புதன், 2 மார்ச், 2016

நாலடியார்

         Image result for நாலடியார்

அறியாமையை நீக்கும் மருந்து;

        பாடல்:

            இம்மை பயக்குமால்; ஈயக் குறைவு இன்றால்;              
            தம்மை விளக்குமால்; தாம் உளராக் கேடு இன்றால்;
            எம்மை உலகத்தும் யாம் காணேம், கல்விபோல்
            மம்மர் அறுக்கும் மருந்து.

          பொருள்;

                 கல்வி இவ்வுலக இன்பத்தைத் தரும் பிறர்க்குத் தருவதால் குறைவாகாது கற்றவர் புகழை எங்கும் பரவச் செய்யும்.நம் உயிர் உள்ளவரை கல்வி என்றுமே அழியாது. அதனால் இந்த உலகத்தில் கல்வியைப்போல அறியாமையைப் போக்கும் மருந்தையாம் கண்டதில்லை.


2 கருத்துகள்:

  1. பாடல் பகிர்வுக்கும், விளக்கம் தந்தமைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  2. கல்வி என்பது கேடிலாச் செல்வம் என்பது எவ்வளவு உண்மை..நல்ல பகிர்வு சகோ.நன்றி.

    பதிலளிநீக்கு