாய் மாற்றி விட்டாயடி

உன் மூச்சினால்
என்னுள் காற்றாகச் சென்று
என்னவள் ஆனாயடி

உன் சிரிப்பினால்
என்னைச் சிறை பிடித்துவிட்டாயடி

என்னை எப்போது விடுவிப்பாய்

என் என்னவளின் விடையோ வியப்பில் தள்ளியது

என் கண்களால் தானே
உன்னைக் கொள்ளையடித்தேன்

என் கண்கள் மூடி நான் கல்லறையில்
உறங்கும் போது விடுவிக்கிறேன் என்றாள்

ப.லட்சுமிப்பிரியா
இளநிலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

திங்கள், 23 செப்டம்பர், 2019

துணிந்து எழுங்கள்

விடிந்ததும் வருவதோ  சூரியன்
விடிவதற்குள் இருப்பதோ சந்திரன்
இரண்டும் ஒரே இடத்தில் இருக்காது
ஆனால் இரண்டிலும் பயன் உண்டு

இரவில்  வெளிச்சம் தருவது சந்திரன்
பகலில் வெளிச்சம் தருவது சூரியன்
அதுபோலத்தான் நம் வாழ்வில்
வெற்றியும் தோல்வியும்
வெற்றி பெற்றால் வேகம்
தோல்வி அடைந்தால் விவேகம்

அதனால் எதையும் கண்டு துவண்டுபோகாதீர்
துணிந்து எழுங்கள்
வாழ்ந்து காட்டலாம்


ப.லட்சுமிப்பிரியா, 
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்.

ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

நாடி!ஓடி !வாடாதே!

எப்போதும் யாரையும் நாடி
அவர்களுக்கு ஏற்றபடி ஓடி
அவர்களுக்கு என வாழாதிர்கள்
எதையும் தானாக செய்யும் ஆற்றலை
வளர்த்து கொள்ளுங்கள்.....
பிறர் மீது வைக்கப்படும் நம்பிக்கையை
உங்கள் மீது வைத்து பழகுங்கள்
பிறரை நேசிக்கும் நீங்கள்
முதலில் உங்களை நேசிங்கள்
எதற்காகவும் ஒருவரை தேடி செல்லாதிர்கள்.‌.....
தேவை என்றால் தேடி வருவார்கள்...
நீங்களாக சென்று, பிறகு
வாடி நிக்காதிர்கள்...

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

தேவை

அதிகம் பேசாதே
அடக்கம் தேவை
விவாதம் செய்யாதே
விவேகம் தேவை
தயக்கம் காட்டாதே 
தைரியம் தேவை
எதையும் எண்ணாதே
எளிமை தேவை
அலட்சியம் கொள்ளாதே
ஆற்றல் தேவை
முயற்சியை விடாதே
பயிற்சி தேவை
இவை எதையும் மறந்துவிடாதே
ஏனெனில் 
வாழ இவையே தேவை....!!!!!!!!!

ப.லட்சுமிப்பிரியா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

வியாழன், 19 செப்டம்பர், 2019

இப்படிக்கு அனுபவம்

எப்போதும் துணையாக இரு,
ஒருபோதும் துரோகியாக இருக்காதே,
எப்போதும் நண்பனாக இரு,
ஒருபோதும் நயவஞ்சகனாக மாறிவிடாதே,
எப்போதும் அன்பாக இரு ,
ஒருபோதும் அடிமையாக இருக்காதே,
எப்போதும் விழிப்புடன் இரு,
ஒருபோதும் சலுப்போடு இருக்காதே,
எப்போதும் கேள்விக்கு பதிலாக இரு,
ஒருபோதும்  குழப்பத்தின் பதிலாக, இருக்காதே,
எப்போதும் தேடலில் இரு,
ஒருபோதும் தொலத்ததை தேடாதே,
இப்படி அறிவுரை ஆற்றியது
அனுபவம்!!