வியாழன், 3 மார்ச், 2016

தட்டைப்பாதங்கள் தரும் வேதனை

           தட்டைப்பாதங்கள் தரும் வேதனை


முன்னுரை


      பாதங்களில் என்ன வேதனை இருக்கப் போகிறது என நீங்கள் நினைக்கலாம். அதிலும் கூட பல பிரச்சனைகள் இருக்கிறது.
மனிதனின் பாதங்கள் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. உடல் வலிமை உள்ளவர்களை சேர்த்துக் கொள்ளும் ராணுவம் கூட 
தட்டையான பாதம் கொண்டவர்களுக்கு தடி போடுகிறது. ஏன்?

பிறந்த குழந்தைக்கு இருக்கும் தட்டைப்பாதம்

     பிறந்த குழந்தையின் பாதத்தை தொட்டுப்பாருங்கள். அதன் வடிவம் தட்டையாகத்தான்  இருக்கும். குறைந்தபட்சம் 2 வயது வரை இந்த தட்டைப் பாதம் நீடிக்கும். 7 வயதுக்குள் 95 சதவீதக் குழந்தைகளுக்கு கீழ் பாதத்தின் நடுப்பகுதி உள்பக்கமாக வளையத் தொடங்கும். நம் அனைவரின் பாதவகளும் ஒரே மாதிரியான அமைப்பில் இருப்பதில்லை. பல வடிவங்களில், பல அளவுகளின் காணப்படும். சொல்லப்போனால் ஒருவரின் வலது பாதத்துக்கும் இடது பாதத்துக்கும் இடையே கூட ஓரளவு வித்தியாசம் இருக்கிறது

நெகிழ்ந்து கொடுக்கும் தட்டைப்பாதம்

    சிலருக்கு நிற்கும் போது உடலின் எடை பாதத்தில் விழுவதால் பாதம் சற்று தட்டையாகத் தோன்றும். அவர்களே உட்கார்ந்தாலோ, படுத்தாலோ பாதத்தின் நடுப்பகுதி சமத்தாக உட்புறம் வளைந்து சாதரணமாக மாறிவிடும். இது நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையுள்ள தட்டைப் பாதம், பாதத்தின் இயல்பான வடிவத்தை காக்கும் தசைநார்கள் தொய்ந்து போயிருப்பதால் இந்நிலை ஏற்படுகிறது. தட்டையான பாதம் கொண்டவர்களுக்கு தினசரி வேலைகளில் பிரச்சனை இருக்காது. அவசரமாக ஓடிப்போய் ஏறிக் கொள்வதில் கூட சிரமம் இருக்காது. ஆனால், நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை பார்த்தால் பாதத்தில் குடைச்சல் ஏற்படும். தவிர ஓட்டப்பந்தய வீரராக வருவது கடினம்  இதனால்தான் ராணுவத்தில் இவர்களுக்கு வேலை தருவதில்லை

இறுகிய தட்டைப்பாதம்

      தட்டைப்பாதத்தில் எந்த வேதனையும் இல்லையென்றால் இது குறித்து அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. அதுபோலவே லேசான வலி அவ்வப்போது ஏற்பட்டு சரியானலும் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் சிக்கலைத் தரக்கூடிய தட்டைப்பாத வகையும் உண்டு. அதை இறுகிய தட்டைப்பாதம் என்கிறார்கள். இவர்களுக்கு பின் பாதத்துக்கும், நடுப்பாதத்துக்கும் இடையே உள்ள எலும்புகள் பிறப்பிலேயே இணைந்து ஒருவித எலும்புப் பாலம் போல் ஆகிவிடும். அங்கு நெகிழ்வுத் தன்மைக் குறைந்து அதன் காரணமாகவும் தட்டைப்பாதம் உண்டாகலாம்.

முடிவுரை

     தட்டைப் பாதம் கொண்டவர்களுக்கு அதிக வலி ஏற்பட்டால் அதற்கென்று இருக்கும் காலணிகளை அணிந்து கொள்ளலாம். அதிலும் பயன் கிடைக்காவிட்டால் பாதத்தின் வெளிப்புறமும், உட்புறமும் அசைவைக் குறைக்கும் வகையில் சிகிச்சை செய்வதே நல்லது. இதையும் 15 வயதுக்கு மேல் செய்வதே சிறந்தது. அப்போதுதான் பாதம் முழுவளர்ச்சி அடைந்திருக்கும்.


2 கருத்துகள்:

  1. பாதத்தை பற்றி அறிய மிகவும் உதவியது. மிகவும் நன்று தோழி நந்தினி

    பதிலளிநீக்கு
  2. பாதத்தை பற்றி அறிய மிகவும் உதவியது. மிகவும் நன்று தோழி நந்தினி

    பதிலளிநீக்கு