வியாழன், 11 பிப்ரவரி, 2016

ஆண்ட்ராய்ட் போனில் தமிழ் தட்டச்சு

                   ’யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’ - திருமூலர்

எங்கள் வீட்டில் இருப்பது ‘டெஸ்க் டாப்’ கம்ப்யூட்டர். எனவே அதில் தமிழில் தட்டச்சு செய்ய NHM Writer 1.5.1.1 Beta என்ற தமிழ் எழுதியைப் பயன்படுத்தி வருகிறேன். இதிலுள்ள English - Tamil Phonetic முறை எனக்கு எளிதாகவும் இருக்கிறது. ஸ்மார்ட் போன் (ஆண்ட்ராய்ட்) வாங்கிய பிறகு, அதில் தமிழில் தட்டச்சு செய்ய, எந்த தமிழ் எழுதி நல்லது என்று தெரியாமல் இருந்தேன். 

தமிழ் எழுதிகள்:

இது விஷயமாக கூகிளில் தேடியதில், பல்வேறு தமிழ் எழுதிகளைக் காண முடிந்தது. 

Ezhuthani – Tamil Keyboard
Tamil Unicode Keyboard free
Tamil Keyboard
Google Handwriting Input
PaniniKeypad Tamil IME
Sellinam
Tamil Writer
Tamil Pride Tamil Editor
Tanglish – Tamil Editor
Tamil Unicode Font – Donated
Tamil Keyboard Unicode
Type Tamil Offline
Tamil Wrier
Google Indic Keyboard
Types In Tamil
Indic Keyboard

இவற்றைப் பற்றி, நமது வலைப்பதிவு நண்பர்களிடம் விசாரித்ததில், ஒவ்வொருவரும் அவரவர் பயன்படுத்தும் தமிழ் எழுதிகளைத்  தெரிவித்தனர்.

செல்லினம் (Sellinam 4.0.7)


ஒருமுறை புதுக்கோட்டையில் ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தபோது ‘செல்லினம்’ (Sellinam)  பற்றி சொன்னார். நான் உடனே கூகிள் தேடலில் போய் Sellinam 2.0.1 என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து கொண்டேன். அது அவ்வளவாக திருப்தி இல்லாத படியினால், மீண்டும் வேறொரு தமிழ் எழுதிக்குப் போனேன். அதுவும் சரிப்பட்டு வராததால், அண்மையில், திண்டுக்கல் தனபாலன் அவர்களிடம் ஆலோசனை கேட்டேன். அவர் செல்போனில், செட்டிங்ஸ் சென்று ஆப்ஸில் செல்லினத்தை (புதியது) தரவிறக்கம் செய்து கொள்ளச் சொன்னார். அவ்வாறே செய்தேன். 


இப்போது எனது ஆண்ட்ராய்டு செல்போனில் இருப்பது Sellinam 4.0.7 என்ற மென்பொருள் ஆகும். இது நன்றாகவே செயல்படுகிறது. இதில் தமிழ் 99 மற்றும் முரசு அஞ்சல் என்று இரு விசைப்பலகைகள் (KEY BOARD) உள்ளன. 

தமிழ் 99 - இதில் தமிழிலேயே தட்டச்சு செய்யலாம்
முரசு அஞ்சல் - இதில் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழ் தட்டச்சு செய்யலாம் ( உதாரணம் ammaa > அம்மா)


நான் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு , Phonetic முறையில் தட்டச்சு செய்யும் முரசு அஞ்சல் முறையை பயன்படுத்துகிறேன். இதில் வேண்டும்போது தமிழுக்கும் ஆங்கிலத்திற்குமாக விசைப்பலகையை (KEY BOARD) மாற்றிக் கொள்ளலாம். நான் இப்போது பெரும்பாலும் நேரம் இருக்கும்போது வலைப்பதிவுகளுக்கான தமிழ் கருத்துரைகளையும் மற்ற குறுஞ்செய்திகளையும் (SMS) எனது செல்போன் மூலமாகவே டைப் செய்து அனுப்புகிறேன். மேலும் இந்த செல்லினத்தை ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


// செல்லினம் என்பது ஒருங்குறியைப் பயன்படுத்தி செல்பேசிகளில் தமிழ் குறுஞ்செய்திகளை அனுப்பும் மென்பொருளாகும்இம்மென்பொருளை மலேசியாவைச்சேர்ந்த முத்து நெடுமாறன் தலைமையிலான முரசு நிறுவனம் உருவாக்கியதுஇதைதைப்பொங்கற் திருநாளான ஜனவரி 152005 முதல் சிங்கப்பூரில் வணிகப் பயன்பாட்டுக்காக வெளியிட்டதுநோக்கியாசாம்சங் போன்ற கருவிகளில் இயங்கிவந்த செல்லினம்பின்னர் ஐபோன்ஐபேடுஆண்டிராய்டில் இயங்கும் கருவிகளுக்கும்அறிமுகப்படுத்தப்பட்டதுதற்போது வரையிலும்ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானோர்இதை பதிவிறக்கி உள்ளனர். //  ( நன்றி https://ta.wikipedia.org/s/1b3v )

செல்லினம் பற்றிய மேலும் அதிக விவரங்களுக்கு: http://sellinam.com/archives/406
             
                                  (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)

 நன்றி திரு.தி. தமிழ் இளங்கோ ஐயா. (  http://tthamizhelango.blogspot.com/2016/02/blog-post_11.html)
இந்த பதிவு என் கல்லூரி தோழிகளுக்கு கட்டாயம் உதவும்.

12 கருத்துகள்:

  1. அன்புள்ள சகோதரி அவர்களுக்கு நன்றி. எனது பெயரை தி.இளங்கோ > தி.தமிழ் இளங்கோ என்று மாற்றவும். அப்படியே எனது வலைத்தள முகவரியையும் உங்கள் பதிவினுக்கு கீழே சொல்லவும். http://tthamizhelango.blogspot.com/2016/02/blog-post_11.html

    பதிலளிநீக்கு
  2. பயனுள்ள தகவல் நன்றி.
    தரவிரக்கிக்கொண்டேன்

    எம்.செய்யது
    துபை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே..தொடரட்டும் தங்கள் தமிழ் எழுத்துக்கள்..

      நீக்கு
  3. அன்புடையீர் வணக்கம். தங்கள் வலைத்தளத்தில், என்னுடைய இந்த கட்டுரையை வெளியிட்டமைக்கு நன்றி. தங்கள் பதிவில் எனது பெயர் தி.தமிழ் இளங்கோ என்பதற்குப் பதிலாக தி.இளங்கோ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை மாற்றுவதோடு எனது வலைத்தள முகவரியையும் http://tthamizhelango.blogspot.com/2016/02/blog-post_11.html குறிப்பிடும்படி கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் தி.தமிழ் இளங்கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும் ஐயா.இப்பொழுது தங்களின் பெயரை சரியாக குறிப்பிட்டுள்ளேன் ..

      நன்றி தாங்கள் அனுமதி தந்ததின் பலனாக ஒருவர் இதனை பதிவிறக்கம் செய்து உள்ளார்.நன்றி ஐயா..

      நீக்கு
  4. மிகுந்த நன்றிம்மா. எனது நண்பரும், மிகச்சிறந்த தமிழார்வலரும், சமூக அக்கறை மிக்க படைப்பாளியும், களப்பணிகளில் தொடர்ந்து இயங்கிவருபவருமான பாவலர் அய்யா பொன்.கருப்பையா அவர்களின் நெடுநாள் பிரச்சினை இது. (தனது செல்பேசிக்குத் தமிழ் தெரியவில்லையே(?) என்பது! அவரது செல்பேசிக்கு என்னால் தமிழ் சொல்லித் தர இயலவில்லையே என்று நானும் வருந்தியிருந்தேன். இப்போது இந்தப் பதிவை அவருக்கு மின்னஞ்சல் செய்திருக்கிறேன். பார்க்கலாம்.. இதுபோலும் பலருக்கும் பயன்படும் பதிவுகளைத் தொடர்ந்து தர வேண்டுகிறேன் மா! நன்றியும் வாழ்த்தும் வணக்கமும்

    பதிலளிநீக்கு
  5. அன்பு மகளே வைசாலி! உன் படைப்புத்தானா இது?
    நினைத்தேன்.. உனது படைப்பாற்றல் சிறக்க வாழ்த்துகள்.
    (படைப்புத்திறன் -Creativity- என்றால், வெறும் கவிதை, கதை, பாடல், கட்டுரை எழுதுவது என்று பலரும் தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள், இந்தச் சமூகத்திற்கு என்ன தேவை என்று யோசித்து, ஒரு நிகழ்ச்சியைத் திட்டமிடுவதற்கும் படைப்பாற்றல் மிகவும் தேவை என்று நான் பல இடங்களிலும் பேசி வருகிறேன். பில் கேட்ஸ் போன்ற பெரும் வெற்றியாளர்களின் வெற்றிக்கு அடிப்படை இந்தப் படைப்பாற்றலே! “அடுத்த தலைமுறைக்கு என்ன தேவை?” என்று அவர் கற்பனை செய்ததைத் தனது தொழில் நுட்ப அறிவால் செயற்படுத்தி, தனது வணிகமேலாண்மை அறிவால் வணிகமும் செய்ததே அவரது வெற்றியின் ரகசியம். வைசாலி! உன் திறமையைக் கண்டு நான் பெருமை கொள்கிறேன். வெறும் புகழ்ச்சி வார்த்தைகள் அல்ல இவை! இன்னும் இன்னும் யோசித்து, அதைத் திறம்பட வெளிப்படுத்தும் தொழில்நுட்ப அறிவை நண்பர் பேராசிரியர் முனைவர் இரா.குணசீலன் போன்றோரிடம் பெற்றறிந்து, இவற்றை வணிக நோக்கிலும் கொண்டுசெலுத்தி உன் வாழ்வில் உன்னத நிலை அடைய என் வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழியின் ஊக்கத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா.இந்த கட்டுரையை எனக்கு தந்துதவியது தமிழ் இளங்கோவன் ஐயா தான்.நான் அவர் வலைப்பூவில் படித்தேன் எனது கல்லூரி மாணவிகளில் பலருக்கும் தமிழ் தட்டச்சு செய்ய வேண்டும் என்று ஆசை ஆனால் அவர்களில் பலருக்கு கணினி வசதி இல்லை.எனது ஆசிரியர் முனைவர்.இரா.குணசீலன் ஐயா அடிக்கடி எங்கள் மாணவியரிடம் ஆண்ட்ராய்டு போனிலும் தமிழ் தட்டச்சு பதிவேற்ற இயலும் என்று கூறினார்.ஆனால் அவர்களுக்கு அது தெரியாமல் தவித்தனர்.எனவே நான் அவர்களுக்காக இந்த தேடலை தேடினேன் அப்போது தான் இளங்கோவன் ஐயா,இதுக் குறித்து பகிர்ந்து இருந்தார் உடனே அவரிடம் அனுமதி கேட்டு இதை எங்கள் கல்லூரி வலையில் பகிர்ந்தேன் ஐயா.நான் எழுதும் ஒவ்வொரு கட்டுரையுமே பிறக்கு எந்தளவுக்கு உதவும் என்று யோசித்த பிறகு தான் பகிர்ந்துக் கொள்வேன் ஐயா.இன்று சமூகத்தில் அனைவருமே ஏதோ ஒன்றை நோக்கிச் செல்லும் வழியில் எங்கள் வலையினைப் படிக்கும் போது ஏதாவது ஒன்றை அறிந்தும் கற்றும் செல்ல வேண்டும் என்பது எனது எண்ணம் ஐயா.தொழில்நுட்பம் குறித்த அறிவை எனது ஆசிரியர் முனைவர்.இரா.குணசீலன் ஐயாவிடம் பெற்று தான் எளிமையாக எழுதி வருகிறேன் இதில் பல செய்திகள் பல இணையத்தில் இருந்து பெற்று அவற்றை தொகுத்து எழுதினேன் ஐயா.எனக்கு கிடைத்த தொழில் நுட்பறிவும் மற்றவை எதுவாக இருந்தாலுமே அது அடுத்த தலைமுறைக்கு பயன்பட வேண்டும் என்ற ஒரே ஒரு தொலைநோக்கு பார்வையோடு மட்டுமே பகிர்ந்துக் கொள்கிறேன் இவையனைத்துமே பல விதங்களில் பலரிடம் இருந்து பெற்று நான் உணர்ந்ததை இந்த வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளேன் இன்னும் பகிரவுள்ளேன் ஐயா.தங்களின் நீண்ட கருத்து எனக்கு இன்னும் ஊக்கத்தை அளித்துள்ளது ஐயா.நிச்சயம் சமூகத்தினர் அனைவருக்கும் பயன் தரும் வகையில் எனது அடுத்த அடுத்த பதிவுகளை தருவேன் ஐயா.நன்றிகள் பல.தொடர்ந்து தங்களின் ஆதரவும் ஊக்கமும் அளித்து வாருங்கள் ஐயா.நன்றி.

      நீக்கு