திங்கள், 1 பிப்ரவரி, 2016

உயர்ந்தவர் வழுவார்



                
பழமொழி

                       முன்றுறையரையனார்

ஒற்கத்தாம் உற்ற விடத்தும் உயர்ந்தவர்                                                          நிற்பவே நின்ற நிலையின்மேல்வற்பத்தால்                               தன்மேல் நலியும் பசிபெரி தாயினும்                                         புன்மேயா தாகும் புலி.( பாடல் எண் - 284)


 


புன்மேயா தாகும் புலி என்பது பழமொழி.  பஞ்சத்தால் புலியின் பசி பெரிதாகி அதனை வருத்தும் காலத்தும், புலியானது சென்று புல்லினை ஒருபோதும் மேய்வதில்லை. அதுபோலத் தாம் வறுமையுற்ற காலத்தினும் உயர்ந்த பண்புடையவர்கள் இழிந்த செயல்களைச் செய்யமாட்டார்கள்

 “ புலி பசித்தாலும் புல்லைத் தின்னாததுபோல உயரந்தோர் வறுமையடைந்தாலும் இழிந்த செயல்களைச் செய்ய மாட்டார்கள்”.


1 கருத்து: