இயற்பியல் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயற்பியல் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 மார்ச், 2017

விண்வெளி களஞ்சியம்



விண்வெளி களஞ்சியம்



பீடல்ஜீயஸ் (BETELGEUSE)

விண்வெளியில் எராளமான நட்சத்திர குழுக்கள் உள்ளன. அவற்றில் நேர்த்தியுடன் அமைந்த நட்சத்திர குழு ‘ஆல்பா ஒரியனிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திரக்குழு பூமியில் இருந்து 640 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரக்குழுவில் உள்ள ஒரு நட்சத்திரம் தான் பீடல்ஜீஸ்.
இந்திய வானியல் மரபு மற்றும் ஜோதிட மரபுப்படி தமிழில் இது ‘திருவாதிரை’ என்றும் ’சிவப்பு அரக்க விண்மீன்’ என்றும் அழைக்கப்படுகிறது . இரவு நேரத்தில் வானில் இது சிவப்பு புள்ளியாக காட்சியளிக்கும். இந்த நட்சத்திரத்தின் ஆயுள் இன்னும் பத்து லட்சம் ஆண்டுகளில் முடிந்துவிடும் என்றும் அதன்பிறகு இது வெடித்துச்சிதறும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
தடைபடும் சுழல் பால் மண்டலம்;
விண்வெளியில் நமது சூரியக்குடும்பம் உள்பட பல் வேறு கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் கொண்ட அண்ட வெளிக்கூட்டங்கள் உள்ளன. இந்த அண்டவெளிக்கூட்டங்கள் இருக்கும் பகுதி பால்வெளி வீதி (மில்கி வே) என்று அழைக்கப்படுகின்றன. இதில் உருண்டையான வடிவத்தில் நட்சத்திரங்கள் கூட்டம் அமைக்கப்படுகின்றன. இந்த நட்சத்திரங்கள் ஒரு மத்திய சட்டத்தின் பிணைப்பில் அமைந்துள்ளது போல இந்த மண்டலம் உருவாகி இருக்கிறது. இது தடைபடும் சுழல் பால் மண்டலம் என்று அழைக்கப்படுகிறது.


பியோன் (BION):
சோவியத் யூனியன் கூட்டமைப்பின் (ரஷ்யா) விண்வெளி ஆய்வுத் திட்டத்தின் பெயர் தான் “பியோன்” என்பதாகும். நுண்ணுயிர்கள் தொடர்பான ஆய்வுகளை விண்வெளியில் நடத்தியதால் அதற்கு இந்த பெயர் வந்தத . 1973 முதல்1966 வரை இந்த ஆய்வுகளை ரஷ்யா நடத்தியது. இந்த காலகட்டத்தில் பல்வேறு உயிரிகள் கொண்ட செயற்கை கோள்களை ரஷ்யா விண்வெளிக்கு அனுப்பி ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வுக்காக முதலில் அனுப்பட்ட செயற்கைகோளின் பெயர் காஸ்மோஸ் 605. இதில் பூஞ்சை காளான், பூச்சின், எலிகள் மற்றும் ஆமைகள் போன்றவை அனுப்பி வைக்கப்பட்டன. இந்த உயிரினங்கள் விண்வெளியில் எப்படி செயல்படுகின்றன என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்றது. இந்த உயிரினங்கள் சுமந்து கொண்டு காஸ்மோஸ் 605 செயற்கைகோள் விண்ணில் செலுத்தி வைக்கப்பட்டது. சுமார் 22 நாட்கள் இந்த செயற்கைகோள் விண்ணில் சுற்றிவிட்டு பூமிக்கு திரும்பியது.


நீல நிலவு (BLUE MOON);

ஒரு மாதத்தில் இரண்டு பவுர்ணமிகள் வந்தால் இரண்டாவதாக வரும் பவுர்ணமி ‘நீல நிலவு’ என்று அழைக்கப்படுகிறது. இது போன்று நிகழ்வு ஒவ்வொரு 2% ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது. இதனால் தான் அபூர்வமாக நடைபெறும் நிகழ்வுகளை ‘ஒன்ஸ் இன் எ புளூ மூன்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன.


பெர்னார்ட் எட்வர்டு எமர்சன் (BARNARD EDWARD EMERSON):
பெர்னார்ட் எட்வர்டு எமர்சன் அமெரிக்கா வானியல் ஆய்வாளர் ஆவார். 1829 ம் ஆண்டு இவர் வானில் உள்ள 16 வால் மீன்களை கண்டுபிடித்தார். அதுபோல ஜீபிடர் கோளுக்கு துணைக்கோள் இருப்பதையும் கண்டுபித்தவர் இவர் தான். 200 ஆண்டுகளில் அதிகபட்சமாக கோள்களை கண்டுபிடித்தவர் என்ற பெருமையும் உண்டு. சூரியனுக்கு அருகே உள்ள நட்சத்திரம் ஒன்று குறித்து அவர் ஆய்வுகள் நடத்தினார். இதனால் அந்த நட்சத்திரத்திற்கு இவரது பெயரான பெர்னார்ட் என்ற பெயரே சூட்டப்பட்டது.



                                 



செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

ஒன்பது வருட காத்திருப்பு, இஸ்ரோவின் பார்வையில் பட்ட 'ப்ரதம்'..!


மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (Indian Institute of Technology Bombay - IIT-B) 'விண்மீன் கனவுகள்' இறுதியாக ஒன்பது ஆண்டு காத்திருப்பிற்கு பின், அடுத்த மாதம் விண்ணை தொட இருக்கிறது.
10 கிலோ எடைகொண்ட அந்நிறுவனத்தின் 'மாணவர் செயற்கைக்கோள்' (Studebt Satellite) ஆன 'ப்ரதம்' (Pratham), இஸ்ரோ நான்கு கட்ட போலார் எஸ்.எல்.வியை (பி.எஸ்.எல்.வி.) உதவியுடன் வரும் செப்டம்பர் மாதம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்த இருக்கிறது.
இஸ்ரோவின் முக்கிய செயற்கைக்கோள்கள் ஆன ஸ்காட்சாட் (ScatSat) மற்றும் பிற சில முக்கியமான செயற்கைக்கோள்களுடன் சேர்த்து ப்ரதம் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. முதலில் 2007-ஆம் ஆண்டில் இஸ்ரோவினால் உறுதி செய்யப்பட்ட 'ப்ரதம்' செயற்கைக்கோள் பல்வேறு காரணங்களுக்காக தாமதங்கள் உண்டாகி , அதன் வெளியீட்டு அட்டவணை தேதியானது பின்தங்கிகொண்டே போனது.
'ப்ரதம்' ஒரு அயன்மண்டலத்துக்குரிய ஆய்வு செயற்கைக்கோள் என்பதும் இதன் முக்கிய பணி பூமியின் மண்டிலத்தின் (Earth's ionosphere) எலக்ட்ரான்களை எண்ணுவதென்பதும் குறிப்பிடத்தக்கது. நான்கு மாத பணி காலம் கொண்ட ப்ரதம் விண்வெளியில் 720 கி.மீ. என்ற உயரத்தில் நிறுத்தப்படும். அதன் தரவுகள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் மற்றும் ஜி.பி.எஸ் தகவல்களில் உள்ள பிழைகளை திருத்த உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

உலக வானொலி தினம்..!!






நவீன உலகில் டிவி,மொபைல்,ஸ்மார்ட்போன்.ஐ.பேட் மற்றும் இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு சாதனங்கள் அதிகரித்துவிட்ட போதிலும் வெகுஜன ஊடகத்தின் முன்னோடியாக திகழ்வது வானொலி தான்.

இத்தகைய அரிய கண்டுப்பிடிப்பை இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற இத்தாலியைச் சேர்ந்த குலீல்மோ மார்க்கோனி என்பவர் கண்டறிந்தார்.


தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு மிகவும் அளப்பரியதாகும்.இன்று உலகம் முழுவதும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் உள்ளன.

முந்தைய காலங்களில் பேரிடர் குறித்த தகவல்கள், போர் அறிவிப்புகள் போன்றவற்றை விரைந்து அளித்தது வானொலி என்றால் அது மிகையாகாது.

அத்தகைய வானொலியின் சிறப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்தும் விதமாக 2012-ம் ஆண்டு ஐ.நாவால் பிப்ரவரி 13-ம் தேதி உலக வானொலி தினம் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.


இத்தினத்தின் நோக்கம் என்னவென்றால் குறைந்த செலவில் தகவல்களை பரப்பி ஒலிபரப்பாளர்களிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தி வானொலி வலையமைப்புக்களை ஊக்கப்படுத்துவதே ஆகும்.

செவ்வாய், 15 டிசம்பர், 2015

ஆய்வகத் திறப்பு விழா

 கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாியின் வேதியியல் மற்றும் இயற்பியல் துறைகளின் ஆய்வகத்தை வேதியியல் துறையில் நோபல் பரிசு பெற்ற அறிஞா் இராா்ட் ஊபா் மற்றும் கெக்லா் ஆகியோா் திறந்து வைத்து மாணவா்களிடம் கலந்துரையாடினா்.






Laboratory Opening Ceremony…….
KSR College of Arts and Science for Women has organized Lab Opening Ceremony on 10.12.2015. Our honourable chairman Lion Dr. K. S. Rangasamy, Our reputed managing trustee Mr. R. Srinivasan and Our dignified trustee Ms. Kavitha Srinivasan were inaugurated the grand ceremony. It is really a great honour for our Institution to have the presence of the great Nobel Laureates. Dr. h. c mult. Robert Huber, Nobel Laureate, 1988, Germany has opened our Chemistry Laboratory and Dr. K. E. Keglar, Nobel Laureate has opened our Physics Laboratory. Our students have interacted with the legends and clarified their doubts. The chief guests’ address impressed our students and stimulated them to research in multiple ways in their field. Our distinguished principal Dr. M. Karthikeyan felicitated the gathering. The respected Principals, Professors and Students from the sister concerns of KSR Institution have contributed in the august gathering.