வெள்ளி, 27 செப்டம்பர், 2019

அவள் ❣️

உன் ஒற்றைப் பார்வையில்
என்னைக் கொள்ளையடித்து விட்டாயடி

உன் செய்கையால்
என் நேரங்கள் அனைத்தையும்
உனக்கானதாய் மாற்றி விட்டாயடி

உன் மூச்சினால்
என்னுள் காற்றாகச் சென்று
என்னவள் ஆனாயடி

உன் சிரிப்பினால்
என்னைச் சிறை பிடித்துவிட்டாயடி

என்னை எப்போது விடுவிப்பாய்

என் என்னவளின் விடையோ வியப்பில் தள்ளியது

என் கண்களால் தானே
உன்னைக் கொள்ளையடித்தேன்

என் கண்கள் மூடி நான் கல்லறையில்
உறங்கும் போது விடுவிக்கிறேன் என்றாள்

ப.லட்சுமிப்பிரியா
இளநிலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக