திங்கள், 30 செப்டம்பர், 2019

மறைந்தாயோ ராணுவ வீரனே

தாயை அழுகையில் சுட்டு
தந்தையின் ஆறுதலை ஏற்று
அண்ணனிடம் தோள்களில் தட்டு
தங்கையிடம் இடத்தினை விட்டு
என் தாய் என் வீடு என் திசை
என்பவற்றை மறந்து
எண்திசைகளும் என் தாய் நாடே
என்பதனை உணர்ந்து
எத்திசைக்குச் செல்கிறேன் என்ற
தெளிவினை இழந்து
ஆசைகள் அனைத்தையும் அடக்கி
ஐம்புலன்களை ஆளுமைப்படுத்தி
அன்றாடம் உன்னை நீயே வருத்தி
உன் மனதை நேர் வழிப்படுத்தி
அறிவினைத் திருத்தி அன்று நீ சென்றாய்
இராணுவ வீரனாய் எமக்காகக்
காட்டில் பதுங்கி,கடலினில் மூழ்கி
மலையினில் ஒதுங்கி வெயிலினில் வருந்தி
பாலை வானத்திலும் பாடு பட்டாய்
நாட்டிற்காக நீ உன் உயிரையே விட்டாய்
நீர் எம்முறவாக இருந்திருந்தால் கூட மறந்திருப்போம்
ஆனால் இன்று எங்களுள் உணர்வென ஆகிவிட்டீர்கள்
உங்கள் ஆத்மா இன்று எங்கள் மனதில்
மகாத்மாவாக மாறிவிட்டது
எங்கள் அஞ்சலியை அன்பு
வேண்டுகோளாக விடுகிறோம்
நீர் அதனை ஏற்க வேண்டி நாங்கள்
இங்கு அமைதி காக்கிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக