வியாழன், 6 செப்டம்பர், 2018

அன்புள்ள ஆசானுக்கு

ஆசிரியர் தின விழாவிலே எங்கள் கல்லூரி முதல்வருக்காய் நான் எழுதி அவர் முன் அரங்கேற்றம் செய்த என் கவிதை...
கமல்ஹாசனுக்கு அடுத்து பல முறை தசாவதாரம் எடுத்தவர் நீங்கள் தான்‌...
தாய் தந்தைக்கு மகனாய்...
மனைவிக்கு ஏற்ற கணவராய்...
மகனுக்கும் எங்களைப் போன்ற மகள்களுக்கும் தந்தையாய்...
ஆசிரியர்களுக்கெல்லாம் நண்பணாய்...
ஆசிரியைகளுக்கெல்லாம் அண்ணணாய்...
தாளாளருக்கு தனயனாய்...
துணைத் தாளாளருக்கு தளபதியாய்...
புத்தகங்கள் எழுதிட்ட எழுத்தாளராய்...
கவி புனையும் கவிஞராய்..கலைஞராய்...
திரையில் நடிக்க தெரிந்த நடிகராய்...
மலரினும் மெல்லிய இதயம் படைத்திட்ட நல் இதயங்களே எனத் தொடங்கி பேச்சால் கட்டிப் போடும் பேச்சாளராய்...
பல அவதாரம் எடுத்திட்டவரே...
அவதாரங்கள் தொடரட்டும்...
அன்பு பெருகட்டும்...
ஆயுள் நீளட்டும்...
பல்லாண்டுகள் தொடரட்டும் உங்கள் அறியாமை இருளகற்றும் பணி.
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ஐயா....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக