திங்கள், 22 பிப்ரவரி, 2016

ஆசிரியர் பணியின் அடையாளம் எது?


அன்பான மாணவிகளுக்கு..



இன்று நான் வாசித்த பதிவுகளுள் மணம் கவர்ந்த பதிவு.




கலாம் தன் வாழ்நாள் முழுக்க நினைவு கூர்ந்த பெயர் லடிஸ்லாஸ்

சின்னத்துரை. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் விண்வெளி 

இயற்பியல் பாடம் போதித்த ஆசிரியர். தனது மரணத்துக்கு 9 நாள்களுக்கு

 முன்புகூட திண்டுக்கல் வந்த கலாம், தனது ஆசிரியர் சின்னத்துரையை 

சந்தித்து, கெளரவித்து நினைவுகளில் மூழ்கினார்.

91 வயதாகும் சின்னத்துரை, கலாம் பற்றி பெருமிதம் ததும்பப் 

பேசுகிறார்: 1952-54 இல் கலாம் என்னிடம் படித்தார். விண்வெளி 

இயற்பியலில் அவருக்கு கூடுதல் ஆர்வம். நிறைய சந்தேகங்களைக் 

கேட்டுக் கொண்டே இருப்பார். 

மூன்று மணி நேரம் பாடம் நடத்தி, பாடத்தை முக்கால் பாகத்தோடு 

நிறுத்தி விடுவேன். நிறைவுப் பகுதியை .....




தொடர்ந்து வாசிக்க...

வி.என்.எஸ்.உதயசந்திரன்: ஆசிரியர் பணியின் அடையாளம் எது?



நன்றி வி.என்.எஸ் உதயசந்தின்.

2 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா.நான் தொடர்ந்து படித்தேன் இப்பதிவை ரொம்ப உருக்கமான வரிகள் அதில்,அர்ப்பணிப்புதான் ஆசிரியர் பணியின் அடையாளம். ஒரு மாணவன் சமூகத்தின் மிக உயரிய பொறுப்புக்குப் போகலாம். ஆனால், ஆசிரியர் கடைசிவரை ஆசிரியராகவே இருப்பார். அந்த மாணவன், என் வளர்ச்சிக்குக் காரணம் இந்த ஆசிரியர்தான் என்று கைகூப்பும் போதுதான் ஆசிரியரின் மனம் நிறைவடைகிறது. இந்த வரிகள் என் மனதை கவர்ந்து சென்றது ஐயா.நன்றி இதுப் போன்ற பதிவுகளையும் தொடர்ந்து அறிமுகப்படுத்துங்க ஐயா.பயனுள்ளதாக இருக்கும்.

    நன்றிகள் பல ஐயா.

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு மாணவரின் வெற்றிக்கு பின்னால் ஒரு ஆசிரியர் இருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. மிகப்பெரிய சாதனையாளர்கள் எல்லாம் மிகச்சிறந்த ஆசியர்களைப் பெற்றுள்ளனர். மிகச்சிறந்த ஆசிரியரான தங்கைளைப் பெற்ற நான் மிகப்பெரிய சாதனைப் பெண்ணாக தங்களின் ஊக்கத்துடனும் வழிகாட்டுதலுடனும் ஆவேன் என்று உறுதியாக கூறுகிறேன்.

    பதிலளிநீக்கு