திருமதி சசிகலா சுப்பிரமணியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருமதி சசிகலா சுப்பிரமணியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 பிப்ரவரி, 2020

தன்னம்பிக்கை

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்!
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்!
உள்ளத்தில் உள்ளது தான் உலகம் கண்ணா!
இதை உணர்ந்து கொண்டால் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா!

- கவியரசு கண்ணதாசன்

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

சிந்தனை

பொய் சொல்வது இரண்டாவது தீமைதான்.
ஆனால் கடன் வாங்குவதே முதலாவது தீமை.

கடுமையான போராட்டத்தின் பலனாகக்
கிடைக்கும் வெற்றிகளே மதிப்புடையவை.

வியாழன், 13 பிப்ரவரி, 2020

சிந்தனை

வெற்றியின் ரகசியம் எடுத்த செயலில் நிலையாக நிற்பது தான்.
பல அறிஞர்களுடன் உறவாடினால் நீயும் அறிஞனாவாய்.

புதன், 12 பிப்ரவரி, 2020

தமிழ்மொழி

அன்னை சொன்ன மொழி
ஆதியில் பிறந்த மொழி
இணையத்தில் இயங்கும் மொழி
ஈடிலாத் தொன்மை மொழி
உலகம் போற்றும் மொழி
ஊர்கூடி வியக்கும் மொழி
எட்டுத்திசையும் பரவிய மொழி
ஏட்டிலும் எழுதும் மொழி
ஐயத்தை நீக்கும் மொழி
ஒற்றுமை வளர்க்கும் மொழி
ஓதியே உயர்ந்த மொழி
ஔவையார் வளர்த்த மொழி
அஃதே நம் தமிழ்மொழி

திங்கள், 10 பிப்ரவரி, 2020

ஒரு உலக சரித்திரம்

தமிழ் என்பது உணர்வல்ல
         ஒரு மண்ணின் உரிமம்
தமிழ் என்பது பேச்சல்ல
         ஒரு இலக்கிய வாழ்விடம்
தமிழ் என்பது எழுத்தல்ல
         ஒரு இலக்கணப் பிறப்பிடம்
தமிழ் என்பது கலையல்ல
         ஒரு கருவின் உறுப்பிடம்
தமிழ் என்பது பெருமையல்ல
        ஒரு வாழ்வின் அடையாளம்

சனி, 8 பிப்ரவரி, 2020

பழமொழி

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!
     1.நோயின்மை
     2.கல்வி
     3.செல்வம்
     4.தானியம்
     5.அழகு
     6.புகழ்
     7.பெருமை
     8.இளமை
     9.நுண்ணறிவு
     10.குழந்தை செல்வம்
     11.நல்ல வலிமை
     12.மனதில் துணிவு
     13.நீண்ட ஆயுள்
     14.நல்ல ஊழ்
     15.எடுத்த காரியத்தில் வெற்றி
     16.இன்ப நுகர்ச்சி

வியாழன், 6 பிப்ரவரி, 2020

மரங்களின் பெயர்கள்

நேற்றைய தொடர்ச்சி
மரங்களின் பெயர்கள்
       11.வன்னி
       12.விளா
       13.வாழை
       14.மாதுளம்
       15.கடம்பு
       16.மருதாணி
       17.தாரைமரம்
       18.தேத்தாங்கொட்டை
       19.கருவேப்பிலை
       20.சப்போட்டா

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

மரங்களின் வகைகள்

மரங்களின் வகைகள் 
       1.முருங்கை
       2.வாதநாராயணம்
       3.தென்னை
       4.கொய்யா
       5.வாதா மரம்
       6.எலுமிச்சை
       7.கமலா
       8.மருதம்
       9.குமிழ்மரம்
       10.மகிழம்
       11.பாரிஜாதம்
       12.தான்றிமரம்
       13.அகத்தி
       14.சந்தன வேம்பு
       15.கோங்கு

வெள்ளி, 31 ஜனவரி, 2020

இன்றைய தினம்

31.01.2020 (வெள்ளி) 
இன்றைய தினம்
       நகைச்சுவை நடிகர் நாகேஷ் நினைவு தினம்.
நேற்றைய தொடர்ச்சி 
சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் 
       21.பாரிமகளிர்
       22.பூங்கன் உத்திரையார்
       23.பூதப்பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு
       24.பேய்மகள் இளவெயினி
       25.பொதும்பிற் புல்லாளங் கண்ணியார்
       26.பொன் முடியார்
       27.பொன் மணியார்
       28.போந்தப் பசலையார்
       29.மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
       30.மாற்பித்தியார்
       31.மாறோக்கத்து நப்பசலையார்
       32.முடத்தாமக் கண்ணியார்
       33.முள்ளியூர்ப் பூதியார்
       34.வருமுலையாரித்தி
       35.வெண்ணிக் குயத்தியார்
       36.வெண்பூதியார்
       37.வெண்மணிப் பூதியார்
       38.வெள்ளி வீதியார்
       39.வெள்ளைமாளர்
       40.வெறி பாடிய காமக்கண்ணியார்
விவேகானந்தர் 
       உன்னை நீயே பலவீனம் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.
அப்துல்கலாம்
       சூரியனைப் போல ஒளிர வேண்டுமென்றால், முதலில் சூரியனைப் போல்
       எரிய வேண்டும்.
இன்றைய வெளிச்சம் 
       பணத்தால் பசியைப் போக்க முடியும், துக்கத்தைப் போக்க முடியாது.
       வருத்தமோ, துன்பமோ இன்றி எவராலும் எளிதில் புகழைப் பெற முடியாது.

வியாழன், 30 ஜனவரி, 2020

இன்றைய தினம்

30.01.2020 (வியாழன்)
இன்றைய தினம்
        ராமலிங்க அடிகள் நினைவு தினம்.
        தியாகிகள் தினம்
சங்ககாலப் பெண்பாற் புலவர்கள்
        1.அஞ்சியத்தை மகள் நாகையார்
        2.அஞ்சிலஞ்சியார்
        3.அள்ளூர் நன்முல்லையார்
        4.ஆதிமந்தியார்
        5.ஊன் பித்தையார்
        6.ஒக்கூர் மாசாத்தியார்
        7.ஔவையார்
        8.கச்சிப்பேட்டு நன்னாகையார்
        9.கழார்க்கீரன் எயிற்றியார்
       10.காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்
       11.காமக்கணிப் பசலையார்
       12.காவற்பெண்டு
       13.குமிழி ஞாழலார் நப்பசலையார்
       14.குறமகள் இளவெயினி
       15.குறமகள் குறியெயினி
       16.குன்றியனார்
       17.தாயங்கண்ணியார்
       18.நக்கண்ணையார்
       19.நல்வெள்ளியார்
       20.நெடும் பல்லியத்தை       -   தொடரும்...
அப்துல்கலாம்
      வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், சிந்திப்பதை
      நிறுத்தாதே...அதுதான் மூலதனம்.
அன்னை தெரசா
      பிறருடைய துன்பத்தை நீக்கும் வல்லமை உனக்கு வர வேண்டுமானால்
      அத்துன்பத்தை நீயும் அனுபவித்து உணர வேண்டும்.
இன்றைய வெளிச்சம்
      உயர்ந்த இலட்சியங்களைக் கொண்டே வாழ்க்கையே தலை சிறந்த
      பெருமையுள்ள வாழ்க்கை.
      நல்லொழுக்கம் மட்டுமே புயலுக்கும் அசையாமல், உறுதியாக நிற்கும்.

புதன், 29 ஜனவரி, 2020

இன்றைய தினம்

29.01.2020 (புதன்)
இன்றைய தினம் 
      இந்திய செய்தித்தாள் தினம்.
நிகண்டுகள் 
      1.திவாகர நிகண்டு
      2.பிங்கலந்தை நிகண்டு
      3.அகராதி நிகண்டு
      4.சூடாமணி நிகண்டு
      5.உரிச்சொல் நிகண்டு
      6.அரும்பொருள் விளக்க நிகண்டு
      7.பொருள் தொகை நிகண்டு
      8.பொதிகை நிகண்டு
      9.உசித சூடாமணி நிகண்டு
      10.நாபதீப நிகண்டு
விவேகானந்தர் 
       உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும்
      அணுகக்கூடாது.
இன்றைய வெளிச்சம் 
       எல்லோரையும் நம்புவது ஆபத்து, ஒருவரையும் நம்பாதிருப்பது பேராபத்து.
       செலவுகள் யாவற்றிலும் காலத்தை வீணாக்குதலே அதிக செலவும்,
       ஊதாரித்தனமுமாகும்.

வெள்ளி, 24 ஜனவரி, 2020

இன்றைய தினம்

24.01.2020 (வெள்ளி)
இன்றைய தினம்
         தேசிய பெண் குழந்தைகள் தினம்
         இந்திய அணுக்கருவியலின் தந்தை ஹோமி பாபா நினைவு தினம்.
பன்னிரு ஆழ்வார்கள் 
         1.பொய்கையாழ்வார்
         2.பூதத்தாழ்வார்
         3.பேயாழ்வார்
         4.திருமழிசை ஆழ்வார்
         5.நம்மாழ்வார்
         6.மதுரகவி ஆழ்வார்
         7.குலசேகர ஆழ்வார்
         8.பெரியாழ்வார்
         9.ஆண்டாள்
         10.திருபாண் ஆழ்வார்
         11.தொண்டரடிப்பொடி ஆழ்வார்
         12.திருமங்கை ஆழ்வார்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்   அக நூல்கள்  - 6 
          1.கார் நாற்பது
          2.ஐந்திணை ஐம்பது
          3.ஐந்திணை எழுபது
          4.திணைமொழி ஐம்பது
          5.திணைமாலை நூற்றைம்பது
          6.கைந்நிலை
புறநூல்  - 1
          1.களவழி நாற்பது
தன்னம்பிக்கை 
          உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே... தாழ்வு மனப்பான்மை
          வரும்.! உனக்குக்கீழே உள்ளவனை ஏளனமாய்ப் பார்க்காதே...
          தலைக்கனம் வரும்.! உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு...
          தன்னம்பிக்கை வரும்...!
இன்றைய வெளிச்சம் 
          உங்களைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையே வெற்றி தரும்.
          நம்பிக்கை மட்டும் இருந்தால் போதாது சிந்திக்கவும் தெரிய வேண்டும்.
         அன்பும் இரக்கமும் இரட்டைக் குழந்தைகள்.      

வியாழன், 23 ஜனவரி, 2020

இன்றைய தினம்

23.01.2020 (வியாழன்) 
இன்றைய தினம் 
         நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்ததினம்
விவேகானந்தர்
         நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது.
திருவள்ளுவரைக் குறிக்கும் வேறு பெயர்கள்
        1.தெய்வப்புலவர்
        2.நாயனார்
        3.முதற்பாவலர்
        4.பெருநாவலர் 
        5.செந்நாப் போதார்
        6.மாதானுபங்கி
        7.நான்முகனார்
        8.தேவர்
  திருக்குறளின் வேறு பெயர்கள் 
         1.திருவள்ளுவம்
         2.தமிழ்மறை
         3.பொதுமறை
         4.முப்பால் நூல்
         5.பொய்யாபொழி
         6.தெய்வ நூல்
         7.வாயுறை வாழ்த்து
         8.உத்தரவேதம்
தன்னம்பிக்கை
         நிமிர்ந்து நிற்பதெல்லாம் பலம் என்றோ,வளைந்து கொடுப்பதெல்லாம்
         பலவீனம் என்றோ முடிவெடுத்து விடாதீர்கள். நிமிர்ந்து நிற்கும் வேலை
         விட, வளைந்து கொடுக்கும் வில் அம்பு அதிக தூரம் பாயும்....!!
இன்றைய வெளிச்சம் 
         ஊக்கத்துடன் உழைத்தால் அதிர்ஷ்டம் நம் வீட்டுக் கதவைத் தட்டும்.
         ஒரு நூல் நிலையக் கதவு திறக்கும் போது, ஒரு சிறைச்சாலைக் கதவு
         மூடப்படுகிறது.

புதன், 22 ஜனவரி, 2020

இன்றைய தினம்

22.01.2020 (புதன்)
இன்றைய தினம் 
       தமிழறிஞர் தி.வே.கோபாலையர் பிறந்த தினம்.
புறநானூறு பாடிய பெண்பாற் புலவோர் 
       1.ஔவையார்
       2.பாரிமகளிர்
       3.வெண்ணிக் குயத்தியார்
       4.ஒக்கூர் மாசாத்தியார்
       5.காவற்பெண்டு
பத்துப்பாட்டு நூல்கள்
        1.திருமுருகாற்றுப்படை
        2.பொருநராற்றுப்படை
        3.சிறுபாணாற்றுப்படை
        4.பெரும்பாணாற்றுப்படை
        5.முல்லைப்பாட்டு
        6.மதுரைக்காஞ்சி
        7.நெடுநல்வாடை
        8.குறிஞ்சிப்பாட்டு
        9.பட்டினப்பாலை
        10.மலைபடுகடாம்
பௌத்த பக்தி இலக்கியங்கள்
        1.மணிமேகலை
        2.குண்டலகேசி
        3.விம்பிசாரக்கதை
        4.அபிதர்மாவதாரம்
        5.திருப்பதிகம்
        6.சித்தாந்தத்தொகை
தன்னம்பிக்கை
       தேதி போல உங்கள் கவலைகளை தினமும் கிழித்து எரிந்துவிடுங்கள்.
       ஒவ்வொரு நாளும் உங்களுக்கானதாக எண்ணிப் புதிதாய் வாழுங்கள்.
இன்றைய வெளிச்சம் 
    நாகரிகம் முன்னேறுவது புத்தகங்களால் தான்.
    சோதனை அதிகமாக இருந்தால் சுகம் பெரிய அளவில் வரப்போகிறது என்று
    அர்த்தம்.
    ஒருவனின் அறிவை அறிந்து கொள்வதற்கு அவனது பேச்சே அளவுகோல்.

செவ்வாய், 21 ஜனவரி, 2020

இன்றைய தினம்

21.01.2020 (செவ்வாய்)
இன்றைய தினம்
            இந்திய விடுதலை போராட்ட வீரர் ராஷ் பிஹாரி போஸ் நினைவு தினம்.
குறுந்தொகை பாடிய பெண்பாற் புலவோர் 
            1.ஆதிமந்தி
            2.ஊன்பித்தை
            3.ஔவையார்
            4.நன்னாகையார்
            5.வெண்பூதியார்
            6.வெள்ளிவீதியார்
இலக்கண நூல்கள்
            1.அவிநயம்
            2.யாப்பருங்கலம்
            3.யாப்பருங்கலக்காரிகை
            4.நேமிநாதம்
            5.வச்சணந்திமாலை
            6.நன்னூல்
            7.நம்பியகப்பொருள்
நற்றிணை குறிக்கும் மன்னர்கள்
            1.அதியமான் அஞ்சி
            2.அழிசி
            3.ஆய் அண்டிரன்
            4.உதியன்
            5.ஓரி
            6.காரி
            7.குட்டுவன்
            8.சேந்தன்
            9.நன்னன்
            10.தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.
தன்னம்பிக்கை
         வருங்காலத்தைப் பற்றி வருடங்களாய் யோசிப்பதை விட
         நிகழ்காலத்தைப் பற்றி நிமிடங்கள் சிந்தித்தால் போதும் வாழ்வை
         வென்றிடலாம்..!
இன்றைய வெளிச்சம்
        புத்தகங்கள் நிறைந்த வீடு மலர்கள் நிறைந்த தோட்டம் போன்றது.
        உடலுக்குத் தேகப் பயிற்சிபோல மனதிற்குப் புத்தகங்கள்.

இன்றைய தினம்

இன்றைய தினம்
20.01.2020 (திங்கள்) 
           நிலாவில் இறங்கிய இரண்டாவது மனிதர் பஸ் ஆல்ட்ரின் பிறந்த தினம்.
அகத்தியரின் மாணவர்கள்  
            1.தொல்காப்பியன்
            2. அதங்கோட்டாசான்
            3.அவிநயன்
            4.கழா அரம்பன்
            5.நந்தத்தன்
            6.சிகண்டி
            7.துராலிங்கன்
            8.வையாப்பிகன்
            9.வாய்பிகன்
            10.பனம்பாரனார்
            11.செம்பூட்சேய்
            12.பெரிய காக்கைப் பாடினி
அப்துல்கலாம்
        பிஞ்சு மனதில் பதியும் நற்கல்வி வாழ்வின் முழுமைக்கும் நல்லுணர்வு   
       என்ற தன்மையின் தாக்கத்தை உருவாக்கும்.
தன்னம்பிக்கை
       யாரிடமும் எதையும் கற்றுக் கொள்ள வெட்கப்படாதே.. கற்பதற்கு
       வெட்கப்பட்டு தலை குனிந்தால் பின் கரையேறுவதற்குத் தலை நிமிரவே
       முடியாது...!
இன்றைய வெளிச்சம்
      இயற்கை என்ற புத்தகத்தின் ஆசிரியர் இறைவன்.