செவ்வாய், 24 டிசம்பர், 2019
பயணங்கள்
வெள்ளி, 20 டிசம்பர், 2019
வியாழன், 19 டிசம்பர், 2019
புதன், 18 டிசம்பர், 2019
படித்ததில் பிடித்தது
பகற்படத்தை உருவாக்கி
திருத்தமாகவே தின்றால்
இருவேளை வயிற்று வலி
தீருமென்றே கும்மி அடியுங்கடி "
உள்ளுக்குள் புதையல்
வெற்றி வாிகள்
கடினமாக வேண்டுமானாலும் தொியலாம்
ஆனால் செய்வதற்கும் வெல்வதற்கும்
ஒவ்வொரு நொடியும் ஏதேனும் ஒன்று
இருந்து கொண்டேதான் இருக்கிறது.
-ஸ்டீபன் ஹாக்கிங்.
இணையதளம்
கப்பலில் கடப்பவரையும்
விண்வெளியில் மிதப்பவரையும்
வீட்டினிலே இணைக்கும்
இன்பத்தினை சுமக்கும் தளமே
இணையதளம்
செவ்வாய், 17 டிசம்பர், 2019
கலாம் பொன்மொழி
உயரப் பறந்துகொண்டே இருக்கவேண்டும்
அதனையே இலட்சியமாகக் கொள்ளவேண்டும்
குடும்பப் பெண்
தாலி என்ற விலங்கிட்டு
சமையலறையில் சிறை வைத்து
வேலையென்ற தண்டனைகள்
விஷ நாக்கு சவுக்கடிகள்
புறமும் - அரிசியும்
கொழுன்சோறு
நெய்சோறு
புளிசோறு
பால்சோறு
வெண்சோறு
உளுத்தண்சோறு
இவை புறநானுற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன .
திங்கள், 16 டிசம்பர், 2019
இனிமையான நினைவுகள்
உன்னைப் பார்த்தபோது எனக்குள் ஏற்பட்ட வலி
கால்கள் கூறுகின்ற வார்த்தையைக்
கண்கள் கேட்க மறுத்தது
அத்தனைபேர் இருந்தும்
உனக்கும் எனக்கும் ஒரு தனிமை
நீ என்னைப் பார்க்கவில்லை
நான் அந்த இடத்தில்
உன்னை மட்டுமே பார்த்தேன்
பார்த்ததை வெறுக்க முடியவில்லை
நினைத்ததை வெறுக்க முடியவில்லை
இதிலிருந்து மீள்வதற்கும் வழி இல்லையே
-கன்னிகா, இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்.
தேடியது கிடைக்குமா
பார்வை கிடைக்கவில்லையே
கால்கள் நடக்கும்போது
பாதை தெரியவில்லையே
பேசத் துடித்தபோது
வார்த்தை தோன்றவில்லையே
எண்ணம் மாறிவிட்டது
மனம் மட்டும் மாறவில்லையே
-கன்னிகா, இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்.
கதிரவன்
சேவல் கூவத் தொடங்கியது
இருள் மறையத் தொடங்கியது
உலகம் விழிக்கத் தொடங்கியது
செங்கதிரவன் வருகிறான்
-கன்னிகா, இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்.
பெண் ஒருத்தி
செங்கதிரவனைப் பொட்டாக வைத்து
கார் இருள் மேகங்களைக் கண்களுக்கு மையாகத் தீட்டி
விண்மீனைத் தோடாக அணிந்து
சங்குக்கழுத்தில் முத்துகளைச் சேர்த்து
வானவில்லை வளைக் கரங்களில் பூட்டி
செந்தாமரைபோல் கன்னம் சிவக்கப்
பெண்னொருத்தி வந்தாள்
-கன்னிகா, இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்.
சிவபெருமான்
கதிரவனுக்கே ஒளியைக் கொடுத்தவன்
கங்கையைச் சடைமுடியில் வைத்திருப்பவன்
இதயத்தில் குடிகொண்டவன்
வாழ்க்கையின் அர்த்தத்தைத் தெரிந்தவன்
வானத்தைவிட உயர்ந்தவன்
நெடிய கூந்தலை உடையவன்
நஞ்சினை உண்டு தேவர்களைக் காத்தவன்
நாகத்தை மாலையாகச் சூடியவன்
உமையம்மைக்கு இடது பாகத்தை அளித்தவன்
உள்ளத்தில் சிறந்தவன்
அன்பால் இணைந்தவன்
அறிவில் உலகைவிடப் பெரியவன்
அவரே நம் எம்பெருமான்
செவ்வாய், 10 டிசம்பர், 2019
வல்லவர்கள்
விருத்தம் பாடுவதில் வித்தகர் கம்பர்
அந்தாதி பாடுவதில் உயர்ந்தவர் ஒட்டக்கூத்தர்
வசை பாடுவதில் வல்லவர் காளமேகப்புலவர்
தமிழில் உள்ள மூன்று மணிகள்
கவிமணி - தேசியவினாயகம்பிள்ளை
ரசிகமணி- டி.கே.சிதம்பரமுதலியார்
வட்டாட்டம்
தமிழில் உள்ள வேதங்கள்
வேளாண்வேதம் - நாலடியார்
தமிழ் வேதம் - திருமந்திரம்
சைவர் தமிழ்வேதம் - திருமுறைகள்
ஞாயிறு, 8 டிசம்பர், 2019
திங்கள், 25 நவம்பர், 2019
கடினம்
செவ்வாய், 19 நவம்பர், 2019
கண்ணாமூச்சி ரே ரே
சனி, 16 நவம்பர், 2019
விதை
வியாழன், 7 நவம்பர், 2019
புதன், 6 நவம்பர், 2019
அன்பர்கள் இல்லம்
வாழ்க்கையை தானாக வாழக் கற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கும் இல்லம், உறவினர்கள் அனைவரையும் எதிர்பார்த்தும் ஏற்படுத்தியும் மனவலிமையை வலுவாக்கும் வல்லமை கொண்ட இருப்பிடமே அன்பர்கள் இல்லம், வாழ்க்கையே ஒரு போராட்டமாய் அப்போராட்டத்தில் படைவீரர்களாக தடைகளை அறுத்தெறியும் இவர்களே நமக்கு உண்மையான ஆசான்,வாழ்க்கையை வாழ கற்றுக் கொடுப்பதற்கு.
இன்றைய இளைஞர்களின் மனநிலை.....
பூ என்பது
ஓரெழுத்து...
அதை சூடும் பெண்ணிற்கு
இரண்டெழுத்து...
அதனால் வரும் காதலுக்கு
மூன்றெழுத்து....
காதலால் ஏற்படும் மரணத்திற்கு
நான்கு எழுத்து ...
இது தான் இளைஞர்களின்
தலையெழுத்து....
திங்கள், 4 நவம்பர், 2019
காட்சி
திரைபடங்களை போன்றதே
நம் வாழ்வு...
தினந்தோறும் காட்சிகள்
ஏராளம்....
அதில் வில்லனை போல்
பழிவாங்கும் எண்ணம் இல்லாமல்
காமேடியனை போல் அனைத்தையும்
நகைச்சுவையாக எண்ணி வாழவேண்டும்.....
அப்போது தான் வாழ்க்கை அழகாகும்
வெள்ளி, 1 நவம்பர், 2019
நம் குடியானவன்
-விவேகானந்தர் கும்பகோணம் சொற்பொழிவில் கூறியது.
ஜெயகாந்தனின் சுமைதாங்கி
ஒரு சிறுவன் விபத்தில் இறந்துவிட்டான். காவல்துறையைச் சேர்ந்த ஒரு நண்பர் விபத்தில் இறந்தது யாரென்று அறியாமல் திணறினார். வீடுவீடாக ஏறி யார் குழந்தை இறந்தது என்று விசாரித்தார். அவருக்குள்ளும் ஒரு சோகம் உண்டு. திருமணமாகிப் பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆகியும் அவருக்குப் பிள்ளைப்பேறு இல்லை. நமக்குத்தான் பிள்ளைப்பேறு இல்லை. யாரு பெத்த பிள்ளையோ இப்படி ரோட்டில் அடிபட்டுக் கிடக்குதே என்கிற வருத்தம் அவருக்கு.
வீடுவீடாக ஏறித் தேடுகிறார். அடிபட்டுக் கிடப்பது தன் பிள்ளை இல்லை என்று பலரும் சொல்கிறார்கள். ஒரு பெண் கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்தாள். அவளிடம் விசாரித்தார். அம்மா உன் பையன் எங்க போயிருக்கான். சார் ஐஸ்கிரீம் வாங்கப் போயிருக்கான் சார் என்று அந்தப் பெண் சொல்ல, ஐயோ அங்க ஐஸ்கிரீமக் கையில ஏந்துன மாதிரி ஒரு பையன் லாரியில அடிபட்டு இறந்து கிடக்கானே என்று சொல்லிக் கதறுகிறார். அந்தப் பெண் பதறியடித்துக் கொண்டு ஓடினாள். விபத்து நடந்த இடத்தில் இறந்து கிடந்த சிறுவனைத் தழுவிக்கொண்டு வேறொரு பெண் அழுது கொண்டிருந்தாள்.
கைக்குழந்தையோடு ஓடியவள் அதைப் பார்த்துச் சற்று அமைதி கொள்கிறாள். இறந்தது என் பையன் இல்ல, உன் அண்ணன் சாகல என்று குழந்தையையும் தன்னையும் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறாள்.
தாய்ப்பாசம் அவரவர் பெற்ற பிள்ளைக்கு மட்டும்தான் சொந்தமா என்று காவல்காரன் தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொண்டான்.
காவல்துறை நண்பனுக்கு ஒரு திடுக்கிடும் காட்சி காத்துக்கொண்டிருந்தது. அங்கு அந்தச் சிறுவனைக் கட்டி அணைத்துக் கொண்டு அழுபவள் அவனது மனைவி. அழுகிறாள், ஐயோ என் பையன், என் பையன் செத்துப் போயிட்டானே, அலறுகிறாள். பிள்ளைப் பேறு இல்லாததால் அவள் மனம் பித்து ஆகிவிட்டதோ...
காவல்துறை நண்பன் அவள் கையைப் பிடித்து இழுத்துத் தூக்கிக்கொண்டு போகிறான்.
பாவி ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்குத்தான் பாக்கியம் செய்யாத மலடி ஆயிட்டேன். செத்துப்போன ஒரு குழந்தைக்கு அழக்கூட எனக்குச் சொந்தமில்லையா என்று திமிறுகிறாள்.
அவளுடைய உடல் சுமை மட்டுமா கையில் கனக்கிறது. இதயத்தில் குடிகொண்டிருக்கும் பிள்ளையில்லாச் சோகச் சுமை அல்லவா அவன் கையில் கனக்கிறது. அந்தச் சுமையைத் தாங்கிக்கொண்டு வீட்டுக்குள் சென்று கதவை அடைக்கிறான் காவல்காரன்.
அவன் வீட்டின்முன் கூடியிருந்த கும்பல் மீண்டும் விபத்து நடந்த இடத்திற்கே ஓடுகிறது. ஆமாம் கும்பலுக்கு எல்லாம் ஒரு வேடிக்கை தானே.
செவ்வாய், 15 அக்டோபர், 2019
அறிந்திடு
வித்தியாசங்களின் விதையாக
நீ இரு..........
விடையாக மட்டும் இல்லாமல்
கேள்வியாகவும் இரு...
தெரிந்ததை பகிர்ந்திடு......
அறிந்தை அள்ளிக்கொடு
ஏன் எனில்
அழிக்க முடியாத ஒரே விசியம்
கற்றதை கற்று தருதல்....
படித்தை பகிர்ந்து தருதல்...
திங்கள், 14 அக்டோபர், 2019
திருத்தம்
தினமும் பலரை சந்திக்கும் நாம்
சிலரிடம் சிலவற்றை கற்கிறோம்
அந்த கற்றலை சிலருக்கு கற்றும் தருகிறோம்....
ஆனால் அதை எவரும் நம் வாழ்வில்
பயன்படுத்துவதில்லை...
ஆனால் அறிவுரை கூற நம்மைவிட
ஆள் இங்கு இல்லை....
இனியாவது திருத்திக் கொள்வோம்....
வியாழன், 10 அக்டோபர், 2019
இருக்கும் வரை
விடையில்லா பயணம்
விடைகிடைத்தால் மரணம்
இதுதான் வாழ்க்கை...
அதனால் இருக்கும் வரை
இரக்கத்துன் இருப்போம்
இறந்த பின் ..
பலரின் இதயங்களில் வாழ்வோம்
எண்ணம் போல் வாழ்க்கை..
எண்ணம் போல தான் வாழ்க்கை
புதன், 9 அக்டோபர், 2019
கொலுசு
அவளேதான்!!
என்று காட்டிக்கொடுக்கும் கொலுசே
வாசல் வரை வந்தவள்
வாழ்க்கை வரை வருவாளா
கண்களில் காதலைத் தூவிப்
பேனாவில் பதிலைக் கூறி
என் கையை அவள் கையோடு
இணைத்து நடைபோட ஆசை
அவள் வருவாளா
அவள் விரும்பவில்லை எனில்
இனி வரும் பிறவிகள் அனைத்திலும்
உன்னைப்போல் கொலுசாக மாறி
அவள் விருப்பத்தை மீறி
அவள் காலில் பற்றிக்கொண்டு
அவளுடன் இராஜ நடைப்போடுவேன்
பார்க்கிறாயா
சனி, 5 அக்டோபர், 2019
அன்பு
இந்த உலகில் இலவசமாகக் கிடைக்கும் விஷயங்களில் ஒன்று அன்பு. நமக்குச் சிலரைப் பார்த்தவுடன் பிடித்துவிடும். அவர்கள் மீது அளவு கடந்த அன்பு உருவாகும். ஆனால் அந்த அன்பு நமக்கு மீண்டும் கிடைக்காது என்று தெரிந்தும், அவர்கள் மீது செலுத்தும் அன்பைத் தடுக்கமுடியாது. அவர்கள் மீது நாம் அதிகம் உரிமை எடுத்துக்கொள்வோம் ஆனால் அவர்களுக்கு நாம் ஒரு முக்கியமான நபராக இருக்கமாட்டோம்.அதனால் யாரிடமும் அன்புக்காகப் பிச்சை எடுக்காதே. நீ தனித்து இருந்தாலும் தனித்துவமாக இருக்க செய்ய வேண்டியவற்றைச் செய். இருள் நிறைந்த பாதையில் தோன்றும் ஓளிபோல உன் வாழ்க்கையில் உனக்காக ஒருவா் உன்னிடம் மட்டுமே அன்பு செலுத்தக் காத்துக்கொண்டு இருப்பார்.
வெள்ளி, 4 அக்டோபர், 2019
கருமை நிறக் கண்ணா
கரும்புதான் சுவையை உண்டாக்கும்
கரங்கள்தான் உழைப்பை உண்டாக்கும்
கரும்பலகைதான் கல்வியை உண்டாக்கும்
கருமுடி தான் அழகை உண்டாக்கும்
கருநிறம் தான் ஈர்ப்பை உண்டாக்கும்
கருவிழி தான் காட்சியை உண்டாக்கும்
கற்பு தான் பெண்மையை உண்டாக்கும்
இவையனைத்தும்
கருக்கொண்ட இடம் எங்கோ
அறியவில்லை
இடம் கொண்டது
உன்னில் தான் என் கண்ணா
வியாழன், 3 அக்டோபர், 2019
எவன்
ஆளாக்கியவன் தகப்பன்
அடைகாத்தவன் தோழன்
அருளியவன் சிவன்
இறுதியில் நம்மை அழைப்பவன் எமன்
செவ்வாய், 1 அக்டோபர், 2019
பூ மகளே
பூமகளின் வெட்கத்தினால்
படைத் தலைவனும் மிரளுகிறான்
உணர்வுகள் உள்ளத்தைத்
தெளிவடையச் செய்கின்றன
உன் கண்களோ
வீரத்தை உதிரியாய்ச் சரிக்கின்றன
சங்க இலக்கியங்களில்அரிசிக்கு எத்தனை பெயர்கள் தெரியுமா?
அமலை
அமிந்து
அயினி
அவி
அடுப்பு
உண்ணா
உண்
கூழ்
சதி
சாதம்
சொண்றி
சோ
துப்பு
தோரி
பருக்கை
பாத்து
புகர்வு
புழுங்கல்
புன்னகை
பொம்மல்
மடை
மிதவை
முரல்
வல்சி
திங்கள், 30 செப்டம்பர், 2019
பணிவு
மறைந்தாயோ ராணுவ வீரனே
ஞாயிறு, 29 செப்டம்பர், 2019
நண்பா!! நண்பா!!
துவண்டு போகாதே
தோல்வி அடைந்தாய் என்று
திகைத்துப் போகாதே
வெற்றி பெற்றாய் என்று
தொலைத்து விடாதே
உன் திறமையை கேலி
செய்பவர்கள் முன்பு
உன்னை அனைவரும் புரிந்துகொள்வார்கள்
செல்வோம் சரித்திரம் படைக்க
வெள்ளி, 27 செப்டம்பர், 2019
அவள் ❣️
என்னைக் கொள்ளையடித்து விட்டாயடி
என் நேரங்கள் அனைத்தையும்
உனக்கானதாய் மாற்றி விட்டாயடி
என்னுள் காற்றாகச் சென்று
என்னவள் ஆனாயடி
உன் சிரிப்பினால்
என்னைச் சிறை பிடித்துவிட்டாயடி
என்னை எப்போது விடுவிப்பாய்
என் என்னவளின் விடையோ வியப்பில் தள்ளியது
என் கண்களால் தானே
உன்னைக் கொள்ளையடித்தேன்
என் கண்கள் மூடி நான் கல்லறையில்
உறங்கும் போது விடுவிக்கிறேன் என்றாள்
ப.லட்சுமிப்பிரியா
இளநிலை மூன்றாமாண்டு ஆங்கிலம்
தாய்மையை உணர்ந்தேன்
தனது மகளின் பிறந்தநாளாகக் கொண்டாடுகிறார்கள்
வியாழன், 26 செப்டம்பர், 2019
நான் நானாக இருக்கிறேன்
முழுமைப்படுத்து
நான் நானாக இருக்கிறேன் என்று
ப.லட்சுமிப்பிரியா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்
புதன், 25 செப்டம்பர், 2019
தொடர்வேன்
உன்னுடன் தொடர்கிறேன் இன்று
என் உயிருடன் தொடர்வேன் என்றும்
பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்
தேடல்
என் கண்கள் கலங்க
உன்னுள் வாழ்கின்ற உணர்வுகளே
என் காதல் சிறக்க
உன்னகம் சேர நாடுகிறேன்
உன்னைத்தான்
நான் இங்கு தேடுகிறேன்
பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்
மறுக்குமோ
கேட்க மறுக்குமோ
நம் செவிகள்
பேச மறுக்குமோ
நம் இதழ்கள்
என் இதயம் மறுக்குமோ
உன்னை நினைக்க
பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்
சேதி
நன்மை தரும் நீதி
நட்பே நம் ஜாதி
இதுவே என் சேதி
பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்
இல்லை
உன் அறிவிற்கோர் எல்லையில்லை
ஆனாலும்
அதை நீ வாடவிடுவதில்லை
நீ அன்பிற்கு அணையிட
அது ஒன்றும் ஆற்றோர அலையில்லை
உனக்கு ஆட்கடலினும்
சுமை கொள்ளை
ஆனாலும்
அதை நீ பொருட்படுத்தவில்லை
எனவே
நீ வெற்றியை விட்டதில்லை
தோல்வியைத் தொட்டதில்லை
பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்
என் ஆசிரியை
ஜொலிக்கச் செய்தாயே
நீ ஓர் பெண் மகளின் தாயே
எம்முள் ஓர் பொன்மகளும் நீயே
உன் ஆற்றல் உன் மேனி
அச்சமின்றிப் பணியாற்றலாம் வா நீ
உந்தன் சிரிப்பே உனக்குச் சிறப்பு
உந்தன் உன்னதமே -இங்கு
தோன்றுது எனக்கு
பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்
அன்புள்ள ஆசிரியருக்கு
அன்பளிப்பு அளிப்பதற்கு
ஆசான்வில் தொடுப்பதற்கு
அமுதமதில் தெளிப்பதற்கு
அர்த்தங்களை உரைப்பதற்கு
ஆசான்களே கூடி வருக
எமக்கு அறிவுப்பொருள் தந்து அருள்க
பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்
வீழ்ந்தேன்
உன்னைக் காணாது தவிக்கின்றன
என் நெஞ்சம் கொண்ட தவத்தின் வரவோ
உன் நினைவு கொள்கிறது
ஏன் பஞ்சம்
உன்னை காணாமலா
நீ சொல் கொஞ்சம்
இதுவே முடிவா
நம் காதல் என்ன சிதறிய கடுகா
விரும்பியே விடத்தினை விழுங்கிவிடவா
வீரத்தை இழந்து வீழ்ந்தேன் தலைவா
பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்
சிறந்தது
மயிலின் குரலை விட
குயிலின் குரல் சிறந்தது
குறையை நிறையால் வெல்வதே
வாழ்வில் மிகவும் சிறந்தது
பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்
ஓடு
உமக்காக விரைந்தோடு
வேர்த்தாலும் கரைந்தோடு
காற்றோடு கலந்தோடு
காயங்கள் கடந்தோடு
தலைக்கனம் தவிர்த்தோடு
சரிந்தாலும் மீண்டும் - நீ
எழுந்தோடு
பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்
முயற்சி
தேர்ச்சி என்னும் பலத்தைப்
பயிற்சியாலே பெறலாம்
முயற்சி என்ற கடலே
இமயமலை எனலாம்
பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்
செவ்வாய், 24 செப்டம்பர், 2019
ஈரம் காய்ந்த இயந்திர உலகில் காதலா
ரசாயனக் கலவை நீர் இட்ட முட்டைகள் பறக்க
பாதையின் பள்ளத்தில் இருந்த நீரோ
பணக்காரப் பாரியின் அன்பளிப்பாய்
பாமர மக்கள் படையின் மீது தெறிக்க
கொடைகாத்த வள்ளல் வாழ்ந்த
நம் பாரின் மீது பற்றுடைய நான்
பாலிதின் கவரிலான குடை கொண்டு
பாதையில் சென்ற பள்ளிக் குழந்தையைக் காக்க
நீ என்னைப் பார்க்க
உன் பருவத்தின் உணர்ச்சி உனைச் சரிக்க
பக்கபலமாய் உன் பார்வை
என் உருவத்தினைப் பதிவிறக்கியது
4-ஜி பாஸ்ட் நெட் ஒர்க் போல
மறுபிறப்பு மானுடத்தின் சிறப்பன்றோ
நீ என்னை மீண்டும் சந்தித்தாய்
நான் உனைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற
ஒருநொடிக்காக ஒருத்தவம் நீயிருக்க
உன் பின்னால் நீ பார்க்கவில்லையே
இயந்திரமாய் வேலைசெய்த வாகன ஓட்டுனர்
ஒரு நொடி இமைக்கு இரக்கம் காட்ட
உன் இரத்தம் ஈரம் காய்ந்த
இயந்திர உலகிற்கு நீரூற்றியது
இப்போது
நான் திரும்பிப் பார்க்கிறேன் உன்னை அல்ல
முன்ஜென்மத்தில் வண்டியிழுத்த மாடு
மஞ்சள் நிற மாறு வேடமிட்டு
வாகனமாய் மறுபிறப்பெடுத்துத்
தன்னை மறந்தவர்களுக்குப் பாடம் புகட்ட
உன்னைப் பலியிட்டு
மரணத்தால் தன்னை நினைவூட்டியது
இன்றாவது திரும்பிப் பார் மானிடா
அழிந்து கொண்டிருப்பது
மாடுகளின் இனம் அல்ல
நன்றி மறந்த மானுடனின் மானம்
சிந்தித்துச் செயல்படுவோம் - நம்
சந்ததியருக்கு வழி கொடுப்போம்
பவித்ரா வெங்கடேசன்,
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்.
திங்கள், 23 செப்டம்பர், 2019
துணிந்து எழுங்கள்
விடிவதற்குள் இருப்பதோ சந்திரன்
ஆனால் இரண்டிலும் பயன் உண்டு
இரவில் வெளிச்சம் தருவது சந்திரன்
பகலில் வெளிச்சம் தருவது சூரியன்
வெற்றியும் தோல்வியும்
தோல்வி அடைந்தால் விவேகம்
அதனால் எதையும் கண்டு துவண்டுபோகாதீர்
ஞாயிறு, 22 செப்டம்பர், 2019
நாடி!ஓடி !வாடாதே!
எப்போதும் யாரையும் நாடி
அவர்களுக்கு ஏற்றபடி ஓடி
அவர்களுக்கு என வாழாதிர்கள்
எதையும் தானாக செய்யும் ஆற்றலை
வளர்த்து கொள்ளுங்கள்.....
பிறர் மீது வைக்கப்படும் நம்பிக்கையை
உங்கள் மீது வைத்து பழகுங்கள்
பிறரை நேசிக்கும் நீங்கள்
முதலில் உங்களை நேசிங்கள்
எதற்காகவும் ஒருவரை தேடி செல்லாதிர்கள்......
தேவை என்றால் தேடி வருவார்கள்...
நீங்களாக சென்று, பிறகு
வாடி நிக்காதிர்கள்...
வெள்ளி, 20 செப்டம்பர், 2019
தேவை
அடக்கம் தேவை
விவாதம் செய்யாதே
தயக்கம் காட்டாதே
எதையும் எண்ணாதே
அலட்சியம் கொள்ளாதே
முயற்சியை விடாதே
ஏனெனில்
ப.லட்சுமிப்பிரியா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்
ஆகலாம் அப்துல்கலாம்
இது உன் இளமைக் காலம்இனிமைக் காலமாக இருக்கலாம்
இகழ்ச்சி அதை நீ இன்று ஏற்கலாம்
இழிவுகளைக் கொன்று புதைக்கலாம்
புகழ்ச்சி அதை மனதில் பதுக்கலாம்
வளர்ச்சி பெற நாளும் உழைக்கலாம்
தோல்விகள் பல நீ கண்டிருக்கலாம்
முயற்சி பல நீ செய்திருக்கலாம்
தன் உயிரைவிட
உன் உறவை வளர்க்கலாம்
உயர்ந்த உச்சிகளும்
உனக்கு உதிரிப்பூக்கள் ஆகலாம்
நல்லதோர் தலைவன் வேண்டி
நாடே இன்று காத்திருக்கலாம்
நிச்சயம் நீயும் ஆகலாம்
நாளை அப்துல்கலாம்
இளம்பெண் பேச்சாளர்கள் தேடல்..
#3teentalk #talkathon #ksrcasw #2K19
இளம் பெண் பேச்சாளர்களை உருவாக்கும் மேடைகளில் ஒன்றாக எமது கல்லூரியும் செயல்பட்டு வருகிறது என்பதில் பேரின்பம் அடைகிறோம்..
ஒரு மேடை..
மூன்று பரிசுகள்...
மூன்று விருதுகள்..
ஒரு வெற்றியாளர்..
பெண்ணே நீ பேச தொடங்கினால் நாடும் வளர்கிறது என்று ஒரு மறைப்பொருள் உள்ளது.. அதை உணர்ந்து உங்கள் பேச்சாற்றலை வெளிப்படுத்த வாரீர்...
அக்டோபர் 17..
#ksrcasw... #talkathan..
தலைப்பு - இணைய உலகில் பெண்களின் நிலை.
மேலும் விவரங்களுக்கு
முனைவர் பு.பிரபுராம் - தமிழ்த்துறைத் தலைவர்
82488-23125
வியாழன், 19 செப்டம்பர், 2019
இப்படிக்கு அனுபவம்
எப்போதும் துணையாக இரு,
ஒருபோதும் துரோகியாக இருக்காதே,
எப்போதும் நண்பனாக இரு,
ஒருபோதும் நயவஞ்சகனாக மாறிவிடாதே,
எப்போதும் அன்பாக இரு ,
ஒருபோதும் அடிமையாக இருக்காதே,
எப்போதும் விழிப்புடன் இரு,
ஒருபோதும் சலுப்போடு இருக்காதே,
எப்போதும் கேள்விக்கு பதிலாக இரு,
ஒருபோதும் குழப்பத்தின் பதிலாக, இருக்காதே,
எப்போதும் தேடலில் இரு,
ஒருபோதும் தொலத்ததை தேடாதே,
இப்படி அறிவுரை ஆற்றியது
அனுபவம்!!
ஆகலாம் அப்துல்கலாம்
இது உன் இளமைக் காலம்இனிமைக் காலமாக இருக்கலாம்
இகழ்ச்சி அதை நீ இன்று ஏற்கலாம்
இழிவுகளைக் கொன்று புதைக்கலாம்
புகழ்ச்சி அதை மனதில் பதுக்கலாம்
வளர்ச்சி பெற நாளும் உழைக்கலாம்
தோல்விகள் பல நீ கண்டிருக்கலாம்
முயற்சி பல நீ செய்திருக்கலாம்
தன் உயிரைவிட
உன் உறவை வளர்க்கலாம்
உயர்ந்த உச்சிகளும்
உனக்கு உதிரிப்பூக்கள் ஆகலாம்
நல்லதோர் தலைவன் வேண்டி
நாடே இன்று காத்திருக்கலாம்
நிச்சயம் நீயும் ஆகலாம்
நாளை அப்துல்கலாம்
ஓராண்டின் ஆறு பருவங்களும் பெரும் பொழுதுகள் எனப் பகுக்கப்பெறும்.
வேனில் என்பது வெயில் காலம்
கூதிர் என்பது குளிர்காலம்
முன்பனி என்பது மாலையில் பின்பனி
பின்பனி என்பது காலையில் முன்பனி
புதன், 18 செப்டம்பர், 2019
அழைக்காமல் வருகிறேன்!!
காலை முதல் மாலை வரை ...
கால்கள் இரண்டும் ஓடும் வரை...
கைகள் இரண்டும் மடங்கும் வரை...
பற்கள் எல்லாம் கொட்டும் வரை...
பார்க்கும் கண்கள் மங்கும் வரை...
தலையில் நரை பரவும் வரை....
உயிர் உடலை விட்டு விலகும் வரை....
வா என்று நீ அழைக்காமல்......
வந்துவிடுவேன் என்று ஏளனமாக
உரைக்கிறது துன்பம்!!!!
செவ்வாய், 17 செப்டம்பர், 2019
DETERMINATION
Insult determines dream,
Dream determines action ,
Action determines destiny,
Destiny determines the success.
திங்கள், 16 செப்டம்பர், 2019
ஞாயிறு, 15 செப்டம்பர், 2019
சனி, 14 செப்டம்பர், 2019
வியாழன், 12 செப்டம்பர், 2019
செவ்வாய், 10 செப்டம்பர், 2019
திங்கள், 9 செப்டம்பர், 2019
சனி, 7 செப்டம்பர், 2019
IMMORTAL LOVE
Sometimes…
Anger turns into tears,
Tears turn into affection,
Affection turns into happy,
Happy turns into enmity,
Everything changes in the immortal,
World except humanity and love.
வெள்ளி, 6 செப்டம்பர், 2019
வியாழன், 5 செப்டம்பர், 2019
To my teachers...
To my universe,
You cherish me,
You encourage me,
You never made me fed,
Instead you share me
Your piece of experience,
You care for me everyday,
You show me ,the way to success But,
you taken & bear
the pain of Hardness in that.
You hide your pain,and
Construct our mind with smile,
You are my honorable teachers,
Who spread me like a seed,
And made me a plant today...
I salute you for you
Ultimate profession
Hapieee teacher's day to all ....
வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019
தாகம்
எனக்கு தாகம் தண்ணீருக்கு மட்டும் அல்ல..
தமிழுக்கும் தான்.....
தாயிடம் தாய்பால் குடித்தபோதே
தமிழ்பாலும் குடித்துவிட்டேன்.....
அவளை அம்மா என்று அழைத்தபோது....
அன்று எப்படி தண்ணீருக்கு பஞ்சம் இல்லையோ அதேப்போல்
தமிழுக்கும் பஞ்சம் இல்லை...
ஆனால் இன்றோ...
தரையில் தண்ணீரும் இல்லை
என் தமிழும் இல்லை...
இரண்டிலும் பஞ்சம் சூழ்ந்துவிட்டது...
காசு கொடுத்து தண்ணீரையும் வாங்கிவிட்டேன்....
காற்றில் என் தமிழயும் பறக்கவிட்டு.....
காசு கொடுத்து தமிழில்லா கல்வியையும் பயல்கிறேன்
ஆங்கிலேயர் நம் நாட்டைவிட்டு வெளியேறி பல ஆண்டுகள் ஆனாலும்
அவர்கள் மொழிக்கு அடிமைப்பட்டு....
அதுவே பெரிது என்று கருதி ....
என் தமிழை இழுந்து வருகிறேன் என்பது உறுதி.....
தாய் போன்று மொழியை போற்ற வேண்டும் என்பதற்காக தான் அதை தாய்மொழி என்கிறோம்...
ஆனால் அதை இழந்து வருகிறோம்.....
என் தமிழ் மொழி மட்டுமே அல்ல
அதுவே எங்கள் ஒலி...
அதுனால் தான் என் தாகமாக தமிழ் மாறிவிட்டது....