வெள்ளி, 10 ஜனவரி, 2020

என்னுள் வந்த மாற்றமோ

நீ என்னைப் பார்த்தபோது
உன் விழி அம்பு எந்தன்
இதயத்தைத் துளைத்தது

கண்களில் கண்ணீராய் வழிந்தது

நான் பார்த்த இடம் எங்கும்
இருள் சூழ்ந்து இருந்தது
உன் பார்வை பட்டதும்
ஒளியாக அனைத்து இடங்களும் மின்னின

நாட்கள் குறைந்தாலும்
உன்னைப் பார்த்த பார்வை குறையவில்லை
இது எல்லாம் என்னுள் வந்த மாற்றமோ

1 கருத்து: