புதன், 10 பிப்ரவரி, 2016

அழகிய காடு..!!



      அந்த அழகிய மாலையில்

முன்னுரை:
ராபட் ப்ராஸ்ட் ஒரு ஆங்கில எழுத்தாளர்.பெரும்பாலும் அவர் கவிதைகளில் அவர் கடந்த அனுபவத்தை பகிர்ந்திருப்பார்.வாழ்க்கையின் இரு பக்கங்களை தெளிவாகக் காட்டுவர்.அவரது அனைத்து கவிதைகளிலுமே முடிவுரையை படிப்பவர் கையில் கொடுப்பார்,ஆனால் இந்த கவிதையில்’’மனிதன் வாழ்வில் கடந்து செல்ல வேண்டிய தொலைவு அதிகம் அதற்குள் அவன் கடமைகளை பூர்த்தி செய்ய வேண்டிம்’’என்று முடிவுரையை கொடுத்திருப்பார்.

கவிஞரின் வியப்பு:

கவிஞர் ராபட் அவரது குதிரையை ஓர் இடத்தில் நிறுத்தினார்.அந்த பனி சூழ்ந்த காடு அவரை வயப்படுத்துகிறது.கண்களை இமைக்காமல் அந்த காட்டின் எழில் கண்டு வியந்து பார்கிறார்.இந்த காட்டினெஉரிமையாளர் அருகாமையில் உள்ள கிராமத்தில் தான் உள்ளார்.இருந்தும் அவர் ஏன் இதை காணவில்லை,ஒரு வழிப்போக்கனாக எனக்கு இந்த வாய்ப்பு கிட்டி இருக்கிறது.



கவிஞரின் குழப்பம்:
இந்த காட்டின் உரிமையாளர் இங்கு கொட்டும் கடும் பனித்துளிகளால் அச்சம் கொண்டிருப்பாரோ?ஆனால்,எனக்கும் என் குதிரைக்கு அந்த பனி ஓர் அழகான காட்சியாகதான் தென்படுகிறது.என் குதிரை அதன் மணியை அடித்து என்னை சுய நினைவிற்கு கொண்டுவர முயற்சி செய்கிறது.என்னை அழைத்து சென்று அதன் பணியை முடிக்க நினைக்கிறது.
                                                    
அழகின் மயக்கம்:
கவிஞர் அந்த காட்டின் அழகில் மூழ்கி இருக்கிறார்.மாலை நேரத்தில் கொட்டும் பனி சூழ்ந்த பசுமையான காடு,ஓர் அரிய காட்சி.ஆனால், அதே நேரம் அந்த நள்ளிரவில் அதிக நேரம் செலவிடுவதில் அர்த்தமில்லை.வாழ்கையில் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் அவருக்கு உண்டு.ஆகையால்,அங்கிருந்து செல்ல முடிவு செய்கிறார்.




காட்சிகளின் உண்மையான அர்த்தம்:
இந்த கவிதையில் கூறப்படுள்ள அனைத்த பொருள்களில் ஓர் அற்தம் உண்டும்.அந்த அடர்ந்த காடு வாழ்கையை பிரிதிபலிக்கிறது(இன்ப,துன்பம்). மாலை நேரம் வாழ்வில் கடந்து செல்ல வேண்டிய தொலைவை காட்டுகிறது. அந்த காட்சிகள் மயக்கம் மரணத்தை பிரதிபலிக்கிறது.

முடிவுரை:
கவிஞர் தனது முடிவுரையில்

‘’வாழ்வில் கடந்து செல்ல வேண்டிய தொலைவிற்குள் கடமைகளை முடிக்க வேண்டும்’’என்ற கருத்தினை ஆழமாக பதிவு செய்கிறார்.

2 கருத்துகள்:

  1. அருமை சகோதரி..உண்மை தான் வாழ்வில் கடந்து செல்ல வேண்டிய தொலைவுக்குள் அவரவர் கடமைகளை செய்து முடிக்க வேண்டும்..

    பதிலளிநீக்கு
  2. நன்றி வைசாலி படத்தை இனைத்ததர்கு

    பதிலளிநீக்கு