வெள்ளி, 4 அக்டோபர், 2019

கருமை நிறக் கண்ணா

கருமேகம்தான் மழையை உண்டாக்கும்

கரும்புதான் சுவையை உண்டாக்கும்

கரங்கள்தான் உழைப்பை உண்டாக்கும்

கரும்பலகைதான் கல்வியை உண்டாக்கும்

கருமுடி தான் அழகை உண்டாக்கும்

கருநிறம் தான் ஈர்ப்பை  உண்டாக்கும்

கருவிழி தான் காட்சியை உண்டாக்கும்

கற்பு தான் பெண்மையை உண்டாக்கும்

இவையனைத்தும்
கருக்கொண்ட இடம் எங்கோ
அறியவில்லை

இடம் கொண்டது
உன்னில் தான் என் கண்ணா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக